Thursday, December 15, 2011

ஆதர்அடையாள அட்டை


http://appointments.uidai.gov.in/



இந்தியாவில் இருக்கும் அனைவருக்கும் UID(Unique Identification card) எனப்படும் அடையாள அட்டையை இந்திய அரசு வழங்கி கொண்டுள்ளது. இந்த அடையாள அட்டை UIDAI(Unique Identification Authority of India) என்ற அமைப்பின் மூலம் இந்திய அரசு தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் இந்த அடையாள அட்டையை வழங்கி வருகிறது. குறிப்பிட்ட சில தபால் நிலையங்களில் மட்டும் தான் இந்த அடையாள அட்டை வழங்கும் பணி நடைபெறுகிறது. ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 100 பேர் தான் ஒரு அலுவலகத்தில் பதிவு செய்ய முடியும்.

மற்றவர்கள் திரும்பி செல்ல வேண்டியது தான். முதலில் செல்பவர்களுக்கே முன்னுரிமை என்பதால் அதிகாலையிலேயே சென்று இதற்க்காக லைனில் காத்து கொண்டிருக்க வேண்டிய சிரமம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு UIDAI அமைப்பு ஆன்லைனில் Appointment வாங்கும் வசதியை கொண்டு வந்துள்ளது. ஆன்லைனில் Appointment வாங்கிவிட்டால் சரியான நேரத்திற்கு சென்று சுலபமாக ஆதர் அடையாள அட்டையை பதிவு செய்து விடலாம். இதற்க்காக மணிக்கணக்கில் லைனில் காத்து கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.

Appointment ஆன்லைனில் பதிவு செய்ய :இதற்காக ஒரு http://appointments.uidai.gov.in/ இணையப்பகுதியை உருவாக்கி உள்ளது.



தற்பொழுது சோதனை ஓட்டமாக இந்த வசதி குறிப்பிட்ட சில மாநிலங்கள் மற்றும் நகரங்களுக்கு(Delhi, Chandigarh, Maharashtra, Haryana, Himachal Pradesh, Punjab) மட்டும் தான் வழங்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலத்திற்கும் இந்த வசதி கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அந்த லிங்கில் சென்று அதில் கேட்கப்படும் முழுவிவரங்களை கொடுத்த பின்னர் Fix Appointment என்பதை அழுத்தினால் உங்களுக்கான நேரம் ஒதுக்கப்படும். உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும்.



உங்களுக்கு இது போன்று விண்டோ வரும் இதில் நீங்கள் எப்பொழுது யாரை பார்க்க வேண்டும் என்ற அனைத்து தகவல்களும் இருக்கும். இதை ஒரு Print எடுத்துக்கொண்டு அதனோடு உங்களின் ID Proof மற்றும் Address proof போன்றவைகளை எடுத்து கொண்டு குறிப்பிட்ட அதிகாரியை பார்த்து உங்கள் அடையாள அட்டையை பதிவு செய்து விடலாம்.

அடையாள சான்றிதழ்கள் என்னென்ன கொண்டு செல்லலாம்:
Id Proof மற்றும் Address Proof க்கு எவைகளை கொண்டு செல்ல வேண்டும் என்பதில் சிலருக்கு குழப்பம் உண்டாகலாம். அவர்கள் கீழே உள்ள பதத்தில் உள்ள சான்றிதழ்களில் ஏதேனும் ஒன்றினை கொண்டு செல்லலாம்.



ஆன்லைனில் Enrolment Form டவுன்லோட் செய்ய:
தபால் அலுவலகத்திற்கு சென்று படிவத்தை பூர்த்தி செய்வது தாமதமாகும் என்பர் எண்ணினால் இந்த லிங்கில் சென்று Enrolment Form டவுன்லோட் செய்து வீட்டில் இருந்தே பூர்த்தி செய்து கொண்டு சென்றால் வேலை மேலும் சுலபமாகிவிடும்.

வாங்கிய Appointment Cancel (or) நேரத்தை மாற்றி அமைக்க:
ஒருவேளை நீங்கள் Appointment வாங்கிய நேரத்தில் போக முடியவில்லை என்றால் தயவு செய்து உங்கள் Appointment Cancel செய்து விடுங்கள் அல்லது நேரத்தை மாற்றி கொள்ளுங்கள். அதற்க்கு இந்த லிங்கில் http://appointments.uidai.gov.in/frmReScheduleEnrolment.aspx கிளிக் செய்து செல்லுங்கள்.



இதில் உங்களின் மொபைல் எண்ணையும், Token ID கொடுத்து தேவையான பட்டனை அழுத்தி பயன்படுத்தி கொள்ளுங்கள்.
மேலும் சந்தேகங்களுக்கு:
உங்களுக்கு இந்த Aadhar அடையாள அட்டையை பற்றி மேலும் ஏதேனும் சந்தேகம் என்றால் Toll free: 1800-180-1947 மற்றும் Email: appointments@uidai.gov.in இவைகளை தொடர்பு கொண்டு கேட்கலாம்.



Tuesday, December 13, 2011

ஒய் திஸ் கொலைவெறி டி....



ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் படம் “3″. இப் படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்கிறார். தனுஷிற்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடித்து வருகிறார். புதுமுகம் அனிருத் என்பவர் இச்சையமைப்பாலராக் அறிமுகமாகிறார்.

இப் படத்தின் சூட்டிங் நடந்து வரும் வேளையில் சில வாரத்திற்கு முன்னர் இப்படத்தில் இருந்து சிங்கள் டிராக் ஆடியோவை ரிலீஸ் செய்தனர். “வை திஸ் கொலைவெறி கொலைவெறி டி…” என ஆரம்பிக்கும் இப்பாடலை ஆங்கிலம் கலந்த தமிழில் தனுஷே எழுதி பாடியிருக்கிறார்.

ஒரே வாரத்தில் கிட்டத்தட்ட 10லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த பாடலை கேட்டு ரசித்துள்ளனர். மகளிர் அமைப்பினர் உள்ளிட்ட சிலர் இந்த பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை பலரையும் இந்த பாடல் ரொம்பவே கவர்ந்துள்ளது. லட்சக்கணக்கான பேர் விரும்பி, ரசித்து பார்த்த கொலைவெறி பாடலுக்கு பின்னால் பல சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளன.

அது என்னவென்று படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தே கூறியுள்ளார். இது குறித்து இசையமைப்பாளர் அனிருத் கூறியதாவது……

“21வயது நிரம்பிய அனிருத்தின் கனவு, ஏக்கம் எல்லாமே இசை தானாம். சென்னை லயோலா கல்லூரியில் இந்தாண்டு தான் பி.காம் முடித்துள்ளார். இந்த இளம்வயதில் எப்படி உங்களுக்குள் இசை, ஆர்வமும், ரசிகர்களின் ரசனையும் புரிந்தது என்று கேட்டால், சிறு வயது முதலே எனக்கு இசை ஆர்வம் அதிகம்.

சந்தியா என்ற டீச்சரிடம் வெஸ்டன் மியூசிக் கற்றுக்கொள்ள தொடங்கினேன். அப்படியே தொடர்ந்து பியானோ உள்ளிட்ட பல்வேறு இசை கருவிகளையும் கற்றுக்கொண்டேன். படித்து கொண்டு இருக்கும்போதே பல விளம்பர படங்களுக்கு இசை சேர்ப்பு செய்திருக்கிறேன். இது எனக்குள் உள்ள இசை ஆர்வத்தை மேலும் தூண்டியது.

சரி ஐஸ்வர்யா தனுஷின் முதல்படமான 3 படத்தில் எப்படி உங்களுக்கு வாய்ப்பு வந்தது என்று கேட்டால், நான், தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ் மூவருமே நன்கு அறிமுகமானவர்கள் தான். அவர்களுடன் நிறைய குறும்படங்களில் வேலை பார்த்துள்ளேன். அதன் அடிப்படையில் என்னை இந்த படத்திற்கு இசையமைக்க தேர்வு செய்தனர். அது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது.

எங்க மூவரின் கூட்டணி கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். ஜாலியான மூடில் தான் எப்பவும் ‌ஒர்க் பண்ணுவோம் என்றவரிடம், கொலைவெறி பாட்டு எப்படி கம்போஸ் பண்ணினுங்கே, தனுஷ் எப்படி டியூன் கேட்டு பாடல் வரிகள் எழுதி பாடினார் என்று கேட்டதற்கு, சொன்னா நம்பமாட்டிங்க சும்மா மியூசிக் கம்போஸ் பண்ணிகிட்டு இருந்தேன்.

அப்போ தனுஷ் திடீர்னு மைக் முன்னாடி வந்து நின்று பாடல் வரி கூட எதுவும் எழுதாமல் மியூசிக் கேட்டு பாட ஆரம்பச்சுட்டாரு. எல்லாமே தனுஷ் போட்ட வரிகள் தான். அதில் தமிழ், ஆங்கிலம் மிக்ஸ் பண்ணி எழுதி, பாடி இருக்கிறார். ஐஸ்வர்யாவுக்கும் இந்த பாட்டு ரொம்ப பிடிச்சுபோக இந்தபாட்டை உருவாக்கினோம். ஆனா அப்போ எங்களுக்கு தெரியாது. இந்தபாட்டு இவ்வளோ பெரிய ஹிட்டாகும் என்று.

இளைஞர்கள் விரும்பி கேட்பாங்கனு நினைச்சோம். ஆனா எல்லா வயசுக்காறங்களும் இந்தபாட்டு ரசிக்கிறாங்க. தமிழ்நாட்டுல மட்டுமல்ல வெளிநாடுகளிலும் இந்த பாடல் ஹிட்டாகியுள்ளது. இதனால் எங்க டீமே ரொம்ப சந்தோஷமா இருக்கோம் என்றார்.

3 படத்தில் மொத்தம் 10 பாட்டு இருக்காம். அதில் ஒரு பாடல் ரீ-மிக்ஸ் பாடலாம். முதல்முறையாக தனுஷ், ஸ்ருதியுடன் சேர்ந்து ஒரு டூயட் பாட்டு பாடியிருக்கிறாரம். இதுதவிர கிளப் சாங்கை அனிருத்தும், மற்றொரு பாடலை முன்னணி பிரபல பாடகர்களும் பாடியிருக்கிறார்களாம். அதுமட்டுமல்ல ஏர்டெல் சூப்பர் சிங்கரில் வெற்றி பெற்ற இருவருக்கு இந்த படத்தில் பாட வாய்ப்பு கொடுத்துள்ளார்களாம். இளம் நடிகர், நடிகை, டைரக்டர், இசையமைப்பாளர், பாடகர்கள் என படம்முழுக்க மொத்தமும் சிறு வயது ஆட்‌களே.

முதல்படத்தின் பாடல்களே வெளிவராத நிலையில் படத்தில் உள்ள ஒரு பாடல் மட்டும் சூப்பர் ஹிட்டாகியிருப்பது அனிருத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இவரைத்தேடி பாலிவுட் அழைப்புகளும் வந்துள்ளன. பாலிவுட்டின் பெரிய சினிமா கம்பெனிகள் இரண்டு தங்களின் படத்திற்கு இசையமைக்க இவரை அணுகியுள்ளது. ஆனால் இப்போது 3 படத்தில் அனிருத் பிஸியாக இருப்பதால், அதை முடித்த பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறார்.

கொலைவெறியின் வெற்றி, அனிருத்துக்கு உலக அளவில் ஒரு பெரிய திருப்பத்தை உண்டு பண்ணியிருக்கிறது என்றால் அது மிகையல்ல..!

யோ பாய்ஸ் யாம் சிங்கிங் சாங்
சூப் சாங்
பலாப் சாங்
ஒய் திஸ் கொலைவெறி கொலைவெறி டி..
ஒய் திஸ் கொலைவெறி கொலைவெறி டி..
ரிதம் கரெக்ட்
ஒய் திஸ் கொலைவெறி கொலைவெறி டி..
மைந்தின் திஸ்
ஒய் திஸ் கொலைவெறி டி

டிச்டன்சேல மூணு மூணு
மூணு கலரு வ்ஹிடு
வைட் பக்க்க்ரௌந்து நிக்ஹ்டு நிக்ஹ்டு
நிக்ஹ்டு கலரு பளக்கு

ஒய் திஸ் கொலைவெறி கொலைவெறி டி..
ஒய் திஸ் கொலைவெறி கொலைவெறி டி..

வைட் ச்கினு கிர்லு கிர்லு
கிர்லு ஹீர்டு பளக்கு
இயேசு இயேசு மீது மீது
மி புர்டுரே தரக்

ஒய் திஸ் கொலைவெறி கொலைவெறி டி..
ஒய் திஸ் கொலைவெறி கொலைவெறி டி..

மாமா நோட்ஸ் எடுத்துக்கோ
அப்டியே கைல ச்னக்க்ஸ் எடுத்துக்கோ
ப ப பாண் ப ப பாண் ப ப பா ப ப பாண்
சரியாய் வாசி
சூப்பர் மாமா ரெடி
ரெடி 1 2 3 4
வஹா வாட் எ சங்கே ஓவர் மாமா


ஓகே மாமா நொவ் துன் சங்கு

கைல கிளாஸ்
ஒன்லி இங்கிலீஷ்..

ஹந்து ல கிளாஸ்
கிளாஸ் ல ஸ்காட்ச்
எஎஸ் புல்லா திரு
எம்ப்டி லிபு
கிர்லு கொமெஉ
லைப் ரேவேர்சே கீறு
லோவ்வு லோவ்வு
ஒத் மி லோவ்வு
யு ஷோவேத் மீ பெவ்
காவு காவு ஹோலி காவு
இ வான்ட் உ ஹெஅர் நோவு
கோட் இம் டிங் நோவு
ஷி இஸ் ஹாப்பி ஹோவு

திஸ் சாங் போர் சூப் போயசு
வி டோன்ட் ஹவே சாய்ஸ்உ

ஒய் திஸ் கொலைவெறி கொலைவெறி டி..
ஒய் திஸ் கொலைவெறி கொலைவெறி டி..

நொவ் இன் இங்கிலீஷ்

yo boys i am singing song
soup song
flop song
why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di
rhythm correct
why this kolaveri kolaveri kolaveri di
maintain please
why this kolaveri..di

distance la moon-u moon-u
moon-u color-u white-u
white background night-u nigth-u
night-u color-u black-u

why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di

white skin-u girl-u girl-u
girl-u heart-u black-u
eyes-u eyes-u meet-u meet-u
my future dark

why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di

maama notes eduthuko
apdiye kaila snacks eduthuko
pa pa paan pa pa paan pa pa paa pa pa paan
sariya vaasi
super maama ready
ready 1 2 3 4

whaa wat a change over maama

ok maama now tune change-u

kaila glass
only english..

hand la glass
glass la scotch
eyes-u full-aa tear-u
empty life-u
girl-u come-u
life reverse gear-u
lovvu lovvu
oh my lovvu
you showed me bouv-u
cow-u cow-u holi cow-u
i want u hear now-u
god i m dying now-u
she is happy how-u

this song for soup boys-u
we dont have choice-u

why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di

flop song

---------------

Almost everyone can understand this song..
anyway here are the meaning for few words

Kolaveri - Killer rage or Murderous Rage.

"Soup Song" - Love failure Song
"Soup Boys" - Boys who failed in love

Tuesday, December 6, 2011

கொஞ்சம் மாறுங்கள், நிறைய மிச்சமாகும்!

`சிக்கனமான வாழ்க்கை தான் சீரான வாழ்க்கை’ என்பது கிராமத்துப் பழமொழி. இதற்கு மாறாக சென்னை போன்ற பெருநகரங்களில் சிக்கனம் என்றால் என்ன என்று கேட்கும் அளவுக்கு பலரது வாழ்க்கை நிலை உள்ளது.

கையில் கிரிடிட் கார்டு இருந்தால் போதும்… கடைகளில் இருக்கும் பொருட்கள் அனைத்தையும் வாங்கி வீட்டில் அடைத்து வைத்துவிடுகிறார்கள். அதில் பாதிக்குமேல் தேவையே இருக்காது. சும்மா இருக்கட்டுமே என்று வாங்கி வீட்டில் அடைத்து விட்டு, மாதக்கடைசியில் அவசர செலவுக்கு கையில் காசில்லாமல் திண்டாடிக் கொண்டி ருப்பார்கள்.

சிக்னமாக வாழ்வதற்கு என்னென்ன வழிமுறைகளை கடைப்பிடிக்கலாம்?

* ஏதேனும் ஒரு பொருளை வாங்குவதற்கு முன்பு ஒருமுறைக்கு இருமுறை யோசியுங்கள். உங்களால் வீட்டில் உள்ள துணிகளைத் துவைத்து விட முடியும் என்றால், வாஷிங்மெஷின் தேவையில்லைதான். பக்கத்து வீட்டில் வாங்கி விட்டார்களே அதனால் நாமும் வாங்கி விடுவோம் என்ற வீண் பகட்டுக்காக ஒருபோதும் வாங்காதீர்கள். அதுபோல கையினால் துவைத்து விடக்கூடிய ஒன்றிரெண்டு துணிகளுக்காக வாஷிங் மிஷினை பயன் படுத்தாதீர்கள். மின்சார செலவு எக்கச்சக்கமாகிவிடும். உங்கள் உடல் உழைப்பும் குறைந்து போகும்.

* கூடுமானவரை ஒன்றிரெண்டு முறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்து விடும் `யூஸ் அண்ட் த்ரோ’ பொருட்களை வாங்கப் பழகிக் கொள்ளுங்கள். உதாரணத்துக்கு, முகச்சவரம் செய்யக் கூடிய ரேசர், எழுத உதவும் பால் பாயிண்ட் பேனா வகைகள். இவை விலை குறைவு. அதிக விலை கொடுத்து ஒரு பொருளை வாங்கி அதை பாதுகாப்பதும், பராமரிப்பதும் ஏன்?

* நீங்கள் வாங்கும் புத்தகங்களை உங்கள் நண்பர்களுக்கு படிக்கக் கொடுங்கள். அதுபோல் அவர்கள் வாங்கியிருப்பவற்றை நீங்கள் படியுங்கள். இதனால் ஒரே நேரத்தில் எல்லாப் புத்தகங்ளையும் காசு கொடுத்து வாங்க வேண்டியதில்லை.

* உங்கள் குழந்தைகள் உபயோகப்படுத்திய நோட்டுப்புத்தகங்களை பழைய பேப்பர் வாங்குவோரிடம் தூக்கிப்போட்டு விடாதீர்கள். அதில் எழுதாத சில பக்கங்கள் நிச்சயம் இருக்கக்கூடும். அந்த தாள்களை சேகரித்து தினசரி குறிப்புகள் எழுதுவதற்கான குறிப் பேடு தயாரியுங்கள். பால், லாண்டரி போன்ற அன்றாட செலவின கணக்குகளை எழுதி வைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

* உங்களுக்கு கிடைக்கும் பரிசுப் பொருட்கள் மீது சுற்றி வைக்கப்பட்டிருக்கும் வண்ணக் காகிதங்களை பத்திரப்படுத்தி வையுங்கள். வேறு யாருக்காவது நீங்கள் பரிசு கொடுக்க நேரும்போது பரிசுப்பொருள் மீது அந்த வண்ணக்காகிதத்தை சுற்றி கொடுக்கலாம்.

* கடையில் ஒருசில பொருட்களே வாங்க வேண்டியிருந்தால், அங்கு வைக்கப்பட்டிருக்கும் பெரிய பிளாஸ்டிக் கூடையை தூக்காதீர்கள். கூடையில் நிறைய இடம் இருக்கிறதே என்று தேவையில்லாத பொருட்களை வாங்கி கூடையை நிரப்பிக் கொண்டிருப்பீர்கள்.

* ரீ-சார்ஜபிள் பேட்டரியோடு, அதை ரீ-சார்ஜ் செய்யும் கருவியையும் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அடிக்கடி பேட்டரி வாங்க வேண்டிய அவசியம் இருக்காது.

* மின்சாரத்தை சேமிப்பது குறித்து வீட்டில் உள்ளவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள். தேவையில்லாமல் லைட் எரிவது கூடுதல் யூனிட்டுகளை உங்கள் கணக்கில் சேர்த்து விடும். மின் சிக்கனம் குறித்து அச்சடிக்கப்பட்டுள்ள ஸ்டிக்கரை வீட்டின் சுவிட்ச் போர்டில் ஒட்டி வையுங்கள். எவ்வளவுக்கு எவ்வளவு மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த முடியுமோ, அவ்வளவுக்கவ்வளவு புவி வெப்பமயமாதலை தடுக்க முடியும். உங்கள் வீடும் அதிக சூடு இல்லாமல் இருக்கும்.

* உங்கள் வீட்டின் ஜன்னல் மேற்குப்புறமாக இருந்தால் ஏராளமான செடிகொடிகளை வளருங்கள். இது கோடைகால வெப்பத்தை குறைக்கும். வீட்டுத்தோட்டத்தில் இருக்கும் செடிகளுக்கு மாலை நேரத்தில் தண்ணீர் ஊற்றுங்கள். பகல் நேரத்தில் ஊற்றினால் விரைவில் சூரிய ஒளியில் தண்ணீர் ஆவியாகி விடும். வீட்டுக்குள் வளர்க்கப்படும் செடிகளுக்கு, சமையல் செய்யும்போது கிடைக்கும் மிச்சம் மீதி தண்ணீரை ஊற்றப் பழகிக் கொள்ளுங்கள்.

* மாதம் ஒருமுறையாவது ஏர்கண்டிஷன் கருவியில் வைக்கப்பட்டிருக்கும் பில்டர், எலெக்ட்ரானிக் குக்கர், மிக்சி, பிரிஜ் போன்றவற்றை சுத்தமாக துடைத்து வையுங்கள்.

* நண்பர்களுக்கு பரிசுகள் வழங்குவதாக இருந்தால் சூரிய வெப்பத்தில் இயங்கக்கூடிய பேட்டரி சார்ஜர், லைட் போன்றவற்றை வழங்குங்கள். அதை பயன்படுத்தவும் சொல்லிக் கொடுங்கள்.

நன்றி-தினத்தந்தி

இதயம் காக்கும் `சூப்பர் புராக்கோலி’!




`புராக்கோலி’ என்பது ஒரு மேலைநாட்டுக் காய்கறி வகை. தற்போது நம்மூர் குளுகுளு காய்கறி அங்காடிகளிலும் கிடைக்கிறது.

இதுதொடர்பான ஓர் இன்ப அதிர்ச்சியான விஷயம், இதயநோய், புற்றுநோய்கள் வராமல் தடுக்கும் ஒரு `சூப்பர் புராக்கோலி’யை உருவாக்கியிருப்பதாக இங்கிலாந்து ஆய்வாளர்கள் கூறும் தகவல்.

நார்விக்கில் உள்ள உணவு ஆராய்ச்சி மற்றும் ஜான் இன்ஸ் மையத்தினர் இதுதொடர்பான ஆய்வில் ஈடுபட்டனர். இவர்கள் கூறுகையில், தாங்கள் உருவாக்கியுள்ள புதிய புராக்கோலி, வழக்கமான புராக்கோலியைப் போலவே இருக்கும். ஆனால் ஆரோக்கியத்துக்கு ஊக்கமளிக்கும் `குளூக்கோராபேனின்’ என்ற ஊட்டச்சத்தை மும்மடங்கு கொண்டுள்ளது என்கிறார் கள்.

இந்த `குளூக்கோராபேனின்’, இதயநோய் மற்றும் குடல், புராஸ்டேட் புற்றுநோய்கள் உள்ளிட்டவற்றுக்கு எதிரான தடுப்பாக அமையும் என்று ஆய்வுகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன.

இந்த சூப்பர் புராக்கோலி, மாரடைப்பை ஏற்படுத்தும் காரணிகளைக் குறைக்கிறது, புற்றுநோயின் ஆரம்பகட்டத்தில் காணப்படும் கட்டுப்பாடற்ற செல் பிரிதலை நிறுத்துகிறது, நோய்களை எதிர்த்துப் போராடும் `ஆன்டி ஆக்சிடன்ட்களை’ ஊக்குவிக்கிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

ஆய்வுக்குழுவுக்குத் தலைமை வகித்த ரிச்சர்ட் மிதன் கூறும்போது, “ஆரோக்கியம் காப்பதில் இது போன்ற காய்கறிகளின் பங்கு குறித்த புதிய தெளிவை எங்கள் ஆய்வு வழங்கியிருக்கிறது. இதன்மூலம், நாமë அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் காய்கறிகளை மேலும் சத்து நிறைந்ததாக உருவாக்கலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது” என்று கூறுகிறார்.

இங்கிலாந்து போன்ற மேலைநாடுகளில் அதிகமாக விற்பனையாகும் புராக்கோலி, அங்கு மிகவும் விலை மலிவான காய்கறி என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி-தினத்தந்தி

செல்போன்- சில டிப்ஸ்கள்




ன்று எல்லோரது கைகளிலும் செல்போன் தவழ்கிறது. அழகழகான வடிவங்களில், விதவிதமான வசதிகளுடன் செல்போன்கள் கிடைக்கின்றன. அழைப்புகள், முகம் பார்த்து பேசும் வசதி, எஸ்.எம்.எஸ், எம்.எம்.எஸ்., விளையாட்டுகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் என ஏராளமான வசதிகள் இருப்பதால் அனைவருக்கும் செல்போன்கள் அத்தியாவசியமாகி விட்டன. அவை நீண்ட காலம் பயன்தர வேண்டுமா?

***

பேட்டரியின் ஆயுளில் கவனம் செலுத்தினால் செல்போன்களும் நீண்டகாலம் உழைக்கும். பேட்டரியின் ஆயுளை காக்க எப்போது பேட்டரி சார்ஜ் தீர்கிறதோ அந்த நேரத்தில் சார்ஜ் செய்யத் தொடங்கினால் போதுமானது. ரெட் சிக்னல் காட்டியபின் அதிக நேரம் கழித்து சார்ஜ் செய்வதையும், நீண்ட நேரம் (விடியவிடிய) சார்ஜ் செய்வதும் கூடாது. இடையில் நிறுத்தி விடாமல் முழுவதும் சார்ஜ் ஏறிய பிறகுதான் உபயோகப்படுத்த வேண்டும்.

***

`புளூடூத்’ மெனு உள்ள செல்போன்களில் `புளூடூத்` உபயோகித்து முடித்ததும் அதை ஆப் செய்து விட வேண்டும். இது கதிர்வீச்சு முறையில் அருகில் உள்ள செல்போன்களை தொடர்பு கொள்ளும் வசதி என்பதால், அதிக சக்தியை பயன்படுத்திக் கொள்ளும். எனவே தேவையான நேரங்களில் பயன்படுத்திவிட்டு இணைப்பை துண்டிப்பது பேட்டரி சார்ஜை சேமிக்கும். புளூடூத் வழியாக வைரஸ்களும் பரவ வாய்ப்பிருப்பதால் அதை ஆப் செய்து வைத்திருப்பது செல்போனுக்கும் நல்லது.

***

தேவையற்ற சத்தங்களையும், வைப்ரேஷன் அதிர்வையும் எப்போதும் `ஆன்’ செய்து வைத்திருக்க வேண்டாம். உதாரணமாக `கிபோர்டு டோன்’, `ஸ்டார்ட் அப் டோன்’ ஆகியவை மிக அவசியமானவை அல்ல. எனவே இவற்றை குறைவாக பயன்படுத்தலாம். அதேபோல வைப்ரேஷன் அதிர்வு மீட்டிங் நேரத்திலும், சத்தம் நிறைந்த தியேட்டர் போன்ற இடங்களில் மட்டும் பயன்படுத்த வேண்டிய வசதி. இதை எப்போதும் `ஆன்’ செய்து வைத்திருப்பது பேட்டரி சார்ஜை வீணாக்கும்.

***

`பவர் சேவர் லைட்’, `பேக் லைட்` ஆகியவற்றை அணைத்து வைத்திருப்பது பேட்டரியின் ஆற்றலை மிச்சப்படுத்தும். `பேக் லைட்’ என்பது கீபோர்டின் பின்புறம் ஒளிரும் லைட் ஆகும். `டோன்’கள் உபயோகத்தில் இருக்கும்போது இதுபோன்ற `லைட்’கள் அவசியமில்லைதான். இரவு நேரத்தில் மட்டும் தேவைப்படுபவர்கள் `ஆன்’ செய்து பயன்படுத்தி பேட்டரியின் ஆயுளை காக்கலாம். `டிஸ்பிளே செட்டிங்ஸ்’-இல் இந்த ஆப்ஷன்கள் இருக்கும்.

***

பயோகப்படுத்தும் ஆப்ஷன்களை மட்டும் எப்போதும் `ஆக்டிவ்’-இல் வைத்திருக்க வேண்டும். எப்போதோ உபயோகிக்கும் ஆப்சன்களையும், தேவையில்லாத ஆப்சன்களையும், `ஆப்’ செய்து வைத்திருப்பது பேட்டரி ஆயுளை நீடிக்கும். இது செல்போனுக்கு மட்டுமல்லாது அனைத்துவிதமான எலக்ட்ரானிக் டிவைஸ்களுக்கும் பொருந்தும்.

***

ம்ப்யூட்டர், செல்போன்களில் உள்ள வேடிக்கை நிறைந்த எலக்ட்ரானிக் விளையாட்டுகள் எல்லோரையும் கவர்ந்த ஒன்று. அதனால்தான் சிறிது நேரம் ஓய்வு கிடைத்தாலும் சிறுவர்களும், இளைஞர்களும் `கேம்ஸ்`களில் மூழ்கி விடுகிறார்கள். நிஜத்தில் விளையாடுவது எப்படி உடலில் அதிகப்படியான கலோரிகளை எரிக்குமோ, அதுபோலவே செல்போனில் விளையாடுவது அதிக அளவில் பேட்டரி சார்ஜை காலியாக்கி விடும். பேட்டரி நலன் கருதினால் குறைவாக விளையாடுங்கள்.

***

தேவையற்ற ஆப்ஷன்களை எப்படி `ஆன்’ செய்து வைக்கக்கூடாதோ, அதுபோலவே பயன்படுத்தாத நேரங்களில் செல்போன்களையும் `ஆன்’ செய்து வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. நிறைய பேர் செல்போன்களை அணைத்து வைப்பதே கிடையாது. அவசர உதவி எண்கள் போல எல்லா நேரத்திலும் ஆனிலேயே இருக்கிறது. இதுவும் பேட்டரி சார்ஜை வீணாக்கும் செயல் தான். குறைந்தபட்சம் தூங்கும் நேரத்திலாவது அணைத்து வைக்கலாமே!

***

வர்ச்சிகரமாக தோன்றுவதற்காக ஸ்கிரீன் சேவர், மூவிங் வால்பேப்பர் ஆகியவற்றை பயன்படுத்துவதை பலரும் விரும்புகிறார்கள். இவை அதிகமாக சார்ஜ் உறிஞ்சுபவை. சாதாரண படங்களை வால்பேப்பருக்கு பயன்படுத்துவதன் மூலம் அதிக சார்ஜை மிச்சப்படுத்தலாம். அதேபோல `டவர்’ குறைவாக உள்ள இடங்களில் போன்களை உபயோகித்தால் நிறைய பேட்டரி ஆற்றல் வீணாகும். அப்போது `ஆப்’ செய்து வைக்கலாம்.

***

நீண்ட நேரம் நிலைத்து நிற்கக்கூடிய பேட்டரிகள் கொண்ட நவீன செல்போன்கள் நிறையவே கிடைக்கின்றன. எளிதாக சார்ஜ் செய்யும் வசதிகளுடைய போன்களும், பயன்படுத்தாத, தேவையற்ற ஆப்ஷன்களை தானாக ஆப் செய்துகொள்ளும் நவீன மொபைல்களும் கூட விற்பனைக்கு கிடைக்கின்றன. எனவே விலை குறைவாக இருக்கிறது என்று எண்ணி தரமற்ற செல்போன், பேட்டரிகளை வாங்கி விட்டு அடிக்கடி மாற்றிக் கொண்டிருக்க வேண்டாம்.

அழுவதாலும் நன்மை உண்டு!





கண்ணீர் விடுவதை யாரும் விரும்புவதில்லை என்பது உண்மை. ஆனால் உணர்ச்சிகளின் உச்சத்தில், அது சோகமாக இருந்தாலும், சந்தோஷமாக இருந்தாலும் கண்ணீர் கரை மீறுகிறது.

மனம் விட்டுக் கண்ணீர் சிந்தி அழுவதால் நன்மை உண்டு, மனதில் புதைந்திருக்கும் சோகம், பாரத்தை அது கரைக்கிறது என்று கூறப்பட்டு வந்த நிலையில், கண்ணீரால் விளையும் ஒரு புதிய நன்மையைக் கூறுகிறது ஒரு புதிய ஆய்வு.

அதாவது, கண்ணீர் விட்டு அழுவது ஒருவரின் சுய கவுரவத்துக்கு ஊக்கம் அளிக்கிறது, மனரீதியாக ஒரு தயார் நிலைக்கு உதவுகிறது என்கிறார்கள் ஆய்வாளர் கள்.

அமெரிக்காவின் இண்டியானா பல்கலைக்கழகம்- புலூமிங்டனை சேர்ந்த ஆய்வாளர்கள்தான் இதுகுறித்து ஆராய்ந்திருக்கிறார்கள். அவர்கள், கல்லூரி அளவிலான கால்பந்து போட்டிகளில் தோல்வியுறும்போது கலங்காத `உறுதியான’ மாணவர்களை விட, உடனடியாகக் கண்ணீர் சிந்தும் மாணவர்களுக்கு சுய கவுரவத்தின் அளவு அதிகமாக உள்ளதாகத் தெரிவிக்கிறார்கள்.

ஆய்வாளர்கள் மேலும் கூறும்போது, சகஅணி வீரர்களுடன் தொட்டுத் தழுவிப் பழகும் நெருக்கமான வீரர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகச் சொல்கிறார்கள்.

கால்பந்து வீரர்கள் களத்தில் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது, கண்ணீர் சிந்துவது போன்றவை ஆட்டத்தில் எவ்வாறு தாக் கத்தை ஏற்படுத்துகின்றன என்பதில் இந்த ஆய்வாளர்கள் கவனம் செலுத்தினர்.

இதுதொடர்பாக, 150 கல்லூரி கால்பந்து வீரர்களை ஆய்வு செய்தனர். அவர்களிடம், அழுகைக்கான வெவ்வேறு சூழ்நிலைகள் குறித்த விவரங்கள் கொடுக்கப்பட்டு, அவை தொடர்பான கருத்துகள் பெறப்பட்டன.

இந்த ஆய்வில் இறுதியாகத் தெரியவந்திருக்கும் விவரம், உணர்ச்சிகளை அடக்கி வைத்திருப்பதை விட அதை கண்ணீர் போன்ற வழிகளில் வெளிப்படுத்திவிடுவது நன்மை பயக்கும் என்பதே!