Wednesday, June 30, 2010

மதராசபட்டினம்











































சதுரகிரி மலை


துரகிரி மலை - ஒரு ஆன்மிக உலா

சாதாரண மலைகளைப் போலல்ல இது. வீரியம் நிறைந்த வினோதமான மலை. கணக்கற்ற இரகசியங்களைத் த‎ன்னுள்ளே பொதித்துக் கொண்டு அமைதியாய்க் காணப்படும் அபூர்வ மலை.

சித்தர்களி‎ன் இராஜ்ஜியமாகவும், அபாயகரமான காட்டுவாழ் விலங்கினங்களி‎ன் புகலிடமாகவும், அபூர்வ சக்திகள் படைத்த மூலிகைகளி‎ன் வாழ்விடமாகவும் விளங்கும் இம்மலை, பரம்பொருள் சிவபரமாத்மாவி‎ன் அருட்கடாட்சம் பெற்றபடியால் சிவ‎ன்மலை எ‎ன்றும் மகாலிங்க மலை எ‎ன்றும் அழைக்கப்படுகிறது.

சிவனும் பார்வதி தேவியும் இங்கே நிரந்தரமாகத் தங்கியிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பதாக சித்தர்களுக்கு வாக்குத் தந்திருப்பதால் இவ்விடம் தென்கயிலாயம் எ‎ன்றும் அழைக்கப்படுகிறது.

Sathuragiri

இம்மலை அஷ்டமாசித்திகள் பெற்ற பதினெட்டு சித்தர்களி‎ன் தலைமையிடமாகவும், மற்றும் பல சித்தர்கள் கூடி தத்தம் ராய்ச்சிகளை விவாதிக்கும் இடமாகவும் அறியப்படுகிறது. இம்மலையிலுள்ள நூற்றுக்கணக்கான குகைகளில் தங்கியிருந்து சிவனை வணங்கி வழிபட்டு வந்ததுட‎ன் மக்களி‎ன் நோய் தீர்க்கும், துன்பங்களைக் களையும் மருந்துகளைக் கண்டுபிடிக்கும் ராய்ச்சிகளிலும் சித்தர்கள் ஈடுபட்டு வந்துள்ள‎னர்.

சித்தர்பூமியாம் சதுரகிரியில் எண்ணற்ற மூலிகைகள் நிறைந்த வனம் உள்ளது. இன்றும் இம்மலையில் சித்தர் பெருமக்கள் அரூபமாக வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. சித்தர்களி‎ன் அதிர்வலைகள் மலையெங்கும் நிறைந்திருப்பதால் அதில் சிறிதாவது தமது உடலில் ஒட்டட்டும் என பக்தர்கள் விரும்பி ‏இங்கு வருகின்றனர்.

அமைவிடம்

சதுரகிரி, தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் வத்றாப் என அழைக்கப்படும் வத்திறாயிருப்பு அரு‏கில் உள்ள தாணிப்பாறையில் உள்ளது. வத்றாப்பிலிருந்து சுமார் 10 கிமீ தொலைவிலும், வத்றாப் விலக்கிலிருந்து சுமார் 7 கிமீ தொலைவிலும் தாணிப்பாறை அமைந்துள்ளது.

Sathuragiriதெ‎ன்னந்தோப்புகளும், மாந்தோப்புகளும், கொய்யாத் தோப்புகளும் சூழ தாணிப்பாறை ரம்மியமாய் காட்சியளிக்கும். மலையி‎‎ன் அடிவாரத்திலிருந்து ஏறக்குறைய எட்டு கிமீ தூரத்தில் உச்சியில் மகாலிங்கம் ச‎ன்னதி அமைந்துள்ளது. ஒரு மலையல்ல, இரு மலையல்ல.. ஏழு மலைகளைக் கடந்துதா‎ன் கோவிலைச் சென்றடைய முடியும்.

‎மலைகள் சுற்றிலும் சதுர வடிவில் அமைந்த படியால் சதுரகிரி எ‎ன்று பெயர்பெற்றதாகவும் சொல்கிறார்கள். நா‎ன்கு பெரிய மலைகள் கோவிலைச் சுற்றிலும் அரண் போல் அமைந்திருப்பதாலும் அவ்வாறு பெயர் பெற்றதாகச் சொல்வதும் உண்டு. ‘சதுர’ எ‎ன்றால் நா‎ன்கு, ‘கிரி’ எ‎ன்றால் மலை.

சுற்றிலும் பெரிய மலைகள் இருந்தாலும் சிறு சிறு கிளை மலைகளும் உண்டு. ‏இவற்றையெல்லாம் தாண்டித்தா‎ன் மேலே செல்ல வேண்டும். ஒரு மலைக்கும் இன்னொரு மலைக்கும் இடைப்பட்ட பகுதி காட்டாற்றி‎‎ன் போக்கிடமாக உள்ளது.
தல புராணம்

கைலாயத்தில் சிவபெருமானையும் பார்வதியையும் தேவாதி தேவர்களும், ரிஷிகளும், முனிவர்களும் வழிபட்டு வந்தனர். அவர்கள் அனைவரும் இருவரையும் பிரதட்சணமாகச் சுற்றி வந்து வணங்கினர்.

பிருங்கி மகரிஷி என அழைக்கப்படும் தவ சிரேஷ்டப் பெருமகனார் மட்டும் சிவபெருமானை மட்டுமே சுற்றி வந்து வணங்கினார், பார்வதியை தவிர்த்துவிட்டு.

பார்வதி சிவனைப் பார்த்து ஏன் அவர் தன்னைச் சுற்றி வரவில்லை எனக் கேட்டார். பூலோகத்தில் அனைத்தையும் துறந்துவிட்டு மோட்சகதியைத் தேடி தன்னிடம் வருவோருக்குத் தாம் மோட்சத்தை அளிப்பதாகப் பதிலளித்தார் பரமாத்மா.

உலக இன்பங்களை அனுபவிக்க விரும்பும் பக்தர்கள் அவற்றை அடையும் சக்தியை தேவியிடமிருந்து பெறுவதால், தங்கள் இருவரையும் சேர்த்து வணங்குகி‎ன்றனர். ஆனால் பிருங்கி முனிவரோ தமக்கு மோட்சகதி மட்டும் கிடைத்தால் போதும் என விரும்புவதால் அவர் த‎ன்னை மற்றும் சுற்றி வந்து வணங்கியதாக மேலும் கூறினார் சிவ‎ன்.

இவ்வாறு பரம்பொருள் கூற, தன்னைத் தவிர்த்துவிட்டாரே எ‎‎‎ன்று கோபம் கொண்ட பார்வதி தேவி பிருங்கி மகரிஷிக்கு சாபமிட்டார், அவருடைய சக்தியெல்லாம் இழக்கட்டும் என்று.

சக்தியை இழந்த மகரிஷி தடுமாறி கீழே விழ, த‎ன்னுடைய அடியாரைக் காக்கும் விதமாக ஓர் ஊ‎ன்றுகோலை எடுத்து சிவ‎ன் வீச, அதைப் பிடித்துக்கொண்டு தட்டுத் தடுமாறி பிருங்கி மகரிஷி வெளியேறினார்.

த‎ன்னை சிவனுட‎ன் இணைத்துக் கொண்டால் மட்டுமே த‎ன்னுடைய விருப்பங்களை நிறைவேற்ற முடியும் எ‎ன எண்ணிய பார்வதி, பரமாத்மனின் இடப்புற உடலாகத் த‎‎ன்னை ஆக்கிக்கொள்ள வேண்டி தவம் செய்யப் புறப்பட்டார்.

பரம்பொருளை விட்டுப் பிரிந்த பார்வதி சதுரகிரி வந்தடைந்து தவம் செய்ய சரியான இடம் தேடி மலையுச்சியை அடைந்து கல்லால மரத்தி‎ன் அடியில் அமர்ந்து சிவனைக் குறித்து தியானம் செய்யலானார். இந்த மரம் சட்டநாத முனிவரின் குகைக்கருகில் இருக்கிறது.

அவ்வனப் பகுதி 12 ஆண்டுகளாகத் தொடர்ந்து வறட்சியி‎ன் பிடியில் சிக்கியிருந்தது. தெய்வமகளி‎ன் வருகையால் மரங்கள் மலர்ச்சியடைந்தன. செடிகளும், கொடிகளும் பூச்சொறிந்தன. புத்துணர்வு பெற்றது வனம்.

தெய்வத்தி‎ன் வருகையறிந்த சட்டநாதர் அவரை வரவேற்று, வந்த காரணத்தை வினவினார். பார்வதி தேவி‎யின் விளக்கத்தைக் கேட்டறிந்த சட்டநாதர், அவரது தவம் நிறைவேற அனைத்து உதவிகளையும் செய்தார்.

பார்வதி தேவி சந்தனத்தைக் குழைத்து அத‎ன் மூலம் லிங்கம் ஒ‎ன்றை பிரதிஷ்டானம் செய்தார். அந்த லிங்கத்தை அனுதினமும் தவறாது பூஜித்து வந்த தேவி, கடும் தவத்தை மேற்கொண்டார்.

மனமுருகிய சிவ‎ன் தேவியி‎ன் தவத்தினை மெச்சி, த‎ன்னுடைய ரிஷப வாகனத்தில் காட்சி தந்து, தேவி வேண்டிய வரத்தினை அருளினார்.

சந்தன லிங்கத்தை தேவியே பூஜித்து வழிபட்டமையால் அதை தவத்தில் உயர்ந்த ரிஷிகளும், முனிவர்களும், சித்தர் பெருமக்களும் மட்டுமே பூஜிக்க வேண்டுமெ‎ன்று ஆணையிட்டார்.

இவ்வுலக வாழ்க்கையை விரும்பும் பக்தர்கள் த‎ன்னை இங்கே வந்து வழிபட்டால், இவ்வுலக வாழ்வி‎ன் இன்பத்தை அனுபவித்துக் கொண்டே அவர்கள் மோட்சகதியை அடையும் பக்குவத்திற்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும், இறுதியாக த‎ன்னுடன் இணைவார்கள் எ‎ன்றும் அறிவித்தார்.

அத‎ன் பின் எல்லோரையும் ஆசிர்வதித்த சிவபரமாத்மா த‎ன்னுடன் இணைந்த தேவியுட‎ன் அர்த்தநாரியாக கைலாயம் திரும்பினார்.

பி‎ன்னர், சட்டநாத முனி சந்தன மகாலிங்கத்தை வழிபட, அவருக்குப் பி‎ன் அவருடைய சீடர் காணாங்கி முனி வழிபட்டு வந்தார். இதுவே தல வரலாறு.

(தொடரும்).....

Tuesday, June 29, 2010

வைகைக் கரை காற்றே நில்லு......


திரைப்படம்: உயிருள்ளவரை உஷா
இசை:டி.ராஜேந்தர்
பாடியவர்: கே.ஜே.ஜேசுதாஸ்
வெளியான ஆண்டு: 1984

வைகைக் கரை காற்றே நில்லு
வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு
மன்னன் மனம் வாடுதென்று
மங்கைதனைத் தேடுதென்று
காற்றே பூங்காற்றே
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்
காதோரம் போய் சொல்லு

(வைகைக் கரை காற்றே நில்லு)

திருக்கோவில் வாசல் அது திறக்கவில்லை
தெருக்கோடி பூஜை அது நடக்கவில்லை
தேவதையைக் காண்பதற்கு வழியுமில்லை
தேன்மொழியைக் கேட்பதற்கு வகையுமில்லை
காதலில் வாழ்ந்த கன்னி மனம்
காவலில் வாடையில் கண்ணிவிடும்
கூண்டுக்குள்ளே அலைமோதும்
காதல் கிளி அவள் பாவம்
காற்றே பூங்காற்றே
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்
காதோரம் போய் சொல்லு


மாக்கோலம் போடுதற்கு வரவில்லையே
அவள் கோலம் பார்ப்பதற்கு வழியில்லையே
ஜன்னலுக்குள் நிலவு அவள் தோன்றவில்லையே
ஜாடையொலி சிந்த அவள் இன்று இல்லையே
நிலவினை மேகம் வானில் மறைக்க
அவளினை யாரோ வீட்டில் தடுக்க
மேகமது விலகாதோ
சோகமது நீங்காதோ
காற்றே பூங்காற்றே
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்
காதோரம் போய் சொல்லு

(வைகைக் கரை காற்றே நில்லு)

கவிதை





Monday, June 28, 2010

கடல்நீரில் உப்பு வந்தது எப்படி?




வெப்பக்கோளமாக இருந்த பூமியில், பல லட்சக்கணக்கான ஆண்டுகளாகத் தொடர்ந்து பெய்த மழையால் தான் கடல் உருவானது என்று கூறப்படுகிறது.

பாறைகளில் இருக்கும் உப்பு, மழைநீரால் கரைக்கபட்டு, ஆற்றுநீரால் அடித்துவரபட்டு கடலில் வந்து கலந்தது; அதன்பிறகு ஆவியாதல் முலம் கடலநீர் மேலேசென்றுவிட,உப்பு மட்டும் கடலிலேயே தங்கி விட்டது. இதுபோல்லட்சக்கணக்கான வருடங்களாகத் தொடர்ந்து நடைபெற்றதால் கடலில்அதிகளவு உப்பு சேர்ந்து விட்டது என்றே கருதபட்டது.


ஆற்று நீரில் அதிகளவு இருப்பதோ, கால்சியம் மற்றும் பை-கார்பனேட் உப்பு.கடலில் அதிகளவு இருபது நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் சோடியம் குளோரைடு உப்பு. அதாவது அடிபடையில் ஆற்றுரில் உள்ள உப்பும், கடல்நீரில் உள்ள உப்பும் வெவ்வேறானவை. எனவே, கடலநீரில் காணப்படும் சோடியம் குளோரைடு உப்பு எங்கிருந்து வந்தது?


பூமி, முதலில் பாறைக்குழம்புக் கோளமாக எரிமலைகளுடன் இருந்தது.அதன்பின்னர் படிபடியாகக் குளிர்ந்ததால், பல்வேறு அடுக்கு பாறைகளுடன் புவி ஓடு உருவானது. பாறைக்குழம்பில் இருந்து பாறைத் தட்டுகள் உருவானபோது,நீர் தனியே பிரிந்து பூமிக்கு மேல் வந்ததால் தான் கடல் உருவானது.

ஆதிகாலத்தில் எரிமலைகளின் முலமாக பூமிக்குள் இருந்து சோடியம்குளோரைடு உப்புகள், வாயு வடிவில் பூமிக்கு மேல் வந்ததால் தான் கடலநீரில் அதிகளவு சோடியம் குளோரைடு உப்பு இருக்கிறது. இக்கருத்துக்கு ஆதாரமாகபாறைக்குழம்புக் கோளமாக இருக்கும் வியாழன் கிரகத்தின் துணைக்கிரகமான `இயோ’ விளங்குகிறது.

பூமியில் உள்ள எரிமலைகளை விட, இயோவின் மேற்பரப்பில் அதிகவெப்பமுள்ள எரிமலைகள் காணபடுகின்றன. இந்த எரிமலைகளில் இருந்துசோடியம் மற்றும் குளோரைடு உள்பட உப்பு முலபொருட்கள் வாயு வடிவில்பீய்ச்சியடித்துக் கொண்டு இருக்கிறது. அமெரிக்காவில் உள்ள ஜான் ஹாகின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாரல் ஸ்ட்ரோபில் என்ற ஆராய்ச்சியாளர் இதைக் கண்டுபிடித்திருக்கிறார்.

1974-ம் ஆண்டு பாபிரவுன் என்ற ஆராய்ச்சியாளர், இயோவின் வாயுமண்டலத்தில் மெலிதான சோடியம் மேகங்கள் இருப்பதை தொலைநோக்கி முலம் கண்டறிந்து அறிவித்தார். ஆனால், அந்த அறிவிப்பு பலஆராய்ச்சியாளர்களை ஆச்சரியபட வைத்தது. காரணம், இயோவின் மேற்பரப்பில்எங்குமே உப்பு படிவங்கள் இல்லை. முதன்முறையாக எரிமலைகளின் முலம் உப்பு வாயுக்கள் பீய்ச்சியடித்துக் கொண்டிருபதை டாரல் கண்டுபிடித்ததன் முலம்,பல்வேறு புதிர்களுக்கு விடை கிடைத்திருக்கிறது.

அதிக வெப்பநிலையில் பாறைக்குழம்புக் கோளமாக இருக்கும் இயோவில், உப்புஎரிமலைகள் இருப்பதைபோல், நம் பூமியும் முதலில் பாறைக்குழம்புக் கோளமாகஇருந்தபோது எரிமலைகளில் இருந்து சோடியம் குளோரைடு வெளிவந்ததுதெளிவாகிறது. எனவேதான்,கடல்நீரில் அதிகளவு சோடியம் குளோரைடு உள்ளது.

நன்றி -தினகரன்

தட்டி பார்த்தேன் கொட்டாங்கச்சி.....


படம் : தங்கைக்கோர் கீதம்
இசை : டி. ராஜேந்தர்

பாடியவர் : டி. ராஜேந்தர்

வெளியான ஆண்டு: 1983


தட்டி பார்த்தேன் கொட்டாங்கச்சி
தாளம் வந்தது பாட்ட வச்சி
தூக்கி வளர்த்த அன்பு தங்கச்சி
தூக்கி எறிஞ்சா கண்ணு குளம் ஆச்சு
தூக்கி எறிஞ்சா கண்ணு குளம் ஆச்சு

தேனாக நினைச்சு தான் உன்ன வளர்த்தேன்
நீயும் தேளாக கொட்டி விட நானும் துடிச்சேன்

தேனாக நினைச்சு தான் உன்ன வளர்த்தேன்
நீயும் தேளாக கொட்டி விட நானும் துடிச்சேன்


தட்டி பார்த்தேன் கொட்டாங்கச்சி
தாளம் வந்தது பாட்ட வச்சி
தூக்கி வளர்த்த அன்பு தங்கச்சி
தூக்கி எறிஞ்சா கண்ணு குளம் ஆச்சு


தோள் மீது தொட்டில் கட்டி தாலாட்டினேன்
தாய் போல் நான் தானே சீர் ஆட்டினேன்
யார் என்று நீ கேட்க ஆளாகினேன்
போ என்று நீ விரட்டும் நாய் ஆகினேன்
போ என்று நீ விரட்டும் நாய் ஆகினேன்

மலராக எண்ணி தான் நானும் வளர்த்தேன்
நீயும் முள்ளாக தைச்சு விட நானும் துடிச்சேன்

தட்டி பார்த்தேன் கொட்டாங்கச்சி
தாளம் வந்தது பாட்ட வச்சி
தூக்கி வளர்த்த அன்பு தங்கச்சி
தூக்கி எறிஞ்சா கண்ணு குளம் ஆச்சு


பாதில வந்த சொந்தம் பெரிசு என்று
ஆதி முதல் வளர்த்த என்னை வெறுத்து விட்ட
பாசம் வச்ச என் நெஞ்சு புண் ஆகவே
புருஷன் பக்கம் பேசி விட்ட தங்கச்சியே
புருஷன் பக்கம் பேசி விட்ட தங்கச்சியே

கிளியாக நினைச்சு தான் உன்ன வளர்த்தேன்
நீயும் கொத்தி விட வலிபட்டு நானும் துடிச்சேன்


தட்டி பார்த்தேன் கொட்டாங்கச்சி
தாளம் வந்தது பாட்ட வச்சி
தூக்கி வளர்த்த அன்பு தங்கச்சி
தூக்கி எறிஞ்சா கண்ணு குளம் ஆச்சு

Sunday, June 27, 2010

வாசமில்லா மலரிது.......

திரைப்படம் : ஒரு தலை ராகம்
இசை: டி.ராஜேந்தர்
பாடியவர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
பாடல் : டி.ராஜேந்தர்
வெளியான ஆண்டு: 1980


வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது...
வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது...
வைகை இல்லா மதுரை இது...
மீனாட்சியை தேடுது...

ஏதேதோ ராகம்...எந்நாளும் பாடும்
அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்...
வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது...


பாட்டுக்கொரு ராகம் ஏற்றி வரும் புலவா
உனக்கேன் ஆசை நிலவவள் மேலே
மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை
உனக்கேன் ஆசை கலைமகள் போலே...
மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை
உனக்கேன் ஆசை கலைமகள் போலே..

வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது...

என்ன சுகம் கண்டாய் இன்று வரை தொடர்ந்து
உனக்கேன் ஆசை ரதியவள் மேலே
வஞ்சி அவள் உன்னை எண்ணவில்லை இன்றும்
உனக்கேன் ஆசை மன்மதன் போலே...
வஞ்சி அவள் உன்னை எண்ணவில்லை இன்றும்
உனக்கேன் ஆசை மன்மதன் போலே...

வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது...

மாதங்களை எண்ண பன்னிரண்டு வரலாம்
உனக்கேன் ஆசை மேலொன்று கூட்ட
மாது தன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே
உனக்கேன் ஆசை உறவென்று நாட...
மாது தன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே
உனக்கேன் ஆசை உறவென்று நாட...

வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது...
வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது...
வைகை இல்லா மதுரை இது...

மீனாட்சியை தேடுது...
ஏதேதோ ராகம்...எந்நாளும் பாடும்
அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்...
வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது...

Saturday, June 26, 2010

வாழைப்பழம்




வாழைப்பழம் ஒரு சாதாரணப் பழவகையைச் சேர்ந்ததாக இருந்தாலும், அதன் மருத்துவ குணங்கள் அதிசயிக்க வைக்கின்றன.இதில் குளூக்கோஸ்,ஃபிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற சர்க்கரைகளுடன் நார்ச்சத்தும் அடங்கி உள்ளதால் அற்புதமான உணவாகும்.


வரலாறு: வாழைப்பழம் முதலில் தோன்றியது ஆசியாவில். மத்திய அமெரிக்காவில் 350 வருடங்களாகத்தான் பிரபலம். அங்கிருந்து வட அமெரிக்காவிற்கு போனது. கொஞ்சம் கொஞ்சமாக வாழைப்பழத்தின் பயன்கள், மருத்துவக் குணங்கள் எல்லாம் தெரிய ஆரம்பிக்க, இப்போது காலை உணவின் முக்கிய அம்சமாகி விட்டது.

கி.மு 327 ல் அலெக்ஸாண்டர் இந்தியாவிற்கு படையெடுத்து வந்த போது வாழைப்பழத்தை விரும்பிச் சாப்பிட்டிருக்கிறார். திரும்பிப் போகும் போது கிரேக்க நாட்டிலும் மேலை நாடுகளிலும் அறிமுகப்படுத்தியதாகச் சொல்கிறார்கள். அரேபியர்கள் இதை அடிமை வியாபாரத்துடன் சேர்த்து விற்பனை செய்தனர். அடிமை வியாபாரிகள் தந்த பெயர் பனானா. அப்போது வாழைப்பழம் இப்போது போலப் பெரிதாக இருந்ததில்லை. விரல் நீளம்தான் இருக்கும். அரேபிய மொழியில் பனானா என்றால் விரல் என்று அர்த்தம். எல்லாப் பழங்களும் பழுக்கும் போது எத்திலீன் வாயுவை வெளிப்படுத்தும். வாழையில் அதிகமாக இருக்கும்.

வாழை பழத்தில் மிகப் பல ஆரோக்கிய குணாதிசயங்கள் இருக்கிறது. அதனை இன்று பார்ப்போம்.

வாழைப்பழம் இதய நோய், காய்ச்சல், மூட்டுவலி, மன உளைச்சல் முதலியவற்றை எளிதில் குணமாக்கும்

வாழைப்பழங்கள் சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு பலன்கள் ஏற்படுகின்றன. வாழைப்பழத்தில் உடலுக்கு நன்மை தர கூடிய முக்கியமான வைட்டமின்கள் காணப்படுகிறது. வைட்டமின் எ, பி1, பி2, பி6 மற்றும் வைட்டமின் சி போன்றவை காணப்படுகிறது.

வயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல் புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது.

பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம்.
குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு.

விளையாட்டு வீரர்களின் கடைசி நேர மனநிலையை வெற்றியா தோல்வியா என் நிர்ணயிப்பது அதன்படி முழு வேகத்துடன் செயல்படுவது என அனைத்தையும் நிர்ணயிப்பது அவர்களின் உடலில் உள்ள பொட்டாசியம்தான். பொட்டாசியம் அளவு குறையாமல் இருந்தால் நான்காவதாக ஓடி வரும் வீரர் அந்தக் கடைசி நொடியில் முடிவு எடுத்து முதல் ஆளாக ஓடி வந்து வெற்றி பெற்று விடுவாராம். விளையாட்டு வீரர்களுக்கும் தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும் என்ற உறுதியானவர்களுக்கும் முழுமையான சக்தி நிரப்பப்பட்டுள்ள பழம் வாழைப்பழம்தான்.

மருத்துவக் குணங்கள் : வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6 ஆனது டிரைப்டோபெனாக மாற்றப்படுகிறது. டிரைப்டோபென் சீரோடோனினாக மாற்றமடைகிறது. இது நமக்கு சாந்த குணத்தை தோற்றுவிக்கிறது. டிரைப்டோபென் பின்னர் நியாசினாக மாற்றம் அடைகிறது. உடலில் உள்ள ஹார்மோன் குறைபாடுகளை நிவர்த்தி செய்கிறது.

வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் மூளையின் திறனை அதிகரிக்கிறது. நல்ல மனநிலையில் வைத்து கொள்ள துணைபுரிகிறது. நரம்புகளை சீராக வைத்து கொள்கிறது. பொட்டாசியமானது ரத்த அழுத்தத்தையும் இதயத்தையும் சீராக இயங்க வைக்கிறது.


வாழைப்பழத்தில் காணப்படும் நார்ச்சத்துகள் குடலை சீராக வைக்கிறது. வாழைப்பழத்துடன் பால் கலந்து சாப்பிட்டாலோ அல்லது தேன் கலந்து சாப்பிட்டாலோ அவை வயிற்று சம்பந்தமான நோய்களை குறைக்கிறது.ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்கும் வைக்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது.

வாழைப்பழம் ஒரு மனிதனுக்கு கிடைக்ககூடிய ஊட்டச்சத்து மட்டுமல்ல பல நோய்கள் வராமல் தடுக்கக்கூடிய நோய்தடுப்பு நாசினியும் கூட. இதை நாம் உடலில் தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மூளை வலிமை (Brain Power): வாழைப்பழத்தை உணவுடன் சேர்த்து கொடுத்து சோதனை செய்து பார்த்தபோது மூளைத்திறன் அதிகரித்ததோடு, பொட்டாசியம் நிறைந்த இந்த உணவு அதிகமான கல்வித்திறனை அளிப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

வாழையின் ஒவ்வொரு பாகமுமே மருத்துவ குணங்கள் கொண்டவை. சில நோய்களுக்கு வாழையை எப்படிப் பயன்படுத்தலாம் என்று பார்ப்போம் :

நெஞ்சுக்கரிக்கும் போது ஒரு பழம் சாப்பிட்டால் எரிச்சல் நீங்கி விடும். இதன் காரத்தன்மை நெஞ்செரிச்சலை உருவாக்கும் அமிலத்தைச் சமன் செய்து நிவாரணம் அளிக்கிறது.

கர்ப்பிணிகள் வாழைப்பழம் சாப்பிட்டால் வயிற்றுப் புரட்டலை தடுக்கும். இதிலுள்ள சர்க்கரை ரத்தத்தில் கலந்து வாந்தியைத் தடுக்கிறது.

நார்ச்சத்து அதிகம் என்பதால் மலச்சிக்கலைத் தடுக்கும்.

இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் சிவப்பணுக்கள் குறைபடும் இரத்த சோகைக்கும் அருமருந்தாய் அமைகிறது வாழைப்பழம்.

குடிபோதையை நீக்க சிறந்தது. இதனை மில்க்ஷேக் செய்து தேன் கலந்து பருகினால் வயிற்றைச் சுத்தம் செய்து உடலுக்கு சக்தியைக் கொடுக்கும். உடலில் நீர்ச்சத்தையும் அதிகரிக்கச் செய்யும்.

வாழைப்பழத்தில் எந்த வகையானாலும், அஜீரணத்தைப் போக்குவதுடன், உடலில் தங்கும் தேவையற்ற பொருட்களை வெளிக்கொண்டு வரப் பயன்படுகிறது

தொடர்ந்து இருமல் இருந்து வந்தால் கருமிளகு கால் தேக்கரண்டி எடுத்து பொடி செய்து கொள்ளுங்கள். அதில் பழுத்த நேரந்திரம் பழத்தை கலந்து இரண்டு மூன்று வேளை சாப்பிட்டு வர இருமல் சரியாகும்.

காசநோய் உள்ளவர்கள் அரை கப் தயிரில் வாழைப்பழத்தை பிழிந்து, ஒரு தேக்கரண்டி தேன், ஒரு டம்ளர் இளநீர் ஆகியவை சேர்த்து தினமும் இரண்டு வேளை வீதம் சாப்பிட்டு வர அந்த பாதிப்பில் இருந்து படிப்படியாக விடுபடலாம்.

சின்னம்மை, டைபாய்டு, மஞ்சள் காமாலை ஆகியவற்றுக்கு தேனில் வாழைப்பழத்தைப் பிசைந்து தினமும் இரு வேளை வீதம் சாப்பிட வேண்டும்.

பசும்பாலுடன் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டுவர அஜீரணம் சரியாகும். தொடர்ந்து தினமும் 2-3 வேளை இவ்வாறு சாப்பிட்டு வந்தால் மூலநோய் தீரும்.

காய்ச்சல் வருவதுபோல் உணர்ந்தால் ஒரு வாழைப்பழத்தை உடனே சாப்பிடுங்கள்.

1.செவ்வாழைப்பழம - கல்லீரல் வீக்கம், மூத்திர வியாதியை குணமாக்கும

2.பச்சை வாழைப்பழம் - குளிர்ச்சியை கொடுக்கும

3.ரஸ்தாளி வாழைப்பழம் - கண்ணீற்கும், உடல் வலுவுக்கும் நல்லது.

4.பேயன் வாழைப்பழம் - வெப்பத்தைக் குறைக்கும

5.கற்பூர வாழைப்பழம் - கண்ணிற்குக் குளிர்ச்ச

6.நேந்திர வாழைப்பழம் - இரும்பு சத்தினை உடலுக்கு கொடுக்கும

7.மஞ்சள் வழைப்பழம் -மலச்சிக்கலைப் போக்கும்

வாழைப்பழம் சாப்பிடுவதால் அது நம் உடம்பில் நோய் நீக்கும் மருந்தாக செயல்படுகிறது. வாழைப்பழத்துடன் பால் கலந்து சாப்பிட்டாலோ அல்லது தேன் கலந்து சாப்பிட்டாலோ அவை வயிற்று சம்பந்தமான நோய்களை குறைக்கிறது.

கொழுப்புச் சத்து அதிகம் உள்ளவர்களும், சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களும், நீரிழிவு நோய் உள்ளவர்களும் வாழைப்பழத்தைத் தவிர்த்து விட வேண்டும்.

இதய நோய் காய்ச்சல் மூட்டுவலி மன உளைச்சல்
முதலியவற்றை எளிதில் குணமாக்கும் அரிய பழம் அரிய மருந்து இது.

மலச்சிக்கல் (Constipation):ஒரு மனிதனுக்கு மலச்சிக்கல் வந்துவிட்டால் அவனது மனித குணமே மாறிவிடும். அதற்கு ஒரே வழி உங்கள் உணவில் தினமும் வாழைப்பழத்தைச் சேர்த்து சாப்பிடுங்கள். வாழைப்பழத்தில் அதிகமான பைபர் (Fiber) இருப்பதால் உங்கள் குடலை சுத்தமாக்கி மலம் இலகுவாக வெளியாவதற்கு வழிசெய்வதோடு மனத்தளர்ச்சியை சுத்தமாக போக்கிவிடுகிறது.

மந்தம் (Hangovers):நம்மில் சிலர் சிறிது தூங்கிவிட்டு எழும்பிவிட்டால் கூட மந்தமாக இருப்பதாக அலுத்துக் கொள்வார்கள். உங்களுக்கு இதோ வாழைப்பழ மருந்து தயாராகவுள்ளது. வாழைப்பழத்துடன் தேனையும், பாலையும் சேர்த்து ஒரு குவளை மில்க் ஷேக் (Milk Shake) தயார் செய்து குடிக்கவும். வாழைப்பழம் தேனுடன் சேர்த்து வயிற்றை அமைதிப்படுத்தி இரத்தத்திலுள்ள இனிப்புச் சத்தை அதிகமாக்குகிறது. அத்துடன் இதில் பாலும் சேர்ப்பதால் பால், நீர் சத்தை சரியாக வைத்துக்கொள்கிறது. இந்த மூன்றும் சேர்ந்து மந்த நிலைக்கு டாட்டா காட்டிவிடுகிறது.

நெஞ்செரிப்பு (Heart Burn):உங்களுக்கு நெஞ்செரிகிறதா? வாழைப்பழத்திற்கு இயற்கையாக அமில எதிர்ப்பு சக்தி இருப்பதால் வாழைப்பழத்தை தொடர்ந்து தினமும் சாப்பிட்டு வர நெஞ்செரிப்பு நோய் உங்களை விட்டு பறந்துவிடும்.

உடற்பருமன் (Over Weight):ஆராய்ச்சியாளர்கள் 5000 நோயாளிகளை சோதனை செய்து பார்த்ததில் அதிகமான உயர்ந்த மனஅழுத்த வேலைகளில் உள்ளவர்கள் தான் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள். இந்த அழுத்தத்தின் காரணத்தால் அவர்களது இரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவு சீராக இல்லாத காரணத்தால் உடற்பருமன் ஏற்படுகிறது. அவர்களுக்கும் வாழைப்பழத்தை தினமும் உணவில் சேர்த்து அவர்களது இரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவை ஒரு ஸ்திரத்தன்மைக்கு கொண்டு வந்து உடற்பருமன் குறைவதாக அந்த ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

குடற்புண் (Ulcers):வாழைப்பழத்தை தினமும் சாப்பிட்டால் குடலின் உட்பகுதி மென்மையாகி அதிகமான அமிலத்தன்மை ஏற்படுத்தாததினால் குடற்புண்ணை அழிப்பதுடன் குடற்புண் வராமல் காக்கிறது.

சீரான வெப்பநிலை (Temperature Control):வாழைப்பழத்திற்கு குளிர்ந்த பழம் (Cooling Fruit) என்ற பெயரும் உண்டு. தாய்லாந்து நாட்டு மக்கள் அதிகமாக வாழைப்பழத்தை சாப்பிடுவதால் அவர்களது உடலின் தட்பவெப்ப நிலை சீராக உள்ளது.

காலநிலை மாற்றம் (Seasonal Affective Disorder):வாழைப்பழம் சாப்பிடுவதால் காலநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய ஒரு வித மந்த நிலையை இல்லாமல் ஆக்குகிறது.

புகைப்பிடிப்பது (Smoking):புகைப்பிடிப்பவர்கள் அந்த கொடுமையிலிருந்து விடிவு பெற வாழைப்பழத்தை சாப்பிடலாம். வாழைப்பழத்தில் B6. B12 அதிகமாக இருப்பதால் புகைப்பிடிப்பதால் ஏற்படும் Nicotine ஐ கொஞ்சம் கொஞ்சமாக குறைப்பதால் புகைப்பிடிப்பதிலிருந்து விடுபடலாம்.

மன அழுத்தம் (Stress):வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் அவை இதயத்துடிப்பை கட்டுக் கோப்புக்குள் வைத்துக் கொள்வதுடன் ஆக்ஸிஜைனை மூளைக்குச் செலுத்தி உடலின் தண்ணீரின் அளவை சமப்படுத்துகிறது. இதனால் மன அழுத்த நோய் நீங்கும்.

காலைத் தூக்கம் (Morning Sickness):மூன்று நேர உணவு இடைவேளைக்குள்ளும் வாழைப்பழத்தை சாப்பிட்டால் உடம்பிலுள்ள இரத்தத்தில் உள்ள குளுகோஸ் (Blood Sugar) அளவு அதிகமாக்கப்பட்டு காலைத் தூக்க நோயிலிருந்து விடுபடலாம்.

நரம்பு நாளங்கள் (Nerve System):இதில் B விட்டமீன்கள் அதிகமாக இருப்பதால் நரம்பு நாளங்கள் நன்றாக செயல்பட்டு நரம்புத் தளர்வை போக்குகிறது.

அழுத்தக் குறைவு (Depression):‘Mind’ என்ற நிறுவனம் நடத்திய ஆராய்ச்சியின் முடிவாக ஒவ்வொரு உணவிற்குப் பின்பும் வாழைப்பழம் சாப்பிட்டால் அழுத்தக் குறைவு நோயை விரட்டலாம் என்று கூறுகிறது. ஏனெனில் மூளையிலிருந்து கசியக் கூடிய நீரை திட்டப்படி வெளியேற்றி மனிதனை மகிழ்ச்சியாக்குகிறது.

தினசரி ஒரு செவ்வாழை வீதம் தொடர்ந்து 40 நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் உடலில் புதிய இரத்தம் உற்பத்தியாகும். நரம்புகளுக்கு நல்ல பலம் ஏறும். உடலில் புதிய சுறுசுறுப்பும், மனதில் உற்சாகமும் உண்டாகும்.

தொடர்ந்து 21 தினங்களுக்கு இரவு ஆகாரத்திற்குப் பின் ஒரு செவ்வாழை சாப்பிட்டு வந்தால் பல் சம்பந்தமான எல்லாக் கோளாறுகளும் நிவர்த்தியாகும்.

சிறுவர், வாலிபர், வயோதிகர்களுக்கு கண்பார்வை குறைய ஆரம்பித்தவுடன் அவர்களுக்கு தினசரி செவ்வாழை பாதியளவு முதல் முழு அளவு வரை தொடர்ந்து 21 தினங்களுக்குக் கொடுத்து வந்தாலே கண் பார்வை படிப்படியாகத் தெளிவடையும்.

வாழைப்பழத்தோல்:”மறு” என்று சொல்லக்கூடிய கருப்பு வடு உடம்பில் ஏற்பட்டால் வாழைப்பழத் தோலை சிறு துண்டாக வெட்டி உள் தோல் அந்த வடுவின் மேலும் மஞ்சள் தோல் வெளியில் தெரியும் படி வைத்து அதன் மீது சிறிது மருத்துவ டேப் ஒட்டி வைத்தால் நாள்பட அந்த மறு மறைந்துவிடும்.

வாழைப்பழத்தோலின் உட்பகுதியை கொசுக் கடித்த இடத்தில் வைத்து அழுத்தி தேய்த்தால் கொசுக் கடியால் ஏற்பட்ட வேதனையும் தீரும். வீக்கமும் வற்றிவிடும்.

100 கிராம் வாழைப்பழத்தில்:
நீர் 61.4%
மாவுச்சத்து 36.4.%
சுண்ணாம்புச்சத்து 0.01%
கரோட்லின் 78
மை.கிரிபோபிளேவின் _ 0.08 மி.கி.வைட்டமின் 'சி' 7 மி.கி.
புரோட்டின் 1.3%
கொழுப்பு 0.2%
இரும்பு 0.04%
தயமின் 0.05 மி.கி.
நியாசின் 0.5 மி.க


தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள் !

Friday, June 25, 2010

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே

படம் - ஆட்டோகிராப்
வரிகள் - பா.விஜய்



ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!

ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகலொன்று வந்திடுமே!
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்,
இலட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்!

மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு!
மலையோ! அது பனியோ! நீ மோதிவிடு!

உள்ளம் என்பது எப்போதும்
உடைந்து போகக்கூடாது,
என்ன இந்த வாழ்க்கை என்ற
எண்ணம் தோன்றக்கூடாது!
எந்த மனிதன் நெஞ்சுக்குள்
காயமில்லை சொல்லுங்கள்!
காலப் போக்கில் காயமெல்லாம்
மறைந்து போகும் மாயங்கள்!

உளி தாங்கும் கற்கள் தானே
மண் மீது சிலையாகும்,
வலி தாங்கும் உள்ளம் தானே
நிலையான சுகம் காணும்!
யாருக்கில்லைப் போராட்டம்!
கண்ணில் என்ன நீரோட்டம்!
ஒரு கனவு கண்டால்
அதை தினம் முயன்றால்
ஒரு நாளில் நிஜமாகும்!

மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு!
மலையோ! அது பனியோ! நீ மோதிவிடு!

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!

வாழ்க்கைக் கவிதை வாசிப்போம்
வானம் அளவு யோசிப்போம்
முயற்சி என்ற ஒன்றை மட்டும்
மூச்சு போல சுவாசிப்போம்!
இலட்சம் கனவு கண்ணோடு
இலட்சியங்கள் நெஞ்சோடு,
உன்னை வெல்ல யாரும் இல்லை
உறுதியோடு போராடு!

மனிதா! உன் மனதைக் கீறி
விதை போடு மரமாகும்
அவமானம் படு தோல்வி
எல்லாமே உரமாகும்!
தோல்வியின்றி வரலாறா!
துக்கம் என்ன என் தோழா!
ஒரு முடிவிருந்தால்
அதில் தெளிவிருந்தால்
அந்த வானம் வசமாகும்!

மனமே! ஓ! மனமே! நீ மாறிவிடு!
மலையோ அது பனியோ நீ மோதிவிடு!

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!

ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகலொன்று வந்திடுமே!
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்
இலட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்!

மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு!
மலையோ அது பனியோ? நீ மோதிவிடு!

Thursday, June 24, 2010

எங்கே எனது கவிதை கனவிலே.....




படம் - கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
இசை
-
ஏ. ஆர். ரஹ்மான
வரிகள்
- வைரமுத்து


எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை

விழியில் கரைந்துவிட்டதா
அம்மம்மா விடியல் அழித்துவிட்டதா
கவிதை தேடித்தாருங்கள்
இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள்

எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை

மாலை அந்திகளில் மனதின் சந்துகளில்
தொலைந்த முகத்தை மனம் தேடுதே
வெயில் தாரொழுகும் நகர வீதிகளில்
மையல் கொண்டு மலர் வாடுதே
மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில்
துருவித் துருவி உனைத் தேடுதே
உடையும் நுரைகளிலும் தொலைந்த காதலனை
உருகி உருகி மனம் தேடுதே

அழகிய திருமுகம் ஒருதரம் பார்த்தால்
அமைதியில் நிறைந்திருப்பேன்
நுனிவிரல் கொண்டு ஒருமுறை தீண்டு
நூறு முறை பிறந்திருப்பேன்


பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன்
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று
இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்

பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன்
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று
இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்


எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை

ஒரே பார்வை அட ஒரே வார்த்தை அட
ஒரே தொடுதல் மனம் ஏங்குதே
முத்தம் போடும் அந்த மூச்சின் வெப்பம் அது
நித்தம் வேண்டும் என்றும் ஏங்குதே

வேர்வை பூத்த உந்தன் சட்டை வாசம் இன்று
ஒட்டும் என்று மனம் ஏங்குதே
முகம் பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு
குத்தும் இன்பக் கணம் கேட்குதே
கேட்குதே...

பாறையில் செய்ததும் என் மனம் என்று
தோழிக்கு சொல்லியிருந்தேன்
பாறையின் இடுக்கில் வேர் விட்ட கொடியாய்
நீ நெஞ்சில் முளைத்து விட்டாய்

எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை

எவனோ ஒருவன் வாசிக்கிறான்...


படம்: அலைபாயுதே
வரிகள்: வைரமுத்து
இசை: ஏ. ஆர். ரஹ்மான


எவனோ ஒருவன் வாசிக்கிறான்...
இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்
தவம் போல் இருந்து யோசிக்கிறேன்
அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்

எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன் (2)
தவம் போல் இருந்து யோசிக்கிறேன்
அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்

கேட்டு கேட்டு நான் கிறங்குகிறேன்
கேட்பதை அவனோ அறியவில்லை
காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே
அவன் ஊதும் ரகசியம் புரியவில்லை

எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்

புல்லாங்குழலே பூங்குழலே
நீயும் நானும் ஒரு ஜாதி (2)
உள்ளே உறங்கும் ஏக்கத்திலே
உனக்கும் எனக்கும் சரி பாதி

கண்களை வருடும் தேனிசையில்
என் காலம் கவலை மறந்திருப்பேன்
இன்னிசை மட்டும் இல்லையென்றால்
நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்
எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்

உறக்கம் இல்லா முன்னிரவில்
என் உள் மனதில் ஒரு மாறுதலா (2)
இரக்கம் இல்லா இரவுகளில்
இது எவனோ அனுப்பும் ஆறுதலா

எந்தன் சோகம் தீர்வதற்கு
இது போல் மருந்து பிறிதில்லையே
அந்தக் குழலைப் போல் அழுவதற்கு
அத்தனை கண்கள் எனக்கில்லையே

எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன் (2)

Wednesday, June 23, 2010

கடவுள் தந்த அழகிய வாழ்வு




படம்: மாயாவி
பாடியவர்கள்: எஸ்பிபி, சரண், கல்பனா

இசை: தேவி
ஸ்ரீ பிரசாந்த.
எழுத்து
- பழனி பாரதி

கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்துப்பாடு

கருணை பொங்கும் உள்ளங்கள் உண்டு
கண்ணீர் துடைக்கும் கைகளும் உண்டு
இன்னும் வாழனும் நூறு ஆண்டு

எதை நாம் இங்கு கொண்டு வந்தோம்
எதை நாம் அங்கு கொண்டு செல்வோம்
அழகே பூமியின் வாழ்க்கையை
அன்பில் வாழ்ந்து விடை பெறுவோம்

கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுவதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்துப்பாடு

பூமியில் பூமியில்
இன்பங்கள் என்றும் குறையாது
வாழ்க்கையில் வாழ்க்கையில்
எனக்கொன்றும் குறைகள் கிடையாது

எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ
அதுவரை நாமும் சென்றிடுவோம்
விடைபெறும் நேரம் வரும்போதும்
சிரிப்பினில் நன்றி சொல்லிடுவோம்
பரவசம் இந்த பரவசம் என் நாளும் நெஞ்சில்
தீராமல் இங்கே வாழுவோம்

கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்துப்பாடு

நாமெல்லாம் சுவாசிக்க
தனி தனி காத்து கிடையாது
மேகங்கள் மேகங்கள்
இடங்களை பார்த்து பொழியாது
ஓடையில் இன்று இலையுதிரும்
வசந்தங்கள் நாளை திரும்பிவரும்
வசந்தங்கள் மீண்டும் வந்துவிட்டால்
குயில்களின் பாட்டு காற்றில் வரும்
முடிவதும் பின்பு தொடர்வதும்
இந்த வாழ்க்கை சொல்லும் பாடங்கள் தானே கேளடி

கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்துப்பாடு

Tuesday, June 22, 2010

உனக்கென்ன மேலே நின்றாய்




படம் - சிம்லா ஸ்பெஷல்
இசை
- விஸ்வநாதன்
பாடல்
- வாலி

தக தின தக ததிந்தோம்....
தக தின தக ததிந்தோம்....
தக தின தக ததிந்தோம்....
ததோம் ததோம் த தகதின தோம்
ததோம் த தகதின தோம் ததோம் த தகதின தோம்

உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா!
உனதாணை பாடுகின்றேன் நான் ரொம்ப நாளா

(உனக்கென்ன)

தாய் மடியில் பிறந்தோம்,தமிழ் மடியில் வளர்ந்தோம்!
நடிகரென மலர்ந்தோம்,நாடகத்தில் கலந்தோம்!
ததோம் ததோம் த தகதினதோம் ததோம்த தகதினதோம்

ஆடாத மேடை இல்லை, போடாத வேஷம் இல்லை
ஆடாத மேடை இல்லை, போடாத வேஷம் இல்லை
சிந்தாத கண்ணீர் இல்லை, சிரிப்புக்கும் பஞ்சம் இல்லை

கால் கொண்டு ஆடும் பிள்ளை,நூல் கொண்டு ஆடும் பொம்மை
கால் கொண்டு ஆடும் பிள்ளை, நூல் கொண்டு ஆடும் பொம்மை
உன் கையில் அந்த நூலா? நீ சொல்லு நந்தலாலா!

(உனக்கென்ன)

யாராரோ நண்பன் என்று,ஏமாந்த நெஞ்சம் ஒன்று
யாராரோ நண்பன் என்று,ஏமாந்த நெஞ்சம் ஒன்று

பூவென்று முள்ளைக் கண்டு,புரியாமல் நின்றேன் இன்று
பால் போலக் கள்ளும் உண்டு,நிறத்தாலே ரெண்டும் ஒன்று
பால் போலக் கள்ளும் உண்டு,நிறத்தாலே ரெண்டும் ஒன்று
நானென்ன கள்ளா? பாலா? நீ சொல்லு நந்தலாலா!

(உனக்கென்ன)


தக தின தக ததிந்தோம்....
தக தின தக ததிந்தோம்....
தக தின தக ததிந்தோம்....
ததோம் ததோம் த தகதின தோம்
ததோம் த தகதின தோம் ததோம் த தகதின தோம்


(உனக்கென்ன)

Sunday, June 20, 2010

தீயில் விழுந்த தேனா



படம் : வரலாறு-அஜித்
இசை :
ரஹ்மான்
எழுத்து : வைரமுத்து


தீயில் விழுந்த தேனா?
இவன் தீயில் வழிந்த தேனா?
தாயைக் காக்கும் மகனா?
இல்லை தாயும் ஆனவனா?

(தீயில்)

மழையின் நீர் வாங்கி,
மலையே அழுவது போல்,
தாயின் உயிர் தாங்கி,
தனயன் அழுவானோ?

உயிரைத்தந்தவளின்,
உயிரைக்காப்பானா?
கடனைத் தீர்ப்பானா?

தங்கம் போலே இருந்தவள்தான்,
சருகைப் போலே ஆனதனால்,
சிங்கம் போலே இருந்த மகன்,
செவிலியைப் போலே ஆவானா?

(தீயில்)

ஓர் சொல்லில் ஓர் உலகம் அம்மா!
உலகெல்லாம் ஓர் சொல்லும் அம்மா!

(ஓர்)

நீ சுமந்த பிள்ளையாய் நானிருந்தேன் அம்மா!
நான் சுமக்கும் பிள்ளையாய் நீ ஆனாய் அம்மா!
எனக்கேதும் ஆனதுன்னா, உனக்கு வேறு பிள்ளையுண்டு!
உனக்கேதும் ஆனதுன்னா,எனக்கு வேற தாயிருக்கா?

நெஞ்சை ஊட்டி வளர்த்தவளை,
கண்ணில் மணியாய்ச் சுமந்தவளை,
மண்ணில் விட்டு விடுவானா?
மனதில் மட்டும் சுமப்பானா?

தீயில் விழுந்த தேனா? - இவன்
தீயில் விழுந்த தேனா?
தாயைக் காக்கும் மகனா? - இல்லை
தாயும் ஆனவனா?

(தீயில்)

தாயின் மடிதானே உலகம் தொடங்குமிடம்!
தாயின் காலடியே உலகம் முடியுமிடம்!

உயிரைத் தந்தவளின், உயிரைக் காப்பானா?
கடனைத் தீர்ப்பானா?

கருணைத் தாயின் நினைவினிலே,
கல்லும் கொஞ்சம் அழுதுவிடும்!
கண்ணீர்த் துளிகளின் வேகத்திலே,
கண்ணின் மணிகளும் விழுந்துவிடும்!

(தீயில்)

Saturday, June 19, 2010

தெய்வம் தந்த வீடு





படம் - அவள் ஒரு தொடர் கதை
இசை - விஸ்வநாதன்
பாடல் - கண்னதாசன்



தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு
இந்த ஊர் என்ன சொந்த வீடென்ன
சொல்லடி
ஞான பெண்ணே
வாழ்வின் பொருளென்ன நீ வந்த கதை என்ன

நான் கேட்டு தாய் தந்தை படைத்தார - இல்லை
என் பிள்ளை எனைகேட்டு பிறந்தான
தெய்வம் செய்த பாவம் இது போடி தங்கச்சி
கொன்றால் பாவம் தின்றால் போச்சு இதுதான் என் கட்சி
ஆதி வீடு அந்தம் காடு
இதில் நான் என்ன அடிய நீ என்ன ஞான பெண்ணே
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன

வெறும் கோவில் இதிலென்ன அபிஷேகம்
உன் மனமெங்கும் தெருகூத்து பகல் வேஷம்
கள்ளிகென்ன முள்ளில் வெளி போடி தங்கச்சி
காடுகேது தோட்டக்காரன் இதுதான் என் கட்சி
கொண்டதென்ன கொடுப்பதென்ன
இதில் தாய் என்ன மணந்த தாரம் என்ன ஞான பெண்ணே
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன

தெளிவாக தெரிந்தாலே சித்தாந்தம்
அது தெரியாமல் போனாலே வேதாந்தம்
மண்ணை தோண்டி தண்ணீர் தேடும் அன்பு தங்கச்சி
என்னை தோடி ஞானம் கண்டேன் இது தான் என் கட்சி
உண்மை என்ன பொய்மை என்ன
இதில் தென் என்ன கடிக்கும் தேள் என்ன ஞான பெண்ணே
வாழ்வின் பொருளென்ன நீ வந்த கதை என்ன

தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு
தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு

Friday, June 18, 2010

நிழல்கள்-பொன் மாலை பொழுது


ஹே ஹோ ஹும் லா...
பொன் மாலை பொழுது.....
இது ஒரு பொன்.. மாலை.. பொழுது....

வான மகள் நானுகிறாள்,
வேறு உடை பூணுகிறாள்
இது ஒரு பொன்.. மாலை.. பொழுது....
ஹும்.. ஹே ஹோ ஹம் ஹம்ம் ஹம்ம் ஹம்ம்....

ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்..
ராத்திரி வாசலில் கோலமிடும்,

ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்..
ராத்திரி வாசலில் கோலமிடும்,
வானம் இரவுக்கு பாலமிடும்,
பாடும் பறவைகள் தாளமிடும்,
பூ மரங்கள், சாமரங்கள் வீசாதோ?
இது ஒரு பொன் மாலை பொழுது..

வான மகள் நானுகிறாள்,
வேறு உடை பூணுகிறாள்
இது ஒரு பொன்.. மாலை.. பொழுது....

வானம் எனக்கொரு போதி மரம்,
நாளும் எனக்கது சேதி தரும்..

வானம் எனக்கொரு போதி மரம்,
நாளும் எனக்கது சேதி தரும்..
ஒரு நாள் உலகம் நீதி பெரும்,
திரு நாள் நிகழும் தேதி வரும்,
கேள்விகளால் வேள்விகளை நான் செய்வேன்,
இது ஒரு பொன் மாலை பொழுது..

வான மகள் நானுகிறாள்,
வேறு உடை பூணுகிறாள்
இது ஒரு பொன்.. மாலை.. பொழுது....
ஹே ஹோ ஹும் லா..
ஹும்.. ஹே ஹோ ஹம் ஹம்ம் ஹம்ம் ஹம்ம்
...

Thursday, June 17, 2010

ஆடாத ஆட்டமெல்லாம்




படம் - மௌனம் பேசியதே
இசை - யுவன்
எழுத்து -
ச்நேஹன்


ஆடாத ஆட்டமெல்லாம்
போட்டவங்க மண்ணுக்குள்ள
போன கதை உனக்கு தெரியுமா ?
நீ கொண்டு வந்தது என்ன?
நீ கொண்டு போவது என்ன ?
உண்மை என்ன உனக்கு புரியுமா?

வாழ்க்கை இங்கே யாருக்கும் சொந்தம் இல்லையே.....
வந்தவனும் வருபவனும் நிலைப்பதில்லையே .......
ஏன் ? நீயும் நானும் நூறு வருஷம் இருபதில்ல பாரு

ஆடாத ஆட்டமெல்லாம்
போட்டவங்க மண்ணுக்குள்ள
போன கதை உனக்கு தெரியுமா ?
நீ கொண்டு வந்தது என்ன ?
நீ கொண்டு போவது என்ன ?
உண்மை என்ன உனக்கு புரியுமா?

நித்தம் கோடி சுகங்கள் தேடி
கண்கள் மூடி அலைகின்றோம்
பாவங்களை மேலும் மேலும்
சேர்த்து கொண்டே போகின்றோம்
மனிதன் என்னும் வேடம் போட்டு
மிருகமாக வாழ்கின்றோம்
தீர்ப்பு ஒன்று இருப்பதை மறந்து
தீமைகளை செய்கின்றோம்

காலம் மீண்டும் திரும்பாதே...
பாதை மாறி போகாதே ......
பூமி கொஞ்சம் குளுங்கினாலே
நின்று போகும் ஆட்டமே ,

ஆடாத ஆட்டமெல்லாம்
போட்டவங்க மண்ணுக்குள்ள
போன கதை உனக்கு தெரியுமா ?
நீ கொண்டு வந்தது என்ன?
நீ கொண்டு போவது என்ன ?
உண்மை என்ன உனக்கு புரியுமா?

கருவறைக்குள் தானாக
கற்றுக்கொண்ட சிறு ஆட்டம்
தொட்டிலுக்குள் சுகமாக
தொடரும் ஆட்டமே

பருவம் பூக்கும் நேரத்தில்
காதல் செய்ய போராட்டம்
காதல் வந்த பின்னாலே
போதை ஆட்டமே
பேருக்காக ஒரு ஆட்டம்
காசுக்காக பல ஆட்டம்
எட்டு காலில் போகும் போது
ஊரு போடும் ஆட்டமே ........

ஆடாத ஆட்டமெல்லாம்
போட்டவங்க மண்ணுக்குள்ள
போன கதை உனக்கு தெரியுமா ?
நீ கொண்டு வந்தது என்ன?
நீ கொண்டு போவது என்ன ?
உண்மை என்ன உனக்கு புரியுமா?

வாழ்க்கை இங்கே யாருக்கும்
சொந்தம் இல்லையே
வந்தவனும் வருபவனும் நிலைப்பதில்லையே....
ஏன் ? நீயும் நானும் நூறு வருஷம் இருபதில்ல பாரு

ஆடாத ஆட்டமெல்லாம்
போட்டவங்க மண்ணுக்குள்ள
போன கதை உனக்கு தெரியுமா ?

Tuesday, June 15, 2010

செம்மொழி மாநாட்டு பாடல் வரிகள்!

ஏ.ஆர்.ரகுமான் இசையில் உலக தமிழ் செம்மொழி மாநாட்டு பாடல் வரிகள்!






இசை - . . ரஹ்மான்
எழுத்து - கலைஞர் மு. கருணாநதி
பாடியவர்கள் : ஏ.ஆர்.ரஹ்மான், யுவன்சங்கர் ராஜா, டி.எம்.சவுந்தரராஜன், பி.சுசீலா, அருணா சாய்ராம், பாம்பே ஜெய்ஸ்ரீ, கார்த்திக், ஹரிணி, சின்மயி, ஹரிகரன், சுவேதா மோகன், ஜி.வி.பிரகாஷ், பென்னி தயள், ஸ்ரீனிவாஸ், விஜய் யேசுதாஸ், டி.எல்.மகாராஜன், நித்யஸ்ரீ, சவும்யா, எம்.ஒய்.அப்துல் கனி, எம்.காஜாமொய்தீன், எஸ்.சாபுமொய்தீன், பி.எல்.கிருஷ்ணன், நரேஷ் அய்யர், குணசேகர், சுருதிஹாசன், சின்ன பொண்ணு, சுசீலா ராமன், ப்ளேஸ், காஷ், ரெஹ்னா ஆகிய 30 பேர்.


பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் -
பிறந்த பின்னர், யாதும் ஊரே, யாவரும் கேளிர்!
உண்பது நாழி உடுப்பது இரண்டே
உறைவிடம் என்பது ஒன்றேயென
உரைத்து வாழ்ந்தோம்
உழைத்து வாழ்வோம்.

தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும்
நன் மொழியே நம் பொன் மொழியாம்!
போரைப் புறம் தள்ளி
பொருளைப் பொதுவாக்கவே
அமைதி வழிகாட்டும்
அன்பு மொழி
அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்!

செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!

செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!

ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்
ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்
ஒல்காப் புகழ் தொல்காப்பியமும்
ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு
ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும்
சிந்தாமணியுடனே வளையாபதி குண்டலகேசியும்

செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!

செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!

செம்மொழி செம்மொழி - தமிழ் மொழியாம்!

கம்பன் நடழவர் கவிஅரசியும் நல்ல அழும்
எம்மதமும் ஏற்ற புகழ்கின்ற

எம்மதமும் ஏற்ற புகழ்கின்ற

எத்தனயோ
ஆயிரம் கவதை நெய்வோர் தரும்
புத்ஆடை அனைத்துக்கும் வித்தாக விளங்கும்
மொழி

செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!

செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!

அகமென்றும் புறமென்றும் வாழ்வை
அழகாக வகுத்தளித்து
ஆதி அந்தமிலாது இருக்கின்ற இனிய மொழி -
ஓதி வளரும் உயிரான உலக மொழி -
ஓதி வளரும் உயிரான உலக மொழி -
நம் மொழி நம் மொழி - அதுவே

செம்மொழியான - தமிழ் மொழியாம்!
தமிழ் மொழி!
தமிழ் மொழி
!
தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!

செம்மொழியான - தமிழ் மொழியாம்!
தமிழ் மொழியாம்!
தமிழ் மொழியாம்!
தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!

தமிழ் மொழியாம்!
எங்கள் தமிழ் மொழியாம்!
தமிழ் மொழியாம்!
எங்கள் தமிழ் மொழியாம்!

செம்மொழியான - தமிழ் மொழியாம்!
வாழிய வாழியவே!
தமிழ் வாழிய வாழியவே!
வாழிய வாழியவே! தமிழ் வாழிய வாழியவே!

செம்மொழியான - தமிழ் மொழியாம்!

Wednesday, June 2, 2010

சிங்கம் -ஆண் சிங்கம்

சிங்கம் ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்



நடிகர்கள் – சூர்யா, அனுஷ்கா, பிரகாஷ்ராஜ், விவேக்
இசை- தேவி ஸ்ரீ பிரசாத்
ஒளிப்பதிவு – ப்ரியன்
எடிட்டிங் - வி.டி. விஜயான்

இயக்கம்- ஹரி
தயாரிப்பு- ஸ்டியோ கிரீன்


கதை பார்க்க போறவங்களுக்கு முதல்லையே காட்சிக்கு காட்சி லாஜிக் பார்க்கிற மக்களுக்கான படமல்ல இது. அதற்காக ரொம்ப மட்டமாகவும் இல்லை.ஹரி தானது மசாலா பார்முலாவில் இருந்து சிறிதும் அச்சு பிறழாமல் எடுத்திருக்கும் காரசாரமான காவியம் தான் - இந்த சிங்கம்.

நான் கூட சிங்கதல-சூர்யா ட்ரைலரில் செய்த அலப்பரையை பார்த்து படம் ரொம்ப மொக்கையாக இருக்கப்போகிறது என்று நினைத்தேன் ஆனால் படம் படு ஸ்பீட இருக்கிறது.கோடம்பாக்கத்து செய்தி இது விஜய்கு சொன்ன ஸ்கரிப்டமா நல்ல வேலை அவரு நடிகல.சரி நாம படதுக்கு வரோம்.



அனைத்துக்காட்சிகளுமே, ஏதோவொரு ஹரி படத்தில் பார்த்ததுபோல் தான் இருக்கிறது. ஆரம்பக்காட்சி ‘ஐயா’வை, தொடங்கி இறுதிக்காட்சி ‘ஆறு’, ‘சாமி’ வரை. படத்தின் இரண்டாம் பாதியை விட, முதல் பாதி சூப்பர்.ஹரி நிறைய இடங்களில் கைத்தட்டல் பெற்றார். உதாரணத்திற்கு, பேசியே நிழல்கள் ரவியை ரோட்டுக்கு தள்ளி வரும் காட்சி. ‘ஒன்றரை டன் வெயிட்’ வசனம் , என்று பல...வசனங்கள் அனல் தெரிகுறது.

ஹீரோயினுக்கும் ஹீரோவுக்கும் உயரத்தை அட்ஜஸ்ட் செய்வதற்கே நேரம் சரியாக இருந்திருக்கும் போல, இயக்குனர் மற்றும் கேமராமேனுக்கு. இதற்காகவே ரொம்ப க்ளோஸ் அப் காட்சிகளையும் தவிர்த்திருக்கிறார்கள் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. அட, ரொமான்ஸ் காட்சிகளில் கூட சில அடி எட்டவே நிற்கிறார் ஹீரோ.





கதை களம்

கொஞ்சம் கஷ்டம் தான் இருந்தாலும் உங்களுக்காக

சொந்த உள்ளூரிலேயே (நல்லூர்) போஸ்டிங் வாங்கிக் கொண்டு சப் இன்ஸ்பெக்டராய் தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் சூர்யா, சென்னையில் ரியல் எஸ்டேட், கட்ட பஞ்சாயத்து என மிரட்டி வரும் பிரகாஷ்ராஜ், கேஸ் ஒன்றில் நல்லூர் ஸ்டேஷனில் ஜாமின் கையெழுத்து போடவேண்டும் என கோர்ட் சொல்ல. டூப்ளிகேட் ஆளை செட்டப் செய்து அணுப்பி கையெழுத்து போடு வைப்பதை கண்டுபிடிக்கும் சூர்யா,பிரகாஷ்ராஜ்தான் கையெழுத்துப்போடவேண்டும் என கூறி அடுத்த மூணு மணி நேரத்துக்குள் வரவழைக்க இவர்கள் இருவருக்கும் ஒரு மோதல் ஏற்படுகிறது. அதில் கடைசியில் யார் வெல்கிறார்கள் என்பதே கதை. ஏற்கனவே பல படங்களில் பார்த்த புளித்து போன கதை தான் என்றாலும் சும்மா சரவெடி போல படபடவென வெடிக்கிறது இந்த சிங்கம்.




சூர்யா - துரைசிங்கம்

துரைசிங்கம்(சூர்யா). பெட்டி கேஸ், வெட்டு கேஸ் எதுவாக இருந்தாலும் ஸ்டேஷனுக்கு வெளியிலேயே பஞ்சாயத்து பண்ணி அணுப்பி வைத்து காந்தியத்தை வெளிப்படுத்தும் இன்ஸ்பெக்டர். யாராவது புகார் கொடுக்க வந்தால் இரு தரப்பையும் விசாரித்து, கையை கொடுங்க கட்டிப்பிடிங்க என சமாதான புறாவை பறக்கவிடும் காவல் சிங்கம்.




அனுஷ்காவிடம் தியேட்டரில் கலாய்க்கும் ரவுடிகளை யூனி ஃபார்மை கழற்றி வைத்து ஓட ஓட விரட்டி வரட்டி அடிப்பது, பிரகாஷ்ராஜ் அடியாட்களின் காரை கிரீனில் தொங்கவிட்டு தோலுரிப்பது,கேட்க வரும் அசிஸ்டெண்ட் கமிஷனர் - நிழல்கள் ரவி நெஞ்சு விறைத்து நின்று ‘ உங்களுக்கு தோளில் ஒரு சிங்கமும், தொப்பியில் ஒரு சிங்கமும்தான் இருக்கு. ஆனா என் நெஞ்சு மேலேயே சிங்கம் இருக்கு” என துரைசிங்கம் என்ற தனது பெயரை சுட்டிக்காட்டிபேசிக்கொண்டே வந்து நிழல்கள்ரவியை நடுரோட்டில் நிறுத்துவது.பிரகாஷ்ராஜிடம் " நீ சிங்கத்தை சினிமாவில் பார்த்திருப்ப, போட்டோ பார்த்திருப்ப, கூண்டுக்குள்ள பார்த்திருப்ப,காட்டுக்குள்ள தனியா நடக்குறப்ப பார்த்திருப்ப.ஆனா தனியா நின்னு வேட்டையாடி பாத்து இருக்க மாட்ட அடிச்சா ஒனேட்ற வெயிட்.... பாக்குறிய.. பாக்குறிய" என்று கர்ஜிப்பது,, ஹோட்டல் சண்டையில் மேனேஜரிடம் இன்சூரன்ஸ் பண்ணியிருக்கீங்களா என்று கேட்டுவிட்டு அடியாட்களை தொம்சம் செய்வது என்று விறைத்துக்கொண்டு, நரம்பு புடைக்க சுற்றிக்கொண்டிருக்கிறார். ஆனால் இப்படிபட்டவருக்கு அனுஷ்கா அறிவுரை சொல்லி, வீரம் வருவது கொஞ்சம் ஓவர். 'காக்க காக்க' படத்திற்குப் பிறகு சூர்யா போலீஸ் வேஷம் போட்டிருக்கும் இப்படத்தில் நெல்லை தமிழில் பேசி நடித்திருக்கிறார்.

அனுஷ்கா-(காவியா) ….யப்பா!



வேட்டைக்காரன் பிறகு நடித்து இருக்கும் படம். அநியாயத்திற்கு உயரமாக இருக்கிறார்,நம்ம சூர்யா வேற ஏற்கனவே உயரம் குறைவு. ரொம்பத்தான் சிரமப்பட்டு இருக்காரு போல. கடற்கரை காட்சியில் இருவரும் நிற்கும் போது பாவம் அனுஷ்கா நிற்கும் இடத்தில் மணலை கொஞ்சம் தோண்டி நிற்கவைத்து இருக்கிறார்கள், அவரும் அந்த இடத்தை விட்டு நகராமல் வசானம் பேசி நடித்து இருக்கிறார். என்ன கொடுமை சார் இது.பாடல் காட்சியில் அனுஷ்காவின் உடையழகும் இடையழகும் யப்பா யப்பா .... போதும் போதும் என்கிற அளவுக்குa ஆடை போட்டு இருகாங்க.

பிரகாஷ்ராஜ் -மயில்வாகனம்



பிரகாஷ்ராஜ் வழக்கம் போல மிரட்டுகிறார் நடிப்பில். கையெழுத்து போட காவல்நிலையம் வந்து சூர்யாவிடம் தகராறு செய்ய, அதற்கு அவரது ஊர்க்காரர்கள் செய்யும் கலாட்டாவிற்கு இவர் அதிர்ந்து கொடுக்கும் முகபாவனைகள் கலக்கல்.மொத்தில் தனக்கு கொடுத்த கதபத்ரித்தை கலக்கி இருக்கிறார்.


விவேக் -எரிமலை.....(யாரு அது )

விவேக் நீண்ட இடைவெளிக்கு பிறகு, சிறிது சிரிக்க வைத்திருக்கிறார் இல்லை காமெடி செய்ய ரொம்ப கஷ்டப்படுகிறார். படம் முழுக்க கெட்ட வார்த்தைகளை இவர் பேசாமல், படம் பார்க்க வந்தவர்களை பேச வைத்திருக்கிறார். எரிமலை எப்படி பொறுக்கும் என்ற பழைய பாடலை பின்னணியில் அடிக்கடி ஒலிக்க விட்டு கடுப்படிக்கிறார்கள். ஒரு சில கட்சியில் மட்டும் சிரிப்பை வரவழைக்கிறார்.

சிங்க‌ம் ப‌டம் ந‌ன்றாகயிருப்ப‌தாக‌ காரணம் படத்தின் இயக்குனர் ஹரியோ அல்லது சூர்யாவோ அல்ல,மிக 'ச‌மீப‌த்தில்' வ‌ந்த‌ ம‌ற்ற தமிழ் ப‌ட‌ங்க‌ள்தான்.

மொத்தத்தில் சிங்கம் - அடிச்சா ஒனேட்ற வெயிட்

கதை - ????????????????
திரைக்கதை - விறுவிறு
வசனம் - ஆயரம் வாட்ட்ஸ்
பாடல் - தில் / ஒன்று பாஸ்

ஆக்‌ஷன் - லாங் பஞ்ச்
ஒளிப்பதிவு - ஓகே
எடிட்டிங் -
தத்தித் தாவுகிறது