Tuesday, May 31, 2011

பிரமிடுக்கள் கண்டுபிடிப்பு

எகிப்தில் தொலைந்த 17 பிரமிடுக்கள் கண்டுபிடிப்பு


எகிப்து: எகிப்தில் நிலத்திற்கு அடியில் புதைந்துள்ள 17 பிரமிடுக்கள் 1000 கல்லறைகள் மற்றும் 3000 பண்டைய குடியேற்றங்கள் ஆகியன செய்மதி தொழிநுட்பத்தினால் கண்டுடறியப்பட்டுள்ளன.பேர்மிங்ஹாமில் உள்ள அலபாமா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளே இதனைக் கண்டுபிடித்துள்ளனர்.இன்ப்ரா ரெட் இமேஜிங் ( infra red imaging )என்ற தொழிநுட்பத்தின் மூலமே இவை கண்டறியப்பட்டுள்ளன. இவ்வாறு

கண்டறியப்பட்டுள்ளவற்றில் 2 பிரமிடுகளை தொல்பொருள் ஆய்வாளர்கள் நிலத்துக்கடியில் தோண்டி கண்டுபிடித்துள்ளனர். பூமியிலிருந்து 400 மைல்கள் தொலைவிலுள்ள செய்மதியில் பொருத்தப்பட்டுள்ள புகைப்படக்கருவிகள் மூலமே இவை இணங்காணப்பட்டுள்ளன. இப்புகைப்படக்கருவிகள் அதி சக்தி வாய்ந்தவை எனபதுடன் புவியின் மேற்பரப்பிலுள்ள 1 மீட்டருக்கும் குறைவான விட்டத்தை உடைய
பொருட்களையும் படம் பிடிக்கவல்லன. இது எகிப்திய வரலாற்றில் பாரிய மைல்கல்லாக கருதப்படுவதுடன் இத்தகைய பல பண்டைய கண்டுபிடிப்புக்கள் மேற்கொள்ளப்படலாம் என விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

சர்வதேச விண்வெளி மையம்

12 ஆண்டுகளாக நடந்த சர்வதேச விண்வெளி மைய கட்டுமான பணி முடிந்தது!



ஹுஸ்டன் : கடந்த 12 ஆண்டுகளாக நடந்து வந்த சர்வதே விண்வெளி மையத்தின் கட்டுமான பணி நேற்று இறுதி கட்டத்தை எட்டியது. விண்வெளி ஆய்வுக்காக பூமிக்கு மேலே 355 கி.மீ. தொலைவில் சர்வதே விண்வெளி மையம் கட்டும் முயற்சியில் 16 நாடுகள் ஈடுபட்டன. அமெரிக்க மற்றும் ரஷ்ய விண்கலங்களில் மாறி மாறி, பொருட்கள் மற்றும் விண்வெளி வீரர்கள் அனுப்பப்பட்டு சர்வதேச விண்வெளி மையம் அமைக்கும் பணி நடந்து வந்தது.

இந்த பணிகள் கடந்த 12 ஆண்டுகளாக தீவிரமாக நடந்து வந்தது. இதுவரை 4 லட்சத்து 55 ஆயிரம் கிலோ எடையுள்ள ஹார்டுவேர் பொருட்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் பொருத்தப்பட்டுள்ளன. இறுதி கட்டமாக 15 மீட்டர் நீளமுள்ள ரோபோ கிரேன் பொருத்தும் பணியை எண்டவர் விண்கலத்தில் சென்ற விண்வெளி வீரர்கள் பின்கி மற்றும் சேமிடோப் ஆகியோர் நேற்று முடித்தனர். இத்துடன் விண்வெளி மையத்தின் மொத்த கட்டுமான பணிகள் நிறைவடைந்துவிட்டன.

இத்தகவலை விண்வெளி மையத்திலிருந்து எண்டவர் விண்கல கமாண்டர் கெல்லி மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். சர்வதேச விண்வெளி மையத்தின் உள்கட்டமைப்பு தற்போது ஒரு போயிங் 747 ரக விமானம் அளவுக்கு பெரிதாக உள்ளது. மின்உற்பத்திக்காக வெளிப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சோலார் தகடுகள் கால்பந்து மைதானம் அளவுக்கு பெரிதாக உள்ளது.

விண்வெளிமையத்தில் பணிகள் முடிந்து விட்டதால் எண்டவர் விண்கலம் நாளை பூமிக்கு புறப்படுகிறது. அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில், வரும் புதன்கிழமை எண்டவர் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடைசி பயணத்தை முடிக்கும் எண்டவர் விண்கலம் மியூசியத்துக்கு அனுப்பப்பட உள்ளது.

அதன்பின் அட்லான்டிஸ் விண்கலம் ஜூலை 8ம் தேதி தனது கடைசி விண்வெளி பயணத்தை தொடங்குகிறது. நாசாவின் அணைத்து விண்கலங்களும் இந்தாண்டு மியூசியத்துக்கு செல்கின்றன. புதிய மாடல் விண்கலங்களை உருவாக்கும் முயற்சியில் நாசா தீவிரமாக இறங்கியுள்ளது.

இந்த புதிய விண்கலம் விண்வெளி மையத்தின் சுற்றுவட்ட பாதையை தாண்டி வெகு தொலைவில் செல்லும் அளவுக்கு திறன்பெற்றதாக இருக்கும். அதுவரை ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் மூலம், நாசா வீரர்கள் விண்வெளி மையத்துக்கு சென்று வருவர்.

ஆடி அடங்கும் வாழ்க்கைடா....


ஆடி அடங்கும் வாழ்க்கைடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கைடா....


முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடா

கண் மூடினால் காலில்லா கட்டிலடா

ஆடி அடங்கும் வாழ்க்கைடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கைடா....


பிறந்தோம் என்பதே முகவுரையாம்
பேசினோம் என்பதே தாய் மொழியாம்
மறந்தோம் என்பதே நித்திரையாம்
மரணம் என்பதே முடிவுரையாம்


ஆடி அடங்கும் வாழ்க்கைடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கைடா....


சிரிப்பவன் கவலையை மறைக்கின்றான்
தீமைகள் செய்பவன் அழுகின்றான்
இருப்போம் என்றே நினைப்பவர் கண்களை
இறந்தவன் அல்லவோ திறக்கின்றான்


ஆடி அடங்கும் வாழ்க்கைடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கைடா....


வகுப்பார் அதுபோல் வாழ்வதில்லை
வந்தவர் யாருமே நிலைத்ததில்லை
தொகுப்பார் சிலரதை சுவைப்பதில்லை
தொகுப்பார் சிலரதை சுவைப்பதில்லை
தொடங்குவார் சிலரதை முடிப்பதில்லை

ஆடி அடங்கும் வாழ்க்கைடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கைடா....

Thursday, May 26, 2011

அதிகாரம் - ஒழுக்கமுடைமை

குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - இல்லறவியல் அதிகாரம் -

குறள் 140:
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.
கலைஞர் உரை:
உயர்ந்தோர் ஏற்றுக் கொண்ட ஒழுக்கம் எனும் பண்போடு வாழக் கற்காதவர்கள் பல நூல்களைப் படித்திருந்தும்கூட அறிவில்லாதவர்களே ஆவார்கள்.
மு.வ உரை:
உலகத்து உயர்ந்தவரோடு பொருந்த ஒழுகும் முறையைக் கற்காதவர், பல நூல்களைக் கற்றிருந்த போதிலும் அறிவில்லாதவரே ஆவர்.
சாலமன் பாப்பையா உரை:
முந்திய அறநூல்கள் கூறியவற்றுள் இன்றைக்குப் பொருந்தாதவற்றை விலக்கியும், கூறாதனவற்றுள் பொருந்துவனவற்றை ஏற்றும் வாழக் கல்லாதவர், பல்வேறு நூல்களைக் கற்றவரே என்றாலும் அறிவில்லாதவரே

அதிகாரம் - ஒழுக்கமுடைமை

குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - இல்லறவியல் அதிகாரம் -

குறள் 139:
ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்.
கலைஞர் உரை:
தவறியும்கூடத் தம் வாயால் தகாத சொற்களைச் சொல்வது ஒழுக்கம் உடையவர்களிடம் இல்லாத பண்பாகும்.
மு.வ உரை:
தீய சொற்களைத் தவறியும் தம்முடைய வாயால் சொல்லும் குற்றம், ஒழுக்கம் உடையவர்க்குப் பொருந்தாததாகும்.
சாலமன் பாப்பையா உரை:
மறந்தும் தீய சொற்களைத் தம் வாயால் கூறுவது, ஒழுக்கம் உடையவர்க்கு முடியாது.

அதிகாரம் - ஒழுக்கமுடைமை

குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - இல்லறவியல் அதிகாரம் -

குறள் 138:
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.
கலைஞர் உரை:
நல்லொழுக்கம், வாழ்க்கையில் நன்மைக்கு வித்தாக அமையும். தீயொழுக்கம், தீராத துன்பம் தரும்.
மு.வ உரை:
நல்லொழுக்கம் இன்பமான நல்வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கும்; தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தைக் கொடுக்கும்.
சாலமன் பாப்பையா உரை:
நல்லொழுக்கம், அறமாகிய நன்மைக்கு வித்தாக அமைந்து இம்மை மறுமையிலும் இன்பம் தரும்; தீயொழுக்கமோ துன்பமே தரும்.

அதிகாரம் - ஒழுக்கமுடைமை

குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - இல்லறவியல் அதிகாரம் -

குறள் 137:
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.
கலைஞர் உரை:
நல்ல நடத்தையினால் உயர்வு ஏற்படும்; இல்லையேல் இழிவான பழி வந்து சேரும்.
மு.வ உரை:
ஒழுக்கத்தால் எவரும் மேம்பாட்டை அடைவர்; ஒழுக்கத்திலிருந்து தவறுதலால் அடையத் தகாத பெரும் பழியை அடைவர்.
சாலமன் பாப்பையா உரை:
ஒழுக்கத்தினால் உயர்வை அடைவர்; ஒழுக்கம் இல்லாதவர் வேண்டாத பழியை அடைவர்.

அதிகாரம் - ஒழுக்கமுடைமை

குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - இல்லறவியல் அதிகாரம் -

குறள் 136:
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து.
கலைஞர் உரை:
மன உறுதி கொண்டவர்கள் ஒழுக்கம் தவறுவதால் ஏற்படும் இழிவை உணர்ந்திருப்பதால், நல்லொழுக்கம் குன்றிடுமளவிற்கு நடக்க மாட்டார்கள்.
மு.வ உரை:
ஒழுக்கம் தவறுதலால் குற்றம் உண்டாவதை அறிந்து, மனவலிமை உடைய சான்றோர் ஒழுக்கத்தில் தவறாமல் காத்துக் கொள்வர்.
சாலமன் பாப்பையா உரை:
ஒழுக்கம் இழந்தால் தனக்குக் குலத்தாழ்வு உண்டாகும் என அறியும் மன உறுதி உடைய பெரியோர், கடினமே என்றாலும் ஒழுக்கத்திலிருந்து விலகமாட்டார்.

அதிகாரம் - ஒழுக்கமுடைமை

குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - இல்லறவியல் அதிகாரம் -

குறள் 135:
அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு.
கலைஞர் உரை:
பொறாமையுடையவனுக்கும், நல்லொழுக்கமில்லாதவனுக்கும் அமையும் வாழ்வு, உயர்வான வாழ்வாகக் கருதப்பட மாட்டாது.
மு.வ உரை:
பொறாமை உடையவனிடத்தில் ஆக்கம் இல்லாதவாறு போல, ஒழுக்கம் இல்லாதவனுடைய வாழ்க்கையில் உயர்வு இல்லையாகும்.
சாலமன் பாப்பையா உரை:
பொறாமை உள்ளவனுக்குச் செல்வம் இல்லை என்பது போல், ஒழுக்கம் இல்லாதவனுக்கு உயர்குலம் என்பதும் இல்லை.

அதிகாரம் - ஒழுக்கமுடைமை

குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - இல்லறவியல் அதிகாரம் -

குறள் 134:
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.
கலைஞர் உரை:
பார்ப்பனன் ஒருவன் கற்றதை மறந்துவிட்டால் மீண்டும் படித்துக் கொள்ள முடியும்; ஆனால், பிறப்புக்குச் சிறப்பு சேர்க்கும் ஒழுக்கத்திலிருந்து அவன் தவறினால் இழிமகனே ஆவான்.
மு.வ உரை:
கற்ற மறைப் பொருளை மறந்தாலும் மீண்டும் அதனை ஓதிக் கற்றுக் கொள்ள முடியும்; ஆனால் மறை ஓதுவனுடைய குடிப்பிறப்பு, ஒழுக்கம் குன்றினால் கெடு்ம்.
சாலமன் பாப்பையா உரை:
பார்ப்பான் தான் கற்ற வேதத்தை மறந்து போனாலும் பிறகு கற்றுக் கொள்ளலாம்; ஆனால், அவன் பிறந்த குலத்திற்கு ஏற்ற, மேலான ஒழுக்கத்திலிருந்து தாழ்ந்தால் அவன் குலத்தாலும் தாழ்வான்.

அதிகாரம் - ஒழுக்கமுடைமை

குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - இல்லறவியல் அதிகாரம் -

குறள் 133:
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.
கலைஞர் உரை:
ஒழுக்கம் உடையவராக வாழ்வதுதான் உயர்ந்த குடிப்பிறப்புக்கு எடுத்துக் காட்டாகும். ஒழுக்கம் தவறுகிறவர்கள் யாராயினும் அவர்கள் இழிந்த குடியில் பிறந்தவர்களாகவே கருதப்படுவர்.
மு.வ உரை:
ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகி விடும்.
சாலமன் பாப்பையா உரை:
தனி மனிதன் தான் வகிக்கும் பாத்திரத்திற்கு ஏற்ற ஒழுக்கம் உடையவனாக வாழ்வதே குடும்பப் பெருமை; அத்தகைய ஒழுக்கம் இல்லாது போனால் இழிந்த குடும்பத்தில் பிறந்தது ஆகிவிடும்.

அதிகாரம் - ஒழுக்கமுடைமை

குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - இல்லறவியல் அதிகாரம் -


குறள் 132:
பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை.
கலைஞர் உரை:
எந்தெந்த வழிகளில் ஆராய்ந்தாலும் வாழ்க்கையில் ஒழுக்கமே சிறந்த துணை என்பதால், எத்தகைய துன்பத்தை ஏற்றாவது அதைக் காக்க வேண்டும்.
மு.வ உரை:
ஒழுக்கத்தை வருந்தியும் போற்றிக் காக்க வேண்டும்; பலவற்றையும் ஆராய்ந்து போற்றித் தெளிந்தாலும், அந்த ஒழுக்கமே வாழ்க்கையில் துணையாக விளங்கும்.
சாலமன் பாப்பையா உரை:
எதனாலும், அழிந்து போகாமல் ஒழுக்கத்தை விரும்பிக் காத்துக்கொள்க; அறங்கள் பலவற்றையும் ஆய்ந்து, இம்மை மறுமைக்குத் துணையாவது எது எனத் தேர்வு செய்தால் ஒழுக்கமே துணையாகும்.

அதிகாரம் - ஒழுக்கமுடைமை

குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - இல்லறவியல் அதிகாரம் -

குறள் 131:
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
கலைஞர் உரை:
ஒருவர்க்கு உயர்வு தரக் கூடியது ஒழுக்கம் என்பதால், அந்த ஒழுக்கமே உயிரைவிட மேலானதாகப் போற்றப்படுகிறது.
மு.வ உரை:
ஒழுக்கமே எல்லார்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரை விடச் சிறந்ததாகப் போற்றப்படும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒழுக்கம், அதை உடையவர்க்குச் சிறப்பைத் தருவதால் உயிரைக் காட்டிலும் மேலானதாக அதைக் காக்க வேண்டும்.

பொதுஅறிவு


1. உலோக கம்பி வயர்களை விட பைபர் ஆப்டிக் வயர் மிகவும் மெல்லியதாக உள்ளது. இருப்பினும் இது ஒரே நேரத்தில் அதிக தொலைப்பேசி இணைப்புகளை எடுத்துச் செல்கிறது!
சரி: ஆப்டிக்கல் பைபர் வயர் சுத்திகரிக்கப்பட்ட கண்ணாடியால் செய்யப்பட்டுள்ளது. சில பைபர் ஒயர்கள் ஒரே சமயத்தில் ஒரு லட்சம் தொலைப்பேசி இணைப்பு களை எடுத்துச் செல்கிறது.

2. மார்க்கோ போலோ என்பவர்தான் சீனாவிலிருந்து ஐரோப்பாவிற்கு ஐஸ்கிரீமைக் கொண்டு வந்தவர்!
தவறு: இத்தாலியின் டிராவலர் மார்க்கோ போலோ என்பவர்தான் ஐரோப்பாவிற்கு ஐஸ்கிரீமை அறிமுகப் படுத்தினார். ஆனால், இது உண்மை அல்ல. ஐரோப்பாவில் 17ம் நூற்றாண்டிலிருந்தே மக்கள் ஐஸ்கிரீமை பயன்படுத்துகின்றனர். அந்த சமயத்தில் போலோ இறந்து மூன்று நூற்றாண்டுகள் ஆகிவிட்டது.

ஜோக்ஸ்!

குரங்கு செய்த குறும்பு!

மொபைல் பேமெண்ட் சிஸ்டத்தை அறிமுகப்படுத்துகிறது கூகுள்



யூயார்க் : இணையதள ஜாம்பவானான கூகுள் நிறுவனம், மொபைல் பேமெண்ட் சிஸ்டத்தை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்‌கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இதற்காக, சர்வதேச அளவில், கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு சேவையில் இரண்டாவது இடத்தில் உள்ள மாஸ்டர் கார்டு நிறுவனத்துடன் இணைந்து செயல்பட உள்ளது. கூகுள் நிறுவனம், மாஸ்டர்கார்டு மற்றும் சிட்டி குரூப் உடன் இணைந்து மொபைல் பேமெண்‌ட் சிஸ்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக வால்ட் ஸ்டீரிட் பத்திரி‌கை, கடந்த மார்ச் மாதத்தில் செய்தி வெளியிட்டிருந்தது குறி்ப்பிடத்தக்கது. ஆனால், மாஸ்டர்கார்டு மற்றும் சிட்டி குரூப் இதுகுறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று அப்போது தெரிவித்திருந்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. வளர்ச்சியடைந்த நாடுகளில், குறிப்பாக இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் பலசரக்கு பொருட்களிலிருந்து வாகனங்களில் பெட்ரோல் நிரப்புவது வரையிலான அனைத்து விசயங்களையும் மொபைல்போன் உதவி கொண்டே பெருமளவில் நடைபெற்று வருகிறது. இதற்காக, கூகுள் நிறுவனமும் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் வண்ணமாக, இந்த மொபைல் பேமெண்ட் சிஸ்டத்தை அறிமுகம் செய்ய உள்‌ளோம். முதற்கட்டமாக, கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்ட் ஆபரேடிங் சிஸ்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஸ்மார்ட்போன்களில் இந்த சேவை துவக்கப்பட உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.