Wednesday, August 25, 2010

இதயமே இதயமே....

படம் : இதயம்
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: வாலி
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்
வெளியான ஆண்டு : 1991

இதயமே இதயமே
உன் மௌனம் என்னை கொல்லுதே
இதயமே இதயமே
என் விரகம் என்னை வாட்டுதே
நிலவில்லாத நீல வானம் போலவே
உயிரில்லாமல் எனது காதல் ஆனதே

இதயமே இதயமே
உன் மௌனம் என்னை கொல்லுதே
இதயமே இதயமே

பனியாக உருகி நதியாக மாறி
அலைவீசி விளையாடி இருந்தேன்
தனியாக இருந்தும் உன் நினைவோடு வாழ்ந்து
உயிர் காதல் உறவாடி கலந்தே நின்றேன்
இது எந்தன் வாழ்வில் நீ போட்ட கோலம்
இது எந்தன் வாழ்வில் நீ போட்ட கோலம்
கோலம் கலைந்ததே, புது சோகம் பிறந்ததே
நீயில்லாத வாழ்வு இங்கு கானல் தான்

இதயமே இதயமே
உன் மௌனம் என்னை கொல்லுதே
இதயமே இதயமே

என் ஜீவ ராகம் கலந்தாடும் காற்று
உன் மீது படவில்லை துடித்தேன்
அரங்கேறும் பாடல் உலகெங்கும் கேட்டும்
உன் நெஞ்சை தொடவில்லை ஏன் சொல்லம்மா
இசைக்கின்ற கலைஞன் நானாகி போனேன்
இசைக்கின்ற கலைஞன் நானாகி போனேன்

ஜீவன் நீயம்மா, என் பாடல் நீயம்மா
நீயில்லாத வாழ்வு இங்கு கானல் தான்

இதயமே இதயமே
உன் மௌனம் என்னை கொல்லுதே
இதயமே இதயமே
என் விரகம் என்னை வாட்டுதே
நிலவில்லாத நீல வானம் போலவே
உயிரில்லாமல் எனது காதல் ஆனதே

இதயமே இதயமே
உன் மௌனம் என்னை கொல்லுதே
இதயமே இதயமே

Thursday, August 19, 2010

கண்ணோரம் காதல் வந்தல்


படம் : நான் மகான் அல்ல
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடலாசிரியர்: யுகபாரதி

பாடியவர்கள் : யுவன் ஷங்கர் ராஜா, தன்விஷா

வெளியான ஆண்டு : 2010




இறகை போலே அலைகிறேனே
உந்தன் பேச்சை கேட்கயிலே
குழந்தை போலே தவிக்கிறேனே
உந்தன் பார்வை தீண்டையிலே
தொலையாமல் தொலைந்தேனே
உன் கைகள் என்னை தொட்டதும்
கரையாமல் கரைந்தேனே உன் மூச்சு காற்றுப்பட்டதும்
அநியாய காதல் வந்ததே அடங்காத ஆசை தந்ததே
எனக்குள்ளே ஏதோ மின்னல் போலே தொட்டுசென்றதே

கண்ணோரம் காதல் வந்தல் கண்ணீரும் தித்திப்பாகும்
வேரொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்
என்னோடு நீயும் வந்தால் எல்லாமே கையில் சேரும்
வேரொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்

கூட வந்து நீ நிற்பதும்
கூடுவிட்டு நான் செல்வதும்
தொடருதே தொடருதே நாடகம்

பாதி மட்டுமே சொல்வதும்
மீதி நெஞ்சிலே என்பதும்
புரியுதே புரியுதே காரணம்

நேரங்கள் தீருதே வேகங்கள் கூடுதே
பூவே உன் கண்ணுக்குள்ளே பூமிப்பந்து சுத்துதே

கண்ணோரம் காதல் வந்தல் கண்ணீரும் தித்திப்பாகும்
வேரொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்
என்னோடு நீயும் வந்தால் எல்லாமே கையில் சேரும்
வேரொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்

ஹே என்னானதோ ஏதானதோ
இல்லாமல் போசே தூக்கம்
கண்ணே உன்னை காணாமல் நான் இல்லை
ஓஹோ ஹோ ஹோ

என் மீதிலே உன் வாசனை
எப்போதும் வீசப்பார்க்கிறேன்
அன்பே உன்னை சேராமல் வாழ்வில்லை ஓஹோ ஹோ

நீ என்னை காண்பதே வானவில் போன்றதே
தூரத்தில் உன்னைக்கண்டால் தூரல் நெஞ்சில் சிந்துதே

கண்ணோரம் காதல் வந்தல் கண்ணீரும் தித்திப்பாகும்
வேரொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்
என்னோடு நீயும் வந்தால் எல்லாமே கையில் சேரும்
வேரொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்

Wednesday, August 18, 2010

உசுரே போகுதே.......

படம் : ராவணன்
பாடல் : உசுரே போகுதே
இசை : .ஆர்.ரஹ்மான்
பாடலாசிரியர்: வைரமுத்து

பாடியவர்கள் : கார்த்திக்
வெளியான ஆண்டு : 2010


இந்த பூமியில எப்ப வந்து நீ பொறந்த
என் புத்திக்குள்ள தீப்பொறிய நீ வெதச்ச
அடி தேக்கு மர காடு பெருசுதான்
சின்ன தீக்குச்சி உசரம் சிறுசுதான்

அடி தேக்கு மர காடு பெருசுதான்
சின்ன தீக்குச்சி உசரம் சிறுசுதான்
ஒரு தீக்குச்சி விழுந்து புடிக்குதடி
கருந்தேக்கு மரக்காடு வெடிக்குதடி

உசுரே போகுதே
உசுரே போகுதே
ஒதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயிலே
ஓ… மாமன் தவிக்கிறேன்
மடி பிச்ச கேக்குறேன்
மனச தாடி என் மணி குயிலே

அக்கரைச் சீமையில் நீ இருந்தும்
ஐவிரல் தீண்டிட நினைக்குதடி
அக்கினி பழமுன்னு தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி

ஒடம்பும் மனசும் தூரம் தூரம்
ஒட்ட நினைக்கேன் ஆகல
மனசு சொல்லும் நல்ல சொல்ல
மாய ஒடம்பு கேக்கல
தவியா (ஹோ ஹோ..)
தவிச்சு (ஹோ ஹோ..)
உசிர் தடம் கெட்டு திரியுதடி (ஹோ ஹோ..)
தையிலாங் குருவி (ஹோ ஹோ..)
என்ன தள்ளி நின்னு சிரிக்குதடி (ஹோ ஹோ..)

இந்த மம்முத கிறுக்கு தீருமா
அடி மந்திரிச்சு விட்ட கோழி மாறுமா
என் மயக்கத்த தீத்து வெச்சு மனிச்சிருமா

சந்திரனும் சூரியனும்
சுத்தி ஒரு கோட்டில் வருகுதே
சத்தியமும் பத்தியமும்
இப்ப தலை சுத்தி கெடக்குதே

உசுரே போகுதே
உசுரே போகுதே
ஒதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயிலே
ஓ மாமன் தவிக்கிறேன்
மடி பிச்ச கேக்குறேன்
மனச தாடி என் மணி குயிலே

அக்கர சீமையில் நீ இருந்தும்
ஐவிரல் தீண்டிட நினைக்குதடி
அக்கினி பழமுன்னு தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி

இந்த உலகத்தில் இது ஒண்ணும் புதுசில்ல
ஒண்ணு ரெண்டு தப்பி போகும் ஒழுக்கத்தில
விதி சொல்லி வழி போட்டான் மனசபுள்ள
விதிவிலக்கில்லாத விதியுமில்ல

எட்ட இருக்கும் சூரியன் பாத்து
மொட்டு விரிக்குது தாமரை
தொட்டு விடாத தூரம் இருந்தும்
சொந்த பந்தமோ போகல

பாம்பா
விழுதா
ஒரு பாகுபாடு தெரியலையே
பாம்பா
இருந்தும்
நெஞ்சு பயப்பட நினைக்கலையே

என் கட்டையும் ஒரு நாள் சாயலாம்
என் கண்ணுல உன் முகம் போகுமா
நான் மண்ணுக்குள்ள உன் நெனப்பு மனசுக்குள்ள

சந்திரனும் சூரியனும்
சுத்தி ஒரு கோட்டில் வருகுதே
சத்தியமும் பத்தியமும்
இப்ப தலை சுத்தி கெடக்குதே

உசுரே போகுதே
உசுரே போகுதே
ஒதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயிலே
ஓ மாமன் தவிக்கிறேன்
மடி பிச்ச கேக்குறேன்
மனச தாடி என் மணி குயிலே

அக்கர சீமையில் நீ இருந்தும்
ஐவிரல் தீண்டிட நினைக்குதடி
அக்கினி பழமுன்னு தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி

உசுரே போகுதே
உசுரே போகுதே
உசுரே போகுதே
ஒதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயிலே
ஓ மாமன் தவிக்கிறேன்
மடி பிச்ச கேக்குறேன்
மனச தாடி என் மணி குயிலே

அக்கர சீமையில் நீ இருந்தும்
ஐவிரல் தீண்டிட நினைக்குதடி
அக்கினி பழமுன்னு தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி

Sunday, August 15, 2010

அன்புள்ள சந்தியா...

படம் : காதல் சொல்ல வந்தேன்
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடலாசிரியர்: நா.முத்துகுமார்

பாடியவர்கள் : கார்த்திக்

வெளியான ஆண்டு : 2010




அன்புள்ள சந்தியா உனை நான் காதலிக்கிறேன்
நீ சொல்லும் ஒரு வார்தை அதற்காக
நான் காத்திருப்பேன்
என்னை எனக்கு தருவாயா
இல்லை காட்டில் விடுவாயா
உன் பதிலை எதிர்ப்பார்த்து
இங்கே எனது இதயம்
எங்கே எனது இதயம்

அன்புள்ள சந்தியா உனை நான் காதலிக்கிறேன்
நீ சொல்லும் ஒரு வார்தை அதற்காக
நான் காத்திருப்பேன்

எந்தப்பக்கம் நீ செல்லும்போதும்
எந்தன் காதல் ஆகாயம் ஆகும்
கண்ணை மூடிக்கொண்டாலும் மறையாதே

தூரல் வந்தால் கோலங்கள் அழியும்
காலம் வந்தால் கல்வெட்டும் அழியும்
என்றும் பெண்ணே என் காதல் அழியாதே

அடி கோயில் மூடினால் கூட
கிளி கவலைப்படுவதே இல்லை
அந்த வாசல் கோபுரம் மீது
அதன் காதல் குறைவதே இல்லை

உந்தன் காலடி எந்தன் வாழ்வின் வேரடி

அன்புள்ள சந்தியா உனை நான் காதலிக்கிறேன்
நீ சொல்லும் ஒரு வார்தை அதற்காக
நான் காத்திருப்பேன்

தாயை கண்டால் தன்னாலே ஓடும்
பிள்ளை போலே என் காதல் ஆகும்
அன்பே அதை உன் கண்கள் அரியாதா…

என்றோ யாரோ உன் கையை தொடுவார்
இன்பம் துன்பம் எல்லாமே அறிவாய்
அன்பே அது நானாகக்கூடாதா

உன் காதல் என்னிடம் இல்லை
நான் கரைக்க நினைக்கிறேன் கல்லை
இந்த காதல் என்பதே தொல்லை
உயிரோடு எரிக்குதே என்னை

உன்னை நீங்கினால் எங்கே போவேன் நானடி

அன்புள்ள சந்தியா உனை நான் காதலிக்கிறேன்
நீ சொல்லும் ஒரு வார்தை அதற்காக
நான் காத்திருப்பேன்
என்னை எனக்கு தருவாயா
இல்லை காட்டில் விடுவாயா
உன் பதிலை எதிர்ப்பார்த்து
ஓ…

அன்புள்ள சந்தியா உனை நான் காதலிக்கிறேன்
நீ சொல்லும் ஒரு வார்தை அதற்காக
நான் காத்திருப்பேன்
ஓ….

Tuesday, August 10, 2010

இவன் பேரை சொன்னதும்-எந்திரன்

படம் : எந்திரன்
பாடல் : அரிமா அரிமா
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : ஹரிஹரன், ஷ்ரேயா கௌஷல்




இவன் பேரை சொன்னதும் பெருமை சொன்னதும்
கடலும் கடலும் கைத்தட்டும்
இவன் உலகம் தாண்டி உயரம் கொண்டதில்
நிலவு நிலவு தலைமுட்டும்
அடி அழகே உலகழகே
இந்த எந்திரன் என்பவன்
படைப்பின் உச்சம்

அரிமா அரிமா – நானோ
ஆயிரம் அரிமா – உன்போல்
பொன்மான் கிடைத்தால் – யம்மா
சும்மா விடுமா?

ராஜாத்தி பூலோகத்தில்
ஆசை தீ மூளுதடி

நான் அட்லாண்டிக்கை ஊற்றிப் பார்த்தேன்
அக்கினி அணையலையே!

உன் பச்சை தேனை ஊற்றி
என் இச்சை தீயை ஆற்று
அடி கச்சைக்கனியே பந்தி நடத்து
கட்டில் இலை போட்டு

அரிமா அரிமா – நானோ
ஆயிரம் அரிமா – உன்போல்
பொன்மான் கிடைத்தால் – யம்மா
சும்மா விடுமா?

இவன் பேரை சொன்னதும் பெருமை சொன்னதும்
கடலும் கடலும் கைத்தட்டும்
இவன் உலகம் தாண்டி உயரம் கொண்டதில்
நிலவு நிலவு தலைமுட்டும்
அடி அழகே உலகழகே
இந்த எந்திரன் என்பவன்
படைப்பின் உச்சம்

சிற்றின்ப நரம்பு சேமித்த இரும்பில்
சட்டென்று மோகம் பொங்கிற்றே

ராட்ஷசன் வேண்டாம்
ரசிகன் வேண்டும்
பெண் உள்ளம் உன்னைக் கெஞ்சிற்றே!
பெண் உள்ளம் உன்னைக் கெஞ்சிற்றே!

நான் மனிதன் அல்ல
அஃற்றினையின் அரசன் நான்
காமமுற்ற கணினி னான்
சின்னஞ்சிறுசின் இதயம் தின்னும்
சிலிக்கன் சிங்கம் நான்

எந்திரா எந்திரா எந்திரா
எந்திரா எந்திரா எந்திரா எந்திரா

அரிமா அரிமா – நானோ
ஆயிரம் அரிமா – உன்போல்
பொன்மான் கிடைத்தால் – யம்மா
சும்மா விடுமா?

இவன் பேரை சொன்னதும் பெருமை சொன்னதும்
கடலும் கடலும் கைத்தட்டும்
இவன் உலகம் தாண்டி உயரம் கொண்டதில்
நிலவு நிலவு தலைமுட்டும்

மேகத்தை உடுத்தும் மின்னல் தான் நானென்று
ஐஸ்சுக்கே ஐஸை வைக்காதே!

வயரெல்லாம் ஓசை
உயிரெல்லாம் ஆசை
ரோபோவை போபோவென்னாதே

ஏ ஏழாம் அறிவே!
உள் மூளை திருடுகிறாய்
உயிரோடு உண்ணுகிறாய் – நீ
உண்டு முடித்த மிச்சம் எதுவோ
அதுதான் நான் என்றாய்!

இவன் பேரை சொன்னதும் பெருமை சொன்னதும்
கடலும் கடலும் கைத்தட்டும்
இவன் உலகம் தாண்டி உயரம் கொண்டதில்
நிலவு நிலவு தலைமுட்டும்
அடி அழகே உலகழகே
இந்த எந்திரன் என்பவன்
படைப்பின் உச்சம்

அரிமா அரிமா – நானோ
ஆயிரம் அரிமா – உன்போல்
பொன்மான் கிடைத்தால் – யம்மா
சும்மா விடுமா?

எந்திரா எந்திரா எந்திரா
எந்திரா எந்திரா எந்திரா எந்திரா எந்திரா

Monday, August 9, 2010

துளி துளி துளி மழையாய்...

திரைபடம்: பையா
இயற்றியவர் : ந.முத்துக்குமார்
இசை :
யுவன் சங்கர் ராஜா
பாடியவர் : ஹரிசரண்
வெளியான ஆண்டு : 2010




துளி துளி துளி மழையாய் வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே
பார்த்தால் பார்க்க தோன்றும்
பேரை கேட்க தோன்றும்
பூப்போல் சிரிக்கும் பொது
காற்றாய் பறந்திட தோன்றும்

செல் செல் அவளுடன் செல்
என்றே கால்கள் சொல்லுதடா
சொல் சொல் அவளுடன் சொல்
என்றே நெஞ்சம் கொல்லுதடா .
அழகாய் மனதை பறித்து விட்டாளே

துளி துளி துளி மழையாய் வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே

தேவதை அவளொரு தேவதை
அழகிய பூமுகம் காணவே
ஆயுள் தான் போதுமோ
காற்றிலே அவளது வாசனை
அவளிடம் யோசனை கேட்டு தான்
பூக்களும் பூக்குமோ
நெற்றி மேலே ஒற்றை முடி ஆடும்போது
நெஞ்சுக்குள்ளே மின்னல் பூக்கும்
பார்வை ஆளை தூக்கும்
கன்னம் பார்த்தால் முத்தங்களால்
தீண்ட தோன்றும்
பாதம் ரெண்டும் பார்க்கும் போது
கொலுசாய் மாற தோன்றும்
அழகாய் மனதை பரிதுவிட்டாலே

செல் செல் அவளுடன் செல்
என்றே கால்கள் சொல்லுதடா
சொல் சொல் அவளுடன் சொல்
என்றே நெஞ்சம் கொல்லுதடா

சாலையில் அழகிய மாலையில்
அவளுடன் போகவே ஏங்குவேன்
தோள்களில் சாயுவேன் பூமியில் விழுகிற வேளையில்
நிழலையும் ஓடிப்போய் ஏந்துவேன் நெஞ்சிலே தாங்குவேன்
காணும் போதே கண்ணால் என்னை கட்டி போட்டாள்
காயம் இன்றி வெட்டி போட்டாள்
உயிரை ஏதோ செய்தாள்
மெளனமாக உள்ளுக்குள்ளே பேசும்போதும்
அங்கே வந்து ஒட்டு கேட்டால்
கனவில் கூச்சல் போட்டாள்
அழகாய் மனதை பறித்து விட்டாளே

செல் செல் அவளுடன் செல்
என்றே கால்கள் சொல்லுதடா
சொல் சொல் அவளுடன் சொல்
என்றே நெஞ்சம் கொல்லுதடா

துளி துளி துளி மழையாய் வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே
துளி துளி துளி மழையாய் வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே

Sunday, August 8, 2010

நலம் வாழ எந்நாளும்...

திரைபடம்: மறுபடியும்
இயற்றியவர் :
வாலி
இசை :
இளையராஜா
பாடியவர்கள் : பாலசுப்ரமணியம்

வெளியான ஆண்டு : 1993



நலம் வாழ எந்நாளும் வாழ்த்துக்கள்!
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
இளவேனில் உன்வாசல் வந்தாடும்!
இளந் தென்றல் உன்மீது பண்பாடும்!

இளவேனில் உன்வாசல் வந்தாடும்!
இளந் தென்றல் உன்மீது பண்பாடும்!


நலம் வாழ எந்நாளும் வாழ்த்துக்கள்!
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்


மனிதர்கள் சிலநேரம் நிறம் மாறலாம்!
மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம்!
இலக்கணம் சில நேரம் பிழையாகலாம்!
எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம்!

விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக் கண்டு
நகங்களை நாமும் நறுக்குவதுண்டு!
இதிலென்ன பாவம்.....!
எதற்கிந்த சோகம்? கிளியே..!

நலம் வாழ எந்நாளும் வாழ்த்துக்கள்!
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்


கிழக்கினில் தினம்தோறும் கதிரானது!
மறைவதும் பின்பு உதிப்பதும் மரபானது!
கடல்களில் உருவாகும் அலையானது
விழுவதும் பின்பு எழுவதும் இயல்பானது!

நிலவினை நம்பி இரவுகள் இல்லை!
விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை!
ஒரு வாசல் மூடி......!
மறுவாசல் வைப்பான் இறைவன்!


நலம் வாழ எந்நாளும் வாழ்த்துக்கள்!
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
இளவேனில் உன்வாசல் வந்தாடும்!
இளந் தென்றல் உன்மீது பண்பாடும்!


நலம் வாழ எந்நாளும் வாழ்த்துக்கள்!

Thursday, August 5, 2010

காதல் சொல்ல வந்தேன்









































எங்கேயோ திக்குதெச...

திரைபடம் : மகாநதி
இசை : இளையராஜா
வரிகள் :
பாடியவர் : கமல்ஹாசன்
வெளியான ஆண்டு : 1994



எங்கேயோ
திக்குதெச
காணாத தூரந்தான்.
எம்மாடி வந்ததென்ன
தென்னாட்டின் ஓடம்தான்.
காவேரி தீரம்விட்டு கால்கள் வந்ததடி!
காணாத சோகம் எல்லாம் கண்கள் கண்டதடி!
கைமாறி நான் வளர்த்த பச்சைக்கிளி போனதே!
கண்ணார நானும் காண இத்தனைநாள் ஆனதே!

இது கண்ணே செந்தமிழ் தேனே
தந்தையின் பாசம் வென்றதடி!
பசும் பொன்னே செவ்வந்திப்பூவே
இத்துடன் சோகம் சென்றதடி!

நான் கங்கா நதியைக் காணும் பொழுது
உண்மை விளங்குது!
இங்கே குளிக்கும் மனிதன் அழுக்கில்
கங்கை கலங்குது!
சில பொல்லா மனங்கள் பாவக்கறையை
நீரில் கழுவுது!
இந்த முட்டாள்தனத்தை எங்கே சொல்லி
நானும் அழுவது?

Wednesday, August 4, 2010

எனக்கென ஏற்கனவே பிறந்தவள்....

திரைபடம்: பார்த்தேன் ரசித்தேன்
இசை: பரத்வாஜ்
பாடியவர்கள்: உன்னிக்ரிஷ்ணன்
, ஹரணி
வரிகள்: வைரமுத்து
வெளியான ஆண்டு : 2000


எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ
இதயத்தை கயிறு கட்டி இழுத்தவள் இவளோ
ஒளி சிந்தும் இரு கண்கள் உயிர் வாங்கும் சிறு இதழ்கள்
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே

என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே
அது ஏன்னென்று அறியேனடி
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே
அது ஏன்னென்று அறியேனடி


ஓர பார்வை பார்க்கும் போது உயிரில் பாதி இல்லை
மீதி பார்வை பார்க்கும் துணிவு பேதை நெஞ்சில் இல்லை
எனது உயிரை குடிக்கும் உரிமை உனக்கே உனக்கே

உயிரே உயிரே உடம்பில் சிறந்தது எதுவென்று தவித்திருந்தேன்
அதை இன்று தான் கண்டு பிடித்தேன்
கண்ணே உன்னை காட்டியதால் என் கண்ணே சிறந்ததடி
உன் கண்களை கண்டதும் இன்னொரு கிரகம் கண்முன் பிறந்ததடி

காதல் என்ற ஒற்றை நூல்தான் கனவுகள் தொடுக்கின்றது
அது காலத்தை தட்டுகின்றது
என் மனம் என்னும் கோப்பையில் இன்று உன் உயிர் நிறைகின்றது

காதல் என்ற ஒற்றை நூல்தான் கனவுகள் தொடுக்கின்றது
அது காலத்தை தட்டுகின்றது
என் மனம் என்னும் கோப்பையில் இன்று உன் உயிர் நிறைகின்றது


(எனக்கென ஏற்கனவே ...)

மார்பிற்கு திரையிட்டு மறைக்கும் பெண்ணே
மனசையும் மறைக்காதே என் வயதையும் வதைக்காதே
புல்வெளி கூட பனித்துளி என்னும் வார்த்தை பேசுமடி
என் புன்னகையாலே ஒரு மொழி சொன்னால் காதல் வாழுமடி
வார்த்தை என்னை கை விடும் போது மௌனம் பேசுகிறேன்

என் கண்ணீர் பேசுகிறேன்
எல்லா மொழிக்கும் கண்ணீர் புரியும் உனக்கேன் புரியவில்லை

என் கண்ணீர் பேசுகிறேன்
எல்லா மொழிக்கும் கண்ணீர் புரியும் உனக்கேன் புரியவில்லை


(எனக்கென ஏற்கனவே ...)

Tuesday, August 3, 2010

பூக்கள் பூக்கும் தருணம்...

திரைப்படம் : மெட்ராசபட்டினம்
இசை : G.V.பிரகாஷ் குமார்
இயற்றியவர்: ந முத்துக்குமார்
வெளியான ஆண்டு : 2010




பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே
பார்த்ததாரும் இல்லை
உலரும் காலைப் பொழுதை
முழு மதியும் பிரிந்து போவதில்லை
நேற்று வரை நேரம் போகவில்லை
உனதருகே நேரம் போதவில்லையே
எதுவும் பேசவில்லையே இன்று ஏனோ
எதுவும் தோன்றவில்லையே இது என்னவோ
இரவும் விடியவில்லையே அது முடிந்தால்
பகலும் முடியவில்லையே பூந்தளிரே

ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

சரணம் ௧
வார்த்தை தேவையில்லை வாழும் காலம் வரை
பாவை வாழ்வின் ஒளிப்பேசுமே
நேற்று தேவையில்லை நாளை தேவையில்லை
இன்று இந்த நொடி போதுமே
வேர் இன்றி விதை இன்றி வின் தூவும் மழை இன்றி
இது என்ன இவன் தோட்டம் பூ பூக்குதே
வாழ் இன்றி மான் இன்றி வருகின்ற யுத்தம் இன்றி
இது என்ன இவனுக்குள் மின்னுதே
இதயம் முழுதும் இருக்கும் இந்த தயக்கம்
நெஞ்சுக்குள்ளும் இருக்கும்
இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம்
அது கிடைத்தால் சொல்ல வேண்டும் எனக்கும்

பூந்தளிரே......

சரணம் ௨
எந்த மேகமிது எந்தன் வாசல் வந்து
எங்கும் ஈர மழைத் தூவுதே
என்ன உறவு இது எதுவும் புரியவில்லை
என்றபோதும் இது நீ என்பேன்
யார் என்று அறியாமல்
பேர்கூட தெரியாமல் இவனோடு ஒரு சொந்தம் உறவானதேன்
ஏனென்று கேட்காமல் வருங்காலம் நிற்காமல்
இவன் போகும் வழி எங்கும் மனம் போகுதே
காதல் முடிந்த பிறகும்
இந்த உலகில் பயணம் முடிவதில்லையே
காற்றில் பறந்தே பறவை வரைந்த பிறகும்
இலை தொடங்கும் நடனம் முடிவதில்லையே

இது எதுவோ ....