10. சுதந்திரப் பள்ளு
(பள்ளர் களியாட்டம்)
ராகம் - வராளி தாளம் - ஆதி பல்லவி ஆடுவோமே - பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோ மென்று (ஆடு) பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே - வெள்ளைப் பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே - பிச்சை ஏற்பாரைப் பணிகின்ற காலமும் போச்சே - நம்மை ஏய்ப்போருக் கேவல்செய்யும் காலமும் போச்சே (ஆடு) எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு - நாம் எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே - இதைத் தரணிக்கெல் லாமெடுத்து ஓதுவோமே. (ஆடு) எல்லோரும் ஒன்றென்னும் காலம் வந்ததே - பொய்யும் ஏமாற்றும் தொலைகின்ற காலம் வந்ததே - இனி நல்லோர் பெரியரென்னும் காலம் வந்ததே - கெட்ட நயவஞ்சக் காரருக்கு நாசம் வந்ததே. (ஆடு) உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் - வீணில் உண்டுகளித் திருப்போரை நிந்தனை செய்வோம். விழலுக்கு நீர்பாய்ச்சி மாய மாட்டோ ம் - வெறும் வீணருக்கு உழைத்துடலம் ஓய மாட்டோ ம். (ஆடு) நாமிருக்கும் நாடு நமதுஎன்ப தறிந்தோம் - இது நமக்கே உரிமையாம் என்ப தறிந்தோம் - இந்தப் பூமியில் எவர்க்கும்இனி அடிமை செய்யோம் - பரி பூரணனுக் கேயடிமை செய்து வாழ்வோம். (ஆடு) |
No comments:
Post a Comment