Sunday, July 31, 2011

படையப்பா பார்ட்-2

தாம் தூம் சாம் ஆண்டர்சன்
டி.எல்.சஞ்சீவிகுமார்
படங்கள் : எம்.விஜயகுமார்

ஆனந்த விகடன்

சாம் ஆண்டர்சனைத் தெரியுமா? 'யாருக்கு யாரோ?’ படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகத்துக்கே 'சாவு பயம்’ காட்டியவர்!

'இன்னிக்கு 'ஜீ தமிழ்’ல சாம் படம் போடுறாங்க மச்சான்... டோன்ட் மிஸ் இட்’ என்று எஸ்.எம்.எஸ். மழை கொட்டும் அளவுக்கு நடிப்பால், நடனத்தால் ரசிகர்களை ரவுண்டு கட்டி சாத்தியவர். யூ-டியூப்பில் சாம் க்ளிப்பிங்ஸ் ஒவ்வொன்றும் ஒரு லட்சம் ஹிட் அடித்திருக்கிறது என்றால், எல்லாப் பெருமையும் சாம் ஆண்டர்சனுக்கே. ஈரோட்டில் கூரியர் கம்பெனி நடத்தி வரும் சாம் ஆண்டர்சனை நீண்ட சேஸிங்குக்குப் பின் பிடித்தோம்

''எப்படி இப்படி ஒரு துணிச்சல் வந்துச்சு?''

'' 'களவும் கற்று மற’னு சொல்லி இருக்காங்க. 'சாக்லேட்’தான் நான் முதன்முறையாப் பார்த்த படம். அப்பவே சினிமா தான் வாழ்க்கைனு முடிவு பண்ணிட்டேன். தினம் சாக்லேட் படம் பார்த்தேன். கண்ணாடி முன்னாடி நடிச்சேன். கதை எழுதினேன். பாட்டு போட்டு ஆடினேன். இப்படி சினிமாவுக்காக 24 மணி நேரமும் என்னையே நான் அர்ப்பணிச்சேன். இப்போ இருக்குற தமிழ் சினிமா நல்லாதான் இருக்கு. (சாரே சொல்லிட்டாரு... அப்புறம் என்னப்பா!) ஆனா, இன்னும் கொஞ்சம் டெவலப்மென்ட் வேணும். அதை உடனே மாத்த முடியாது இல்லையா? அதனால, பல வருஷமாக் காத்திருந்து சினிமாவுக்குள் குதிச்சேன்!''

''குதிச்சதுல உங்களுக்கு அடிகிடி எதுவும் படலையா? அதாவது, படம் எடுத்த வகையில நஷ்டம் எதுவும் ஏற்படலையா?''

''முன்னாடி பெரிய தயாரிப்பாளர்கள் படம் எடுத்தாலே, படத்தை வெளியிட முடியாது. சன் டி.வி, கலைஞர் டி.வி, இராமநாராயணன்னு ஆயிரத்தெட்டு பாலிடிக்ஸ். ஆனா, இது எல்லாத்தையும் தாண்டி தமிழ்நாடு முழுக்க நாலு தியேட்டர்ல படத்தை ரிலீஸ் பண்ணினேன். படம் நல்ல படம்தான். ஆனா, ஓடுறதுக்கு விளம்பரம் வேணுமே... படத்தை ஓட்டுறதுக்கு படாதபாடு பட்டேன். அப்படியும் இழுத்துப் பிடிச்சு 25 நாளு ஓட்டிட்டேன். நீங்க சொன்ன மாதிரி குதிச்சுதுல கொஞ்சம் அடி பட்டுருச்சுதான்!''

''உங்க எதிர்காலத்தைப் பார்த்தீங்களே... எங்க எதிர்காலத்தை யோசிச்சீங்களா?''

(யோசிக்கிறார்... மனதுக்குள் கேள்வி - பதிலை ரீ-வைண்ட் பண்ணிப் பார்த்தார்போல) ''சார், என்னை வெச்சு காமெடி இன்டர்வியூ எடுக்குறீங்களா?''

''சேச்சே... என்ன சார் இப்படிக் கேட்டுட்டீங்க?''

''அதானே பார்த்தேன். நான் ரொம்ப சீரியஸான ஆளு. அதான் படத்தில் காமெடி ஸீனில் நடிக்கலை. (இது புதுசா இருக்கே!) பணம் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லைனு வெண்ணிற ஆடை மூர்த்தி, பாண்டுன்னு ஃபேமஸ் ஆர்ட்டிஸ்ட்டுகளை காமெடிக்காக நடிக்கவெச்சேன். என்ன பிரச்னைனு தெரியலை. நாலஞ்சு பேர்தான் பாராட்டினாங்க. நிறையப் பேர் திட்ட ஆரம்பிச்சாங்க. டக்குனு என் செல் நம்பரை மாத்திட்டேன். நான் யோசிச்சு ரெடி பண்ணின அருமையான ஸ்டோரி சார் அது... கதை சொல்லவா?''

''சொல்லுங்க... அதையும்தான் கேட்போம்...''

''நான் மெக்கானிக் கோர்ஸ் படிச்சவன். அதனால, படத்துல நான் கார் மெக்கானிக்கா வருவேன். 'நானோ’ காருக்குப் போட்டியா 70 ஆயிரத்துல புதுசா கார் உருவாக்குவேன். என் திறமையைப் பார்த்துட்டு, ரெண்டு பொண்ணுங்க என்னைக் காதலிப்பாங்க. நான் யாருக்கு வாழ்க்கை கொடுக்குறேங்கிறது க்ளைமாக்ஸ்!''

''பிரமாதமா இருக்கே... அப்புறம் ஏன் படம் ஓடலை?''

''கேட்கும்போது அழகா இருக்குல்ல... எடுக்கும்போது சொதப்பிட்டேன் சார். மூணே மாசத்துல அவசர அவசரமா ஷூட்டிங் முடிச்சேன். முதல் படம்கிறதால, பயமா இருந்தது. அதுவும் டபுள் ஹீரோயின் சப்ஜெக்ட். அந்த ரெண்டு ஹீரோயினும் டார்ச்சர் சார். படத்தோட ஹீரோ நானே தள்ளுவண்டிக் கடையில சாப்பிட்டேன். அதுங்க ரெண்டும் ஸ்டார் ஹோட்டல் சாப்பாடு வேணும்னு படுத்தி எடுத்துட்டுதுங்க. க்ளைமாக்ஸ்ல ரெண்டு பேரையும் கொலை பண்ற மாதிரி ஸீன் வைக்கலாமானுகூட யோசிச்சேன். ஒரு பியூட்டிஃபுல் லவ் ஸ்டோரியை பெர்சனல் கோபத்துக்காகக்கெடுத்துடக் கூடாதுல்ல. அதான் சாஃப்ட்டா முடிச்சுட்டேன்!''

''படம் ரிலீஸ் ஆனதும் கோடம்பாக்கத்துல இருந்து அழைப்பு வந்ததா?''

''அது என்ன எழவுன்னு தெரியலை. யாருமே கண்டுக்கலை. எங்கே வாய்ப்பு கிடைத்தாலும், யார் வாய்ப்பு கொடுத் தாலும், சும்மா பூந்து விளையாட ரெடியா இருக்கேன் சார்!''

''இப்போ என்ன பண்ணிட்டு இருக்கீங்க?''

''சதர்ன் கூரியர்ஸ்னு லோக்கல் கூரியர் கம்பெனி நடத்திட்டு இருக்கேன். என்கிட்ட அஞ்சு பேர் வேலை பார்க்குறாங்க. சினிமாவுக்கு வந்ததால கூரியர் கம்பெனி நஷ்டம் ஆகிருச்சு. ஆனாலும், அந்த அஞ்சு பேருக்காக கம்பெனியை விடாம நடத்திட்டு இருக்கேன். நான் சினிமாவில் ஜெயிச்சதும் அந்த அஞ்சு பேருக்கும் கூரியர் துறை யிலேயே வாழ்க்கை அமைச்சுக் கொடுப்பேன்!''

''சினிமா எடுத்ததுக்கு உங்க குடும்பத்துல யாரும் எதிர்ப்பு தெரிவிக்கலையா?''

''ஒரு வகையில நானும் இளைய தளபதி விஜய்யும் ஒண்ணு சார். ஒரு தடவை முடிவு பண்ணிட்டா, என் பேச்சை நானே கேட்க மாட்டேன். நான் மனுஷங்களை எப்பவும் நம்புறதே இல்லை. எல்லா மனுஷங்களும் ஃப்ராடு சார். நான் இயேசுநாதரை மட்டும்தான் நம்புவேன். அவர்கிட்ட தினமும் பேசிட்டே இருக்குறேன். அவர் ஓ.கே. சொன்ன பின்னாடிதான் படம் எடுத்தேன். ஒரு விஷயம் தெரியுமா? அவர் அடுத்த படத்துக்கு அனுமதி கொடுத்துட்டார்!''

''இயேசப்பா! என்னது... அடுத்த படமா?''

''அதுக்கான கதையைத்தான் ராத்திரியும் பகலுமா எழுதிட்டு இருக்குறேன். இந்த முறை கே.எஸ்.ரவிக்குமார் ஸ்டைல்ல படம் எடுக்கப் போறேன். ஹீரோ நான்தான். படம் 'படையப்பா பார்ட் -2’ மாதிரி இருக்கும். எனக்குக் கதை ரொம்பப் பிடிச்சிருக்கு சார்!''

''சாருக்குக் கல்யாணம் ஆகிருச்சா?''

(முகம் சுருங்குகிறது) ''சார், நான் யூத்து... என்ன சார் இப்படிக் கேட்டுட்டீங்க? என்னைப் பார்த்தா அங்கிள் மாதிரியா தெரியுது? என்னை மாதிரியே ஹாலிவுட்ல ஒரு இயக்குநர் கம் நடிகர் இருக்கார்னு கேள்விப்பட்டு இருக்கேன். அவர் பேர் தெரியலை. அவர் மாதிரி சாதிச்ச பின்னாடிதான் கல்யாணம் பண்ணிப்பேன். இது சத்தியம் சார்!''

Friday, July 29, 2011

மலர்ந்தும் மலராத பாதி மலர்...


படம்: பாசமலர்
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர்கள்: TM சௌந்தர்ராஜன், P சுசீலா
வரிகள்: கண்ணதாசன்

மலர்ந்தும் மலராத பாதி மலர்
போல வளரும் விழி வண்ணமே
வண்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விளைந்த கலையன்னமே
நதியில் விளையாடி கொடியின் தலை சீவி நடந்த
இளம்தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர்
கண்டு பொலிந்த தமிழ் மன்றமே

மலர்ந்தும் மலராத பாதி மலர்
போல வளரும் விழி வண்ணமே
வண்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விளைந்த கலையன்னமே
நதியில் விளையாடி கொடியின் தலை சீவி நடந்த
இளம்தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர்
கண்டு பொலிந்த தமிழ் மன்றமே

யானைப் படை கொண்டு சேனை பல வென்று
ஆளப் பிறந்தாயடா
புவி ஆளப் பிறந்தாயடா
அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு
வாழப் பிறந்தாயடா
அத்தை மகளை மணம் கொண்டு... இளமை வழி கண்டு...
வாழப் பிறந்தாயடா

தங்கக் கடிகாரம் வைர மணியாரம்
தந்து மணம் பேசுவார்
பொருள் தந்து மணம் பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார்..உலகை விலை பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார்

நதியில் விளையாடி கொடியின் தலை சீவி
நடந்த இளம்தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு
பொலிந்த தமிழ் மன்றமே

சிறகில் எனை மூடி அருமை மகள் போல
வளர்த்த கதை சொல்லவா
கனவில் நினையாத காலம் இடை வந்து பிரித்த
கதை சொல்லவா..
பிரித்த கதை சொல்லவா

கண்ணில் மணி போல மணியின் நிழல் போல
கலந்து பிறந்தோமடா
இந்த மண்ணும் கடல் வானும் மறைந்து
முடிந்தாலும் மறக்க முடியாதடா
உறவைப் பிரிக்க முடியாதடா
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

அன்பே ஆரிராரோ ஆரிராரோ
ஆரிராராரிரோ
அன்பே ஆரிராரிரோ..அன்பே ஆரிராரிரோ

நெஞ்சம் மறப்பதில்லை...


திரைப் படம்: நெஞ்சம் மறப்பதில்லை
பாடியவர்கள்: பீ. சுசீலா - பி.பி.ஸ்ரீனிவாஸ்
இசை: எம். எஸ்.வீ.- டி.கே.ஆர்
வரிகள்: கண்ணதாசன்

பெண்:ஆஆ..............

நெஞ்சம் மறப்பதில்லை
அது நினைவை இழக்கவில்லை
நான் காத்திருந்தேன்உன்னை பார்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை
என் கண்களூம் மூடவில்லை

நெஞ்சம் மறப்பதில்லை
அது நினைவை இழக்கவில்லை
நான் காத்திருந்தேன்உன்னை பார்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை
என் கண்களூம் மூடவில்லை


பெண்: நெஞ்சம் மறப்பதில்லை
அது நினைவை இழக்கவில்லை
நான் காத்திருந்தேன்
உன்னை பார்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை
என் கண்களூம் மூடவில்லை

நெஞ்சம் மறப்பதில்லை
அது நினைவை இழக்கவில்லை
நான் காத்திருந்தேன்உன்னை பார்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை
என் கண்களூம் மூடவில்லை


பெண்: ஒரு மட மாது உருகுகின்றாளே
உனக்கா புரியவில்லை
இது சோதனையா நெஞ்சின் வேதனையா
உன் துணையேன் கிடைக்கவில்லை
உன் துணையேன் கிடைக்கவில்லை

நெஞ்சம் மறப்பதில்லை
அது நினைவை இழக்கவில்லை
நான் காத்திருந்தேன்உன்னை பார்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை
என் கண்களூம் மூடவில்லை


ஆண்: ஒரு பொழுதேனும் உன்னுடனே நான்
உயிரால் இணைந்திருப்பேன்
அதை இறப்பினிலும்
மறு பிறப்பினிலும் நான்
என்றும் நினைத்திருப்பேன்
நான் என்றும் நினைத்திருப்பேன்

நெஞ்சம் மறப்பதில்லை
அது நினைவை இழக்கவில்லை
நான் காத்திருந்தேன்உன்னை பார்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை
என் கண்களூம் மூடவில்லை

ஓராயிரம் பார்வையிலே...


படம்: வல்லவனுக்கு வல்லவன்
இசை: வேதா
பாடல்: கவியரசு கண்ணதாசன்
பாடியவர்: டி.எம்.செளந்தரராஜன்



நூறுமுறை பிறந்தாலும்
நூறுமுறை இறந்தாலும்
உனைப் பிரிந்து வெகுதூரம் - நான்
ஒருநாளும் போவதில்லை
உலகத்தின் கண்களிலே
உருவங்கள் மறைந்தாலும்
ஒன்றான உள்ளங்கள்
ஒருநாளும் மறைவதில்லை!

ஓராயிரம் பார்வையிலே
உன் பார்வையை நான் அறிவேன்
உன் காலடி ஓசையிலே
உன் காதலை நான் அறிவேன்

ஓராயிரம் பார்வையிலே
உன் பார்வையை நான் அறிவேன்
உன் காலடி ஓசையிலே
உன் காதலை நான் அறிவேன்


இந்த மானிடக் காதலெல்லாம்
ஒரு மரணத்தில் மாறி விடும்
அந்த மலர்களின் வாசமெல்லாம்
ஒரு மாலைக்குள் வாடி விடும்
நம் காதலின் தீபம் மட்டும்
எந்த நாளிலும் கூட வரும்

ஓராயிரம் பார்வையிலே
உன் பார்வையை நான் அறிவேன்
உன் காலடி ஓசையிலே
உன் காதலை நான் அறிவேன்


இந்த காற்றினில் நான் கலந்தேன்
உன் கண்களை தழுவுகின்றேன்
இந்த ஆற்றினில் ஓடுகின்றேன்
உன் ஆடையில் ஆடுகின்றேன்
நான் போகின்ற பாதையெல்லாம்
உன் பூமுகம் காணுகின்றேன்

ஓராயிரம் பார்வையிலே
உன் பார்வையை நான் அறிவேன்
உன் காலடி ஓசையிலே
உன் காதலை நான் அறிவேன்

மாசிலா உண்மைக் காதலே!



திரைப்படம் : அலிபாபாவும் 40 திருடர்களும்
பாடியவர் : A.m.ராஜா & p.பானுமதி
இயற்றியவர் : மருதகாசி
திரையிசை : S.தக்ஷிணாமூர்த்தி

மாசிலா உண்மைக் காதலே!

ஆண்: மாசிலா உண்மைக் காதலே
மாறுமோ செல்வம் வந்த போதிலே
பெண்: பேசும் வார்த்தை உண்மைதானா
பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா?
ஆண்: கண்ணிலே மின்னும் காதலே
கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே நெஞ்சிலே நீங்கிடாத பொங்கும் இன்பமே

பெண்: நிலைக்குமா இந்த எண்ணம் எந்த நாளுமே?
பேசும் வார்த்தை உண்மை தானா
பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா? (மாசிலா)

ஆண்: உந்தன் ரூபமே உள்ளம் தன்னில் வாழுதே
பெண்: இனிய சொல்லினால் எனது உள்ளம் மகிழுதே
இருவரும் :அன்பினாலே ஒன்று சேர்ந்தோம் இங்கு நாம்
இன்ப வாழ்வின் எல்லை காணுவோம்

இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா...


படம்: இருவர் உள்ளம்.
இசை : K.v.மகாதேவன்.
இயற்றியவர்: கவியரசு கண்ணதாசன்.
பாடியவர்: பி.சுசீலா.

இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா
இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா
உதடு சிரிக்கும் நேரம் உள்ளம் சிரிக்குமா
உருவம் போடும் வேஷம் உண்மை ஆகுமா
விளக்கை குடத்தில் வைத்தால் வெளிச்சம் தோன்றுமா
வீட்டு குயிலை கூண்டில் வைத்தால் பாட்டு பாடுமா பாட்டு
பாடுமா

இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா
இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா
உதடு சிரிக்கும் நேரம் உள்ளம் சிரிக்குமா
உருவம் போடும் வேஷம் உண்மை ஆகுமா


மனதை வைத்த இறைவன் அதில் நினைவை வைத்தானே
சில மனிதர்களை அறிந்து கொள்ளும் அறிவை வைத்தானே
அறிவை வைத்த இறைவன் மேனி அழகை வைத்தானே
அழகு கண்ட மனிதன் பெண்ணை அடிமை செய்தானே அடிமை
செய்தானே

உருகிவிட்ட மெழுகினிலே ஒளி ஏது
உடைந்து விட்ட சிலையினிலே அழகேது
பழுது பட்ட கோவிலிலே தெய்வம் ஏது
பனி படர்ந்த பாதையிலே பயணம் ஏது
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா

காதோடுதான் நான் பாடுவேன்...


படம் : வெள்ளி விழா
இசை : குமார்.V
பாடல் : வாலி
பாடியவர் : L.R. ஈஸ்வரி

காதோடுதான் நான் பாடுவேன்
மனதோடுதான் நான் பேசுவேன்
விழியோடுதான் விளையாடுவேன் - உன்
மடிமீதுதான் கள் மூடுவேன்

காதோடுதான் நான் பாடுவேன்
மனதோடுதான் நான் பேசுவேன்
விழியோடுதான் விளையாடுவேன் - உன்
மடிமீதுதான் கள் மூடுவேன்


வளர்ந்தாலும் நானின்னும் சிறுபிள்ளைதான் - நான்
அறிந்தாலும் அது கூட நீ சொல்லித்தான்
உனக்கேற்ற துனையாக எனை மாற்ற வா - குல
விளக்காக நான் வாழ வழி காட்ட வா

காதோடுதான் நான் பாடுவேன்
மனதோடுதான் நான் பேசுவேன்
விழியோடுதான் விளையாடுவேன் - உன்
மடிமீதுதான் கள் மூடுவேன்


பாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கின்றது
நான் படும் பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றது
எனக்காக இரு நெஞ்சம் துடிக்கின்றது - இதில்
யார் கேட்டு என் பாட்டை முடிக்கின்றது

காதோடுதான் நான் பாடுவேன்
மனதோடுதான் நான் பேசுவேன்
விழியோடுதான் விளையாடுவேன் - உன்
மடிமீதுதான் கள் மூடுவேன்

அமுதை பொழியும் நிலவே...


பாடல்: அமுதைப் பொழியும் நிலவே
திரைப்படம்: தங்கமலை ரகசியம்
பாடியவர்: பி. சுசீலா
இயற்றியவர்: கவிஞர் கல்யாணசுந்தரம்
இசை: டி.ஜி. லிங்கப்பா

அமுதை பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ
அருகில் வராததேனோ?
அருகில் வராததேனோ?

அமுதை பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ
அருகில் வராததேனோ?

அமுதை பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ
அருகில் வராததேனோ?

இதயம் மேவிய காதலினாலே
ஏங்கிடும் அல்லியை பாராய்
ஆஆ.....
இதயம் மேவிய காதலினாலே
ஏங்கிடும் அல்லியை பாராய்

புது மலர் வீணே வாடிவிடாமல்
புது மலர் வீணே வாடிவிடாமல்
புன்னகை வீசி ஆறுதல் கூற
அருகில் வராததேனோ?
அருகில் வராததேனோ?

அமுதை பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ
அருகில் வராததேனோ?

மனதில் ஆசையை ஊட்டிய பெண்ணே
மறந்தே ஓடிடலாமா?
ஆஆ.......
மனதில் ஆசையை ஊட்டிய பெண்ணே
மறந்தே ஓடிடலாமா?

இனிமை நினைவும் இளமை வளமும்
இனிமை நினைவும் இளமை வளமும்
கனவாய் கதையாய் முடியும் முன்னே
அருகில் வராததேனோ
அருகில் வராததேனோ

அமுதை பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ
அருகில் வராதாதேனோ?

அமுதை பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ
அருகில் வராதாதேனோ?

அமுதை பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ
அருகில் வராதாதேனோ?

தூக்கமுன் கண்களைத் தழுவட்டுமே...


பாடியவர்: எஸ். ஜானகி
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
திரைப்படம்: ஆலயமணி

தூக்கமுன் கண்களைத் தழுவட்டுமே
தூக்கமுன் கண்களைத் தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
தூக்கமுன் கண்களைத் தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே - அந்த
தூக்கமும் அமைதியும் நானானால் - உன்னை
தொடர்ந்திருப்பேன் என்றும் துணையிருப்பேன்
தூக்கமுன் கண்களைத் தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே

காலையில் நான் ஓர் கனவு கண்டேன் - அதை
கண்களில் இங்கே எடுத்து வந்தேன்
எடுத்ததில் ஏதும் குறைந்து விடாமல்
கொடுத்து விட்டேன் உன்தன் கண்களிலே
கண்களிலே கண்களிலே
தூக்கமுன் கண்களைத் தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே

மனமென்னும் மாளிகை திறந்திருக்க
மையிட்ட கண்கள் சிவந்திருக்க
இரு கரம் நீட்டி திரு முகம் காட்டி
தவழ்ந்து வந்தேன் நான் உன்னிடமே
தவழ்ந்து வந்தேன் நான் உன்னிடமே
தூக்கமுன் கண்களைத் தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே - அந்த
தூக்கமும் அமைதியும் நானானால் - உன்னை
தொடர்ந்திருப்பேன் என்றும் துணையிருப்பேன்
ஆஹஹஹாஹஹா ஆஹஹஹா
அஹஹஹஹாஹா ஹாஹஹஹா

பொன்னை விரும்பும் பூமியிலே..

திரைப்படம் : ஆலயமணி
பாடியவர் : T.m.செளந்தரராஜன்
இயற்றியவர் : கண்ணதாசன்
திரையிசை : விஸ்வநாதன் & ராமமூர்த்தி

பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே

பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே

ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே
ஆலயமணியின் இன்னிசை நீயே(2)
தாய்மை எனக்கே தந்தவள் நீயே
தங்க கோபுரம் போல வந்தாயே
புதிய உலகம் புதிய பாசம்
புதிய தீபம் கொண்டு வந்தாயே

பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே


பறந்து செல்லும் பறவையைக் கேட்டேன்
பாடிச் செல்லும் காற்றையும் கேட்டேன்(2)
அலையும் நெஞ்சை அவரிடம் சொன்னேன்
அழைத்து வந்தார் என்னிடம் உன்னை
இந்த மனமும் இந்த குணமும்
என்றும் வேண்டும் என்னுயிரே

பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே


ஆலமரத்தின் விழுதினைப் போலே
அணைத்து நிற்கும் உறவு தந்தாயே(2)
வாழைக் கன்று அன்னையின் நிழலில்
வாழ்வது போலே வாழவைத்தாயே
உருவம் இரண்டு உயிர்கள் இரண்டு
உள்ளம் ஒன்றே என்னுயிரே

பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே

தமிழுக்கும் அமுதென்று பேர்


பாடல்: தமிழுக்கும் அமுதென்று பேர்
திரைப்படம்: பஞ்சவர்ணக் கிளி
பாடியவர்: பி.சுசிலா
இசை: எம்.எஸ். விஸ்வநாதன் – டி.கே. ராமமுர்த்தி
வரிகள்: பாரதிதாசன்


தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்!

தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்
தமிழுக்கு மணமென்று பேர்!

இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்
தமிழுக்கு மதுவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!

தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்

தமிழ் எங்கள் இளமைக்குப் பால்
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

தமிழ் எங்கள் இளமைக்குப் பால் – இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்

தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! – இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்
சுடர்தந்த தேன்

தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்

தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! – இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்
வயிரத் தின் வாள்

தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ

தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ

தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்.

வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை..


திரைப்படம்: பலே பாண்டியா
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி


ஆ...ஆ...ஆஹஹா ஓஹொஹோ... ஆ...ஆ...ஆஹஹா

ஓஹொஹோ...

வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்
ஆழககடலும் சோலையாகும் ஆசையிருந்தால் நீந்தி வா
வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்
ஆழககடலும் சோலையாக ஆசையிருந்தால் நீந்தி வா

பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும் பார்த்து நடந்தால் பயணம்
தொடரும்
பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும் கதவு திறந்தால் காட்சி
கிடைக்கும்
காட்சி கிடைத்தால் கவலை தீரும் கவலை தீர்ந்தால் வாழலாம்.....

வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்
ஆழககடலும் சோலையாகும் ஆசையிருந்தால் நீந்தி வா

கண்ணில் தெரியும் வண்ணப் பறவை கையில் கிடைத்தால்
வாழலாம்
கருத்தில் வளரும் காதல் எண்ணம் கனிந்து வந்தால் வாழலாம்
கன்னி இளமை என்னை அணைத்தால் த்ன்னை மறந்தே
வாழலாம்..........

வாழச் சொன்னால் வாழ்கிறேன் மனமா இல்லை வாழ்வினில்
ஆழக்கடலில் தோணியாக அழைத்துச் சென்றால் வாழ்கிறேன்

ஏரிக்கரையில் மரங்கள் சாட்சி ஏங்கித் தவிக்கும் இதயம் சாட்சி
துள்ளித் திரியும் மீன்கள் சாட்சி துடித்து நிற்கும் இளமை சாட்சி
இருவர் வாழும் காலம் முழுதும் ஒருவராக வாழலாம்

வாழ நினைத்தோம் வாழுவோம் வழியா இல்லை பூமியில்
காதல் கடலில் தோணி போலே காலம் முழுதும் நீந்துவோம்
வாழ நினைத்தோம் வாழுவோம் வழியா இல்லை பூமியில்
காதல் கடலில் தோணி போலே காலம் முழுதும் நீந்துவோம்

மந்திரத்தால் ஏற்பட்ட பேரிழப்பு!



பிரம்மதத்தன் காசியை ஆண்டகாலத்தில், ஒரு கிராமத்தில் பிராமணர் ஒருவர் இருந்தார். அவர் வேதபம் என்றொரு மந்திரத்தைக் கற்றிருந்தார். எல்லாக் கிரகங்களும் ஒன்றுகூடும் நாளில் அந்த மந்திரத்தை உச்சரித்தால் ஆகாயத்திலிருந்து தங்கம், வெள்ளி, முத்து, பவளம், ரத்தினம், மாணிக்கம் போன்ற விலை உயர்ந்த பொருள்கள் மழைபோலக் கொட்டும்.
அந்த அதிசய மந்திரத்தைக் கற்ற பிராமணர் தன் சக்தியால் கர்வம் கொண்டிருந்தார். கிரகங்கள் எல்லாம் ஒன்று கூடும் நாளன்று மந்திரத்தை உச்சரித்து நவரத்தின மழை பெய்யச் செய்து, அவற்றைச் சேகரித்து வைத்துக் கொண்டு விட்டால் உலகில் தன்னை யாராலும் எதுவும் செய்துவிட முடியாது என எண்ணி, தலைகால் புரியாமல் துள்ளிக் கொண்டிருந்தார்.
இந்த மந்திர சக்திவாய்ந்த பிராமணரிடம் போதிசத்வர் சீடராக இருந்து வந்தார். குருவிற்கும் அந்த சீடனை மிகவும் பிடித்துப் போயிற்று. ஒருநாள் அவர் தம் சீடனோடு ஒரு காட்டுப் பகுதிக்குச் சென்றார்.
அந்தக் காட்டில் ஐந்நூறு திருடர்கள் இருந்தனர். அவர்கள் குருவான பிராமணரையும் சீடரான போதிசத்வரையும் வழி மறித்தனர். அந்தத் திருடர்கள் வழிப்போக்கர்களிடம் பணம் இருந்தால் பறித்துக் கொண்டு விட்டு விடுவார்கள். அப்படி இல்லாவிட்டால் ஒருவனை ஊருக்கு அனுப்பி பணம் கொண்டு வரச்சொல்வார்கள். அவர்கள் பணம் கொண்டு வந்தபின் தான் மற்றவர்களை விடுவிப்பார்கள். அந்த குருவிடமும் சீடனிடமும் பணம் இல்லாததால் அவர்கள் குருவை நிறுத்தி வைத்துக் கொண்டு சீடனான போதிசத்வரைப் பணம் கொண்டு வரச் சொன்னார்கள்.

போதிசத்வர் போகும்முன் தம் குருவிடம் "குருவே! இன்றிரவு பன்னிரெண்டு மணிக்கு எல்லா கிரகங்களும் கூடும் வேளை வருகிறது. நீங்கள் உங்கள் வேதப மந்திரத்தை உச்சரிக்காதீர்கள். அதனால் உங்களுக்கும் கெடுதல். இந்தத் திருடர்களுக்கும் கெடுதல்" எனக்கூறி எச்சரித்துவிட்டுப் போனார். இரவானது.
திருடர்கள் அந்தப் பிராமணனைக் கட்டிப் போட்டார்கள். அன்று பௌர்ணமி. நிலா பால் போலக் காய்ந்து கொண்டிருந்தது. பிராமணர் ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தார். எல்லா கிரகங்களும் ஒன்று சேரும் வேளை வரலாயிற்று.
அப்போது அவர் மனத்தில் வேதப மந்திரத்தைச் சொல்லி விலை மதிப்பற்ற பொருள்களை வரவழைத்து திருடர்களுக்கு அவர் கேட்ட தொகையைக் கொடுத்துவிட்டுத் தாம் விடுதலை பெறலாம் என நினைத்தார். ஆகையால் அவர் அங்கே கூடி இருந்தத் திருடர்களிடம், "என்னைப் பணத்திற்காகத் தானே கட்டி வைத்திருக்கிறீர்கள்? நான் ஒரு நோடியில் தங்கம் வெள்ளி போன்ற விலை உயர்ந்த பொருள்களை மழை போலப் பொழியச் செய்கிறேன். நீங்கள் உங்களுக்கு எவ்வளவு வேண்டுமோ அதை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அப்படிச் செய்ய நான் குளித்து விட்டு ஒரு மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். எனவே என் கட்டை அவிழ்த்துவிட்டால் உங்களுக்கு நீங்கள் எதிர்பார்ப்பதைவிட அதிகப் பணமே கிடைக்கும்" என்றார்.
அதைக் கேட்ட திருடர்கள் சிரித்தார்கள். பிறகு அவர்கள் "இப்படி எல்லாம் சொல்லி எங்களிடமிருந்து தப்பி ஓடிவிடலாம் என்று நினைக்கிறாயா? அதெல்லாம் முடியாது" என்றனர். பிராமணரோ "நான் தப்பிப்போக முயலமாட்டேன்.


நான் இப்போது உங்களிடம் சொன்னது உண்மை. நான் கற்ற மந்திரத்தைப் பயன்படுத்தியாக வேண்டும். அதனால் உங்களுக்குத்தான் அதிக நன்மை. நீங்கள் என் சீடனைக் கொண்டு வரச் சொன்ன பணத்தைவிடப் பன்மடங்கு உங்களுக்குக் கிடைக்கும்" என்றார்.
அவர்களும் அந்த அதிசயத்தைப் பார்க்கலாம் என நினைத்து பிராமணரின் கட்டுகளை அவிழ்த்தார்கள். அவரும் குளித்துவிட்டு ஓரிடத்தில் அமர்ந்து வேதப மந்திரத்தை உச்சரித்தார். ஆகாயத்திலிருந்து பொன்னும் வெள்ளியும் ரத்தினங்களுமாக மழைபோலப் பெய்து குவிந்தன. திருடர்கள் எல்லாவற்றையும் எடுத்து மூட்டைகளாக கட்டி எடுத்துக் கொண்டு கிளம்பினார்கள். அவர்களுக்குச் சற்றுப் பின்னாலேயே பிராமணரும் நடந்தார்.
சிறிது தூரம் போனதும் மற்றொரு திருடர் கூட்டம் அத்திருடர்களை மடக்கி நிறுத்தியது. அப்போது அத்திருடர்கள் புதிய திருடர் கூட்டத்திடம் "பணம் வேண்டுமானால் இதோ எங்கள் பின்னால் வரும் பிராமணனைப் பிடித்துக் கொள்ளுங்கள். அவன் தெரிந்து வைத்துள்ள மந்திரத்தை உச்சரித்தால் தங்கம், வைரம், ரத்தினம் என்று ஆகாயத்திலிருந்து கொட்டுகிறது. இதெல்லாம் அவன் எங்களுக்கு அவ்வாறு வரவழைத்துக் கொடுத்ததுதான்" எனக் கூறித் தாம் எடுத்துச் செல்லும் விலையுயர்ந்த பொருள்களை அவர்களிடம் காட்டிவிட்டுப் போனார்கள்.
உடனே அந்தத் திருடர் கூட்டம் பிராமணனைப் பிடித்துக் கொண்டு "எங்களுக்கும் அத்திருடர்களுக்குக் கொடுத்ததுபோல வரவழைத்துக் கொடு" என்றார்கள்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பிராமணர் "அந்தப் பணத்தை நான் மந்திர சக்தியால் வரவழைத்துக் கொடுத்தது உண்மையே. ஆனால் எல்லாக்கிரகங்களும் ஒன்று கூடும் வேளையில் அந்த மந்திரத்தை உச்சரித்தால்தான் அவ்வாறு கிடைக்கும். அந்த மாதிரி எல்லா கிரகங்களும் வருடத்திற்கு ஒருமுறை தான் கூடும்" என்றார். அத்திருடர்கள் அவ்வாறு அந்த பிராமணர் கூறியதை நம்பவில்லை.


தங்களுக்குப் பணம் வரவழைத்துக் கொடுக்காமல் அவர் ஏமாற்ற முயல்கிறார் என எண்ணிவிட்டார்கள். அதனால் அவர்கள் "அதெல்லாம் தெரியாது. எங்களுக்கு இப்போதே அவர்களுக்குக் கிடைத்தது போல நவரத்தினங்கள் கிடைத்தாக வேண்டும் என்றார்கள்.
ஆனால் பிராமணரோ "இன்று முடியாதே. இன்று கிரகங்கள் கூடியபோது மந்திரத்தை உச்சரித்து விலையுயர்ந்த பொருள்களை மழை போலப் பெய்யச் செய்யச் செய்து அவர்களுக்கு நவரத்தினங்கள் கிடைக்கச் செய்துவிட்டேன். இனி அடுத்த வருடம் கிரகங்கள் ஒன்று கூடும் நாளன்று தான் இவ்வாறு செய்ய முடியும்" என்றார்.
திருடர்கள் அவர் சொல்வதை நம்பவில்லை. அவர்கள் அந்தப் பிராமணரை இரு துண்டுகளாக வெட்டி ஒரு மரத்தில் தொங்கப் போட்டனர். பிறகு தம்மிடமிருந்து தப்பிச் சென்ற திருடர்களைப் பிடித்துத் தாக்கினார்கள். அவர்களை எல்லாம் கொன்று அவர்கள் தூக்கிவந்த பணத்தையும் வைர ரத்தினங்களையும் எடுத்துக் கொண்டனர்.
பணம் நிறைய வந்தாலே பல சிக்கல்களும் அபாயங்களும் கூடவே வரத்தானே செய்யும். திருடர்கள் ஏராளமான பணம் பெற்றதும் அவர்களிடையேயும் ஆசையும் சுயநலமும் அதிகரித்துவிட்டது. அதனால் அந்தக் கூட்டத்திலும் இரு பிரிவுகள் ஏற்பட்டு தமக்குள் சண்டை போட்டுக் கொண்டனர். சண்டை மிகவும் முற்றிப்போய் அவர்கள் ஒருவரையொருவர் வெட்டி வீழ்த்தவே முடிவில் இருவரே மிஞ்சினார்கள். அவர்கள் அந்தப் பணத்தையும் இரத்தினங்களையும் காட்டில் ஓரிடத்தில் புதைத்து வைத்தனர். ஒருவன் அதற்குக் காவலாக நிற்க மற்றவன் ஊருக்குள் போய் சாப்பிட ஏதாவது வாங்கி வருவதாகக் கூறிச் சென்றான்.
நகருக்குச் சென்றவன் கிடைத்த பொருளைத் தான் ஒருவனே அடைய வேண்டும் என நினைத்து, மற்றவனுக்குத் தான் வாங்கி வந்த உணவில் விஷத்தைக் கலந்து கொண்டு வந்தான்.

இதுபோல பணத்தைக் காவல் காத்தவன் தானே எல்லாவற்றையும் அடைய எண்ணி, மற்றவன் வந்ததும் அவன் மீது திடீரெனப் பாய்ந்து தன் கத்தியால் குத்திக் கொன்றான். அதன்பிறகு அவன் கொண்டு வந்த உணவைச் சாப்பிட்டான். சாப்பிட்டவுடன் விஷம் தலைக்கு ஏறி அவன் மறு நிமிடமே இறந்து விழுந்தான்.
இப்படியாக இரு திருடர் கூட்டத்தில் உள்ள அனைவரும், பிராமணரும் இறந்து போயினர். இரண்டு நாட்களுக்குப் பிறகு போதிசத்வர் திருடர்கள் கேட்ட பணத்தை எடுத்துக் கொண்டு தம் குருவை விடுவித்து அழைத்துப் போக வந்தார்.
அங்கு ஒரு மரத்தில் தம் குருவின் உடல் வெட்டப்பட்டு தொங்கிக் கொண்டிருப்பதை அவர் கண்டு "குருவே! நான் சொன்னதை கேட்காமல் மந்திரத்தை உச்சரித்து இப்படி உயிர் இழந்தீர்களே" எனக்கூறிக் கண்ணீர் வடித்தார். பின்னர் தனது குருவின் உடலை முறைப்படி எரித்து ஈமச்சடங்குகளைச் செய்தார். அதன்பிறகு காட்டு மலர்களைச் சேகரித்து அவரது உடலை எரித்த இடத்தில் தூவினார்.
அப்போது அவர் �நான் கூறியபடி மட்டும் என் குரு நடந்து மந்திரத்தை உச்சரிக்காமல் இருந்திருந்தால் இவ்வளவு உயிர்சேதம் ஏற்பட்டுஇருக்காது. நான் சொன்னதை ஏற்காததால் அவரும் தம் உயிரை இழக்க வேண்டியதாயிற்று. முன்பின் யோசியாமலும் பிறர் சொல்லும் அறிவுரைகளை ஏற்காமலும் நடப்பவர்கள் தமக்கும் கெடுதலை விளைவித்துக் கொண்டு பிறருக்கும் தீங்கை விளைவிப்பார்கள். என் குருவின் மந்திரத்தால் யாருக்கும் எவ்வித பயனும் ஏற்படவில்லை. இது மற்றவர்களுக்கு ஒரு படிப்பினை� என எண்ணி அதனையே மற்றவர்களுக்கும் எடுத்துக்கூறி அறிவுரைகளை உபதேசித்து வரலானார்.




போலி சன்னியாசியின் திட்டம்!


வெகு காலத்திற்கு முன் பாஞ்சால நாட்டை ரேணுகன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவன் சாது சன்னியாசிகளை மிகவும் மதித்து கௌரவிப்பான். ஒரு முறை இமயமலையிலிருந்து மகாரட்சிதர் என்ற முனிவர் தம் பல சீடர்களுடன் பாஞ்சால நாட்டிற்கு வந்தார். அவரை ரேணுகன் வரவேற்று உபசரித்து எல்லாரும் தங்க வசதிகளைச் செய்து கொடுத்தான்.

மழை ஆரம்பமாகி விட்டது மகாரட்சிதரும் தன் சாதுர்மாச விரதத்தை அங்கேயே மேற்கொண்டு நான்கு மாதங்கள் சீடர்களுடன் தங்கி விட்டார். பாஞ்சால மன்னனும் அவர்கள் எல்லாருக்கும் எவ்விதக் குறையும் இல்லாது பார்த்துக் கொண்டான். மழைக்காலம் முடிந்து சாதுர்மாச விரதமும் முடியவே, மகாரட்சிதர் ரேணுகனிடம் விடைபெற்றுக் கொண்டு தம் சீடர்களுடன் இமயமலைக்கு கிளம்பினார். அன்று மதியம் மகாரட்சிதரும் அவரது சீடர்களும் வழியில் ஓரிடத்தில் தங்கி இளைப்பாறினார்கள்.

அப்போது யாவரும் பாஞ்சால மன்னனின் நல்ல குணத்தைப் பாராட்டிப் பேசினர். சீடர்களில் சோதிடம் தெரிந்த ஒருவன் “பாஞ்சால மன்னனுக்கு இப்போது குழந்தையே பிறக்கவில்லை. ஆயினும் அடுத்த ஆண்டிற்குள் ஒரு ஆண் குழந்தை பிறக்கப் போகிறது அது தெய்வாம்சத்தோடு கூடி எல்லாராலும் மதிக்கப்பட்டு வரும்” என்றான்.

இதைக் கேட்ட யாவரும் மகிழ்ந்தனர். அந்தச் சீடர்களில் ஒரு போலி சன்னியாசி இருந்தான். அவன் மனதில் பாஞ்சால மன்னனிடம் இந்த நற்செய்தியைக் கூறி நிறையப் பரிசு பெற வேண்டுமென்ற ஆசை பிறந்தது. எனவே அவன் ஏதோ சாக்குச் சொல்லி அந்தக் கூட்டத்தோடு போகாமல் பின் தங்கினான். பிறகு பாஞ்சால மன்னனின் தலைநகருக்குப் போய் மன்னனைக் கண்டு “அரசே உமக்கு அடுத்த ஆண்டிற்குள் அழகிய ஆண் குழந்தை பிறக்கும். இதை என் ஞான திருஷ்டியால் அறிந்தேன்” என்றான்.


அது கேட்டு மன்னன் மகிழ்ந்து “மிக்க மகிழ்ச்சி, யோகீஸ்வரரே! நீங்கள் இங்கேயே இருந்து எமக்கும் என் குழந்தைகளுக்கும் நற்போதனைகளை அளித்து வாரும்” எனக் கூறி அரண்மனை ஓரத்தில் ஒரு தோட்டத்தை அமைத்து வசதியான வீட்டையும் கட்டிக் கொடுத்தான். அந்தப் போலி சன்னியாசி அத்தோட்டத்தில் காய்கறிகளைப் பயிரிட்டு அவற்றை விற்றுப் பணம் சேர்க்கலானான். அவனிடம் நிறைய பணம் சேரலாயிற்று. ஓராண்டு கழிந்தது. அம்மன்னனின் மனைவி ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். போதிசத்வரே அப்படி பிறந்தவர். அவருக்கு சுமனன் என்ற பெயர் வைத்து வளர்த்தார்கள். அவனும் வளர்ந்து பெரியவனானான்.

அப்போது அந்தப் போலி சன்னியாசி அரண்மனைத் தோட்டத்திலேயே இருந்தான். அரசனுக்கோ அவன் சொல்வதுதான் வேத வாக்காக இருந்தது. அவனது கபடத்தன்மையை ரேணுகன் அறியவில்லை. சுமனனோ அறிந்து கொண்டு விட்டான். அவன் அந்த சன்னியாசியின் உண்மை குணத்தை வெளிபடுத்த தீர்மானித்துக் கொண்டான். ஒருநாள் போலி சன்னியாசி காய்கறி தோட்டத்தில் பாத்தி கட்டிக் கொண்டிருந்த போது சுமனன் “ஏய் தோட்டக்காரா!” என்று உரக்கக் கத்திக் கூப்பிட்டான்.

இது போலி சன்னியாசிக்கு எரிச்சலை மூட்டியது. சுமனன் தன்னைப் பற்றித் தெரிந்து கொண்டு விட்டான் என அவன் கண்டு அவனைப் பழி வாங்க எண்ணினான். அதற்கான வழியும் அவனுக்கு தெரிந்தது. அதன்படி ஒருநாள் அரசன் வரும் வேளை தன் வீட்டிலிருந்த பொருள்களை எல்லாம் வாரி மூலைக்கு ஒன்றாகப் போட்டு விட்டு, தன் உடலில் எண்ணெய் தடவிக் கொண்டு போலி சன்னியாசி படுத்து முனகலானான்.

ரேணுகன் தான் மதிக்கும் யோகியின் நிலை கண்டு “சுவாமி! என்ன இது? யார் இப்படிச் செய்தது?” எனக் கேட்டான். அந்த சன்னியாசியும் “எல்லாம் உன் மகன் சுமனன்தான். என்னையும் அடித்து என் பொருள்களை எல்லாம் தூக்கிப் போட்டு உடைத்து விட்டான்” என்றான். உடனே ரேணுகன் தன் வீரர்களிடம் “இப்படி அக்கிரமம் செய்த சுமனனின் தலையை வெட்டி எறியுங்கள்” என்று கட்டளையிட்டான்.


கட்டளையை நிறைவேற்றத் தலையாரி சுமனனைக் காணச் சென்றான். அப்போது அவன் தன் தாயுடன் இருந்தான். தந்தையின் கட்டளையைக் கேட்டு அவன் ரேணுகனைக் கண்டு “தந்தையே, நீங்கள் மகாத்மா என்று போற்றும் பேர்வழி போலி சன்னியாசி. பேராசை பிடித்தவன். அரண்மனையில் காய்கறி பயிரிட்டு காவல் வீரர்களை விற்று வரச் சொல்லி பணம் சேர்த்து வைத்திருப்பவன். உண்மையை விசாரியுங்கள்” என்றான்.

ரேணுகனும் தன் அரண்மனைக் காவலாளிகளை விசாரித்து சுமனன் கூறியது உண்மையே எனத் தெரிந்து கொண்டான். போலி சன்னியாசியின் வீட்டைச் சோதனை போட்டதில் அவன் மறைத்து வைத்திருந்த ஏராளமான பணமும் அகப்பட்டது.


உடனே ரேணுகன் போலி சன்னியாசியை மிரட்டவே, அவன் உண்மையை ஒப்புக் கொண்டான். சுமனன் அவனை ஒன்றுமே செய்யவில்லை என்பதும் வெளியாயிற்று. பொய்க் குற்றச்சாட்டுகளுக்காக சன்னியாசிக்கு மன்னன் மரண தண்டனை விதித்தான். தான் தவறு செய்ததாக கூறி ரேணுகன் சுமனனை ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் படிக் கூறினான். அவனோ “வேண்டாம். நான் இமயமலைக்குப் போய் தவம் செய்கிறேன்” எனக் கூறிக் கிளம்பி விட்டான்.

ரேணுகனுக்கு அப்போது முதல் சன்னியாசிகள் என்றாலே எரிச்சல். எந்த சன்னியாசி அவனைக் காண வந்தாலும் அவரை அவன் மதிக்கவில்லை. ஒரு போலி சன்னியாசியின் செய்கையால் நல்ல சன்னியாசிகளுக்கும் மதிப்பு போயிற்று.

பொருந்திய ஜாதகங்கள்



கலிங்கப் பகுதியில் பல சிறு நாடுகள் இருந்தன. அவற்றில் தந்தபுரத்து மன்னன் காளிங்கன். அவனுடைய இரு புதல்வர் அரவிந்தனும் கோவிந்தனும் ஆவர். சிறுவர்களாக இருந்த போது அவர்களது ஜாதகங்களைப் பார்த்த சோதிடர்கள், "மூத்த மகன் அரவிந்தன் மன்னனாவான். ஆனால் அவனுக்குக் குழந்தையே பிறக்காது. இளையவன் சன்னியாசியாவான். ஆனால் அவனுக்குப் பிறக்கும் மகனுக்கு இராஜயோகம் உள்ளது" என்றார்கள்.

சில ஆண்டுகளுக்குப் பின் காளிங்கன் இறக்க அவன் மகன் அரவிந்தன் மன்னன் ஆனான். இளையவனான கோவிந்தன் பொது நிர்வாகத்தைக் கவனிக்கலானான். எப்படியும் தனக்குப் பிறக்கப் போகும் மகன்தானே அரவிந்தனுக்குப் பின் மன்னனாகப் போகிறான் என எண்ணி, கோவிந்தன் தலை கால் தெரியாமல் துள்ளினான். தன் மனம் போன போக்கில் அதிகாரம் செலுத்தினான். இதனால் சகோதரர்களிடையே மனக் கசப்பு அதிகரித்தது. அரவிந்தன் ஒருமுறை மிகவும் கோபம் கொண்டு கோவிந்தனைக் கைது செய்யும்படிக் கட்டளை இட்டான்.

அப்போது அமைச்சராக போதிசத்வர் அரவிந்தனிடம் இருந்தார். அவர் இரகசியமாக கோவிந்தனைத் தன் மாளிகைக்கு வரவழைத்து அரவிந்தன் பிறப்பித்துள்ள கட்டளையைக் கூறி இரவோடு இரவாக தப்பி எங்காவது ஓடிப் போய் விடுமாறு அவனுக்கு யோசனை கூறினார். கோவிந்தனும் "அப்படியே போய் விடுகிறேன். என்றாவது யாராவது எனது இந்த மோதிரத்தையும் என் சால்வையையும் என் வாளையும் எடுத்து வந்து தங்களிடம் காட்டினால் அவனே என் மகன் என அடையாளம் கண்டு கொண்டு அவனுக்கு உதவ வேண்டும்" என்று வேண்டிக் கொண்டான்.


அவரும் அவ்வாறே செய்வதாக வாக்குறுதி அளிக்கவே கோவிந்தனும் யாருக்கும் தெரியாமல் காட்டிற்குள் போய் விட்டான். அதே சமயம் மகத நாட்டை ஆண்ட மன்னனுக்கும் ஒரே புதல்வி இருந்தாள். சோதிடர்கள் "இவள் சன்னியாசி போல வாழ்வாள். ஆனால் இவளுக்குப் பிறக்கும் மகன் அரசன் ஆவான்" எனக் கூறினர்.

இதை அறிந்த சிற்றரசர்கள் எல்லாருமே தாம் அரசகுமாரியை மணக்க விரும்புவதாக மகத மன்னனுக்குச் செய்தி அனுப்பினார்கள். அது ஒரு பெரும் பிரச்னையாக மகத மன்னனுக்கு ஆயிற்று. அவர்களில் யாராவது ஒருவனுக்குத் தன் மகளைக் கல்யாணம் செய்து வைத்தாலும் மற்றவர்கள் ஒன்றுகூடி அவனைக் கொன்று விடுவார்கள் என்றும் அதனால் தன் மகளின் வாழ்க்கையே பாழாகிவிடும் என்றும் பயந்தான். அந்தச் சிக்கலிலிருந்து விடுபட அவன் தன் மனைவியோடும் மகளோடும் சன்னியாசி வேடத்தில் நாட்டிலிருந்து தப்பி காட்டிற்கு வந்து கோவிந்தன் இருந்த இடத்திற்கு அருகில் ஆசிரமம் அமைத்துக் கொண்டு வாழ்ந்து வந்தான்.

ஒருநாள் மகத மன்னன் தன் மனைவியுடன் காய்கனி கிழங்குகள் கொண்டு வரக் கிளம்பிச் சென்றான். அப்போது அவன் மகள் குடிலில் தனியாக இருந்தாள். அப்போது அவள் பல மலர்களைத் தொடுத்து மாலை கட்டினாள். ஆசிரமத்திற்கு அருகே ஒரு நதி ஓடிக் கொண்டுஇருந்தது. அதன் கரையிலிருந்த மாமரத்தின் மீது ஏறி ராஜகுமாரி தான் கட்டிய மாலையைச் சுழற்றி எறிந்தாள்.

அந்த மாலை சற்று தூரத்தில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த கோவிந்தனின் கழுத்தில் போய் விழுந்தது. அவன் அதனை எடுத்துப் பார்த்து ‘ஆகா! எவ்வளவு அழகான மாலை! இந்தக் காட்டில் இப்படி அழகான மாலை கட்டும் பெண் யார் இருக்கிறாள்? தேடிப் பார்க்கிறேன்’ எனத் தீர்மானித்துக் கொண்டான்.

குளித்து விட்டுக் கரையேறி அவன் தன் குடிலை நோக்கிச் செல்லும் போது எங்கிருந்தோ இனிய கானம் கேட்க, பிறகு அவன் அக்குரல் வந்த திசையில் சென்று மாமரத்தை அடைந்து அதில் மகதநாட்டு அரசகுமாரி இருப்பதைக் கண்டான்.
அவளைக் கண்டு அவன் மகிழ்ச்சி அடைந்து அவளைப் பற்றிக் கேட்டு அறிந்து கொண்டு முடிவில் "நீ என்னை மணந்து கொள்கிறாயா?" என்று கேட்டான். அவளும் "நீங்களோ ரிஷி. நாங்களோ ஷத்திரியர்கள்" என்றாள்.


அப்போது கோவிந்தன் "நானும் க்ஷத்திரியனே" எனக் கூறித் தன்னைப் பற்றிய முழு விவரங்களையும் அவளிடம் சொன்னான். பிறகு இருவரும் ஆசிரமத்திற்குப் போனார்கள். அப்போது மகத மன்னனும் அவன் மனைவியும் திரும்பி வந்திருந்தார்கள்.

கோவிந்தன் அவர்களிடம் தன்னைப் பற்றி விவரமாகக் கூறித் தான் அவர்களது மகளை மணக்க விரும்புவதாகக் கூறினான். மகத மன்னனும் அவனே தன் மகளுக்கு ஏற்ற வரன் என எண்ணி உடனே சம்மதித்தான். கோவிந்தனுக்கும் மகத இளவரசிக்கும் விரைவிலேயே விவாகமும் நடைபெற்றது.

சிறிது காலத்திற்குப் பின் அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு விஜயன் எனப் பெயரிட்டு நன்கு வளர்த்து வந்தார்கள்.

சில ஆண்டுகளுக்குப் பின் கோவிந்தன் சோதிடர்கள் கூறிய படி கணக்குப் போட்டுப் பார்த்து தன் அண்ணனின் ஆயுட்காலம் முடிவடைந்து போயிற்று எனக் கண்டான். கோவிந்தன் தன் மகன் விஜயனை அழைத்து அவனிடம் தன் மோதிரத்தையும் சால்வையையும் வாளையும் கொடுத்து "நீ இவற்றை எடுத்துப் போய் கிழ மந்திரியாரிடம் காட்டு. அவர் உனக்கு உதவுவார்" எனக் கூறி அனுப்பினான்.

விஜயனும் அந்தபுரத்திற்கு வந்து போதிசத்வரான கிழமந்திரியாரைக் கண்டான். அப்போது அரசனை இழந்த அந்நாடு குழப்பத்தில் இருந்தது. கிழ அமைச்சர் அரச சபையை உடனே கூட்டினார். அவர்களிடம் விஜயன் தான் சிம்மாசனத்திற்கு உரியவன் என்றும் அவன் கோவிந்தனின் மகன் என்றும் விவரமாக எடுத்துக் கூறினார். அதை எல்லாரும் கேட்டு ஆச்சரியப்பட்டு மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள். விஜயனை தம் மன்னனாக ஏற்றார்கள்.
விஜயனும் கிழ மந்திரியாரான போதிசத்வரின் அறிவுரைகளைக் கேட்டு அதன் படி நடந்து தன் வம்சத்தின் பெயரை நிலை நாட்டினான்.

பழமொழிகள்-நி,நீ, நு & நூ

நி
  • நித்தம் போனால் முத்தம் சலிக்கும்.
  • நித்திய கண்டம் பூரண ஆயிசு.
  • நித்தியங் கிடைக்குமா அமாவாசை சோறு?
  • நித்திரை சுகம் அறியாது.
  • நிலத்தில் எழுந்த பூண்டு நிலத்தில் மடிய வேண்டும்.
  • நிழலின் அருமை வெயிலிற் போனால் தெரியும்.
  • நின்ற வரையில் நெடுஞ் சுவர், விழுந்த அன்று குட்டிச்சுவர்.

நீ

  • நீந்த மாட்டாதவனை ஆறு கொண்டு போம்.
  • நீர் ஆழம் கண்டாலும் நெஞ்சு ஆழம் காண முடியாது.
  • நீர் உள்ள மட்டும் மீன் குஞ்சு துள்ளும்.
  • நீர் மேல் எழுத்து போல்.
  • நீலிக்குக் கண்ணீர் இமையிலே.
  • நீள நீளத் தெரியும் மெய்யும் பொய்யும்.

நு

  • நுனிக்கொம்பில் ஏறி அடிக்கொம்பு வெட்டுவார்களா?

நூ

  • நூல் கற்றவனே மேலவன்.
  • நூலளவே யாகுமாம் நுண்ணறிவு.
  • நூலைப் போல சேலை தாயைப் போல பிள்ளை.
  • நூற்றுக் மேல் ஊற்று, ஆயிரத்துக்கு மேல் ஆற்றுப் பெருக்கு.
  • நூற்றைக் கொடுத்தது குறுணி.

பசலைக்கீரை



கார்ட்டூன் நாயகன் பாப்பாய்க்கு மிகவும் பிடித்தது பசலைக்கீரை. 'என் புஜபல ரகசியம் இந்த கீரை தான்' என்று குழந்தைகளிடம் பிரபலப்படுத்தினான்.

உண்மையில் பசலைக்கீரை போல் உடலுக்கு நன்மை தரும் காய்கறி வேறெதுவும் இல்லை. இரும்புச் சத்து, பீட்டா கரோட்டின், ஃபோலிக் அமிலம், கால்சியம் எல்லாமே இதில் அதிகம்.ஃபோலாசின் நோய்த் தடுப்புக்கு முக்கியம் என்பதால் இதயநோய் வராமல் தடுக்க உதவுகிறது.
குழந்தைகளுக்கு வரும் சில நரம்பு வியாதிகளை வராமல் தடுப்பதால் மேலைநாடுகளில் இதை கோதுமை, மைதா போன்ற மாவுகளில் கலந்து விற்கிறார்கள். இந்த கீரையில் உள்ள சில ரசாயனப் பொருட்கள் பார்வைக் குறைவை தடுக்கிறது. மலச் சிக்கலுக்கு எதிரி.
ஹிந்தியில் இதை பாலக் என்பார்கள்.
மருத்துவக் குணங்கள்: இதில் மிக அதிகமாக உள்ள பச்சையம் கொழுப்பை கரைக்கும் தன்மையுள்ளது. ரத்தத்தின் சிவப்பு அணுக்கள், ஹீமோகுளோபின் ஆகியவை அதிகமாக உற்பத்தியாக உதவுகிறது. ஹீமோகுளோபின் ரத்தத்தில் ஆக்ஸிஜனை ஏற்றிச் சென்று உடலின் செல்களுக்கு தந்து அங்கிருந்து கரியமிலவாயுவை வெளியேற்றுகிறது. இதனால் ரத்தம் சுத்தமாகி உடலில் பாக்டீரியா தாக்காமல் தடுக்கிறது. இக்கீரையில் இருக்கும் பொட்டாசியம் நரம்பு மண்டலத்துக்கு வலுவூட்டுகிறது. ரத்த அழுத்தம் சீராக இருக்கவும் பயன்படுகிறது.
உணவுச்சத்து: இதிலுள்ள விட்டமின் ஏ பார்வைக் கோளாறை தடுப்பதோடு சோர்வை நீக்கி, ரத்த
விருத்திக்கும் உதவுகிறது
ஒரு கப் பசலைக்கீரையில் இருக்கும் உணவுச்சத்து:
கலோரி 40, கொழுப்பு 0, சோடியம் 80 மில்லிகிராம், விட்டமின் ஏ 6800 IU (இது ஒரு நாளைக்கு தேவைப்படும் அளவை விட ஒன்றரை மடங்கு அதிகம்), விட்டமின் சி 28 மி.கிராம்,ஃபோலாசின் 200 மி.கிராம், கால்சியம் 100 மி.கிராம், பொட்டாசியம் 560 மி.கிராம்
பசலைக்கீரை - குளிர்ச்சி தருவதில் சிறந்தது, நீர் உடலினர் அடிக்கடி சாப்பிடக் கூடாது.

நீரைப் பெருக்கும். பால் சுரக்கும்.

வயிற்று புண்ணாற்றும், கண்ணொளி தரும். இதை உபயோகிப்பதால் உடல் தொற்று பெருமளவில் தடுக்கப் படுகிறது.

வைட்டமின், கால்ஷியம் அதிக அளவு ஹீமோகுளோபின், புரதம் செறிந்த கீரை.

அதிக அளவில் B காம்ப்ளெக்ஸ் இருப்பதால் வாய்ப்புண்ணுக்கு சிறந்த மருந்து.

இன்சுலின் கண்டுபிடித்தது எப்படி?!



தற்போது உலகையே பயமுறுத்திக் கொண்டிருக்கும் நோய்களில் முக்கியமானது நீரிழிவு.

இன்சுலின் கண்டுபிடிப்புக்கு முன்பு, எந்த மருத்துவ ஆய்வும் நீரிழிவுக்கு தீர்வு சொல்ல முடியாத நிலையில், பிரெட்ரிக் கிராண்ட் பேண்டிங் மற்றும் ஜான் ஜேம்ஸ் ரிச்சர்ட் மேக்லியோட் ஆகிய இருவரும், தங்களது தீவிர முயற்சியால் இன்சுலினைக் கண்டுபிடித்தனர்.

இதில் ஒருவரான பேண்டிங்-ஐ சின்ன வயதிலேயே நீரிழிவு நோய் தாக்கியது. 1916-ம் ஆண்டில் இந்த நோய்க்கு எந்த தீர்வும் கண்டுபிடிக்காத நிலையில் பேண்டிங் திணறினார்.

உடலுக்குள் செலுத்தப்படும் புது கணைய நீரானது நோயாளியின் உடலிலேயே சுரந்து கொண்டிருக்கும் பழைய கணைய நீரோடு இணைந்து செயல் பட்டால் பிரச்சினை இல்லை என்ற தேடுதலோடு பல மருத்துவ ஏடுகளை புரட்டினார்.

பல விஞ்ஞானிகளோடு ஆலோசித்தார். அப்போது பேண்டிங்குக்கு வரப்பிரசாதமாய் ஒரு கட்டுரை கிடைத்தது.

அதில் சில புதிய விஷயங்கள் கிடைத்தன. மேலும் நீரிழிவு நோய் குறித்த ஆழ்ந்த ஆய்வுகளையும், கட்டுரை விளக்கங்களையும் அளித்து வந்த மேக்லியோட்டின் அறிமுகம் கிட்டியது.

இருவரும் இணைந்து தீவிரமான ஆராய்ச்சி மேற்கொண்டனர். பேண்டிங் தடுமாறும்போதெல்லாம் தூக்கிவிட்ட மேக்லியோட்டின் துணையோடு, 1922-ம் ஆண்டில் கற்பனைப் பொருளாக இல்லாது நிஜத்தில் உருவானது இன்சுலின்!

ஆரம்ப காலத்தில் கணைய சுரப்பிகளில் நார் கட்டி செய்யப்படும் சிகிச்சைக்குப் பிறகு வெளியிலிருந்து இன்சுலின் ஏற்றப்பட்டு நீரிழிவு நோய்க்கான சிகிச்சை மேற்கொள்ளப் பட்டாலும் பிற்காலத்தில் மருத்துவ உலகில் நடந்த பெரும் ஆராய்ச்சிகள் நார் கட்டும் சிக்கலிலிருந்து விடுதலை பெற்றுத் தந்துள்ளன.

ஆனால் அதற்கு பின் ஏற்பட்ட அத்தனை முன்னேற்றங்களும் இன்சுலீன் எனும் அஸ்திவாரத்தின் மீது தான் நின்று கொண்டிருக்கின்றன.

இன்சுலின் கண்டுபிடித்திருக்காவிட்டால் நீரிழிவு நோய்க்கான சிகிச்சை முன்னேற்றங்கள் நடந்திருக்காது. இத்தகைய அற்புத கண்டுபிடிப்புக்காக பேண்டிங் மற்றும் மேக்லியோட் இருவருக்கும் 1923-ம் ஆண்டு, மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

http://senthilvayal.wordpress.com/

வைட்டமின் என்றால் என்ன?



மனித உடல் சீராக செயல்படுவதற்கு பலவகையான பொருட்கள் அதற்குத் தொடர்ந்து தேவைப்படுகின்றன. தொடர்ந்து மூச்சுவிடுவதன் மூலமும், சாப்பிடுவதன் மூலமும் அந்தப் பொருட்களை நம்முடைய உடலுக்கு நாம் வழங்கி வருகிறோம்.

வளர்ச்சி, பழுதுபார்ப்பு மற்றும் ஆரோக்கியம் பேணுதல், அவற்றுக்குத் தேவையான ஆற்றல் இவைதான் மனித உடலின் அடிப்படைத் தேவைகள்.

மனித உடல் பலவகையான திசுக்களால் ஆனது என்றாலும் அவற்றுக்கெல்லாம் அடிப்படையாக இருப்பது செல்கள்தான். இந்த செல்களில் நிகழும் பல்லாயிரக்கணக்கான வேதிவினைகள்தான் மனித உடலின் வளர்ச்சிக்கும், பழுதுபார்ப்பு மற்றும் ஆரோக்கியம் பேணுவதற்கும், அவற்றுக்குத் தேவையான ஆற்றலைப் பெறுவதற்கும் காரணமாக இருக்கின்றன.

உடலின் வளர்ச்சி, பழுதுபார்ப்பு மற்றும் ஆரோக்கியம் பேணுவதற்கு புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப் பொருட்கள் போன்ற பலவகையான பொருட்கள் தேவைப்படுகின்றன. உண்ணும் உணவிலிருந்து உடல் இவற்றைப் பெறுகின்றது.

உடலின் மற்ற செயல்கள் நிகழ்வதற்கு தேவைப்படும் ஆற்றலைப் பெற தரசமும், ஆக்சிஜனும் உடலுக்கு தேவைப்படுகின்றன. உண்ணும் உணவிலிருந்து தரசத்தை (மாவுப் பொருள்) உடல் எடுத்துக்கொள்கிறது. மூச்சுக் காற்றிலிருந்து தேவையான ஆக்சிஜன் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

இதுதான் மனித உடலின் அடிப்படையான இயங்குமுறை. இது பற்றி இப்போது மிகவும் விரிவாகவும், நுட்பமாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால், சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு வரையில்கூட மனித உடலின் உணவுத் தேவை பற்றி எதுவும் கண்டறியப்பட்டிருக்கவில்லை. சில குறிப்பிட்ட உணவுப் பொருட்கள் உடல் ஆரோக்கியத்திற்கு உதவுவதை மட்டுமே மனிதர்கள் அறிந்திருந்தனர். அந்த உணவுப் பொருட்களில் என்னென்ன உணவுச் சத்துகள் இருக்கின்றன என்பது பற்றி எதுவும் தெரியாது.

பின்னர், பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பொருட்களை வேதியல் முறையில் பகுத்தாய்வதில் வளர்ச்சி ஏற்படத் தொடங்கியது. இதனால், இயற்கையாக கிடைக்கக் கூடிய பொருட்களை அவற்றின் சுத்தமான வடிவத்தில் பிரித்தெடுப்பதும், அவற்றின் வேதியல் அமைப்பை கண்டறிவதும், அவற்றை செயற்கையான முறையில் உற்பத்தி செய்வதும் சாத்தியமானது.

அந்த வளர்ச்சியின் விளைவாக, ஆராய்ச்சியாளர்களால் உணவிலுள்ள சத்துப் பொருட்களை அவற்றினுடைய சுத்தமான வடிவத்தில் பிரித்தெடுக்க முடிந்தது. அதனால், இதுபோல சுத்தமான வடிவத்தில் பிரித்தெடுக்கப்பட்ட உணவுச் சத்துகள் உடலில் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை மிகவும் துல்லியமாக பரிசோதித்தறிவதும் சாத்தியமானது.

இதுபோன்ற முறையில், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தரசம் (மாவுப் பொருள்), புரதம், கொழுப்பு, தாதுப் பொருட்கள் ஆகிய உணவுச் சத்துகள் உடலின் ஆரோக்கியத்திற்கு தேவைப்படுகின்றன என்பதை ஆராய்ச்சியாளர்கள் மிகவும் திட்டவட்டமாக கண்டறிந்தனர். இந்த உணவுச் சத்துகள் அவற்றின் சுத்தமான வடிவத்தில் பிரித்தெடுக்கப்பட்டு அவற்றின் வேதியல் அமைப்புகளும் கண்டறியப்பட்டன. அதேபோல, அவற்றை செயற்கையாக தயாரிக்கும் முறைகளும் கண்டறியப்பட்டன.

இந்த நிலையில் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சில ஆராய்ச்சியாளர்கள் சோதனை பிராணிகளுக்கு இந்த உணவுச் சத்துகளை அவற்றின் சுத்தமான வடிவத்தில் கொடுத்து அவை உடலில் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை ஆராய்ந்து வந்தனர்.

ஆனால், இந்த உணவுச் சத்துகளை மட்டும் அவற்றின் சுத்தமான வடிவத்தில் தேவையான அளவுகளில் சோதனை பிராணிகளுக்கு கொடுத்து பரிசோதித்தபோது அவை விரைவிலேயே உடல் நலம் குன்றி உயிரிழப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டனர்.

எனவே, இந்த உணவுச் சத்துகளைத் தவிர வேறு ஏதோ சில உணவுச் சத்துகளும் மிகவும் குறைந்த அளவில் உயிர் வாழ்க்கைக்கு கட்டாயமாக தேவைப்படுகின்றன என்று அவர்கள் முடிவு செய்தனர்.

அது போன்ற அடையாளம் கண்டறியப்படாத உணவுச் சத்துகளுக்கு துணை உணவு காரணிகள் (Accessory Food Factors) என்று பெயர் சூட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த துணை உணவு காரணிகளைக் கண்டறியும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் மிகத் தீவிரமாக ஈடுபடத் தொடங்கினர்.

இந்த நிலையில், சில ஆராய்ச்சியாளர்கள் துணை உணவு காரணிகள் சிலவற்றைக் கண்டறிந்தனர். உயிர் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமான ஒரு அமைனை (Amine அமைன் என்பது வேதிப் பொருட்களில் ஒரு வகை) கண்டுபிடித்து விட்டதாக அவர்கள் நம்பினர். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் அந்தப் பொருளுக்கு விட்டமைன் (Vital + Amine = Vitamine) என்று பெயர் சூட்டினர். அதைத் தொடர்ந்து மற்ற விட்டமைன்களைக் கண்டறியும் ஆராய்ச்சி முழு வேகமடைந்தது.

நூற்றுக்கணக்கானவர்கள் அந்த ஆராய்ச்சியில் ஈடுபடத் தொடங்கினர். அதன் விளைவாக பல துணை உணவுக் காரணிகள் கண்டறியப்பட்டன. பின்னர் அவற்றின் பெயர் வைட்டமின் என மாற்றப்பட்டது.

வைட்டமின் என்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமாக தேவைப்படும் ஒரு சத்துப்பொருள். பெரும்பாலான வைட்டமின்கள் வளர்சிதை மாற்றச் செயல்களில் முக்கியப் பங்கு எடுத்துக்கொள்கின்றன. எனவே, வைட்டமின்கள் பற்றாக் குறையாகும்போது சில முக்கியமான வளர்சிதை மாற்றச் செயல்கள் நிகழாமல் போகின்றன. இதனால், உடல் பலவிதமாக பாதிக்கப்படுகிறது.

வைட்டமின்கள் அவை செயல்படும் விதத்தில் ஹார்மோன்களையும், என்சைம்களையும் ஓரளவு ஒத்திருக்கின்றன. ஆனால், அவை கிடைக்கும் விதத்தில் வித்தியாசம் இருக்கிறது.

அதாவது, ஹார்மோன்களையும், என்சைம்களையும் நாம் உட்கொள்ளும் உணவிலுள்ள வேறு பொருட்களைப் பயன்படுத்தி உடலே தயாரித்துக்கொள்கிறது. ஆனால், வைட்டமின்களை அது போல நமது உடலால் தயாரிக்க இயலாது. வைட்டமின்களைத் தயாரிக்கும் திறனை நமது உடல் இழந்து விட்டது. (வேறு உயிரினங்களுக்கு அந்த திறன் இருக்கிறது.)

எனவே, வைட்டமின்கள் அதே வடிவில் நமது உடலுக்குத் தேவைப்படுகின்றன. அதாவது வைட்டமின்களைத் தயார் நிலையில் நாம் நமது உடலுக்கு வழங்க வேண்டியதிருக்கிறது. இதுபோல தயார் நிலையில் நமது உடலுக்குத் தேவைப்படும் ஊட்டச்சத்துகள் வைட்டமின்கள் என்று அழைக்கப்படுகின்றன.

இந்த காரணத்தினால் நமக்கு வைட்டமினாக இருக்கும் ஒரு பொருள் வேறு உயிரினங்களுக்கு வைட்டமினாக இருப்பதில்லை. அதாவது வேறு உயிரினங்களுக்கு அந்தப் பொருள் தயார் நிலையில் தேவைப்படுவதில்லை. உணவில் உள்ள வேறு பொருட்களிலிருந்து அந்த உயிரினங்களின் உடலே அதை தயாரித்துக்கொள்ளும்.

எனவே, வைட்டமின்கள் எனறால் தயார் நிலையில் நமது உடலுக்கு தேவைப்படும் உணவுச் சத்துகள் என்று கூறலாம். வைட்டமின்கள் பொதுவாக மிகக் குறைந்த அளவில்தான் நமது உடலுக்குத் தேவைப்படுகின்றன. அந்த மிகக் குறைந்த அளவும் கிடைக்காதபோதுதான் அவற்றின் பற்றாக்குறையால் மனித உடல் பலவிதமாக பாதிக்கப்படுகிறது.

`டை’ தோன்றிய விதம்!



ரோமாபுரிப் படை வீரர்கள் தங்கள் கழுத்தைச் சுற்றி ஒரு சிறு துணியை அணிந்தார்கள்.

அது, குளிர் காலத்தில் இதமாக இருக்கும். வெயில் காலத்தில் வியர்வையை உறிஞ்சும்.

காலப்போக்கில் மற்ற படை வீரர்களும் அதைப் பின்பற்றத் தொடங்கினர். பிரெஞ்சுப் புரட்சியின்போது அவரவர் சார்ந்த கட்சியைக் குறிக்கும் விதத்தில் வெவ்வேறு நிறங்களில் `டை’ அணிந்துகொண்டனர்.

குரோஷிய ராணுவத்திடம் இருந்து டையின் அமைப்புகளையும், `க்ரேவட்’ (Cravat) என்ற சொல்லையும் எடுத்துக்கொண்டனர்.

பின்னர் இது நாகரிக உடையின் ஆடையாளம் ஆனது. அலுப்பூட்டும் உடைகள் இடையே, வண்ணத்தை அள்ளித் தெளிப்பதாக டைகள் வடிவமைக்கப்பட்டன.

http://senthilvayal.wordpress.com

காதை உறுத்தும் இரைச்சல்


நம் அன்றாட வாழ்வில் நிகழும் சில நிகழ்வுகளின் டெசிபல் அளவு எவ்வளவு தெரியுமா?

மரத்தின் இலைகள் காற்றில் இலேசாய் அசைந்து ஒருவித சப்தத்தை உண்டாக்குகின்றன அல்லவா? அதன் அளவு 10 டெசிபல்கள்.

சில அடிகளுக்கு அப்பாலிருந்து ஒருவர் ரகசியக் குரலில் பேசினால் அது 20 டெசிபல்.

தொலைக்காட்சிப் பெட்டியை போட்டுவிட்டு ஒரு வீட்டின் சப்த அலைகளைக் கணக்கிட்டால் அது 50 டெசிபல். ஒரு கார் தொழிற்சாலையின் இரைச்சல் 95 டெசிபல். ஒரு நிமிடத்துக்கு 16 ஆயிரம் தடவைகள் சுழலும் விமானத்தின் `புரொப்பெல்லர்கள்’ ஏற்படுத்தும் ஓசை, 120 டெசிபல்கள்.

http://senthilvayal.wordpress.com

அதிகாரம் - பொறையுடைமை

குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - இல்லறவியல் அதிகாரம் -

குறள் 160:
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்.
கலைஞர் உரை:
பசி பொறுத்து உண்ணாநோன்பு இருக்கும் உறுதி படைத்தவர்கள் கூடப் பிறர் கூறும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்களுக்கு, அடுத்த நிலையில்தான் வைத்துப் போற்றப்படுவார்கள்.
மு.வ உரை:
உணவு உண்ணாமல் நோன்பு கிடப்பவர், பிறர் ‌சொல்லும் கொடுஞ் சொற்களைப் பொறுப்பவர்க்கு அடுத்த நிலையில்தான் பெரியவர் ஆவர்.
சாலமன் பாப்பையா உரை:
பிறர் சொல்லும் தீய சொற்களைப் பொறுத்துக் கொள்பவருக்கும் பின்புதான் விரதம் காரணமாக உணவைத் தவிர்த்து நோன்பு இருப்பவர் பெரியவர் ஆவார்.

அதிகாரம் - பொறையுடைமை

குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - இல்லறவியல் அதிகாரம் -

குறள் 159:
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்.
கலைஞர் உரை:
எல்லை கடந்து நடந்து கொள்பவர்களின் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்கள் தூய்மையான துறவிகளைப் போன்றவர்கள்.
மு.வ உரை:
வரம்பு கடந்து நடப்பவரின் வாயில் பிறக்கும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர், துறந்தவரைப் போலத் தூய்மையானவர் ஆவர்.
சாலமன் பாப்பையா உரை:
நெறி கடந்து தீய சொற்களால் திட்டுபவரையும் பொறுத்துக் கொள்பவர். இல்வாழ்க்கையில் வாழ்ந்தாலும் துறவியைப் போலத் தூயரே.

அதிகாரம் - பொறையுடைமை

குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - இல்லறவியல் அதிகாரம் -

குறள் 158:
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல்.
கலைஞர் உரை:
ஆணவங் கொண்டு அநீதி விளைவிப்பவர்களை, நாம் நம் பொறுமைக் குணத்தால் வென்று விடலாம்.
மு.வ உரை:
செருக்கினால் தீங்கானவற்றைச் செய்தவரைத் தாம் தம்முடைய பொறுமைப் பண்பினால் பொறுத்து வென்று விட வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
மனச் செருக்கால் தீமை செய்தவரைப் பொறுமையால் வென்றுவிடுக.

அதிகாரம் - பொறையுடைமை

குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - இல்லறவியல் அதிகாரம் -

குறள் 157:
திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று.
கலைஞர் உரை:
பிறர் செய்திடும் இழிவான காரியங்களுக்காகத் துன்பமுற்று வருந்தி, பதிலுக்கு அதே காரியங்களைச் செய்து பழி வாங்காமலிருப்பதுதான் சிறந்த பண்பாகும்.
மு.வ உரை:
தகுதி அல்லாதவைகளைத் தனக்குப் பிறர் செய்த போதிலும், அதனால், அவர்க்கு வரும் துன்பத்திற்காக நொந்து, அறம் அல்லாதவைகளைச் செய்யாதிருத்தல் நல்லது.
சாலமன் பாப்பையா உரை:
கொடியவற்றைப் பிறர் தனக்குச் செய்தாலும், பதிலுக்குத் தானும் செய்தால் அவர் வருந்துவாரே என வருந்தி, அறம் அல்லாதவற்றைச் செய்யாது இருப்பது நல்லது.

அதிகாரம் - பொறையுடைமை

குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - இல்லறவியல் அதிகாரம் -

குறள் 156:
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்.
கலைஞர் உரை:
தமக்குக் கேடு செய்தவரை மன்னித்திடாமல் தண்டிப்பவர்க்கு அந்த ஒரு நாள் மட்டுமே இன்பமாக அமையும். மறப்போம் மன்னிப்போம் எனப் பொறுமை கடைப் பிடிப்பபோருக்கோ, வாழ்நாள் முழுதும் புகழ்மிக்கதாக அமையும்.
மு.வ உரை:
தீங்கு செய்தவரைப் பொறுக்காமல் வருத்தினவர்க்கு ஒருநாள் இன்பமே; பொறுத்தவர்க்கு உலகம் அழியும் வரைக்கும் புகழ் உண்டு.
சாலமன் பாப்பையா உரை:
தமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டித்தவர்க்குத் தண்டித்த அன்று மட்டுமே இன்பம்; பொறுத்துக் கொண்டவர்க்கோ உலகம் அழியும் வரை புகழ் இருக்கும்.

அதிகாரம் - பொறையுடைமை

குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - இல்லறவியல் அதிகாரம் -

குறள் 155:
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.
கலைஞர் உரை:
தமக்கு இழைக்கப்படும் தீமையைப் பொறுத்துக் கொள்பவர்களை உலகத்தார் பொன்னாக மதித்துப் போற்றுவார்கள். பொறுத்துக் கொள்ளாமல் தண்டிப்பவர்களை அதற்கு ஒப்பாகக் கருத மாட்டார்கள்.
மு.வ உரை:
( தீங்கு செய்தவரைப்) பொறுக்காமல் வருத்தினவரை உலகத்தார் ஒரு பொருளாக மதியார்; ஆனால், பொறுத்தவரைப் பொன்போல் மனத்துள் வைத்து மதிப்பர்.
சாலமன் பாப்பையா உரை:
தனக்குத் தீமை செய்தவரைப் பொறுக்காமல் தண்டித்தவரைப் பெரியோர் ஒரு பொருட்டாக மதிக்கமாட்டார்; பொறுத்துக் கொண்டவரையோ பொன்னாகக் கருதி மதிப்பர்.

அதிகாரம் - பொறையுடைமை

குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - இல்லறவியல் அதிகாரம் -

குறள் 154:
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை
போற்றி யொழுகப் படும்.
கலைஞர் உரை:
பொறுமையின் உறைவிடமாக இருப்பவரைத்தான் நிறைவான மனிதர் என்று உலகம் புகழும்.
மு.வ உரை:
நிறை உடையவனாக இருக்கும் தன்மை தன்னை விட்டு நீங்காமல் இருக்க வேண்டினால், பொறுமையைப் போற்றி ஒழுக வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
சான்றாண்மை நம்மைவிட்டு விலகக்கூடாது என விரும்பினால் பொறுமையைப் பின்பற்றி வாழ வேண்டும்.

அதிகாரம் - பொறையுடைமை

குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - இல்லறவியல் அதிகாரம் -


குறள் 153:
இன்நம்யுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.
கலைஞர் உரை:
வறுமையிலும் கொடிய வறுமை, வந்த விருந்தினரை வரவேற்க முடியாதது. அதைப் போல வலிமையிலேயே பெரிய வலிமை அறிவிலிகளின் செயலைப் பொறுத்துக் கொள்வது.
மு.வ உரை:
வறுமையுள் வறுமை, விருந்தினரைப் போற்றாமல் நீக்குதல்; வல்லமையுள் வல்லமை என்பது அறிவிலார் தீங்கு செய்தலைப் பொறுத்தலாகும்.
சாலமன் பாப்பையா உரை:
வறுமையுள் வறுமை, வந்த விருந்தினரை உபசரிக்காதது; வலிமையுள் வலிமை அற்றவரின் ஆத்திர மூட்டல்களைப் பொறுத்துக் கொள்வது.

அதிகாரம் - பொறையுடைமை

குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - இல்லறவியல் அதிகாரம் -

குறள் 152:
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று.
கலைஞர் உரை:
அளவுகடந்து செய்யப்பட்ட தீங்கைப் பொறுத்துக் கொள்வதைக் காட்டிலும், அந்தத் தீங்கை அறவே மறந்து விடுவதே சிறந்த பண்பாகும்.
மு.வ உரை:
வரம்பு கடந்து பிறர் செய்யும் தீங்கை எப்போதும் பொறுக்க வேண்டும்; அத் தீங்கை நினைவிலும் கொள்ளாமல் மறந்து விடுதல் பொறுத்தலை விட நல்லது.
சாலமன் பாப்பையா உரை:
தீமையைத் தண்டிக்க முடியும் என்றபோதும் பொறுத்துக் கொள்க; அந்தத் தீமையை மனத்துள் வைக்காமல் மறந்தே விடுவது பொறுத்தலையும் விட நல்லது.

அதிகாரம் - பொறையுடைமை

குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - இல்லறவியல் அதிகாரம் -


குறள் 151:

அகழ்வாரைத்
தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப்
பொறுத்தல் தலை.

கலைஞர் உரை:

தன்மீது
குழி பறிப்போரையே தாங்குகின்ற பூமியைப் போல் தம்மை இகழ்ந்து பேசுகிறவர்களின் செயலையும் பொறுத்துக் கொள்வதே தலைசிறந்த பண்பாகும்.

மு. உரை:

தன்னை
வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல், தம்மை இகழ்வாரையும் பொறுப்பதே தலையான பண்பாகும்.

சாலமன் பாப்பையா உரை:

தன்னையே
தோண்டினாலும் தோண்டுபவர் விழுந்துவிடாதபடி தாங்கும் நிலம் போலத், தன்னை வார்த்தைகளால் அவமதிப்பவரையும் மதித்துப் பொறுப்பது முதன்மை அறம்.

எங்கேயும் காதல் .. விழிகளில் வந்து

எங்கேயும் காதல் .. விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச ..
வின்காலை சாரல் .. முகத்தினில் வந்து சட்டென்று மோத ..
கொள்ளாத பாடல் .. பரவசம் தந்து பாதத்தில் ஓட ..
முதல்வரும் காதல் .. மண்ணில் முன்னூறு ஆண்டு வாழும் ..
காதல் என்னும் தேனே
கடல் அலைகளில் காணும் நீளம் நீயே ..
வானே வண்ண மீனே ..
மழை வெயில் என நான்கு காலம் நீயே ..

கடற்கரையில் அதன் மணல் வெளியில்
அக்காற்றோடு காற்றாக
பலகுரல்கள் பல பல விரல்கள்
தமை பதிவு செய்திருக்கும்
விடியலிலும் நாடு இரவினிலும்
இது ஓயாதே ஓயாதே
சிரிப்பினிலும் பல சினங்களிலும்
மிக கலந்து காத்திருக்கும் ..
ஒ பார்க்காமல் கொஞ்சம் பேசாமல் போனாலும்
உள்ளம் தாங்காது தாங்காதே கண்கள்தான் பின்பு தூங்காதே

எங்கேயும் காதல் .. விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச ..
வின்காலை சாரல் .. முகத்தினில் வந்து சட்டென்று மோத ..
கொள்ளாத பாடல் .. பரவசம் தந்து பாதத்தில் ஓட ..
முதல்வரும் காதல் .. மண்ணில் முன்னூறு ஆண்டு வாழும் ..

அடம் பிடிக்கும் இது வடம் இழுக்கும்
யார் சொன்னாலும் கேட்காதே ..
தர மறுக்கும் பின் தலைகொடுக்கும்
இது புரண்டு தீர்திடுமே ..
முகங்களையோ உடல் நிரங்கலையோ
இது பார்க்காதே .. பார்க்காதே ..
இரு உடலில் ஓர் உயிர் இருக்க
அது முயன்று பார்த்திடுமே ..
யார் யாரை எங்கே நேசிக்க நேர்ந்தாலும்
அங்கே பூந்தோட்டம் முண்டாகும்
பூசென்றாய் ப்தூமி திண்டாடும் ..

எங்கேயும் காதல் .. விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச ..
வின்காலை சாரல் .. முகத்தினில் வந்து சட்டென்று மோத ..
கொள்ளாத பாடல் .. பரவசம் தந்து பாதத்தில் ஓட ..
முதல்வரும் காதல் .. மண்ணில் முன்னூறு ஆண்டு வாழும் ..
காதல் என்னும் தேனே
கடல் அலைகளில் காணும் நீளம் நீயே ..
வானே வண்ண மீனே ..
மழை வெயில் என நான்கு காலம் நீயே ..

Monday, July 4, 2011

OVIUM













பறவைகள் நீண்ட தூரம் பறக்கும் ரகசியம்




உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள பறவைகள் இனப்பெருக்கத்திற்காகவும், சீதோஷ்ண நிலை காரணமாகவும், ஒவ்வொரு ஆண்டும் இடம் பெயர்கின்றன. இந்த இடப் பெயர்ச்சியின் போது, அவை பல ஆயிரம் கி.மீ., தூரத்தை கடக்கின்றன. சில பறவைகள் தொடர்ந்து பல மணி நேரம் பறந்து, இலக்கை அடைகின்றன.
“பல ஆயிரம் கி.மீ., தூரம் தொடர்ந்து பறப்பதற்கான உடல் திறன், இப்பறவைகளுக்கு எப்படி கிடைக்கிறது…’ என்பது, பறவைகள் குறித்த ஆய்வாளர்களின் நீண்ட நாள் கேள்வியாக இருந்தது.
இந்நிலையில், நீண்ட தூர பயணம் மேற்கொள்ளும் பறவைகள், சக்தி பெற, “பெர்ரி’ பழங்களை அதிகமாக உண்ணுகின்றன என்ற புதிய தகவல், சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள அமெரிக்க ரசாயன கழகம் நடத்திய தேசிய கூட்டத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
“மனிதர்களின் உடல் நலத்திற்கு சத்துக்கள் தரும் பழங்கள், காய்கறிகள் குறித்து நாங்கள் ஆய்வு செய்து கண்டுபிடித்துள்ளோம். இடப்பெயர்ச்சி செய்யும் பறவைகளும், அதிக சத்துக்கள் நிறைந்த உணவையே விரும்புகின்றன…’ என்று, ரோட்தீவு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வு தலைவர் நவீன்டிராசீரம் கூறியுள்ளார்.
பெர்ரி பழங்களை உண்ணும் 12 பறவைகளை ரோட் தீவு, டின்னி பிளாக் தீவுகளில் நவீன்டிராசீரம் மற்றும் அவருடன் பணியாற்றுபவர்கள் சேகரித்தனர். இப்பறவைகள் அட்லாண்டிக் கடல் வழியாக பறக்கும் போது, இடையே உள்ள தீவுகளில் இறங்கின. அப்போது, பறவைகளின் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அளவு மற்றும் நன்கு பழுத்த நிலையில் உள்ள ஆரோவுட், வின்டர் பெர்ரி, பேபெர்ரி, சோக் பெர்ரி, எல்டர்பெர்ரி ஆகிய பழங்களின் பிக் மென்ட்களை ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர்.
பறவைகள் நீண்ட தூரம் பறக்கும் திறன் குறித்து நவீன்டிராசீரம் கூறிய தாவது:
மற்ற பெர்ரி பழங்களின் சராசரியை விட, ஆரோவுட் பழத்தில் 650 சதவீதத்திற்கும் அதிகமான பிக்மென்ட்டும், ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் 150 சதவீதத்திற்கும் அதிகமாகவும் உள்ளன. இதனால் தான், பறவைகள் ஆரோவுட் பழங்களை அதிகமாக உண்கின்றன. இலையுதிர் காலத்தில் இடப்பெயர்ச்சி செய்யும் சில பறவைகள், தங்கள் எடையைப் போல மூன்று மடங்கு பெர்ரி பழங்களை உண்ணுகின்றன. ஒரு மனிதன் தினசரி 136 கிலோ சாப்பிட்டால், எந்த அளவு சக்தி கிடைக்குமோ, அதைவிட இது அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இடப்பெயர்ச்சி செய்யும் சில பறவைகள் கறுப்பு நிறத்திலும், ஆழ்ந்த பிக்மென்ட் மற்றும் உயர்வான ஆன்டி ஆக்சிடன்ட் கொண்ட பழங்களை விரும்புவதை, முன்னதாக விஞ்ஞானிகள் அறிந்திருந்தனர். ஆன்டி ஆக்சிடன்ட், நோய் எதிர்ப்பு சக்தியை தருவதுடன், பறவைகள் நீண்ட தூரம் பறப்பதற்கான சக்தியையும், உடல் வெப்பம் அதிகரிக்கும் சக்தியையும் தருகின்றன.
இவ்வாறு நவீன்டிராசீரம் கூறி யுள்ளார்.
பழங்களை தின்று கொட்டைகளை எச்சங்களாக வெளியேற்றுவதன் மூலம் பழம் தரும் தாவரங்கள் பல இடங்களில் பரவுகின்றன. இதன் மூலம் சக்தியளிக்கும் பழங்களை தரும் பெர்ரி இன மர வகைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், உலகின் பல இடங்களில் அவை பரவ, இடப்பெயர்ச்சி செய்யும் பறவைகள் உதவுகின்றன.


http://senthilvayal.wordpress.com

ஆம்புலன்ஸ்




1809-ம் ஆண்டு நடைபெற்ற போரில், காயமடைந்த வீரர்களுக்கு சிகிச்சை அளித்து வந்தனர் பிரெஞ்சுக்காரர்கள். நடக்க முடிந்தவர்கள், ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் செல்ல முடிந்தவர்களை போர்க்களத்திற்கு அருகிலேயே ஒரு கூடாரம் அமைத்து முதலுதவி அளித்தனர். பிரெஞ்சு மொழியில் `நடத்தல்’ என்பதற்கான சொல் ஆம்புலேர் ((Ambulare). அதற்கு இணை யான ஆங்கிலச்சொல் (Amble) என்பதாகும்.

1942-ம் ஆண்டுகளில் `உதவி வேண்டுவோருக்கான புகலிடம்’ என்ற பொருளில் ஹாஸ்பிடல் என்ற சொல் வழங்கி வந்தது. `உதவி வேண்டுவோர் நடந்தோ அல்லது சுமக்கபட்டோ சென்றடையும் இடம்’ என்பதே ஆம்புலன்ஸ் என்பதன் நேரடியான மொழிபெயரப்பாகும்.

19-ம் நுற்றாண்டின் இடைக்காலத்தில் கிரிமியாவில் நடைபெற்ற போரில், காயமடைந்த வீரர்கள் குதிரைகளால் இழுக்கபட்ட வாகனங்களில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டனர். அந்த வாகனங்கள் `ஆம்புலன்ஸ்’ என்று அழைக்கபட்டன. தமிழில் இதை `அவசர ஊர்தி’ என்று குறிப்பிடுகிறார்கள்.

இதன் முலம் பாதிக்கபட்டவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டு சிகிச்சை அளிக்கப்படுவதால், ஏராளமான உயிர்கள் காப்பாற்றபடுகின்றன.

http://senthilvayal.wordpress.com

போக்குவரத்து விளக்குகள்!




பத்தொன்பதாம் நூற்றாண்டில் ரெயில்களின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்த வெள்ளோட்ட முயற்சியாக சிவப்பு, பச்சை, மஞ்சள் வண்ண விளக்குகள் பயன்படுத்தப்பட்டன. விபத்துகளையும், ரெயில்கள் ஒன்றோடு ஒன்று மோதுவதையும் தவிர்ப்பதற்கு எச்சரிக்கை விளக்கு தேவைப்பட்டது. அபாயத்தைக் குறிப்பதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகச் சிவப்பு வண்ணம் பயன்படுத்தப்பட்டு வந்ததால், `நிறுத்துவதற்கு’ அது எளிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

எச்சரித்து, செல்ல அனுமதிப்பதற்கு பச்சை வண்ணத்தைப் பயன்படுத்த 1830-களில் பொறியாளர்கள் முயன்றனர். ஆனால் சூரிய வெளிச்சம் பட்டபோது அவை தவறான சிக்னல்களை பிரதிபலித்தன. அதனால், எச்சரிப்பதற்கு மஞ்சள் வண்ணத்தையும், `செல்லலாம்’ என்று தெரிவிப்பதற்கு பச்சை வண்ணத்தையும் தேர்ந்தெடுத்து இப்பிரச்சினைக்குத் தீர்வு கண்டனர். முதன்முதலாக அமெரிக்காவின் கிளீவ்லாந்தில் போக்குவரத்து விளக்குகள் அமைக்கப்பட்டன. சராசரியாக ஒருவர் தனது வாழ்நாளில் இரண்டு வார காலத்தை போக்குவரத்து விளக்குகளுக்காகக் காத்திருப்பதில் செலவிடுகிறார்.

http://senthilvayal.wordpress.com

தட்டச்சு எந்திரம்



எழுத்துக்களையும், எண்களையும் தட்டச்சு செய்ய `டைப்ரைட்டர்’ என்கிற தட்டச்சு எந்திரம் உதவி செய்யுது. இதன்மூலம் தகவல்களை ஆவணப்படுத்துவதில் ஒரு ஒழுங்குமுறை தோன்றியது. ஆனால், இந்த தட்டச்சு எந்திரத்தை எதற்காக கண்டுபிடிச்சாங்கன்னு தெரிஞ்சா, நீங்க ஆச்சரியப்படுவீங்க!

பார்வையற்றவர்களுக்கு உதவுற மாதிரி தான் முதன்முதல்ல தட்டச்சு எந்திரத்தை வடிவமைச்சாங்க. முதன்முதலாக அமெரிக்காவுல 1827-ம் ஆண்டு வில்லியம் பர்ட் என்பவர் ஒரு தட்டச்சு எந்திரத்தை உருவாக்கினார். அது `டைப்போகிராபர்’னு அழைக்கப்பட்டுச்சு. ஆனால், அதனுடைய மாதிரி எதுவும் இப்ப கிடையாது. அவருக்குப் பிறகு பல ஆராய்ச்சியாளர்கள் தட்டச்சு எந்திரத்தை வடிவமைக்க முயற்சி செஞ்சாங்க. 1873-ம் ஆண்டு அனைவரும் பயன்படுத்தக்கூடிய வகையிலான தட்டச்சு எந்திரம் வடிவமைக்கப்பட்டது. கிறிஸ்டோபர் ஷோவ்ஸ், சாமுவேல் சோல், கார்லோஸ் கிளிட்டன் ஆகிய மூன்று அமெரிக்கர்களும் சேர்ந்து அதை தயாரிச்சாங்க. அதன்பின்னர் பல்வேறு வசதிகளுடன் தட்டச்சு எந்திரங்கள் மாற்றியமைக்கப்பட்டன. கணினிகளுக்கு முன்னோடியா இதைச் சொல்றாங்க. தற்போது இதன் பயன்பாடுகள் குறைவா இருந்தாலும், கணினியை எளிதா பயன்படுத்த தட்டச்சு எந்திரம் உதவுது.