Monday, February 28, 2011

மத்திய பொது பட்ஜெட் 2011-12



புதுடெல்லி, பிப்.28,2011

2011-12 நிதியாண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை, நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று தாக்கல் செய்தார். இதன் முக்கிய அம்சங்களாவன:

இரட்டை இலக்க வளர்ச்சிக்கான முக்கியமான நிறுவன சீர்திருத்தங்கள்

* கிராமப்புற பொருளாதாரம் துடிப்புடன் இயங்குவதற்கான பல்வேறு ஆதார வளங்கள்

* 2010-11-ல் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.6 விழுக்காடு வளர்ச்சி

* முந்தைய ஆண்டைவிட 2010-11-ல் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான காலத்தில் ஏற்றுமதி 9.6 விழுக்காடும், இறக்குமதி 17.6 விழுக்காடும் வளர்ச்சி

* 2011-12-ல் இந்தியப் பொருளாதாரம் 9 விழுக்காடு வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* கறுப்பு பணப் பிரச்னையை சமாளிப்பதற்காக ஐந்து அம்ச உத்தி, ஊழலுக்கு எதிரான வழிமுறைகளை பரிந்துரைக்க அமைச்சர்கள் குழு

* வரும் நிதியாண்டில் இந்திய பொது கடன் நிர்வாக முகமை மசோதா கொண்டு வரப்படும்

* 2012 ஏப்ரல் 1 முதல் நேரடியான வரி நெறிமுறை

* மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு, உரம் ஆகியவற்றை சிறப்பாக விநியோகிக்க, வறுமைக் கோட்டுக் கீழ் உள்ள மக்களுக்கு நேரடி ரொக்க மானியம்

* 2011-12-ல் பங்கு விலக்கல் முறையில் ரூ.40 ஆயிரம் கோடி திரட்டப்படும்

* அன்னிய நேரடி முதலீடு குறித்த கொள்கை மேலும் தளர்த்தப்படும்

* வெளிநாட்டு முதலீட்டாளர்கள் செபி பதிவு பெற்ற பரஸ்பர நிதி அமைப்புகளில் பணத்தை முதலீடு செய்ய அனுமதிக்கப்படுவார்கள்

* கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவதற்காக வெளியிடப்படும் பத்திரங்களில் முதலீடு செய்ய வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் அனுமதிக்கப்படுவார்கள்

* மேலும் தனியார் நிறுவனங்கள் வங்கிகளை அமைக்க அனுமதி வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது

* பொதுத் துறை வங்கிகளில் 8 சதவீத அளவிற்கு சொத்துக்களை பாதுகாக்கும் விதத்தில் 2011-12-ம் ஆண்டில் ரூ.6 ஆயிரம் கோடி அளவிற்கு முதலீடுகள் வழங்கப்படும்

* அதே போல் கிராமப்புற வங்கிகளுக்கு ரூ.500 கோடி அளவிற்கு இதுபோன்ற நிதி வழங்கப்படும்

* இந்திய சிறு தொழில் வளர்ச்சி வங்கி இந்தியாவின் குறு நிதி பங்குகளுக்காக ரூ.100 கோடி ஒதுக்கப்படவுள்ளது

* மகளிர் சுய உதவிக் குழுக்கள் மேம்பாட்டுக்காக ரூ.500 கோடி மதிப்பில் தனி நிதியம் ஒன்று ஏற்படுத்தப்படும்

* குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளுக்காக இந்திய சிறு தொழில் வளர்ச்சி வங்கி மற்றும் நபார்டு வங்கி ஆகியவற்றுக்கு முறையே ரூ.5000 கோடி மற்றும் ரூ.3000 கோடி அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்

* வீட்டு வசதிகளுக்காக கொடுக்கப்படும் கடன் தொகை ரூ.25 லட்சமாக உயர்த்தப்படுகிறது

* கிராமப்புற வீட்டு வசதி நிதி ரூ.3000 கோடியாக அதிகரிப்பு

* தேசிய விவசாய மேம்பாட்டுத் திட்டத்திற்காக ரூ.7860 கோடியாக நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது

* மழை பெய்யும் கிராமங்களில் பருப்பு வகைகளின் உற்பத்தியை மேம்படுத்த ரூ.300 கோடி ஒதுக்கீடு

* காய்கறி உற்பத்தியை மேம்படுத்த ரூ.300 கோடி

* சத்துள்ள தானிய வகைகளின் உற்பத்தியை மேலும் மேம்படுத்த ரூ.300 கோடி

* விலங்குகளில் இருந்து கிடைக்கும் புரோடின் சத்தை மேம்படுத்த ரூ.300 கோடி

* 25 ஆயிரம் கிராமங்களில் விவசாயிகளுக்கு தீவிர கால்நடை உணவு மேம்பாட்டு திட்டத்திற்காக ரூ.300 கோடி ஒதுக்கப்படும்

* விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன் ரூ.3,75,000 கோடியிலிருந்து ரூ.4,75,000 கோடியாக அதிகரிப்பு

* கிராமங்களுக்காக கடன் வழங்கப்படும் நிதியத்திற்கு 2011-12-ம் ஆண்டுக்கு நபார்டு வங்கிக்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கப்படுகிறது

* 2011-12-ல் மேலும் 15 பெரிய அளவிலான உணவு வளாகங்கள் அமைக்கப்படும்

* இந்த ஆண்டு தேசிய உணவு பாதுகாப்புக்கான மசோதா அறிமுகப்படுத்தப்படும்

* உள்கட்டமைப்பு வசதிகளுக்கான ஒதுக்கீடு 23.3 சதவீதமாக அதிகரிப்பு

* அரசு நிறுவனங்களால் உத்தேசிக்கப்பட்ட வரி இல்லா பத்திரங்களுக்கு ரூ.30 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

* நீராவி மற்றும் மின்சார ஊர்திகளுக்கு தேசிய இயக்கம் துவங்கப்படும்

* உள்கட்டமைப்பு வசதி திட்டங்கள் சார்ந்த சுற்றுச் சூழல் அனுமதி வழங்க அமைச்சர்கள் குழு

* தோல் பொருட்கள் உற்பத்திக்கு 7 மாபொரும் தொகுப்புகள் ஏற்படுத்தப்படும்

* சமூக துறைக்கான ஒதுக்கீடு 17 சதவீதமாக அதிகரிக்கப்படுகிறது. இது மொத்த திட்ட ஒதுக்கீட்டில் 36.4 சதவீதமாகும்

* பாரத் நிர்மாண் திட்டத்திற்கான ஒதுக்கீடு ரூ.10 ஆயிரம் கோடியாக அதிகரிப்பு

* அடுத்த மூன்றாண்டுகளில் ஊரகப் பகுதிகளுக்கு 2.5 லட்சம் அகன்ற அலைவரிசை தொலை தொடர்பு வசதி ஏற்படுத்தப்படும்

* இந்திய பத்திர சட்டத்தில் திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்படும். பத்திரங்கள் நவீனமயம் மற்றும் பத்திர பதிவு நிர்வாகத்திற்கு ரூ.300 கோடியில் திட்டம்

* அங்கன்வாடி பணியாளர்கள் உதவியாளர்களுக்கு ஊதிய உயர்வு

* கல்விக்கான ஒதுக்கீடு 24 சதவீதமாக அதிகரிப்பு. அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கு ரூ.21 ஆயிரம் கோடி ஒதுக்கீடு. இது 40 சதவீதம் கூடுதலாகும்

* அறிவுசார் இணையத்தின் மூலம் 1500 உயர் கல்வி நிறுவனங்கள் வரும் மார்ச் 2012-க்குள் ஒருங்கிணைக்கப்படும்

* நூதன கண்டுபிடிப்புகளுக்கான தேசிய குழு ஏற்படுத்தப்படும். தேசிய தொழில் மேம்பாட்டு நிதிக்கு கூடுதலாக ரூ.500 கோடி

* சுகாதாரத்திற்கான திட்ட ஒதுக்கீடு 20 சதவீதமாக அதிகரிப்பு

* இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டம் மேலும் தளர்த்தப்படும்

* பசுமை இந்தியா இயக்கத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு

* நதிகளை தூய்மைப்படுத்த ரூ.200 கோடி

* ஜம்மு-காஷ்மீர் மாநில மேம்பாட்டுக்கு ரூ.8000 கோடி ஒதுக்கீடு

* வரும் அக்டோபர் மாதம் முதல் நாளன்றுக்கு 10 லட்சம் ஒருங்கிணைந்த பிரத்யேக அடையாள அட்டை வழங்கப்படும்

* 2011-12-ம் ஆண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதிபற்றாக்குறை 4.6 சதவீதமாக இருக்கும்

* வருமான வரி உச்சவரம்பு ரூ.1.60 லட்சத்தில் இருந்து ரூ.1.80 லட்சமாக அதிகரிப்பு

* மூத்த குடிமக்களுக்கான வருவமான வரி உச்சவரம்பு பெறும் வயது 65-லிருந்து 60 ஆக குறைப்பு. மிக மூத்த குடிமக்களுக்கான வயது வரம்பு 80 ஆக நிர்ணயிக்கப்பட்டு அவர்களுக்கு ரூ.5 லட்சம் வரை வரி விலக்கு

* நிறுவனங்களுக்கான கூடுதல் வரி 5 சதவீதமாக குறைப்பு


பட்ஜெட் செய்திகள்:

உணவுப் பொருட்கள் விலை கவலைக்குரியது: பிரணாப் உரை

விமானப் பயண சேவை வரி உயர்வு
உணவு விடுதிகளுக்கு சேவை வரி சேர்ப்பு

நிறுவனங்களுக்கான கூடுதல் வரி 5% குறைவு

வருமான வரி விலக்கு வரம்பு ரூ.1.8 லட்சமாக உயர்வு

மத்திய பட்ஜெட்: விலை உயரும், குறையும் பொருட்கள் விவரம்

பரஸ்பர நிதியில் அந்நிய முதலீட்டாளர்களுக்கு அனுமதி

ஓய்வூதியத் திட்ட வயது வரம்பு குறைப்பு

ஏரிகள், ஆறுகளை சுத்தப்படுத்த ரூ.200 கோடி

கல்வி திட்டங்களுக்கு ரூ.52,057 கோடி!

சுகாதாரத்துறைக்கு ரூ.26,700 கோடி ஒதுக்கீடு

தேசிய பணித் திறன் வளர்ச்சி நிதியத்துகு ரூ.500 கோடி

ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் வளர்ச்சி கழகத்து ரூ.20 கோடி


விகடன்

நீல வானம் நீயும் நானும்..


நீல வானம் நீயும் நானும்
கண்களே பாஷையாய் கைகளே ஆசையாய்
வையமே கோயிலாய் வானமே வாயிலாய்
பால்வெளி பாயிலே சாயுந்து நாம் கூடுவோம்
இனி நீ என்று நான் என்று இரு வேறு ஆள் இல்லையே..

நீல வானம்
Blue Sky
நீயும் நானும்
You and I

ஏதேதோ தேசங்களை சேர்க்கின்ற நேசம் தன்னை
நீ பாதி நான் பாதியாய் கோர்க்கின்ற பாசம் தன்னை
காதல் என்று பெயர் சூட்டியே காலம் தந்த சொந்தம் இது
என்னை போலே பெண் குழந்தை உன்னை போல் ஒரு ஆண் குழந்தை
நாம் வாழ்ந்த வாழ்விற்கு சான்றவது இன்னொரு உயிர்தானடி
நீல வானம் நீயும் நானும்

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு
பல கோடி நூறாயிரம்
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு
பல கோடி நூறாயிரம்
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு
பல கோடி நூறாயிரம்

ஆறாத காயங்களை ஆற்றும் நாம் நேசம் தன்னை
மாளாத சோகங்களை மாய்த்திடும் மாயம் தன்னை
செய்யும் விந்தை காதலுக்கு கை வந்ததொரு கலைதானடி
உன்னை என்னை ஒற்றி ஒற்றி உயிர் செய்யும் மாயமும் அது தானடி
நாம் வாழ்ந்த வாழ்விற்கு சான்றவது இன்னொரு உயிர்தானடி
நீல வானம் நீயும் நானும்

2G மின்னல் சர்வே...

ஸ்பெக்ட்ரம் மாயச் சுழலின் முக்கிய எபிஸோட் - ஆ.ராசாவின் கைது!

விரைவில் தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான படுதா விலகும் நிலையில்... கூட்டணிக்கான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் சூடு பிடிக்கும் தருணத்தில்... ஆ.ராசாவின் கைது தமிழகத்தில் எந்த மாதிரியான அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது? அவர் கைது சரியா? அதனால், தி.மு.க - காங்கிரஸ் கூட்டணிக்குப் பாதிப்பு ஏற்படுமா? ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கை திருப்தியா?’ என்பது குறித்தெல்லாம் தமிழக மக்கள் என்ன நினைக்கிறார்கள் என எல்லாவற்றையும் கணிப்பாக எடுக்க முடிவு செய்தது ஜூ.வி. இதற்காக, மாணவப் பத்திரிகையாளர்கள் உட்பட சுமார் 100 பேர்கொண்ட நிருபர் படை, சுழன்று சுற்றியது!

ஆண், பெண், நகரம், கிராமம், அரசு ஊழியர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், வியாபாரிகள், குடும்பத் தலைவிகள், கல்லூரி மாணவ மாணவியர் என்று எல்லாத் தரப்பு மக்களையும் அணுகி இந்தக் கணிப்பு எடுக்கப்பட்டது. புதுச்சேரி உட்பட மொத்தம் 2,725 பேர் இதில் கலந்துகொண்டனர்.

சொந்தத் தொகுதியான நீலகிரி நகரில் ஆ.ராசாவுக்கு சாதகமான சூழல் நிலவுகிறது. ஆனால், ஊட்டி மலையைவிட்டுக் கீழே இறங்கினால், தமிழகம் முழுவதும் நிலைமை தலைகீழ்!

'தம்பி நான் தி.மு.க-காரன்தான். ஆனா, ராசாவுக்கு ஆதரவா தி.மு.க. பொதுக் குழுவில் தீர்மானம் போட்டது எனக்கு சுத்தமாப் பிடிக்கலை. என்னைக் கேட்டா, அரசாங்கம் அவரை முன்கூட்டியே கைது செய்திருக்கணும். இவங்க, கட்சியைவிட்டே நீக்கியிருக்கணும்...'' - மதுரையில் வாழை இலைக் கடை நடத்துபவரின் கோபம் இது.

''ஸ்பெக்ட்ரம் பத்தி எல்லாம் எங்களுக்கு விவரமாத் தெரியாதுங்க... எது எப்படியோ, எண்ண முடியாத அளவுக்குப் பணம் கொள்ளை போயிருக்கு. அதை எத்தனை திரை போட்டு மறைச்சாலும், ஆளும் கட்சியினர் அதன் பலனை அனுபவிச்சே ஆகணும்!'' என்றனர் திருநெல்வேலி டவுனில்.

''இந்த விஷயத்தில் இந்தியாவின் மானம் உலக அளவில் போனதுன்னா... இந்திய அளவில் தமிழன் மானம் காத்தில் பறக்கிறதுதான் ரொம்பக் கவலையா இருக்கு!'' என்றனர் தூத்துக்குடி மக்கள்.

'ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஆ.ராசா கைது செய்யப்பட்டது சரியான நடவடிக்கை’ என்று சொல்பவர்களைவிட, 'தாமதமாக எடுக்கப்பட்ட முடிவு’ என்று சொன்னவர்கள்தான் அதிகம். 'ஆ.ராசாவின் கைது, தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும்’ என்று பாதிக்கும் மேற்பட்டவர்கள் கருதுகிறார்கள். 'ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முக்கியக் குடும்ப ஆதிக்கம் இருந்திருக்குமா?’ என்கிற கேள்விக்கு 'நிச்சயம் இருக்கிறது’ என்று அடித்துச் சொன்னவர்கள் மிக அதிகம். எட்டு கேள்விகள் அடங்கிய சர்வேயில், இந்தக் கேள்விக்குத்தான் 71 சதவிகிதம் பேர் கொந்தளித்து இருந்தார்கள். 'ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிக்கும் பங்கு இருக்கிறது?’ என்று 58 சதவிதத்தினர் நெத்தியடியாகச் சொன்னார்கள். '2ஜி விஷயத்தில் மத்திய காங்கிரஸ் அரசின் நடவடிக்கைகள் எப்படி இருக்கிறது?’ என்ற கேள்விக்கு, பெரும்பாலானவர்கள், 'அரசியல் செய்கிறது’ என்றார்கள்.

மொத்தத்தில்... ஸ்பெக்ட்ரம், ஆ.ராசா கைது விவகாரங்கள் மக்களின் மன ஓட்டம் எப்படி இருக்கிறது? இதோ உங்கள் கண்ணில்... கருத்தில்..!

- ஜூ.வி. சர்வே டீம்


விகடன்

இன்று எகிப்து... நாளை இந்தியா?


வீன உலகின் மக்கள் புரட்சி எப்படிப்பட்டதாக இருக்கும்?

சந்தேகமே இல்லாமல், எகிப்தைக் கை காட்டலாம்! 30 வருட சர்வாதிகார ஆட்சியை, வெகுமக்கள் போராட்டத்தால் தூக்கி வீசியிருக்கிறது கிளியோபாட்ரா தேசம்.

கெய்ரோ மாநகரின் தஹ்ரீர் சதுக்கத்தில்18 நாட்களாக லட்சக்கணக்கில் திரண்ட மக்கள், 30 ஆண்டுகளாக நாட்டை சர்வாதிகாரம் செய்துகொண்டு இருந்த அதிபர் ஹோஸ்னி முபாரக்கை (82) நாட்டைவிட்டு ஓடவைத்தனர்.

எகிப்தின் அடிப்படைப் பிரச்னை என்ன? வரலாற்றில் ரோம சாம்ராஜ்யம் என அறியப்படும் ஒட்டுமொத்தப் பிரதேசத்துக்கும் ஒரு காலத்தில் தானிய ஏற்றுமதி செய்த செல்வச் செழிப்பான நாடு எகிப்து. ஒரு வல்லரசு ஆவதற்கான தகுதியுடைய நாடுதான். ஆனால், எங்கும் வறுமை, உணவுப் பஞ்சம், வேலைவாய்ப்பு இன்மை. எகிப்தின் மொத்த வளத்தையும் தன் சொந்த உடைமையாகக் கருதி கொள்ளை அடிப்பதிலேயே குறியாக இருந்தார் அதிபர் முபாரக். கடுமையான பொருளாதார நெருக்கடி, குழு மோதல்களாகவும் கலவரங்களாகவும் ஆங்காங்கே வெடித்தன. அப்போதுதான் நடந்தது மற்றோர் அரபு நாடான துனிஷியாவின் மக்கள் புரட்சி. உண்மையில் தற்போதைய எகிப்து எழுச்சியின் துவக்கப் புள்ளி துனிஷியாவில்தான் தொடங்குகிறது.

23 ஆண்டுகளாக துனிஷியாவை சர்வாதிகாரம் செய்து வந்தவர் அதிபர் பென் அலி. 74 வயதாகும் இவர், நாட்டின் பொருளாதார நெருக்கடி குறித்தோ, மக்களின் வாழ்வாதாரம் குறித்தோ சிறிதும் கவலைப்படவில்லை. அரபு நாடுகளில் அதிகம் படித்தவர்கள் உள்ள நாடு துனிஷியாதான். ஆனால், அங்கேயும் வறுமை. இதை எதிர்த்துப் போராடினால், சிறையும் மரணமுமே பரிசு. அந்த நிலை யில்தான், முஹமது வுவாசி என்ற வேலை அற்ற பட்டதாரி இளைஞர் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்டார். முஹமது செல்வாக்கானவரோ, புகழ்பெற்றவரோ இல்லை. ஆனால், மக்களின் கோபத்தை, அவரது மரணம் ஒருங்கிணைத்தது. ஒட்டுமொத்தத் துனிஷிய மக்களும் கோபாவேசத்துடன் போராட, கடைசியில் அதிபர் பென் அலி, நாட்டை விட்டு ஓடிப்போனார்.

துனிஷிய மக்கள் புரட்சி எப்படி ஒரு தற்கொலையால் துவக்கிவைக்கப்பட்டதோ, அதேபோல எகிப்துப் புரட்சியும், காலித் சையித் என்ற இளைஞனின் தற்கொலையில் இருந்துதான் துவங்கியது. எகிப்து போலீஸின் அத்துமீறல் வீடியோவை இணையத்தில் வெளியிட்டார் என்ற 'குற்றத்துக்காக’ போலீஸ் அவரைச் சித்ரவதை செய்து கொலை செய்தது. அதுவரை சிறுசிறு குழுக்களாக நடந்த மக்கள் போராட்டங்களை காலித் சையித்தின் மரணம் ஒன்று சேர்த்தது.

உண்மையில் துனிஷியா, எகிப்து... இரண்டு நாடுகளின் மக்கள் போராட்டத்தை ஒருங் கிணைத்ததும், வெற்றிபெற வைத்ததும் தொழில் நுட்பம்தான். twitter, facebook ஆகிய சமூக வலைதளங்களும், வீடியோ வலைதளமான youtube-ம் இந்தப் போராட்டங்களில் முக்கியப் பங்கு வகித்தன. எகிப்துப் போராட்டத்தில் கலந்துகொள்ள facebook மூலம் விடுக்கப்பட்ட அழைப்பால் வந்தவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரம். இந்த வலைதளங்களை எகிப்து அரசு தடை செய்தபோதிலும், வெளிநாடு வாழ் எகிப்தியர்களால் தகவல்கள் பரபரவெனக் கொண்டுசெல்லப்பட்டன. துனிஷியாவிலும் இப்படித்தான் தடை செய்தார்கள். ஆனால், இணைய இணைப்பு உள்ள கேமரா மொபைல் மூலம், போராட்டக் களத்தில் நின்றபடி உடனுக்குடன் எல்லாவற்றையும் இணையத்தில் பரப்புவதை யாராலும் தடுக்க முடியவில்லை. இணையத்தைத் தாண்டி, உண்மையை வெளி உலகுக்குச் சொன்ன அல் ஜஸீரா தொலைக்காட்சியின் அலுவலகத்தை மூடி, அதன் நிருபர்கள் ஆறு பேரைக் கைது செய்தது எகிப்து அரசு. எல்லா அடக்குமுறைகளையும் இறுதியில் மக்கள் புரட்சி வென்றுவிட்டது.

துனிஷியா, எகிப்து... எனப் பரவும் மக்கள் புரட்சியின் அடுத்த கட்டமாக, இப்போது ஏமன் நாட்டு சர்வாதிகாரி சலேவுக்கு எதிராக போராட்டங்கள் தொடங்கி இருக்கின்றன. உள்ளூர்ப் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக ஜோர்டானிலும் பெருந்திரள் போராட்டங்கள் நடைபெறுகின்றன. மத்தியக் கிழக்கின் அரபு நாடுகளில் ஓர் அலையைப்போலப் பரவி வரும் மக்கள் போராட்டங்களைக் கண்டு அதிகம் அஞ்சுவது அமெரிக்காதான். ஏனெனில், பல காலமாக எண்ணெய் வளம் மிகுந்த அரபு நாடுகளில் நகாசு அரசியல் செய்து வருகிறது அமெரிக்கா. இப்போது தன் செல்வாக்கு எல்லையைத் தாண்டி மக்களின் போராட்டம் நடப்பதால், என்ன செய்வது எனத் தெரியாமல் திகைத்து நிற்கிறது.

இப்போது துனிஷியாவில் பென் அலி, எகிப்தில் முபாரக் போல... சில காலம் முன்பு இரானில் மன்னர் ஷா, பிலிப்பைன்ஸில் மார்கோஸ், பனாமாவில் நொரீகா, இராக்கில் சதாம்... என அமெரிக்க விசுவாசிகள் பலர் இருந்தனர். மக்கள் புரட்சி வெடித்தபோது, அனைவரையும் அமெரிக்கா கடைசி நேரத்தில் கழுத்தறுத்துக் கைவிட்டதுதான் வரலாறு. தெற்காசியப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் அதி தீவிர விசுவாசியாக இந்தியா இருக்கிறது. எனில், இந்தியாவின் முபாரக், இந்தியாவின் பென் அலி யார்?

நன்றி - அனந்த விகடன்

நடுநிசி நாய்கள்

இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம்

கெளதம் மேனன் இயக்கி வெளிவந்த திரைப்படம் நடுநிசி நாய்கள். இப்படத்தில் புதுமுகம் வீரா மற்றும் சமீரா ரெட்டி ஆகியோர் நடித்து இருந்தனர். இப்படத்தில் வளர்ப்பு தாயிடம் மகன் தப்பாக நடிப்பது போல் இருக்கும் காட்சி இந்து கலாசாரத்தை கேவலப்படுத்துவது போல் இருப்பதாக கூறி, படத்தின் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக இந்து மக்கள் கட்சியினர் அறிவித்திருந்தனர்.

இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை(பிப் 27) இந்து மக்கள் கட்சி தலைவர் குமார் தலைமையில் 15 பேர் தரமணி பஸ் நிலையத்தில் இருந்து கானகத்தில் உள்ள இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் வீட்டிற்கு ஊர்வலமாக சென்றனர்.

அப்போது கிண்டி உதவி கமிஷனர் செந்தில்குமரன், இன்ஸ்பெக்டர்கள் மன்சூர் அலி, அங்குசாமி ஆகியோர் அவர்களை தடுத்து நிறுத்தி, ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை என தெரிவித்தனர். தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்யப் போவதாக அவர்கள் அறிவித்ததால் 15 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து கவுதம் வாசுதேவ்மேனன் நிருபர்களிடம் கூறுகையில் " யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் இந்த காட்சி அமைக்கப்படவில்லை என்றும் கதைக்கு தேவைப்பட்டதால் இப்படி ஒரு காட்சியை படத்தில் வைத்தேன். நடுநிசி நாய்கள் படத்தின் கதாநாயகன் மனநலம் பாதிக்கப்பட்டவன். அவனை அறியாமல் நடக்கும் நிகழ்வுகளைத்தான் படத்தில் காட்டியுள்ளோம். மற்றபடி யார் மனதையும் புண்படுத்தும் எண்ணம் கிடையாது. குழந்தைகளுடன் படத்தை பார்க்க வேண்டாம் என்று ஏற்கெனவே கூறியிருக்கிறேன் " என தெரிவித்தார்.

மங்காத்தா

* 'மங்காத்தா'விற்கு பிறகு அஜீத் நடிக்கப்போகும் படம் 'பில்லா 2'. ரீமேக் பில்லா-1ஐ இயக்கிய விஷ்ணுவர்த்தனே இதையும் இயக்குகிறார். சாதாரண இளைஞனான டேவிட்,எப்படி பில்லாவாக சமூகத்தால் மாற்றப்படுகிறான் என்பதே பில்லா-2வின் கருவாம். பில்லா-1ல் நயன்தாரா நடித்த வேடத்தில் அனுஷ்கா நடிக்கிறார்.நமீதா நடித்த கேரக்டருக்கு இன்னும் யார் என்பது முடிவாக வில்லையாம்.

சே

சே
  • சேராத இடத்திலே சேர்ந்தால் துன்பம் வரும்.
  • சேற்றிலே புதைந்த யானையைக் காக்கையுங் கொத்தும்.
  • சேற்றிலே செந்தாமரை போல.

சூடு பட்ட புரோகிதர்கள்

(தெனாலி ராமன் கதைகள்)

மன்னர் கிருஷ்ணதேவராயருக்கு அவருடைய தாயார் மேல் அன்பும் மரியாதையும் உண்டு. தாய் மேல் அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். அவரது தாயாருக்கு வயோதிகம் ஆகிவிட்டபடியால் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தார். வைத்தியரை அழைத்து தன் தாயின் உடல் நிலையைப் பரிசோதிக்கச் செய்தார். பரிசோதனை செய்த வைத்தியரும் "தங்கள் தாயார் அதிக நாள் தாங்க மாட்டார்கள். விரைவில் சிவலோகப் பதவி அடைந்து விடுவார்கள்" என்று கூறினார். அது கேட்ட மன்னர் வேதனையுற்றார்.

தன் தாயாரிடம் சென்று "அம்மா, உங்களுக்கு சாபிட எது மிகவும் ஆசையாக இருக்கிறது" என்று கேட்டார்.

அதற்கு அவரது தாயாரும் "மாம்பழம் தான் வேண்டும்" என்றார். அப்போது மாம்பழம் கிடைக்கக் கூடிய காலமல்ல இருப்பினும் தன் ஆட்களை அனுப்பி எங்கிருந்தாவது மாம்பழம் வாங்கி வர ஏற்பாடு செய்தார். ஆட்கள் மாம்பழம்
வாங்கி வர புறப்பட்டனர்.

மாம்பழம் வந்து சேர்வதற்குள் அவரது தாயார் மரணம் அடைந்து விட்டார்.

மாம்பழம் சாப்பிடாமலேயே தன் தாயார் மரணம் அடைந்தது குறித்து மன்னர் மிக வேதனை அடைந்தார்.

அதற்குப் பரிகாரம் காண எண்ணி அரண்மனைப் புரோகிதர்களை அழைத்து ஆலோசனை கேட்டார்.

பேராசைபிடித்த புரோகிதர்களும் "மாம்பழம் சாப்பிடாமல் இறந்ததால் அவரது ஆன்மா சாந்தியடைய தங்கத்தால் 108 மாங்கனைகளைச் செய்து 108 புரோகிதர்களுக்குக் கொடுத்தால் சரியாகிவிடும்" என்றனர்.

மன்னரும் அதற்குச் சம்மதித்தார். 108 மாம்பழங்கள் தங்கத்தால் செய்ய ஏற்பாடு செய்தார். சில நாட்களில் தங்க மாம்பழம் தயார் ஆனது. அவற்றை 108 புரோகிதர்களுக்கு மன்னர் கொடுத்தார். புரோகிதர்களும் மிக மகிழ்சியுடன் அவற்றைப் பெற்றுக் கொண்டனர்.

இச்செய்தியை தெனாலிராமன் அறிந்து வேதனையுற்றான். புரோகிதர்களுக்குத் தக்க பாடம் கற்பிக்க எண்ணினான். அதன்படியும் செயலாற்றத் துணிந்தான்.

புரோகிதர்களைச் சந்தித்தான். "என் அம்மாவிற்குத் திதி வருகிறது. அதற்குத் தாங்கள் அனைவரும் வந்து புரோகிதம் பண்ணுங்கள். என்னால் முடிந்தளவு தருகிறேன்" என்றான்.

புரோகிதர்களும் மகிழ்ந்து தெனாலிராமன் வீட்டிற்கு வந்தனர். அவனும் புரோகிதர்களை வரவேற்று உட்காரச் செய்தான். பின் கதவுகளை நன்கு தாழிட்டுப் பூட்டிக் கொண்டான். ஏற்கனவே நன்கு பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியால் ஆளுக்கு ஒரு சூடு போட்டான்.

புரோகிதர்கள் அய்யோ அம்மாவென்று கதறினார்கள். பின் மன்னரிடம் சென்று முறையிட்டனர்.

இதைப் பார்த்த மன்னர் தெனாலிராமன் மீது அளவிலடங்காக் கோபங்கொண்டார்.

பின் தன் பணியாட்களை அனுப்பி தெனாலிராமனை இழுத்து வரச் செய்தார். தெனாலிராமனைப் பார்த்ததும் "ஏனடா புரோகிதர்களுக்கு இவ்வாறு சூடு போட்டாய்" என்று கேட்டார்.

"மன்னாதி மன்னா..... என்னை மன்னிக்க வேண்டும் நான் சொல்லுவதை தாங்கள் கவனமாகக் கேட்க வேண்டுகிறேன். என் தாயார் உடல் நலமில்லாதிருந்து இறக்கும் தருவாயில் வலிப்பு நோய் வந்து விட்டது. அதற்கு வைத்தியர்கள் என் தாயாருக்குச் சூடு போடும்படி சொன்னார்கள். நான் சூடு போடும் முன் என் தாயார் இறந்து விட்டார்கள். ஆகையால் என் தாயாரின் ஆன்மா சாந்தியடைய புரோகிதர்களுக்கு சூடு போடும்படி பெரியவர்கள் சொன்னார்கள். அவர்கள் சொன்னபடியே தான் புரோகிதர்களுக்குச் சூடு போட்டேன். இதில் என்ன தப்பு" என்று மன்னரிடம் கேட்டான் தெனாலிராமன்.

இதைக்கேட்ட மன்னர் கோபம் கொண்டு "என்னடா தெனாலிராமா, இது முட்டாள் தனமாக இருக்கிறதே" என்றார்.

இல்லை அரசே, விளக்கமாகக் கூறுகிறேன் சற்றுக் கேளுங்கள்" என்றான்.

முன்பு தங்கள் தாயார் மாம்பழம் சாப்பிடாமல் இறந்ததால் அவர்கள் ஆன்மா சாந்தியடைய 108 பொன்மாங்கனிகள் 108 புரோகிதர்களுக்குக் கொடுத்தால் தான் அவர்கள் ஆன்மா சாந்தியடையும் என்று சொன்னார்களே...... அதன்படியும் தாங்கள் கொடுத்தீர்களே......................"

அதுபோலவே என் தாயாரின் வலிப்பு நோய்க்கு சூடு போட முடியாமல் போனதால் தான் இவர்களுக்குச் சூடு போட்டேன் என்றான். இதைக் கேட்ட மன்னர் நகைத்து விட்டார். தெனாலிராமனைப் பாராட்டினார். புரோகிதர்களின் பேராசையையும் புரிந்து கொண்டார்.

சோதிடனைக் கொன்ற கதை

(தெனாலி ராமன் கதைகள்)

ஒரு சமயம் பீஜப்பூர் சுல்தான் கிருஷ்ண தேவ ராயரின் படை வலிமையைப் பற்றிக் கேள்விப்பட்டான்.ராயர் சுல்தானுடன் போர் தொடுக்க எண்ணியுள்ளதையும் அறிந்து கொண்டான்.இதை எப்படியேனும் தடுத்து நிறுத்த வேண்டும் என்று எண்ணம் கொண்டான்.

அதனால் ஒரு சூழ்ச்சி செய்தான்.அரசர் ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர் என்பதை அறிந்து கொண்டான். ரகசியமாக அரண்மனை ஜோதிடரை சந்தித்தான் சுல்தான்.நிறைய பொன்னைக் கொடுத்து ராயரின் படையெடுப்பை எப்படியாவது தடுத்து நிறுத்துமாறு கேட்டுக் கொண்டான்.

பொன்னுக்கு ஆசைப்பட்ட அந்த வஞ்சக ஜோதிடன் நேராக விஜயநகர அரண்மனைக்கு வந்தான்.கிருஷ்ணதேவ ராயர் படையெடுக்கத் தயாராக உள்ளதை அறிந்துகொண்டான். அவன் உள்ளம் வேகமாக வேலை செய்தது. மன்னர் முன் சென்று நின்றான்.மிகவும் தயங்குவது போல் பாசாங்கு செய்தவன் "அரசே! தற்போது தாங்கள் படையெடுப்பது சரியல்ல.ஏனெனில் தங்களின் கிரகநிலை தற்போது சரியில்லை.எனவே படையெடுப்பில் தற்போது இறங்க வேண்டாம்." என்று கூறினான். மந்திரி பிரதானிகளும் அதையே கூறினர். அவர்களும் மன்னரின் உயிரைப் பெரிதென மதித்தனர்.அரசியரும் மன்னரையுத்தத்திற்குப் போகவேண்டாம் எனத் தடுத்தனர். அரசரும் யோசித்தார்.தெனாலிராமன் இவற்றையெல்லாம் கவனித்தவண்ணம் இருந்தான்.அவனுக்கு ஜோதிடன் மேல் சந்தேகம் ஏற்பட்டது.எனவே மன்னனிடம்"அரசே! நீங்கள் ஏன் தயங்குகிறீர்கள்? சோதிடன் சொன்ன பலன்கள் எல்லாம் நடந்து விடுகின்றனவா என்ன?" என்று தைரியம் சொன்னான்.

ராயரும் அதை ஆமோதித்தார்."ராமா! நீ சொல்வதும் சரிதான். ஆனால் இதை எப்படி மற்றவர்களுக்கு நிரூபிப்பது?சோதிடம் பொய் என்று நிரூபிப்பவருக்குபத்தாயிரம் பொன் பரிசு என்று அறிவியுங்கள்" என்றும் ஆணையிட்டார்.

தெனாலிராமனுக்கு மிக்க மகிழ்ச்சி. "அரசே! நானே இதை நிரூபிக்கிறேன். ஆனால் அந்த சோதிடனுக்குத் தண்டனை தருகின்ற உரிமையையும் எனக்குத் தரவேண்டும் " என்று கேட்டுக்கொண்டான். மன்னரும் இதை ஒப்புக்கொண்டார்.

மறுநாள் சபா மண்டபத்தில் சோதிடனும் தெனாலிராமனும் எதிரெதிரே அமர்ந்திருந்தனர். ராமன் சோதிடரைக் கூர்ந்து கவனித்தான்.அவர் மேல் அவனுக்குச் சந்தேகம் உண்டாயிற்று. அவன், "சோதிடரே! நீர் கூறும் சோதிடம் தவறாமல் பலிக்குமல்லவா?" என்றான் மெதுவாக.

"அதிலென்ன சந்தேகம்? நான் சொன்னால் அது கண்டிப்பாக நடந்தேறும்." தன் கரங்களைக் குவித்தபடியே "நீங்கள் பல்லாண்டு வாழ்ந்து பலன்களைச் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்" என்றான் ராமன் பணிவாக.

சோதிடனும் கர்வத்துடன் தலையை அசைத்துக் கொண்டான்.

"அப்படியானால் தங்களின் ஆயுள் காலத்தையும் தாங்கள் அறிவீர்கள் அல்லவா?"

"ஓ! நான் இன்னும் நாற்பது ஆண்டுகள் உயிர் வாழ்வேன். இது சத்தியம்." சோதிடன் பெருமையுடன் கூறினான்.
"உமது வாக்கு இப்போதே பொய்த்து விட்டதே! " என்றவாறே அருகே நின்ற சேனாதிபதியின் வாளை உருவி அந்த வஞ்சக சோதிடனின் தலையை வெட்டினான் ராமன்.

அனைவரின் திகைப்பையும் நீக்கிய ராமன் அந்த சோதிடனின் சுவடிக்கட்டை பிரித்துக் காட்டினான். அதனுள் பிஜாபூர் சுல்தான் சோதிடனுக்கு அனுப்பிய கடிதங்கள் இருக்கக் கண்டான். அந்த சோதிடன் பீஜப்பூர் சுல்தானின் கைக்கூலி என்று அறிந்து அவனுக்குத் தண்டனை அளித்ததற்காக ராமனைப் பாராட்டினார்.தன் வாக்குப் படியே பத்தாயிரம் பொற்காசுகளையும் அளித்து மகிழ்ந்தார். அதன்பின் தன் எண்ணப்படியே பீஜபூரையும் குர்ப்பாகானையும் வெற்றி கொண்டார் கிருஷ்ணதேவராயர்.

அதிகாரம் - இனியவைகூறல்

குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - இல்லறவியல் அதிகாரம் -


குறள் 95:
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.
கலைஞர் உரை:
அடக்கமான பண்பும், இனிமையாகப் பேசும் இயல்பும் தவிர, ஒருவருக்குச் சிறந்த அணிகலன் வேறு இருக்க முடியாது.
மு.வ உரை:
வணக்கம் உடையவனாகவும் இன்சொல் வழங்குவோனாகவும் ஆதலே ஒருவனுக்கு அணிகலனாகும் மற்றவை அணிகள் அல்ல.
சாலமன் பாப்பையா உரை:
தகுதிக்குக் குறைவானவரிடமும் பணிவுடன் இனிய சொற்களைச் சொல்பவனாக ஆவது ஒருவனுக்கு ஆபரணம் ஆகும்; பிற அணிகள் அணி ஆகா.

அதிகாரம் - இனியவைகூறல்

குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - இல்லறவியல் அதிகாரம் -


குறள் 94:
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.
கலைஞர் உரை:
இன்சொல் பேசி எல்லோரிடத்திலும் கனிவுடன் பழகுவோர்க்கு நட்பில் வறுமை எனும் துன்பமில்லை.
மு.வ உரை:
யாரிடத்திலும் இன்புறத்தக்க இன்சொல் வழங்குவோர்க்குத் துன்பத்தை மிகுதிபடுத்தும் வறுமை என்பது இல்லையாகும்.
சாலமன் பாப்பையா உரை:
எவரிடமும் இன்பம் தரும் இனிய சொற்களைப் பேசுபவர்க்குத் துன்பம் தரும் வறுமை வராது.

அதிகாரம் - இனியவைகூறல்

குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - இல்லறவியல் அதிகாரம் -


குறள் 93:
முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்.
கலைஞர் உரை:
முகம் மலர நோக்கி, அகம் மலர இனிய சொற்களைக் கூறுவதே அறவழியில் அமைந்த பண்பாகும்.
மு.வ உரை:
முகத்தால் விரும்பி- இனிமையுடன் நோக்கி- உள்ளம் கலந்து இன்சொற்களைக் கூறும் தன்மையில் உள்ளதே அறமாகும்.
சாலமன் பாப்பையா உரை:
பிறரைப் பார்க்கும்போது முகத்தால் விரும்பி, இனிமையாகப் பார்த்து, உள்ளத்துள் இருந்து வரும் இனிய சொற்களைச் சொல்வதே அறம் ஆகும்.

அதிகாரம் - இனியவைகூறல்

குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - இல்லறவியல் அதிகாரம் -


குறள் 92:
அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.
கலைஞர் உரை:
முகம் மலர்ந்து இனிமையாகப் பேசுவது, அகம் குளிர்ந்து ஒன்றைக் கொடுப்பதை விட மேலான பண்பாகும்.
மு.வ உரை:
முகம் மலர்ந்து இன்சொல் உடையவனாக இருக்கப்பெற்றால், மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும் ஈகையைவிட நல்லதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
முகத்தால் விரும்பி, இனிய சொற்களைக் கூறுகிறவனாகவும் ஆகிவிட்டால், உள்ளம் மகிழ்ந்து பொருளைக் கொடுப்பதைக் காட்டிலும் அது நல்லது.

அதிகாரம் - இனியவைகூறல்

குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - இல்லறவியல் அதிகாரம் -

குறள் 91:
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
கலைஞர் உரை:
அன்பு கலந்து வஞ்சம் அற்றவைகளாகிய சொற்கள், மெய்ப்பொருள் கண்டவர்களின் வாய்ச்சொற்கள் இன்சொற்களாகும்.
மு.வ உரை:
ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல் எனப்படும்.
சாலமன் பாப்பையா உரை:
அறம் அறிந்தவர் வாயிலிருந்து பிறந்து, அன்பு கலந்து உள்நோக்கம் இல்லாது வருவதே இனிய சொல்.

ஒவ்வொரு உயிரிலும் கடவுள்




*சுயநலமற்ற தன்மையே கடவுள் ஆகும். ஒருவன் செல்வந்தனாக வாழ்ந்தபோதும் சுயநலம் இல்லாதவனாக இருந்தால் அவனிடம் கடவுள் இருக்கிறார்.
* ஒரு நல்ல லட்சியத்துடன் முறையான வழியைக் கைக்கொண்டு தைரியத்துடன் வீரனாக விளங்குங்கள். மனிதனாக பிறந்ததற்கு வாழ்ந்து சென்றபின்னும் ஏதாவது அடையாளத்தை விட்டுச் செல்லுங்கள்.
* உங்களுடைய நரம்புகளை முறுக்கேற்றுங்கள். காலம் எல்லாம் அழுது கொண்டிருந்தது போதும். இனி அழுகை என்ற பேச்சே இருக்கக் கூடாது. சுயவலிமை பெற்ற மனிதர்களாக எழுந்து நில்லுங்கள்.
* தூய்மையாக இருப்பதும் மற்றவர்களுக்கு நன்மை
செய்வதும் தான் எல்லாவழிபாடுகளின் சாரமாகும். ஏழைகளிடமும் பலவீனர்களிடமும் நோயாளிகளிடமும் இறைவனைக் காண்பவனே உண்மையான வழிபாடு செய்பவன் ஆவான்.
* கடவுள் ஒவ்வொரு உயிரிலும் குடிகொண்டிருக்கிறார். இதைத் தவிர தனியாக வேறு கடவுள் ஒருவர் உலகில் இல்லை.

விவேகானந்தர்

ஆஸ்காரை நழுவ விட்டார் ஏ.ஆர்.ரஹ்மான்!



லாஸ் ஏஞ்சல்ஸ்: கடந்த முறை 2 ஆஸ்கார் விருதுகளை வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த முறை ஆஸ்கார் விருதினை நழுவ விட்டார். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று 83வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா கோலாகலமாக நடந்தது. கண்களை கவரும் வகையில் வண்ணமயமாக நடந்த இந்த விழாவில் ஒரிஜினல் இசை மற்றும் ஒரிஜினல் பாடல் பிரிவுகளில் 127 ஹவர்ஸ் படத்திற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் பரிந்துரைப்பட்டிருந்தது. ஆனால் அவருக்கு விருது கிடைக்கவில்லை. இந்த ஆண்டு பின்னணி இசைக்கான விருதை டிரன்ட் ரெஸ்னர் மற்றும் அடிகஸ் ரோஸ் ஆகியோர் ‌பகிர்ந்து கொண்டுள்ளனர்.

விழாவில் அதிக அளவிலான விருதுகளை தி கிங்ஸ் ஸ்பீச், இன்செப்ஷன், தி சோஷியல் நெட்வொர்க் ஆகிய படங்கள் பெற்றன. இந்த ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருது காலின் பிர்த் என்பவருக்கு தி கிங்ஸ் ஸ்பீச் என்ற படத்திற்காகவும், சிறந்த நடிகை விருது நதாலி போர்ட்மேனுக்கு பிளாக் ஸ்வான் படத்திற்காகவும் கிடைத்தது. தி கிங்ஸ் ஸ்பீச் படம் சிறந்த இசையமைப்பளருக்கான விருதையும் பெற்றது. இதுதவிர சிறந்த திரைக்கதை (ஒரிஜினல்), சிறந்த சவுண்ட் எடிட்டிங், சிறந்த இயக்குனர் என மொத்தம் 5 விருதுகளை தி கிங்ஸ் ஸ்பீச் படம் தட்டிச் சென்றது.

தி சோஷியல் நெட்வொர்க் படம் இசை (ஒரிஜினல் ஸ்கோர்), சிறந்த எடிட்டிங், சிறந்த திரைக்கதை (தழுவல்) ஆகிய பிரிவுகளின் கீழ் ஆஸ்கார் விருதுகளை வென்றது. இன்செப்ஷன் படம் விசுவல் எபெக்ட், ஒலிக்கலவை, ஒளிப்பதிவு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் விருதுகளை வென்றது. சிறந்த வெளிநாட்டுப் படங்கள் வரிசையில் டென்மார்க் படமான இன் எ பெட்டர் வேர்ல்ட் படம் ஆஸ்கார் விருது பெற்றது.


நன்றி - தினமலர்

Sunday, February 27, 2011

விண் வீழ்கற்கள் அல்லது மெட்டியோரைட்டுகள்




'விண்வெளியில் ஹாயாக படு பயங்கரளமான வேகத்தில் ஒரு பேஸ்பால் அளவு உள்ள கற்கள் பறந்து கொண்டிருக்கின்றன. இவற்றில் சில ஒரு சிறு தானியம் அளவுக்கு சிறியதாகவும் இருக்கின்றன. இவ்வாறு விண்வெளியில் சுற்றித் திரியும் சிறிய பொருட்களை 'விண்வீழ் உடல்கள்’ என்று அழைக்கின்றனர்.

ஆங்கிலத்தில் இதை 'மெட்டீரோயராயிட்ஸ்’ (Meteoriods) என்கின்றனர். இந்த சிறு துகல் ஒன்று பூமியின் வளிமண்டலத்தினுள் நுழைந்த உடனே, நம் வளிமண்டலத்தில் உள்ள மூலக்கூறுகளுடன், உராய்கின்றன. இந்த உராய்வால் அவற்றின் வெப்பநிலை 3000 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு உயர்கிறது.

இந்த அதிக வெப்பநிலையால் அந்த துகல் ஆவியாகிறது. பின் ஒளிர்கிறது., இவ்வாறு ஒளிரும் துகள்கள் அழகான ஒரு காட்சியை நமக்கு முன் வைக்கின்றன. இந்த நிகழ்வை 'ஷூட்டிங் ஸ்டார்ஸ்’ (Shooting Stars) என்று அழைக்கின்றனர். இருட்டான இரவு நேர வானத்தில் சில சமயங்களில் இவ்வாறு 'விண்வீழ்’ (Meteors) அழகான காட்சியை நாம் காண முடியும். வானத்தில் இருந்து விண்மீன்கள் சில வழுக்கி விழுந்தது போல இக்காட்சி அழகாக இருக்கிறது. விண் வீழ் உடல் ஒன்று பூமியின் வளிமண்டல எல்லையை அடைந்த உடனே அது 'விண் வீழ் கொள்ளி’ என (Meteors) என அழைக்கப்படுகிறது.

சில சமயங்களில் இந்த விண் வீழ் உடல்களில் பெரிய அளவானவை பூமியின் வளி மண்டலத்தில் தப்பிப் பிழைத்து மேற்பரப்பை நோக்கி மோதுகின்றன. இவ்வாறு பூமியின் மேற்பரப்பில் வந்து மோதும் பெரிய அளவான மெட்டியோர்களை 'விண் வீழ் கற்கள்’ (Meterorites) என அழைக்கின்றனர்.

இந்த விண் வீழ்கற்கள் எல்லாமே ஆஸ்டெராய்டுகளின் உடைந்த பாகங்களாகவோ அல்லது கிரகங்களின் உடைந்த பாகங்களாகவோ உள்ளன. இவற்றில் சிறிய துகள்கள் போல உள்ளவை காமெட்டுகளால் வெளியே விடப்பட்டவை ஆகும். விண்வீழ் உடல்களில் சில மணிக்கு 48300 கிலோமீட்டர் என்கிற அசுர வேகத்தில் பயணிக்கின்றன. இந்த விண்கற்கள் பெரும்பாலும் இரண்டு வகைகளாக உள்ளன. ஒரு வகை பெருமளவு பாறைகளால் ஆனதாக உள்ளது, இன்னொரு வகை இரும்பு மற்றும் நிக்கல் என்கிற உலோகங்களால் ஆனதாக உள்ளது.

சில பெரிய கற்கள் வளி மண்டலத்தில் பெரிய அளவில் வெடித்து சிதறுகின்றன. இதனால் தீப்பந்து போல பிரகாசமாக வானில் தோற்றம் உண்டாகிறது. 1903 ஆம் ஆண்டு ஜூன் 30ம் நாள் சைபீரியாவில் உள்ள துங்கஸ்கா எனும் நதிகரையோரம் இப்படி ஒரு பெரிய விண் கல் ஒன்று வானத்திலேயே வெடித்துச் சிதறியதாக நம்பப்படுகிறது. இதனால் பல நூறு சதுர கிலோமீட்டர்களில் காடானது தரை மட்டமாகி விட்டது. இந்த வெடியால் ஏற்பட்ட தீப்பந்து பல நூறு கிலோமீட்டர்கள் வானில் பரவியது. இந்த வெடியின் சத்தமும், இதனால் உண்டான தீயும் பக்கத்து கிராமங்களில் கேட்டது. நல்லவேளையாக அந்த பகுதி காட்டுப்பகுதி என்பதால் உயிர் சேதம் எதுவும் அதிகம் ஏற்படவில்லை.

அமெரிக்காவில் அரிசோனா என்னும் இடத்தில் ஒரு விண்வீழ் கல் ஒன்று 25,000 வருடங்களுக்கு முன் மோதியதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட பள்ளம் 600 அடி ஆழமாக உள்ளது. அதே அளவு விண்கல் ஒன்று இன்றைய உலகின் ஒரு நகரின் மேல் விழுந்தால், அந்த முழு நகரமும் முழுவதுமாக அழிந்து போயிருக்கும். அதன் உயிர்கள் மொத்தமாக அழிந்து போயிருக்கும்.

விண் கற்கள் பூமி தோன்றின ஆரம்ப நாட்களில் தொடர்ச்சியாக அதனை மோதிக் கொண்டே இருந்தன என்றும், இதனால் பூமியின் மேல் நிறைய 'கிரேடர்கள்’ எனும் பள்ளங்கள் உண்டானது என்றும் கருதப்படுகிறது. நாளடைவில் பூமியின் காற்று, நிரோட்டம், உயிர் வாழ்க்கை போன்றவற்றால் அவை மறைந்து விட்டன. ஆனால் நிலவு போன்ற காற்று, நீர், உயிர்கள் எதுவும் இல்லாத உடல்களில் இந்த பள்ளங்கள் மறையாமல் அப்படியே பல கோடி வருடங்களுக்கு இருக்கும். இதனால் தான் நிலவில் நிறைய பள்ளங்கள் உள்ளன. விண்வீழ் கற்கள் என்பவை பூமியைப் போலவே 4.6 பில்லியன் வருடங்களுக்கு முன்னால் தோன்றியவையாகும்.

'மெட்டியோர் ஷவர்’ (Meteor Shower) என்று ஒன்று உள்ளது. அதாவது காமெட்டுகள் சூரியனை நெருங்கி வரும்போது, சூரிய வெப்பத்தால் அதன் தூசுக்கள் வெளியே ஆவியாகி அதனைச் சூழ்கின்றன. இந்த தூசுக்கள் காமெட்டை விட்டு வெளியேறி சூரியனை தன் சுற்றுப்பாதையில் சுற்றுகின்றன. பூமி சூரியனைச் சுற்றின தன் சுற்றுப்பாதையில் சில சமயம் இந்த துகள்களைக் கடந்து செல்கிறது. இந்த துகள்கள் பூமியின் வளிமண்டலத்தில் எரிந்து ஒளிர்கிறது. இவ்வாறு நிறைய துகள்கள் ஒளிர்வதை 'மெட்டியோர் டிவர்’ என்கின்றனர்.

ஆதி கால மனிதர்கள் இப்படி வானில் ஒளிரும் பொருட்களை கடவுளோடும் மதத்தோடும் தொடர்புபடுத்தினர். பூமியில் விழும் விண்கற்கள் இறைவனின் தூதுவர்களிடமிருந்து வந்த அன்பளிப்புகள் என கருதினர். சிலர் இவற்றை கடவுளின் கோபம் என்று கூட கருதினர்.

Friday, February 25, 2011

ரேடியோ விண்மீன்கள்...


விண்ணில் சில இடங்களில் இருந்து வரும் ரேடியோ அலைகள் ஒரே மாதிரியாக இல்லாமல் வெவ்வேறு விதமான வலிமைகளில் ஒழுங்கின்ற இருந்ததை வானியல் வல்லுனர்கள் கண்டனர். அதாவது சில விநாடிகளுக்கு ஒருமுறை விண்மீன் ஒன்று குறுகலான கால அளவில் அதிக அளவு ரேடியோ அலைகளை உமிர்ந்தது. பின்னர் நார்மலான அளவில் ரேடியோ அலைகளை வெளியிட்டது. இது ஒரு சுழற்சி போல ஒழுங்காக இருந்தது. ரேடியோ அலைகள் வெளிப்படுவது மிகவும் ஒழுங்காக, சம கால இடைவெளியில் அமைந்திருந்ததால், ஒரு ரேடியோ துடிப்புக்கும் அடுத்த துடிப்புக்கும் இடைப்பட்ட கால அளவை வானியல் வல்லுனர்கள் துல்லியமாக அளக்க முடிந்தது.

இது போல ரேடியோ அலைகளை திடீர் துடிப்புகளாக வெளியேற்றும் விண்மீன்களை பல்ஸார்கள் (Pulsar) அல்லது துடிக்கும் விண்மீன்கள் என்கின்றனர். இந்த பல்ஸார்கள் ஒவ்வொரு முறை துடிக்கும் போது குறிப்பிட்ட அளவு ஆற்றலை வெளிவிடுகின்றன. இந்த பல்ஸார்கள் எல்லாமே மிகவும் ஒழுங்கான ரேடியோ துடிப்பு (Radio Pulses) களை பெற்றிருக்கிறது. ஆனால் ஒரு பல்ஸாருக்கும் இன்னொரு பல்ஸாருக்கும் இடையே துடிப்பு கால அளவு மாறுபடுகிறது. ஒரு விநாடிக்கு முப்பது முறை துடிக்கின்ற பல்ஸார்கள் கூட உள்ளன.

பல்ஸார்கள் என்பவை உண்மையில் சுழலும் நியூட்ரான் விண்மீன்கள்தான் என்று தாமஸ் கோல்டு (Thomas Gold) என்ற வானியல் வல்லுனர் கருத்து தெரிவித்தார். நியூட்ரான் விண்மீன்கள் படு வேகமாகச் சுழலும் போது, அவற்றின் காந்த துருவங்களின் (Magnetic Poles) வழியாக எலெக்ட்ரான்கள் எனப்படும் துகல்கள் வெளியேற்றப்படுகின்றன. அப்போது நியூட்ரான்கள் தங்கள் ஆற்றலை மைக்ரோ அலைகள் வடிவத்தில் இழக்கின்றன. நியூட்ரான் விண்மீன் சுழன்று, அது இழக்கின்ற மைக்ரோ அலைகள் பூமியின் திசைநோக்கி வெளிப்படுத்தப்படும் போது, நாம் இவற்றை மைக்ரோ அலை துடிப்புகளாக காண்கிறோம். மேலும் நியூட்ரான் விண்மீன்கள் மைக்ரோ அலைகளை வெளியிடும் போது, அதனுடைய சுழலும் ஆற்றல் (Rotational Energy) குறைகிறது. இதனால் அதனுடைய துடிக்கும் கால அளவு மெதுவாக அதிகமாகிக் கொண்டே வருகிறது.

பல்ஸார்களில் ஒளிரும் பல்ஸார்கள் (Optical Pulsar) என்று இன்னொரு வகை உள்ளது. ஒளிரும் பல்ஸார்கள் என்பவை தன்னுடைய ஒவ்வொரு சுழற்சியின் போதும் குறைவான கால இடைவெளியில் ஒளிக்கற்றைகளை வெளியேற்றுகின்றன. இது போல ஒளித் துடிப்புகளை அவை வெளிவிடுவதால் தான் அவை ஒளிரும் பல்ஸார்கள் எனப்படுகின்றன.

1982 ஆம் ஆண்டு விநாடிக்கு 642 முறை ரேடியோ துடிப்புகளை வெளியேற்றிய ஒரு விரைவாகச் சுற்றும் பல்ஸாரை வானியல் வல்லுனர்கள் கண்டனர். இந்த பல்ஸார் நம் சூரியனைப் போல இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிக நிறை கொண்டிருந்தது. ஆனால் அதனுடைய விட்டம் வெறும் 5 கிலோ மீட்டர்கள் தான் இருந்தது.

விண்வெளியில் ஒழுங்கான ஒரு கால இடைவெளியில் ரேடியோ துடிப்புகளை வெளிவிடும் விண்மீன்கள் வானியல் வல்லுனர்களுக்கு பெருத்த வியப்பை அளித்தது. நியூட்ரான் விண்மீன்களின் ஒரு வகை தான் பல்ஸார்கள் என்று முன்பே கண்டோம். நியூட்ரான் விண்மீன்களையும் தாண்டி வானியல் வல்லுனர்கள் யோசித்தனர்.


நன்றி - தினகரன்

வாழக்கை ஆனந்தமயமானது




* வெளித்தோற்றத்தில் அப்பழுக்கில்லாமல் தூய்மையாகக் காட்சி தரும் வாழ்க்கையையே மக்கள் நாடுகிறார்கள். ஆனால், வாழ்க்கையின் தராதரம் என்பது ஒருவரின் மனத்தூய்மையால் தான் நிர்ணயிக்கப்படுகிறது.
* ஆன்மிகம் என்பது விழிப்புணர்வுடன் கூடிய அறிவாற்றலுடன் வாழ்வதே! உடலையோ, மனதையோ, ஆற்றல் மிக்க சக்திகளையோ அமைதியாக வைத்திருக்கத் தெரியாத வரை உலக அமைதி என்பது வெறும் கேலிப் பேச்சாகவே இருக்கும்.
* அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றால் நமக்கு நாமே ஆபத்தையும், அழிவையும் தேடிக் கொண்டு வாழ்கிறோம். உண்மையில், சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஆன்மிகத்தில் ஈடுபட்டால் மட்டுமே உலகமே உய்வடையும்.
* அடிப்படையில் வாழ்க்கை ஆனந்தமயமானது. நீங்கள் ஆனந்தத்துடன் தொடர்பு கொள்வீர்களானால் உங்களைச் சார்ந்த அனைத்துமே ஆனந்தமயமாகி விடும்.
* நாம் ஒவ்வொருவரும் தத்தமது சிறப்பு இயல்புகளை வெளிப்படுத்திக் கொள்ள முயல்வதே மனிதகுலத்தின் அடிப்படைத் தேவையாகும். ஒரு மரத்தைப் போல, சாதாரண இயல்புடன் இருந்தாலே போதும். வாழ்வின் உயர்ந்த பரிமாணம் நமக்குப் புலப்படத் தொடங்கும்.


-சத்குரு ஜக்கிவாசுதேவ்

பணத்தை தலையில் சுமக்காதீர்!




* உங்களைச் சுற்றியுள்ள உன்னதத்தை உணர நீங்கள் தவறி விட்டால், உங்கள் மூளை ஒரு நரகத்தை உருவாக்கக் கூடும். ஒவ்வொரு நாளும் அது புதிது புதிதாய் நரகங்களை உருவாக்கும்.
* சுவாசம் என்பது வெறும் காற்றை உள்வாங்கி வெளிவிடும் அர்த்தமற்ற செயல் அல்ல. ஒவ்வொரு சுவாசத்திலும் இருக்கிற படைப்பின் பரிமாணங்களையும் படைத்தவனையும் புரிந்து கொள்ளத் தவறி விட்டு, மனதில் தேவையற்ற விஷயங்களுக்கு முக்கியமான இடம் கொடுத்து நேரத்தை வீணடிக்கிறீர்கள்.
* உங்களால் முடியாத ஒன்றைச் செய்யவில்லை என்றால் ஒரு பிரச்னையும் இல்லை. உங்களால் முடியக்கூடிய ஒன்றைச் செய்யாமல் விடுவதுதான் துயரமான ஒன்று.
* அதிக செல்வம் துன்பத்தை தராது. சட்டைப்பையில் நிறைய பணம் இருப்பது ஒரு விதத்தில் நல்லது. ஆனால், அந்தப்பணம் உங்களுடைய சட்டைப்பையில் தங்காமல் தலைக்கு மேல் ஏறும் போதுதான் துன்பம் வரும். பணம் அப்படி தலைக்கு மேல் ஏறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், அதனுடைய இடம் அது அல்ல.


-சத்குரு ஜக்கிவாசுதேவ்

சூழ்நிலையில் சிக்கிக் கொள்ளாதீர்கள்




* உங்களின் வாழ்வின் அனுபவமே, நீங்கள் வாழ்க்கையில் ஆழமாக ஈடுபடுவதில் தான் இருக்கிறது. ஈடுபாட்டுடன் நீங்கள் செய்பவை எல்லாம் எப்போதும் ஆனந்தமாக உள்ளதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? ஆழமான ஈடுபாடு இருந்தாலொழிய வாழ்க்கையின் அழகை உங்களால் அறிந்து கொள்ள முடியாது.
* யார் வேண்டுமானாலும் கடவுளை நேசிக்கலாம். ஏனெனில் கடவுள் யாரிடமும் எதுவும் கேட்பதில்லை. ஆனால், இந்தக்கணம் உங்கள் அருகில் இருப்பவரை நீங்கள் நேசிப்பதற்கு நீங்கள் உங்கள் வாழ்க்கையையே விலையாகக் கொடுக்க வேண்டியிருக்கிறது. அதுதான் சவால். இதைச் செய்வதற்கு மிகவும் தைரியம் தேவைப்படுகிறது.
* மனிதராகப் பிறந்துவிட்டால் நீங்கள் எப்படிப்பட்ட சூழ்நிலைகளில் வாழ்கிறீர்களோ, அதிலேயே சிக்கிவிடக்கூடாது. உங்களுக்கான சூழ்நிலைகளை நீங்கள் தான் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். சூழ்நிலைகளின் தாக்கத்தில் வாழ்வது விலங்கின் தன்மை, மனிதரின் தன்மை, சூழ்நிலைகளை உருவாக்குவது!
* உங்கள் வாழ்க்கையில் அழகான சூழ்நிலைகள் வருகின்றன. கொடுமையான சூழ்நிலைகள் வருகின்றன. உங்களுக்கு ஒரே வாய்ப்பு தான். அந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி நீங்கள் மேலும் சிறந்தவராக, வலிமையானவராக மாறலாம் அல்லது உடைந்து நொறுங்கிப் போகலாம்!


சத்குரு ஜக்கிவாசுதேவ்

திருநீறு அணிவது ஏன்!




நாம் வெளியில் செல்லும் போது, அங்கு இருக்கும் அதிர்வுகளை பலவழிகளில்நம் உடல் ஏற்றுக் கொள்கிறது. இது நம் உடலின் ஏழு சக்கரங்கள் வழியாகநிகழ்கிறது. அதனால் தான், நல்ல அதிர்வுகளை நம் உடல் ஏற்றுக் கொள்ளும்விதமாக திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் நம் கலாசாரத்தில் இருந்துவருகிறது. பசுவின் சாணம் மற்றும் சில பிரத்யேகப் பொருட்கள் கலந்தகலவையின் சாம்பல் தான் விபூதி அல்லது திருநீறு. இதற்கு அதிர்வுகளைஉள்வாங்கும் திறன் உண்டு. விபூதி இட்டுக் கொள்ளும் போது, வாழ்வின் உயர்ந்தஅம்சங்களை ஈர்த்துக் கொள்ளலாம். நம்மைச் சுற்றிலும் தெய்வீகத் தன்மைஉண்டாகும். இதனால், தீயவற்றைத் தவிர்க்க முடியும்.
விபூதி இட்டுக் கொள்ளும் இடங்களும், பலன்களும்
1. புருவ மத்தியில்(ஆக்ஞா சக்கரம்) வாழ்வின் ஞானத்தை ஈர்த்துக் கொள்ளலாம்.
2.தொண்டைக்குழி(விசுத்தி சக்கரம்) நமது சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.
3.நெஞ்சுக்கூட்டின் மையப்பகுதி தெய்வீக அன்பைப் பெறலாம்.
மேலும், விபூதியை எடுக்கும் போது, மோதிரவிரலால் எடுப்பது மிகவும் சிறந்தது. ஏனென்றால், நம் உடலிலேயே மிகவும் பவித்ரமான பாகம் என்று அதைச்சொல்லலாம். நம் வாழ்வையே கட்டுப்படுத்தும் சூட்சுமம் அங்கு உள்ளது.

சத்குரு ஜக்கிவாசுதேவ்.

அதிகாரம் - விருந்தோம்பல்

குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - இல்லறவியல் அதிகாரம் -


குறள் 90:
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குநழ்யும் விருந்து.
கலைஞர் உரை:
அனிச்சம் எனப்படும் பூ, முகர்ந்தவுடன் வாடி விடக் கூடியது. அதுபோல் சற்று முகங்கோணி வரவேற்றாலே விருந்தினர் வாடிவிடுவர்.
மு.வ உரை:
அனிச்சப்பூ மோந்தவுடன் வாடிவிடும்: அதுபோல் முகம் மலராமல் வேறு பட்டு நோக்கியவுடன் விருந்தினர் வாடி நிற்பார்.
சாலமன் பாப்பையா உரை:
தொட்டு மோந்து பார்த்த அளவில் அனிச்சப்பூ வாடும்; நம் முகம் வேறுபட்டுப் பார்த்த அளவில் விருந்து வாடும்.

அதிகாரம் - விருந்தோம்பல்

குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - இல்லறவியல் அதிகாரம் -


குறள் 89:
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு.
கலைஞர் உரை:
விருந்தினரை வரவேற்றுப் போற்றத் தெரியாத அறிவற்றவர்கள் எவ்வளவு பணம் படைத்தவர்களாக இருந்தாலும் தரித்திரம் பிடித்தவர்களாகவே கருதப்படுவார்கள்.
மு.வ உரை:
செல்வநிலையில் உள்ள வறுமை என்பது விருந்தோம்புதலைப் போற்றாத அறியாமையாகும்: அஃது அறிவிலிகளிடம் உள்ளதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
செல்வம் இருந்தும் வறுமையாய் வாழ்வது விருந்தினரைப் பேணாமல் வாழும் மடமையே. இது மூடரிடம் மட்டுமே இருக்கும்.

அதிகாரம் - விருந்தோம்பல்

குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - இல்லறவியல் அதிகாரம் -


குறள் 88:
பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்.
கலைஞர் உரை:
செல்வத்தைச் சேர்த்துவைத்து அதனை இழக்கும்போது, விருந்தோம்பல் எனும் வேள்விக்கு அது பயன்படுத்தப்படாமற் போயிற்றே என வருந்துவார்கள்.
மு.வ உரை:
விருந்தினரை ஓம்பி அந்த வேள்வியில் ஈடுபடாதவர் பொருள்களை வருந்திக்காத்துப் (பின்பு இழந்து) பற்றுக்கொடு இழந்தோமே என்று இரங்குவர்.
சாலமன் பாப்பையா உரை:
விருந்தினரைப் பேணி, அந்த யாகத்தின் பயனைப் பெறும் பேறு அற்றவர். செல்வத்தைச் சிரமப்பட்டுக் காத்தும் அதனை இழக்கும் போது, இப்போது எந்தத் துணையும் இல்லாதவராய்ப் போனோமே என்று வருந்துவர்.

Monday, February 21, 2011

அமைதியே இறைத்தன்மை



* மனிதமனம் பெரும்பாலும் போராட்டத்திலேயே இருக்கிறது. பலரும் சின்னச் சின்ன விஷயங்களுக்காகக் கூட போராடிக் கொண்டிருக்கிறார்கள். மனதில் துயரம் இருக்கிற வரைக்கும் இந்த போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

* வாழ்க்கையை இயல்பாக அதன் எல்லாத் தன்மைகளையும் ஏற்றுக் கொண்டால் ஏற்றத்தாழ்வுகள் மறைந்து விடும். ஆனந்தம் மட்டுமே அப்போது நிலைத்திருக்கும். உள்ளத்தில் ஆனந்தம் நிலைத்திருக்குமானால் புறவுலக வாழ்வின் இன்பதுன்பங்கள் நம்மை சிறிதும் பாதிப்பதில்லை.
* நாம் சில விஷயங்களை வேண்டும், வேண்டாம் என்று சொல்லும் போதே நம் மனதில் சில எதிர்பார்ப்புகள் தொடங்கி விடுகின்றன. எதிர்பார்ப்பு உண்டாகும்போது வாழ்வில் விருப்பு, வெறுப்புகள் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.
* மனிதர்கள் அன்பாகவும், ஆனந்தமாகவும் இருப்பது என்பது என்றோ எப்போதோ நிகழும் அனுபவம் என்று எண்ணுகிறார்கள். அதற்கான வாய்ப்பு விநாடிக்கு விநாடி இருக்கிறது. அன்பும், ஆனந்தமும் நிலையான உணர்வாக நம்மிடத்தில் இருக்க வேண்டியவையாகும்.
* ஒரு மனிதர் தான் எண்ணுவது சரி என்று உணர்ந்து, மிக அமைதியாக இருப்பாரேயானால் அவர் இறைத்தன்மைக்கு மிக நெருக்கமானவர். அவர் வீண்விவாதங்கள், தேவையற்ற வாக்குவாதங்கள் போன்றவற்றில் சிறிதும் ஈடுபடமாட்டார்.


-சத்குரு ஜக்கி வாசுதேவ்

கீழ்த்தரமாக நடத்தினாலும் அமைதி காப்போம்




* மற்றவர்களிடம் கொள்ளும் அன்பாக இருக்கட்டும். உங்கள் தோட்டத்தில் மலரும் பூக்களாகட்டும். வாழ்வில் நீங்கள் அடையும் வெற்றிகளாகட்டும். தகுந்த சூழ்நிலையை உருவாக்கத் தவறிவிட்டால் அவை நிகழ்வதில்லை. ஒரு மலரை உருவாக்குவதை விட, அதற்கான தகுந்த சூழ்நிலையை உருவாக்கத் தவறிவிட்டால் அவை நிகழ்வதில்லை. ஒரு மலரை உருவாக்குவதைவிட, அதற்கான தகுந்த சூழ்நிலையை உருவாக்குவதற்கே நாம் முனையவேண்டும். எனவே, தோட்டத்து பூக்களானாலும், உங்களுக்குள் மலரும் மாற்றமானாலும், அதற்குத் தேவையான சூழ்நிலையை உருவாக்குவதே உங்கள் நோக்கமாக வேண்டும்.

* உங்களை கீழ்த்தரமாக நடத்தும் ஒருவரை அதேபோல் நடத்த எந்த விழிப்புணர்வும் தேவை இல்லை. ஆனால், அந்தச் சூழ்நிலையிலும், அமைதி காப்பதற்கு ஏராளமான விழிப்பு உணர்வு இருத்தல் அவசியம்.

* உயிர்ப்புடன் வாழ்தல் என்பது அற்பமான விஷயம் அல்ல. அசாதாரணமான ஒரு நிகழ்வு அது. உயிர்ப்புடன் இருத்தல் இந்தப் பூமியில் மட்டுமல்ல. பிரபஞ்சத்திலேயே அபூர்வமான ஒரு செயல்.

* எல்லாவற்றையும் படைத்தவன் உங்களளுக்குள் இருக்கிறான். படைப்பின் மூலம் உங்களுக்குள் தான் உயிர்ப்புடன் துடித்துக் கொண்டு இருக்கிறது. அதைக் கவனிக்காமல் வேறு எதைப்பற்றி சிந்தித்துக் கொண்டு இருக்கிறீர்கள்?

-சத்குரு ஜக்கிவாசுதேவ்

முடிந்ததைச் செய்யுங்கள்


* உங்களைச் சுற்றி உள்ள உன்னதத்தை உணர நீங்கள் தவறிவிட்டால், உங்கள் மூளை ஒரு நரகத்தை உருவாக்கக்கூடும். ஒவ்வொரு நாளும் அது புதிது புதிதாய் நரகங்களை உருவாக்கும்.

* உங்களால் இயலாத ஒன்றைச் செய்யவில்லை எனில் ஒரு பிரச்னையும் இல்லை. உங்களால் முடியக்கூடிய ஒன்றைச் செய்யாமல் விடுவது தான் துயரமான ஒன்று.

* மற்றவரிடம் கொள்ளும் அன்பாக இருக்கட்டும். உங்கள் தோட்டத்தில் மலரும் பூக்களாக இருக்கட்டும். வாழ்வில் நீங்கள் அடையும் வெற்றிகளாக இருக்கட்டும். தகுந்த சூழ்நிலையை உருவாக்கத் தவறி விட்டால் அவை நிகழ்வதில்லை.

* உங்களை கீழ்த்தரமாக நடத்தும் ஒருவரை அதேபோல், நடத்த எந்த விழிப்பு உணர்வும் தேவை இல்லை. ஆனால், அந்தச் சூழ்நிலையிலும் அமைதி காப்பதற்கு ஏராளமான விழிப்பு உணர்வுடன் இருத்தல் அவசியம்.

* உயிர்ப்புடன் வாழ்தல் என்பது அற்பமான விஷயம் அல்ல. அசாதாரணமான ஒரு நிகழ்வு அது. உயிர்ப்புடன் இருத்தல் இந்தப் பூமியில் மட்டுமல்ல. பிரபஞ்சத்திலேயே அபூர்வமான ஒரு செயல்.

* மனம் என்பது அதன் செயல்களில் மட்டுமே உயிர்த்திருக்கிறது. அதற்கென்று தனியாக வேறு இடம் இல்லை. செயல்கள் நின்று போனால் மனம் என்று ஏதும் இல்லாது போய்விடும்.

-சத்குரு ஜக்கிவாசுதேவ்

பழமொழிகள்-சூ & செ

சூ
  • சூடு கண்ட பூனை அடுப்பங் கரையிற் சேராது.
செ
  • செக்களவு பொன்னிருந்தாலும் செதுக்கியுண்டால் எத்தனை நாளுக்குக் காணும்.?
  • செடியிலே வணங்காததா மரத்திலே வணங்கும்?
  • செட்டி மிடுக்கோ சரக்கு மிடுக்கோ?
  • செட்டியார் வாழ்வு செத்தால் தெரியும்.
  • செத்தவன் உடைமை இருந்தவனுக்கு அடைக்கலம்.
  • செயவன திருந்தச் செய்.
  • செருப்பின் அருமை வெயிலில் தெரியும், நெருப்பின் அருமை குளிரில் தெரியும்.
  • செருப்புக்காகக் காலைத் தறிக்கிறதா?
  • செலவில்லாச் செலவு வந்தால் களவில்லாக் களவு வரும்.
  • சென்ற இடம் எல்லாம் சிறப்பே கல்வி.

அதிகாரம் - விருந்தோம்பல்

குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - இல்லறவியல் அதிகாரம் -


குறள் 87:
இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்.
கலைஞர் உரை:
விருந்தினராக வந்தவரின் சிறப்பை எண்ணிப் பார்த்து விருந்தோம்பலை ஒரு வேள்வியாகவே கருதலாம்.
மு.வ உரை:
விருந்தோம்புதலாகிய வேள்வியின் பயன் இவ்வளவு என்று அளவு படுத்தி கூறத்தக்கது அன்று, விருந்தினரின் தகுதிக்கு ஏற்ற அளவினதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
விருந்தினரைப் பேணுவதும் ஒரு யாகமே. அதைச் செய்வதால் வரும் நன்மை இவ்வளவு என்று அளவிட முடியாது; வரும் விருந்தினரின் தகுதி அளவுதான் நன்மையின் அளவாகும்.

அதிகாரம் - விருந்தோம்பல்

குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - இல்லறவியல் அதிகாரம் -


குறள் 86:
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்வருந்து வானத் தவர்க்கு.
கலைஞர் உரை:
வந்த விருந்தினரை உபசரித்து அவர்களை வழியனுப்பி வைக்கும்போதே, மேலும் வரக்கூடிய விருந்தினரை ஆவலுடன் எதிர்நோக்கி நிற்பவனை, புகழ்வானில் இருப்போர் நல்ல விருந்தினன் என்று வரவேற்றுப் போற்றுவர்.
மு.வ உரை:
வந்த விருந்தினரைப் போற்றி, இனிவரும் விருந்தினரை எதிர் பார்த்திருப்பவன், வானுலகத்தில் உள்ள தேவர்க்கும் நல்ல விருந்தினனாவான்.
சாலமன் பாப்பையா உரை:
வந்த விருந்தினரைப் பேணி, வரும் விருந்தை எதிர்பார்த்து இருப்பவன் மறுமையில் வானத்தவர்க்கு நல்ல விருந்தினன் ஆவான்.

அதிகாரம் - விருந்தோம்பல்

குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - இல்லறவியல் அதிகாரம் -


குறள் 85:
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்.
கலைஞர் உரை:
விருந்தினர்க்கு முதலில் உணவளித்து மிஞ்சியதை உண்டு வாழும் பண்பாளன், தன் நிலத்திற்குரிய விதையைக்கூட விருந்தோம்பலுக்குப் பயன்படுத்தாமல் இருப்பானா?.
மு.வ உரை:
விருந்தினரை முன்னே போற்றி உணவளித்து மிஞ்சிய உணவை உண்டு வாழ்கின்றவனுடைய நிலத்தில் விதையும் விதைக்க வேண்டுமோ?.
சாலமன் பாப்பையா உரை:
விருந்தினர் முதலில் உண்ண, மிஞ்சியவற்றையே உண்பவனின் நிலத்தில் விதைக்கவும் வேண்டுமா?.

அதிகாரம் - விருந்தோம்பல்

குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - இல்லறவியல் அதிகாரம் -


குறள் 84:
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.
கலைஞர் உரை:
மனமகிழ்ச்சியை முகமலர்ச்சியால் காட்டி விருந்தினரை வரவேற்பவர் வீட்டில் அமர்ந்து செல்வம் எனும் திருமகள் வாழ்வாள்.
மு.வ உரை:
நல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்றுகின்றவனுடைய வீட்டில் மனமகிழ்ந்து திருமகள் வாழ்வாள்.
சாலமன் பாப்பையா உரை:
இனிய முகத்தோடு தக்க விருந்தினரைப் பேணுபவரின் வீட்டில் திருமகள் மனம் மகிழ்ந்து குடி இருப்பாள்.

அதிகாரம் - விருந்தோம்பல்

குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - இல்லறவியல் அதிகாரம் -


குறள் 83:
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று.
கலைஞர் உரை:
விருந்தினரை நாள்தோறும் வரவேற்று மகிழ்பவரின் வாழ்க்கை, அதன் காரணமாகத் துன்பமுற்றுக் கெட்டொழிவதில்லை.
மு.வ உரை:
தன்னை நோக்கி வரும் விருந்தினரை நாள் தோறும் போற்றுகின்றவனுடைய வாழ்க்கை, துன்பத்தால் வருந்திக் கெட்டுப் போவதில்லை.
சாலமன் பாப்பையா உரை:
நாளும் வரும் விருந்தினரைப் பேணுபவனின் வாழ்க்கை வறுமைப்பட்டுக் கெட்டுப் போவது இல்லை.

Tuesday, February 15, 2011

அவன் இவன் தாமதம்! விஷால் ஒப்புதல்!!




ஒரே படத்துக்கு மூன்றாண்டுகள் கூட எடுத்துக் கொள்ளும் டைரக்டர் பாலா, தனது அவன் இவன் படத்தை ஓரே ஆண்டுக்குள் எடுத்து முடித்து விட்டார் என்று பெருமிதப்பட்டுக் கொண்டிருக்கும் அவன் இவன் குழுவில், ஒரு சிலர் விஷால் மனசு வைத்திருந்தால் இன்னும் சீக்கிரமே படத்தை முடித்திருக்கலாம் என்றும் சொல்கிறார்கள். தாமதத்திற்கு ஏன் விஷால் காரணமானார்? படத்தி்ல் விஷால் ஒன்றரை கண் உடையவராக நடித்துள்ளார். அவர் வரும் குள‌ோஸ்-அப் காட்சிகளை படமாக்கவே நீண்ட நாட்கள் எடுத்துக் கொண்டனவாம்.


இதுபற்றி விஷால் கூறுகையில், உண்மையிலேயே அவன் இவன் தாமதத்துக்கு காரணம் நான்தான். அவன் இவன் படத்தில் எனக்கு ஒன்றரை கண்! அப்படி நடிக்கறது எவ்வளவு கஷ்டம்னு நடிச்சு பார்த்தால்தான் தெரியும். இப்படி யாராவது வேறு லாங்குவேஜ் படங்களில் நடிச்சிருக்காங்களான்னு தேடினேன். உலக மொழிகள் எதிலேயும் யாருமே அப்படி நடிக்கல. அந்த விதத்தில் எனக்கு பெருமைதான். இந்த மாதிரி நடிக்கும் போது எட்டு ஷாட்டுக்கு மேல் நடிக்க முடியாது. கண்ணு மங்கலாகிடும். அதனால்தான் இந்த படமே லேட்டாச்சு, என்றார்.

நன்றி - தினகரன்

பழமொழிகள்-சா & சு

சி
  • சின்னப்புள்ள வெள்ளாமை வீடு வந்து சேராது.
சு
  • சுக துக்கம் சுழல் சக்கரம்.
  • சுடர் விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று வேண்டும்.
  • சுட்ட சட்டி அறியுமா சுவை.
  • சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் ஒட்டுமா?
  • சுண்டைக்காய் காற்பணம் சுமை கூலி முக்காற்பணம்.
  • சுத்தம் சோறு போடும் எச்சில் இரக்க வைக்கும்.
  • சுத்த வீரனுக்கு உயிர் துரும்பு.
  • சும்மா வந்த மாட்டை பல்லைப் பிடித்தப் பாராதே
  • சும்மா இருக்கிற தம்பிரானுக்கு இரண்டு பட்டை.
  • சும்மா கிடக்கிற சங்கை ஊதிக்கெடுத்தான் ஆண்டி.
  • சுயபுத்தி போனாலும் சொற்புத்தி வேண்டாமா?
  • சுவரை வைத்துதான் சித்திரம் வரையவேண்டும்.
  • சுவாமி வரங் கொடுத்தாலும் பூசாரி இடங்கொடுக்க மாட்டான்.

மயன் மன்னர் கல்லறை கண்டுபிடிப்பு

1600 ஆண்டுகளுக்கு முந்தைய மயன் மன்னர் கல்லறை கண்டுபிடிப்பு



Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update

கவுதமாலா: கவுதமாலா நாட்டில் சுமார் 1600 ஆண்டுகள் பழமையான மயன் மன்னரின் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மயன் நாகரிகம், மத்திய மற்றும் வடக்கு அமெரிக்க பகுதிகளில் பரவியிருந்தது. மயன் அரசர்கள், மக்களால் கடவுள்போல கருதப்பட்டனர். கிபி 250 முதல் 900 வரை இவர்களது காலம் ஆகும். பிரவுன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஸ்டீபன் ஹூஸ்டன் தலைமையிலான அகழ்வாராய்ச்சியாளர்கள், கவுதமாலா நாட்டில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டனர்.


அப்போது 1600 ஆண்டு பழமையான, மயன் மன்னரின் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து 6 குழந்தைகளின் எலும்புக்கூடுகளும், பீங்கான், துணிகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த பொருட்கள், மயன் மன்னர் பயன்படுத்தியதாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

குழந்தைகள், மயன் அரசன் இறந்தபோது அவனுக்காக பலி கொடுக்கப்பட்டவர்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இது, கிபி 350 - 400க்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த மயன் மன்னரின் கல்லறையாக இருக்கலாம் என தெரிகிறது. கல்லறையில் குடைந்தும், செதுக்கியும் உருவாக்கப்பட்ட சிற்பங்கள் ஏராளமாக உள்ளன. கல்லறையில் இருந்து எடுக்கப்பட்ட பொருட்கள் குறித்து ஆராய்ச்சி நடந்து வருகிறது. இதன் மூலம் மேலும் பல தகவல்கள் தெரியவரும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.


நன்றி - தினகரன்

நாள் ஆகஆக மனுஷன் முட்டாள் ஆகிறானா?



மேடிசன்: ‘‘எங்க அப்பாவைவிட நான் புத்திசாலி. என்னைவிட என் மகன் புத்திசாலியா இருக்கான். டிவி, செல்போன், வீடியோகேம்ஸ் எல்லாம் இப்பவே அத்துபடி’’ இப்படி பேசாதவர்கள் அரிது. ஆண்டுகள் போகப் போக மனிதனின் அறிவு, புத்திக்கூர்மை அதிகரிக்கிறது என்பது இவர்களது கொள்கை, நம்பிக்கை. இதை தகர்க்கிறது சமீபத்திய ஆராய்ச்சி.

மனிதனின் மூளை பற்றி அமெரிக்காவின் விஸ்கோன்சின் பல்கலைக்கழகத்தில் ஒரு ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அதில் தெரியவந்த தகவல்கள்: 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை, மனிதனின் மூளை படிப்படியாக வளர்ச்சி அடைந்து வந்திருக்கிறது. கடந்த 20 ஆயிரம் ஆண்டுகளாக மூளையின் சைஸ் படிப்படியாக குறைந்துவிட்டது. 1,500 கன செ.மீ. பரப்பு இருந்த மூளை தற்போது 1,350 கன செ.மீ.தான் இருக்கிறது.

ஏறக்குறைய கிரிக்கெட் பந்து சைஸ் அளவு காலியாகியிருக்கிறது என்கிறது அந்த ஆராய்ச்சி. அளவுதான் சுருங்கியதே தவிர, திறமையும் கற்பனைத் திறனும் புத்திக் கூர்மையும் அதிகரித்திருக்கிறது என்று ஒரு தரப்பு விஞ்ஞானிகள் சொல்கின்றனர். ‘‘சேச்சே.. நாளுக்கு நாள் மனுஷன் முட்டாளா ஆகிட்டு வர்றான்’’ என்றும் சிலர் சொல்கின்றனர்.


நன்றி - தினகரன்

கிடைத்ததில் சம பங்கு

(தெனாலி ராமன் கதைகள்)

ஒருநாள் கிருஷ்ணதேவர் அரண்மனையில் கிருஷ்ண லீலா நாடக நாட்டியம் நடைபெற ஏற்பாடு செய்திருந்தார். தெனாலிராமனைத் தவிர மற்ற எல்லா முக்கியப்பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிகழ்ச்சியில் அரசியும் மற்றும் சில பெண்களும் கலந்து கொள்வதால் தெனாலிராமன் இருந்தால் ஏதாவது கோமாளித்தனம் செய்து நிகழ்ச்சியை நடைபெறா வண்ணம் தடுத்துவிடுவான் என எண்ணி தெனாலிராமனை மட்டும் நாடக அரங்கினுள் விட வேண்டாமென்று வாயிற்காப்போனிடம் கண்டிப்புடன் சொல்லி விட்டார் மன்னர்.

இதை அறிந்தான் தெனாலிராமன் எப்படியாவது அரங்கத்தினுள் சென்று விடுவது என தீர்மானித்துக் கொண்டான்.

நாடகம் நடைபெறும், அரங்கின் வாயிலை நெருங்கினான் தெனாலிராமன். உள்ளே செல்ல முற்பட்டான்.

வாயில் காப்பானோ அவனை உள்ளே விட மறுத்து விட்டான். மீண்டும் மீண்டும் கெஞ்சினான். வாயிற்காப்போன்
மசியவில்லை.

இந்நிலையில் தெனாலிராமன் ஒரு தந்திரம் செய்தான். "ஐயா, வாயிற்காப்போரே என்னை உள்ளே விட்டால் என்னுடைய திறமையால் ஏராளமான பரிசு கிடைக்கும். அதில் பாதியை உனக்குத் தருகிறேன்" என்றான். இதைக் கேட்ட வாயிற் காப்போன் முதலில் சம்மதிக்காவிட்டாலும் பின்னர் கிடைப்பதில் பாதி பரிசு கிடைக்கிறதே என்று மகிழ்ந்து அவனை உள்ளே விட்டான்.

அரங்கத்தினுள் செல்ல வேண்டுமானால் மீண்டும் இன்னொரு வாயிற் காப்போனை சமாளிக்க வேண்டியிருந்தது. அவனும் தெனாலிராமனை உள்ளே விட மறுத்தான். முதற் வாயிற் காப்போனிடம் சொல்லியதையே இவனிடமும் சொன்னான். இவனும் பாதி பரிசு கிடைக்கிறதே என்று மகிழ்ந்து அவனை உள்ளே விட்டுவிட்டான்.

ஒருவருக்கும் தெரியாமல் தெனாலிராமன் ஓர் மூலையில் போய் உட்கார்ந்து கொண்டான்.

அப்போது கிருஷ்ணன் ஆக நடித்தவன் வெண்ணை திருடி கோபிதைகளிடம் அடி வாங்கும் காட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. உடனே மூலையில் இருந்த தெனாலிராமன் பெண் வேடம் அணிந்து மேடையில் தோன்றி கிருஷ்ணன் வேட்ம் போட்டு நடித்தவனை கழியால் நையப் புடைத்து விட்டான். கிருஷ்ண வேடதாரி வலி பொறுக்கமாட்டாமல் அலறினான்.

இதைப்பார்த்த மன்னர் கடுங்கோபமுற்று மேடையில் பெண் வேடமிட்டுள்ள தெனாலிராமனை அழைத்து வரச்செய்தார் பின் "ஏன் இவ்வாறு செய்தாய்" என வினவினார். அதற்குத் தெனாலிராமன் "கிருஷ்ணன் கோபிகைகளிடம் எத்தனையோ மத்தடி பட்டிருக்கிறான் இப்படியா இவன் போல் அவன் அலறினான்" இதைக் கேட்ட மன்னருக்கு அடங்காக் கோபம் ஏற்பட்டது. தெனாலிராமனுக்கு 30 கசையடி கொடுக்குமாறு தன் பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

இதைக் கேட்ட தெனாலிராமன் "அரசே இப்பரிசை எனக்கு கொடுக்க வேண்டாம். ஏனென்றால் எனக்குக் கிடைக்கும் பரிசை ஆளுக்குப் பாதி பாதி தருவதாக நம் இரண்டு பாயிற்காப்போன்களிடம் உறுதியளித்து விட்டேன்.

ஆகையால் இப்பரிசினை, அவர்கள் இருவருக்கும் சமமாகப் பங்கிட்டுக் கொடுங்கள் " என்று கேட்டுக் கொண்டான்.

உடனே மன்னர் அவ்விரு வாயிற்காப்போன்களையும் அழைத்து வரச்செய்து இது குறித்து விசாரித்தார்.

அவ்விருவரும் உண்மையை ஒத்துக் கொண்டார்கள்.

அவ்விருவருக்கும் தலா 15 கசையடி கொடுக்குமாறு மன்னர் பணித்தார். மேலும் தெனாலிராமனின் தந்திரத்தைப் பாராட்டி அவனுக்குப் பரிசு வழங்கனார்.

அதிகாரம் - விருந்தோம்பல்

குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - இல்லறவியல் அதிகாரம் -


குறள் 82:
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.
கலைஞர் உரை:
விருந்தினராக வந்தவரை வெளியே விட்டுவிட்டுச் சாகாத மருந்தாக இருந்தாலும் அதனைத் தான் மட்டும் உண்பது விரும்பத் தக்க பண்பாடல்ல.
மு.வ உரை:
விருந்தினராக வந்தவர் வீட்டின் புறத்தே இருக்கத் தான் மட்டும் உண்பது சாவாமருந்தாகிய அமிழ்தமே ஆனாலும் அது விரும்பத்தக்கது அன்று.
சாலமன் பாப்பையா உரை:
விருந்தினர் வீட்டிற்கு வெளியே இருக்கத் தான் மட்டும் தனித்து உண்பது, சாவைத் தடுக்கும் மருந்தே என்றாலும், விரும்பத் தக்கது அன்று.

Monday, February 14, 2011

சனியின் நிலாவில் ஐஸ்: நாசா கண்டுபிடிப்பு



நாசா: சனி கிரகத்தின் சந்திரனான டைட்டனில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் தெரிகின்றன. அங்கு தண்ணீர் ஐஸ்கட்டியாக இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். சூரிய குடும்பத்தில் வியாழனுக்கு அடுத்த பெரிய கோள் சனி. எடையில் பூமி போல 95 மடங்கும் அளவில் பூமி போல 760 மடங்கும் பெரியது. நமக்கு ஒண்ணே ஒண்ணு.. கண்ணே கண்ணு என ஒரே ஒரு சந்திரன்தான். மெகா சைஸ் சனி கிரகத்துக்கு 62 சந்திரன்கள்.

சனி கிரகத்தின் தன்மை பற்றியும் அதன் துணைக் கோள்கள் (சந்திரன்) பற்றியும் ஆராய்ச்சி செய்வதற்காக ‘காசினி ஹைகன்ஸ்’ விண்கலத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் (நாசா) கடந்த 1997ம் ஆண்டு விண்ணுக்கு அனுப்பியது. 7 ஆண்டு பயணத்துக்கு பிறகு சனி ஏரியாவை இது 2004ல் சென்றடைந்தது. பின்னர் அதில் இருந்து தனியே பிரிந்த ஹைகன்ஸ் விண்கலம், சனியின் மிகப்பெரிய நிலாவான டைட்டனில் 2005ல் தரையிறங்கியது. காசினியும் ஹைகன்சும் தங்கள் ஆராய்ச்சி வேலையை சிறப்பாக செய்து வருவதால் அவற்றின் ‘பதவிக்காலம்’ தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆராய்ச்சிக்கு ‘காசினி ஈக்வினாக்ஸ் மிஷன்’ என்று பெயர் மட்டும் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இரு விண்கலமும் 2017 வரை மக்கர் பண்ணாமல் இயங்கும் என்று அறிவித்திருக்கிறது நாசா. இந்நிலையில், டைட்டனை சுற்றி வெண் மேகக் கூட்டங்கள் இருப்பது காசினி விண்கலத்தின் அகச்சிவப்பு ஸ்பெக்ரோமீட்டர் மூலம் தற்போது தெரியவந்துள்ளது. இதுபற்றி நாசா விஞ்ஞானி ராபர்ட் சாமுவேல்சன் கூறியதாவது: டைட்டனின் வளிமண்டலத்தில் மீத்தேன், ஈத்தேன் வாயுக்கள் அதிகம் இருக்கின்றன. அவைதான் வெண் மேகங்களை உருவாக்குவதாக ஏற்கனவே தெரியவந்தது.

இவை அச்சு அசலாக பூமிக்கு மேல் நீராவியால் உருவாகும் மேகங்கள் போலவே இருக்கின்றன. அந்த மேகம் ஆவியானதும் அதில் இருந்து ஹைட்ரோகார்பன்களும் இதர ஆர்கானிக் தனிமங்களும் தூசி போல தொடர்ச்சியாக டைட்டனில் படிகின்றன என்றும் தெரிகிறது. இவ்வாறு வளிமண்டலத்தில் இருக்கும் மேகம் மற்றும் திவலைகளின் அளவு பற்றி தெரிந்தால் அவை எதனால் ஆக்கப்பட்டது? டைட்டனில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறு இருக்கிறதா என்று கண்டுபிடித்துவிடலாம். ஒருவேளை, தண்ணீர் இருக்கும் பட்சத்தில், டைட்டனில் அது ஐஸ் பாறையாகத்தான் இருக்கும். இவ்வாறு ராபர்ட் கூறியுள்ளார்.

வந்துவிட்டது இந்திய டேப்ளட் பிசி




லேப்டாப் கம்ப்யூட்டர் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் பெங்களூருவில் இயங்கும் மைக்ரோ ஸ்டார் இண்டர் நேஷனல் (MSIMicro Star International) நிறுவனம், தன் முதல் டேப்ளட் பிசியை அண்மையில் விற்பனைக்கு அறிமுகப் படுத்தியுள்ளது. MSI WindPad 100W Tablet PC என அழைக்கப்படும் இந்த பட்டய கம்ப்யூட்டர் இன்டெல் மொபைல் ப்ராசசரில் இயங்குகிறது. 10.1 அங்குல மல்ட்டி பாய்ண்ட் டச் ஸ்கிரீன், இரண்டு வீடியோ கேமராக்கள், ஜி-சென்ஸார், ஏ.எல்.எஸ். லைட் சென்சார் என நவீன தொழில் நுட்பங்களைக் கொண்டதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆறு மணி நேரத்திற்கும் அதிகமாக திறன் தரும் பேட்டரி இதில் தரப்பட்டுள்ளது. விண்டோஸ் இன்டெல் வடிவமைப்பில் இந்த அளவிற்கு பேட்டரி திறன் கொண்டது இதுவே முதல் மொபைல் கம்ப்யூட்டராகும்.

இந்த பட்டய கம்ப்யூட்டரின் பரிமாணம் 274x173x18.5 மிமீ. எடை பேட்டரியுடன் 800 கிராம். ஒரு எஸ்.டி. கார்ட் ரீடர், யு.எஸ்.பி. 2 ஸ்லாட், மினி எச்.டி.எம்.ஐ. போர்ட் ஆகியன இருப்பதால், வழக்கமான கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து மல்ட்டி மீடியா வசதிகளையும் இதில் பெறலாம். எடை 800 கிராம் இருப்பதால், தங்களுடைய டேட்டா மையத்தைத் தங்களுடனேயே தூக்கிச் செல்ல விரும்பும் இளைஞர் களுக்கு உகந்ததாக இது உள்ளது.

இரண்டு கேமராக்கள் இருப்பதனால், இயக்குபவர் தன் சோஷியல் நெட்வொர்க் தளங்கள் மூலம், நண்பர்களுடன் தொடர்ந்து நேரடியாகத் தொடர்பில் இருக்கலாம். இன்னொரு கேமரா கான்பரன்ஸ் வசதிக்கான படங்கள் மற்றும் வீடியோக்களைத் தயார் செய்திடலாம்.

அறிமுகமாக, தற்போது இந்த பட்டய கம்ப்யூட்டர் மும்பையில் உள்ள 12 இ-ஸோன் விற்பனை மையங்களில் மட்டும் கிடைக்கிறது. விரைவில் இந்திய நகரங்கள் அனைத்திலும் விற்பனை செய்யப்படும் என இந்நிறுவன பொது மேலாளர் எரிக் குயோ தெரிவித்துள்ளார்.
இதன் சிறப்பம்சங்களை இங்கு காணலாம்.

1.WindTouch UI: இந்த கம்ப்யூட்டரில், வழக்கமான இன்டர்பேஸ் இல்லாமல், எம்.எஸ்.ஐ. நிறுவனம் தயாரித்த WindTouch என்னும் இடைமுகம் தரப்பட்டுள்ளது. இதில் கம்ப்யூட்டரில் வேலை, பொழுது போக்கு, கருவிகள் மற்றும் நெட்வொர்க் என்று நான்கு பிரிவுகள் தரப்பட்டுள்ளன.

2.EasyFace: முகம் அறிந்து இயக்கம். இந்த Face Recognition Software எம்.எஸ்.ஐ. நிறுவனத்தின் தயாரிப்பு. பட்டய பிசியில் தரப்பட்டுள்ள 1.3 எம்பி வெப்கேம் சாதனத்துடன் இணைந்து செயல்படுகிறது. இத்துடன் பயோமெட்ரிக் தொழில் நுட்பம், லாக் இன் பாஸ்வேர்ட் பாதுகாப்பு ஆகியவையும் உண்டு.

3. Taskbar magnifier: டாஸ்க் பாரினைச் சற்றுப் பெரிதாக்கிக் காட்டுவதன் மூலம், விரல்களால் தொட்டு இயக்கும் வசதி எளிதாகக் கிடைக்கிறது.

4. Photo Management Software: விரல்களினால் தொட்டு, புகைப்படங் களைப் பெரிதாக்கவும், சுழற்றவும் முடிகிறது. இதன் மூலம் எளிதாக நம் புகைப் படங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடிகிறது.

5. பதிந்தே கிடைப்பது: பல புரோகிராம்கள் இதில் பதியப்பட்டு கிடைக்கின்றன. Microsoft Office Starter 2010 தொகுப்பு கிடைக்கிறது. இதில் டேப்ளட் பிசிக்களுக்கான வேர்ட் மற்றும் எக்ஸெல் 2010 உள்ளன.எனவே அலுவலக வேலைகளை எங்கும் எந்த நேரத்திலும் மேற்கொள்ளலாம். இத்துடன், அடோப் ரீடர், அடோப் பிளாஷ் பிளேயர் தரப்படுகிறது. இதனால் மல்ட்டிமீடியா அனுபவம் எளிதாகிறது.

6. ஹார்ட்வேர் சிறப்புகள்: இதில் மிகக்குறைந்த மின் சக்தியில் இயங்கும் இன்டெல் மொபைல் ப்ராசசர் (Intel Atom Z530 processor) இயங்குகிறது. ஆப்பரேட்டிங் சிஸ்டம் Windows 7 Home Premium. 2 ஜிபி டி.டி.ஆர்.2 மெமரி கிடைக்கிறது. 32 ஜிபி சாலிட் ஸ்டேட் ட்ரைவ் , இரண்டு யு.எஸ்.பி. போர்ட் உள்ளன. இவற்றுடன் இரண்டு கேமராக்கள் இதன் பயன்பாட்டினை இன்னும் சிறப்பாக மாற்றுகின்றன.

இதன் விலை ரூ.22,000 என்ற அளவில் இருக்கலாம். தொடக்கத்தில் ரூ.34,000
இந்த டேப்ளட் பிசியைத் தயாரித்த, எம்.எஸ்.ஐ. என அழைக்கப்படும் மைக்ரோ ஸ்டார் இண்டர்நேஷனல் நிறுவனம், கம்ப்யூட்டருக்கான மெயின் போர்ட், கிராபிக் கார்ட்ஸ் மற்றும் நோட்புக் கம்ப்யூட்டர் தயாரிப்பில் முன்னணியில் இயங்கும் நிறுவனமாகும். கிராபிக் கார்ட் தயாரிப்பில் உலக அளவில் பெயர் பெற்றது.மெயின் போர்டு தயாரிப்பில் முதல் மூன்று நிறுவனங்களில் இடம் பெற்றுள்ளது. என்ற அளவில் திட்டமிடப்பட்டது.


நன்றி - தினமலர்

பழமொழிகள்-சா

சா
  • சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால்.
  • சாகிறவரைக்குவஞ் சங்கடமானால் வாழுகிறது எக்காலம்?
  • சாகிறவரையில் வைத்தியன் விடான், செத்தாலும் விடான் பஞ்சாங்கக்காரன்.
  • சாட்சிக்காரன் காலில் விழுவதிலும் சண்டைக்காரன் காலில் விழலாம்.
  • சாட்டை இல்லாப் பம்பரம் ஆட்டிவைக்க வல்லவன்.
  • சாண் ஏற முழம் சறுக்கிறது.
  • சாது மிரண்டால் காடு கொள்ளாது.
  • சாத்திரம் பாராத வீடு சமுத்திரம், பார்த்த வீடு தரித்தரம்.
  • சாத்திரம் பொய் என்றால் கிரகணத்தைப் பார்.
  • சாப்பிள்ளை பெற்றாலும் மருத்துவச்சிக் கூலி தப்பாது.

அதிகாரம் - விருந்தோம்பல்

குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - இல்லறவியல் அதிகாரம் -


குறள் 81:
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.
கலைஞர் உரை:
இல்லறத்தைப் போற்றி வாழ்வது, விருந்தினரை வரவேற்று, அவர்க்கு வேண்டிய உதவிகளைச் செய்வதற்காகவே.
மு.வ உரை:
வீட்டில் இருந்து பொருள்களைக் காத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவி செய்யும் பொருட்டே ஆகும்.
சாலமன் பாப்பையா உரை:
வீட்டில் இருந்து, பொருள்களைச் சேர்த்தும் காத்தும் வாழ்வது எல்லாம், வந்த விருந்தினரைப் பேணி அவர்களுக்கு உதவுவதற்கே ஆம்.

Friday, February 11, 2011

டில்லி அரசரை வென்ற கதை

(தெனாலி ராமன் கதைகள்)

ஒருமுறை டில்லி அரசர் பாபர் தெனாலிராமனின் திறமையைக் கேட்டு அவனை நேரில் காண விரும்பினார். அவனது திறமையைச் சோதிக்க விரும்பினார். .எனவே தெனாலிராமனை டில்லிக்கு அனுப்புமாறு விஜய நகரத்திற்கு ஓலை அனுப்பினார்.

கிருஷ்ணதேவ ராயரும் தெனாலிராமனை அழைத்து " இதோ பார் ராமா! இங்கே எப்படியோ உன் திறமையைக் காட்டி எங்களைச் சிரிக்க வைக்கிறாய். ஆனால் அதுபோல் பாபரிடம் நடக்காது. உன் திறமை அவரிடமும் பரிசு பெறுவதில்தான் உள்ளது. அவரிடம் நீ பரிசு பெற்று வந்துவிட்டால் நானும் உனக்குப் பரிசு தருவேன் உன்னைத் திறமைசாலி என்றும் ஒப்புக்கொள்கிறேன். இல்லையேல் உனக்குத் தண்டனை தப்பாது. தெரிகிறதா!" என்று எச்சரித்து அனுப்பினார்.

டில்லி வந்து சேர்ந்த தெனாலிராமன் பாபரின் அரண்மனைக்குச் சென்றான். சபையில் தான் செய்யும் அகடவிகடத்திற்கு யாரும் சிரிக்காதது கண்டு திகைத்தான். எவரும் சிரிக்கக் கூடாது என பாபர் முன்னரே கட்டளை இட்டிருப்பார் என யூகித்தான். இந்தச் சூதினை எப்படியும் முறியடிப்பது என முடிவு செய்து கொண்டான். மறுநாள் முதல் ராமன் அரண்மனைக்குச் செல்வதை நிறுத்திக் கொண்டான். பாபர் ராமன் சொல்லாமலேயே நின்று விட்டானே சரியான தோல்விதான் அவனுக்கு என மகிழ்ந்தார்.

ஒருநாள் பாபர் தன் மந்திரியுடன் உலாவச் சென்றார். வழக்கம்போல அரண்மனைச் சேவகன் ஒருவன் சில பொன்முடிப்புகளைச் சுமந்து வந்தான். மன்னர் குதிரையை மெதுவாக நடத்திச் சென்று கொண்டிருந்தார். பாதை ஓரத்தில் முஸ்லிம் கிழவர் ஒருவர் தள்ளாடியபடியே ஏதோ செடிகளை நட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தார். அவரருகே சென்று தன் குதிரையை நிறுத்தினார்." பெரியவரே! இந்தத் தள்ளாத வயதில் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?"

" நல்ல மாங்கன்றுகளை நட்டுக் கொண்டிருக்கிறேன்." இதை அவர் மிகவும் சிரமப் பட்டுக் கூறினார்.

" ஏன் ஐயா! இந்தத் தள்ளாத வயதில் உமக்கு ஏன் இந்தத் தொல்லை! அத்துடன் இது காய்த்துப் பின் பழுத்து அந்தப் பழத்தை நீர் உண்ணப் போகிறீரா? " என்று சிரித்தார்.

" அரசே! நாம் உண்ணும் மாங்கனிகள் நம் முன்னோர் நட்டதுதானே! அவர்கள் மரங்களை நட்டதால் தானே நாம் இன்று மாங்கனிகளை உண்ணுகிறோம்! அவர்கள் நடாமல் இருந்திருந்தால் நமக்கு ஏது மாம்பழங்கள்?

எனவே வரும் தலைமுறையினர் உண்ணவே இம்மரங்களை நான் நடுகிறேன்"

"ஆஹா! சரியான பதில். நல்லவிளக்கம். மிக்க மகிழ்ச்சி." உடனே மந்திரியார் ஒரு பொன் முடிப்பைப் பரிசாக அளித்தார். அதைப் பெற்றுக் கொண்ட கிழவர் சிரித்தார். " அரசே! அல்லா பெரியவர். எல்லோருக்கும் மரம்

பழுத்தபிறகே பலன் தரும். ஆனால் பாபரின் ஆட்சியில் மரம் நட்டவுடனே பலன் கொடுத்து விட்டதே!"

பாபர் மனம் பெரிதும் மகிழ்ந்தது. "ஆகா! சரியாகச் சொன்னீர்கள் பெரியவரே!" என்றபடியே மந்திரியைப் பார்க்க அவர் இன்னொரு பொன்முடிப்பை அளித்தார். அதையும் பெற்றுக்கொண்ட பெரியவர், "அரசே! இந்த மாங்கனிகள் பழுத்துப் பின் பலனளிப்பது ஆண்டுக்கு ஒருமுறைதான். ஆனால் தங்களின் மேலான குணத்தினால் நட்டவுடனே இருமுறை எனக்குப் பலனளித்து விட்டது. என்னே அல்லாவின் கருணை?"

என்றார். "நன்றாகச் சொன்னீர்கள் பெரியவரே! " என்று கூறியவர் மீண்டும் ஒரு பொன் முடிப்பையும் அளித்தார். பின் மந்திரியைப் பார்த்து "மந்திரியாரே! சீக்கிரம் இங்கிருந்து சென்று விட வேண்டும். இல்லையேல் சாதுர்யமாகப்பேசி நம் பொக்கிஷத்தையே காலிசெய்து விடுவார் இந்தப் பெரியவர்." என்று வேடிக்கையாகச் சொல்லிவிட்டுப் புறப்பட்டார் பாபர்.

" சற்று நிற்க முடியுமா அரசே?" என்று சொன்ன பெரியவர் தன் தாடி மீசையைக் களைந்து விட்டுத தெனாலி ராமனாக நின்றார். பாபர் திகைத்தார். சற்று நேரத்திற்குள் மூன்று பரிசுகளைப் பெற்றவன் தெனாலி ராமனா?

தெனாலி ராமன் பணிவுடன் கூறினான். "அரசே, மன்னிக்கவேண்டும். எங்கள் மன்னர் கிருஷ்ண தேவ ராயர் தங்களிடம் நான் பரிசு பெற்று வரவேண்டும் எனக் கட்டளையிட்டு அனுப்பினார். இன்று அவரது கட்டளைப் படியே தங்களிடம் பரிசுகளைப் பெற்று விட்டேன். இனி ஊர் திரும்பத் தாங்கள் அனுமதி அளிக்க வேண்டும்."

"தெனாலி ராமா! உண்மையிலேயே நீ திறமைசாலிதான். உங்கள் மன்னருக்கு என் வாழ்த்துக்களையும் தெரிவி. நாளைக்கு அரச மரியாதையையும் பெற்றுக் கொண்டு விஜயநகரம் செல்லலாம்." என்றார் அரசர். பின் மகிழ்ச்சியுடன் அரண்மனைக்குத் திரும்பினார்..

வெற்ற்யுடன் ஊருக்கு வந்து சேர்ந்த தெனாலி ராமனைப் பார்த்த கிருஷ்ணதேவ ராயர் நடந்தவைகளைக் கேட்டறிந்தார். தான் சொன்னபடியே தெனாலி ராமனுக்குப் பல பரிசுகளையும் கொடுத்தார். தன் நாட்டின் கௌரவத்தைக் காப்பாற்றிய ராமனை மன்னரும் மக்களும் போற்றிப் புகழ்ந்தனர்.