Friday, August 26, 2011

கடவுள் பாதி, மிருகம் பாதி...

படம் : ஆளவந்தான்
பாடல் : கடவுள் பாதி
இசை : ஷங்கர்-எசன்-லாய்
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : கமலஹாசன்

கடவுள் பாதி, மிருகம் பாதி,
கலந்து செய்த, கலவை நான்,

வெளியே மிருகம்,
உள்ளே கடவுள்,
விளங்க முடியா,
கவிதை நான்,

மிருகம் கொன்று,
மிருகம் கொன்று,
கடவுள் வளர்க்க,
பார்க்கின்றேன்,

ஆனால்…
கடவுள் கொன்று,
உணவாய் தின்று,
மிருகம் மட்டும்,
வளர்கிறதே,

நந்தகுமரா,
நந்தகுமரா,
நாளை மிருகம் கொல்வாயா?
மிருகம் கொன்ற,
எச்சம் கொண்டு,
மீண்டும் கடவுள் செய்வாயா?

குரங்கில் இருந்து,
மனிதன் என்றால்,
மனிதன் இரையாய் ஜனிப்பானா?
மிருக ஜாதியில்,
பிறந்த மனிதா,
தெய்வ ஜோதியில் கலப்பாயா?
ஃஅ!

நந்தகுமரா…

கடவுள் பாதி,
மிருகம் பாதி,
கலந்து செய்த,
கலவை நான்,

வெளியே மிருகம்,
உள்ளே கடவுள்,
விளங்க முடியா,
கவிதை நான்,

மிருகம் கொன்று,
மிருகம் கொன்று,
கடவுள் வளர்க்க,
பார்க்கின்றேன்,
கடவுள் கொன்று,
உணவாய் தின்று,
மிருகம் மட்டும்,
வளர்கிறதே,

நந்தா!

கடவுள் பாதி,
மிருகம் பாதி,
கலந்து செய்த,
கலவை நான்,

காற்றில் ஏறி,
மலையில் ஆடி,
கவிதை பாடும்,
பறவை நான்!

கடவுள் பாதி,
மிருகம் பாதி,
கலந்து செய்த,
கலவை நான்,

காற்றில் ஏறி,
மலையில் ஆடி,
கவிதை பாடும்,
பறவை நான்!

ஒவ்வொரு துளியும்,
ஒவ்வொரு துளியும்,
உயிரில் வேர்கள்,
குளிர்கிறதே,

எல்லாம் துளியில்,
குளுரும்போது,
இரு துளி மட்டும்,
சுடுகிறதே,

நந்தகுமாரா,
நந்தகுமாரா,
மழை நீர் சுடாது,
தெரியாதா?

கன்னம் வழிகிற,
கண்ணீர் துளிதான்,
வென்னீர் துளி என,
அறிவாயா?

சுட்ட மழையும்,
சுடாத மழையும்,
ஒன்றாய் கண்டவன்,
நீதானே,

கண்ணீர் மழையில்,
தண்ணீர் மழையில்,
குளிக்க வைத்தவன்,
நீதானே…
ஏய்!

புதிய வானம்… புதிய பூமி…


புதிய வானம்… புதிய பூமி…
புதிய வானம் புதிய பூமி
எங்கும் பனி மழை பொழிகிறது
நான் வருகையிலே என்னை வரவேற்க
வண்ண பூமழை பொழிகிறது…ஒஹோ ஹோ

உதய சூரியனின் பார்வையிலே
உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே
இமயத்தில் இருக்க்கும் குளிர் காற்று
இன்று இதயத்தை தொடுகிறது
அன்று இமயத்த்ல் சேரன் கொடி பறந்த
அந்த காலம் தெரிகின்றது …
அந்த காலம் தெரிகின்றது
ஓ..ஓ..ஓ.. லால்ல லா…லா…லா

பிள்ளைக்கூட்டங்களை பார்க்கையிலே
பிஞ்சு மொழிகளை கேட்கையிலே
நல்லவர் எல்லம் நலம் பெறுவார்
என்ற நம்பிக்கை பிறக்கின்றது
இவர் வரவேண்டும் புகழ் பெறவேண்டும்
என்று ஆசை துளிர்க்கிறது
என்று ஆசை துளிர்க்கிறது
ஓ..ஓ..ஓ.. லால்ல லா…லா…லா

எந்த நாடு என்ற கேள்வியில்லை
எந்த ஜாதி என்ற பேதமில்லை
மனிதர்கள் அன்பின் வழி தேடி
இங்கு இயற்கையை வணங்குகிறார்
மலை உயர்ந்தது போல் மனம் உயரகண்டு
இவர் வாழ்வில் விளக்குகிறார்
இவர் வாழ்வில் விளக்குகிறார்
ஓ..ஓ..ஓ.. லால்ல லா…லா…லா
ஓ..ஓ..ஓ.. லால்ல லா…லா…லா

புதிய வானம் புதிய பூமி
எங்கும் பனி மழை பொழிகிறது
நான் வருகையிலே என்னை வரவேற்க
வண்ண பூமழை பொழிகிறது…ஒஹோ ஹோ ஹோ

பச்சை மரம் ஒன்று இச்சைக் கிளி ரெண்டு..


பாடல் : பச்சை மரம் ஒன்று
திரைப் படம் : ராமு
பாடியவர்கள் : பி . சுசிலா - பி.பி. ஸ்ரீநிவாஸ்
இசை : எம் .எஸ் .வி
வரிகள் : கண்ணதாசன்
நடிப்பு : ஜெமினி , கே .ஆர் .விஜயா

பச்சை மரம் ஒன்று இ
ச்சைக் கிளி ரெண்டு
பாட்டு சொல்லித் தூங்க செய்வேன் ஆரிராரோ

பச்சை மரம் ஒன்று
ச்சைக் கிளி ரெண்டு
பாட்டு சொல்லித் தூங்க செய்வேன் ஆரிராரோ

அள்ளித் தந்த அன்னை
சொல்லித் தந்த தந்தை
உள்ளம் கொண்ட பிள்ளை
நியல்லவோ
அள்ளித் தந்த அன்னை
சொல்லித் தந்த தந்தை
உள்ளம் கொண்ட பிள்ளை
நியல்லவோ
கட்டித் தங்கம் என்று
கன்னம் தொட்டுக் கொண்டு
ஆசை முத்தம் தந்தேன் ஆரிரரோ

ஸ்ரீநிவாஸ் : ஆசைக் கிளி அங்கே
மைக் கிளி இங்கே
தந்தைக் கிளி நெஞ்சில் அமைதி எங்கே
சைக் கிளி அங்கே
மைக் கிளி இங்கே
தந்தைக் கிளி நெஞ்சில் அமைதி எங்கே
அன்னை என்ற தெய்வம் தந்து சென்ற செல்வம்
உன்னை எண்ணி வாழும் கலங்காதே
உன்னை எண்ணி வாழும் கலங்காதே

பச்சை மரம் ஒன்று
ச்சைக் கிளி ரெண்டு
பாட்டு சொல்லித் தூங்க செய்வேன் ஆரிராரோ
பாட்டு சொல்லித் தூங்க செய்வேன் ஆரிராரோ

தூங்காத கண்ணென்று ஒன்று

படம் : குங்குமம்
பாடகர்கள் : சௌந்தராஜன்
வரிகள் : கண்ணதாசன்
இசை :
Kvm
நடிப்பு : சிவாஜி , சாரதா

தூங்காத கண்ணென்று ஒன்று
துடிக்கின்ற சுகமென்று ஒன்று

தாங்காத மனமென்று ஒன்று
தந்தாயே நீ என்னைக் கண்டு

தூங்காத கண்ணென்று ஒன்று
துடிக்கின்ற சுகமென்று ஒன்று

தாங்காத மனமென்று ஒன்று
தந்தாயே நீ என்னைக் கண்டு


முற்றாத இரவொன்றில் நான் வாட
முடியாத கதை ஒன்று நீ பேச
உற்றாரும் காணாமல் உயிரொன்று சேர்ந்தாட
உண்டாகும் சுவையென்று ஒன்று

தூங்காத கண்ணென்று ஒன்று
துடிக்கின்ற சுகமென்று ஒன்று

தாங்காத மனமென்று ஒன்று
தந்தாயே நீ என்னைக் கண்டு


யார் என்ன சொன்னாலும் செல்லாது
அணை போட்டுத் தடுத்தாலும் நில்லாது
தீராத விளையாட்டுத் திரை போட்டு விளையாடி
நம் காணும் உலகென்று ஒன்று

தூங்காத கண்ணென்று ஒன்று
துடிக்கின்ற சுகமென்று ஒன்று

தாங்காத மனமென்று ஒன்று
தந்தாயே நீ என்னைக் கண்டு


வெகுதூரம் நீ சென்று நின்றாலும் - உன்
விழி மட்டும் தனியாக வந்தாலும்
வருகின்ற விழியொன்று தருகின்ற பரிசென்று
பெறுகின்ற சுகமென்று ஒன்று

தூங்காத கண்ணென்று ஒன்று
துடிக்கின்ற சுகமென்று ஒன்று

தாங்காத மனமென்று ஒன்று
தந்தாயே நீ என்னைக் கண்டு

ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்

பாடல் : ஆலயமணியின் ஓசையை
திரைப் படம் : பாலும் பழமும்
பாடியவர் : பி .சுசிலா
இசை : எம் .எஸ் .வி - தி .கே .ஆர்
வரிகள் : கண்ணதாசன்

ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்

உன் இறைவன் அவனே அவனே எனப் பாடும் மொழி கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்

இலகும் மாலைப் பொழுதினிலே என் இறைவன் வந்தான் தேரினிலே
ஏழையின் இல்லம் இதுவென்றான் இரு விழியாலே மாலையிட்டான் ...
இரு விழியாலே மாலையிட்டான்
இறைவன் அவனே அவனே எனப் பாடும் மொழி கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்

காதல் கோயில் நடுவினிலே கருணைத் தேவன் மடியினிலே
யாரும் அறியாப் பொழுதினிலே அடைக்கலம் ஆனேன் முடிவினிலே ...
அடைக்கலம் ஆனேன் முடிவினிலே
இறைவன் அவனே அவனே எனப் பாடும் மொழி கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்

இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்..


இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்
இதுதான் எங்கள் உலகம் எங்கள் உலகம்
இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்
இதுதான் எங்கள் உலகம் எங்கள் உலகம்

பிறப்புக்கும் முன்னால் இருந்தது என்ன உனக்கும் தெரியாது
இறந்த பின்னாலே நடப்பது என்ன எனக்கும் புரியாது
இருப்பது சில நாள் அனுபவிப்போமே எது தான் குறைந்து விடும்
எது தான் குறைந்து விடும்..

இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்
இதுதான் எங்கள் உலகம் எங்கள் உலகம்

பாவமென்றால் ஒரு பெண்ணையும் ஆணையும் இறைவன் படைப்பானா
பயணம் போகும் பாதையில் திராட்சை கொடியை வளர்ப்பானா
பாவமென்றால் ஒரு பெண்ணையும் ஆணையும் இறைவன் படைப்பானா
பயணம் போகும் பாதையில் திராட்சை கொடியை வளர்ப்பானா
ஆனது ஆகட்டும் போனது போகட்டும் அருகே வரலாமா
அருகே வரலாமா… ஆ..ஆ..

இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்
இதுதான் எங்கள் உலகம் எங்கள் உலகம்

கவிஞன் பாடிய காவியம் படித்தால் போதை வரவில்லையா
கல்லில் வடித்த சிலைகளை பார்த்தால் மயக்கம் தரவில்லையா
எதிலே இல்லை யாரிடம் இல்லை எவர் இதை மறந்து விட்டார்
எவர் இதை மறந்து விட்டார்..

இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்
இதுதான் எங்கள் உலகம் எங்கள் உலகம்

விழிகளில் ஒரு வானவில்..


விழிகளில் ஒரு வானவில்.. இமைகளை தொட்டு பேசுதே..
இது என்ன புது வானிலை.. மழை வெயில் தரும்..
உன்னிடம் பார்கிறேன்.. நான் பார்கிறேன்..
என் தாய்முகம் அன்பே..

உன்னிடம் தோற்கிறேன்.. நான் தோற்கிறேன்..
என்னகுமோ இங்கே..
முதன் முதலாய் மழங்குகிரேன்..
கண்ணாடி போல தோன்றினாய்
என் முன் என்னை காட்டினாய்
கனா எங்கும் வினா..

விழிகளில் ஒரு வானவில்.. இமைகளை தொட்டு பேசுதே..
இது என்ன புது வானிலை.. மழை வெயில் தரும்..

நீ வந்தாய் என் வாழ்விலே
பூ பூத்தாய் என் வேரிலே..
நாளையே நீ போகலாம்..
என் ஞாபகம் நீ ஆகலாம்..
தேர் சென்ற பின்னாலே வீதி என்னாகுமோ..
யார் இவன்.. யார் இவன்..
ஓர் மாயவன் மேயானவன் அன்பில்..
யார் இவன்.. யார் இவன்..
நான் நேசிக்கும் கண்ணீர் இவன் நெஞ்சில்
இனம் புரியா உறவிதுவூ..
என் தேதி பூத்த பூவிது
என் நெஞ்சில் வாசம் தூவுது..
மனம் எங்கும் மனம்..

விழிகளில் ஒரு வானவில்.. இமைகளை தொட்டு பேசுதே..
இது என்ன புது வானிலை.. மழை வெயில் தரும்..

நான் உனக்காக பேசினேன்..
யார் என்னக்காக பேசுவார்..
மௌனமாய் நான் பேசினேன்..
கைகளில் மை பூசினேன்..
நீ வந்த கனவேங்கே காற்றில் கை வீசினேன்..
அன்பெனும் தூண்டிலை நீ வீசினால்
மீன் ஆகிறேன் அன்பே..
உன் முன் தானடா இப்போது நான்
பென்னாகிரேன் இங்கே..
தயகன்களால் திணறுகிறேன்..
நிலென்று சொன்னபோதிலும்
நிலாமல் நெஞ்சம் ஓடுதே
இதோ உந்தன் வழி..


நகைகளைத் தின்ற எலி

பல ஆண்டுகளுக்குமுன், லூனி எனும் நதிக்கரையில் அமைந்திருந்த தானி எனும் கிராமத்தில் லட்சுமணன், மனோகர் என்ற இரண்டு நண்பர்கள் வசித்து வந்தனர். லட்சுமணனுடைய மனைவி காமினி, மனோகரின் மனைவி பாய் ஆகிய இருவரும் திருமணத்திற்குப் பின் நெருங்கிய தோழிகளாயினர். லட்சுமணனும், அவன் மனைவியும் நேர்மையானவர்கள். ஆனால் மனோகர் தம்பதிக்குப் பேராசை அதிகம் இருந்தது.

தொடர்ந்து சில ஆண்டுகளாக மழை பெய்யாததால், கிராமத்தில் பஞ்சம் ஏற்பட்டது. லட்சுமணனுடைய தொழில் விவசாயத்தைச் சார்ந்ததாக இருந்ததால், அவனுடைய வருமானம் பாதிக்கப்பட்டது. அதனால் தன் மனைவியிடம் ஆலோசித்த பின், அவன் வேறொரு கிராமத்திற்குச் சென்று தொழில் செய்யத் தீர்மானித்தான்.

கிராமத்தை விட்டுச் செல்வதற்குமுன் தங்களிடமுள்ள நகைகளை தன் நண்பன் மனோகரிடம் கொடுத்து வைக்க லட்சுமணன் எண்ணினான். இதை தன் மனைவி காமினியிடம் கூறியதும், அவளும் அதற்கு சம்மதித்தாள். அவள் தன் நகைகளை மூட்டையாகக் கட்டி, மனோகரின் வீட்டிற்கு எடுத்துச் சென்றாள். கூடவே, லட்சுமணனும் சென்றான். அப்போது மனோகர் வீட்டில் இல்லை. தங்களை வரவேற்ற அவன் மனைவி பாயிடம், "நாங்கள் மலர்தேஷ் கிராமத்திற்குச் சென்று வசிக்கத் தீர்மானம் செய்திருக்கிறோம். இங்கு பஞ்சம் நீங்கியபிறகு திரும்பி வருவோம். அதுவரை என்னுடைய தங்க நகைகளை உங்கள் வீட்டில் பாதுகாப்பாக வைத்து விட்டுச் செல்ல விரும்புகிறேன்" என்றாள்.

அதற்குள் வெளியூர் சென்றிருந்த மனோகர் திரும்பி வந்துவிட, விஷயம் கேட்டபின் அவன் லட்சுமணனிடம் "நண்பா! தாராளமாக உன் நகைகளை எங்களிடம் விட்டுச் செல்லலாம். நீ வரும் வரை அதைப் பத்திரமாக வைத்துஇருப்போம்" என்று உறுதி கூறினான்.

பிறகு அவர்களிடம் விடை பெற்றுக் கொண்ட லட்சுமணனும், காமினியும் புதிய கிராமத்தை நோக்கிப் பயணம் தொடங்கினர். அதை அடைந்த பிறகு, லட்சுமணன் வியாபாரம் செய்யத் தீர்மானித்து ஒரு பெரிய வீட்டை வாங்கி, அதன் முன் புறத்தைக் கடையாகவும், பின்புறத்தைத் தன் இருப்பிடமாகவும் மாற்றிக் கொண்டான். வியாபாரத்த்தில்

லட்சுமணன் முதல் ஆண்டிலேயே வெற்றியும் கண்டான். தானியிலிருந்து வந்த சிலர் மூலமாகத் தங்கள் பழைய கிராமத்தில் பஞ்சம் நீங்கி விட்ட செய்தியைத் தெரிந்து கொண்ட லட்சுமணன் கணிசமான லாபம் கிடைத்தபிறகு ஊர் திரும்ப எண்ணினான். அவன் நினைத்தவாறே, இரண்டாவது ஆண்டில் அவனுடைய

வியாபாரம் மிகச் செழிப்பாக நடந்தது. அவன் எதிர்பார்த்த லாபமும் கிட்டியது. ஆகையால் லட்சுமணன் தன் கடையை விற்றுவிட்டு, தன் மனைவியுடன் தானி கிராமத்திற்குத் திரும்பினான்.

லட்சுமணன் திரும்பி வந்த செய்தி மனோகருக்குக் கவலையை அளித்தது. ஏனென்றால், தன்னிடம் லட்சுமணன் கொடுத்துச் சென்ற நகைகளைத் தனக்கு சொந்தமாக்கிக் கொள்ள மனப்பால் குடித்த மனோகர், லட்சுமணன் திடீரென திரும்பியதால் ஏதாவது சாக்கு சொல்லி நகைகளைத் தன்னிடமே வைத்துக்கொள்ளத் திட்டமிட்டு அதை தன் மனைவியிடமும் விளக்கினான். லட்சுமணன் ஊர் திரும்பியதும், மனோகர் தம்பதி தங்கள் நண்பர்களை சந்திக்கச் செல்லவேயில்லை.

ஒருநாள் கழித்து, காமினியே மனோகர் வீட்டைத் தேடி வந்தாள். மனோகர் அப்போது வீட்டில் இல்லை. மனோகரின் மனைவியிடம், "பாய்! எனது தங்க நகைகளைத் திருப்பித் தருகிறாயா?" என்று கேட்டாள் காமினி.
உடனே, பாய் ‘கோ’வென்று கதறி, கண்ணீர் வடித்தாள்.

‘ஐயோ! நடந்ததை நான் எப்படிச் சொல்வேன், காமினி!" என்று புலம்பிய பாய், தொடர்ந்து, "அத்தனை நகைகளையும் எலி தின்று விட்டது. அதை உங்களிடம் எந்த முகத்தை வைத்துக் கொண்ட சொல்வது என்ற வமானத்தினால்தான், நாங்கள் இதுவரை உங்களை சந்திக்க வரவில்லை" என்று நாடகமாடினாள்.

காமினிக்கு ‘பகீர்’ என்றது. கணவனும், மனைவியும் சேர்ந்து நடத்தும் நாடகம் இது என்று புரிந்து கொண்ட காமினி பதிலேதும் சொல்லாமல் மௌனமாக வீடு திரும்பினாள். தன் கணவனிடம் மனோகர் தம்பதியின் நயவஞ்சகத்தைப் பற்றிக் கூறி அழுத காமினியை, லட்சுமணன் சமாதானம் செய்தான்.

ஒருநாள் லட்சுமணன் மனோகரைத் தேடிச் சென்றான். தங்களுடைய நகைகளைப் பற்றி வந்த நாள் முதல் லட்சுமணன் எதுவும் கேட்காததால், தாங்கள் கூறிய காரணத்தை அவன் நம்பிவிட்டான் என்று எண்ணிய மனோகர் அவனை உற்சாகமாக வரவேற்றான்.

"எனக்கு ஒரு உதவி செய்வாயா?" என்று லட்சுமணன் கேட்டதும், "சொல் நண்பா! என்ன உதவி வேண்டுமானாலும் செய்கிறேன்" என்றான் மனோகர்.

"காமினிக்கு உடல் நலம் சரியில்லை. எனக்கு வெளியூர் செல்ல வேண்டி இருக்கிறது. அவளுக்குத் துணையாக உன் மகனை அனுப்பி வைக்க முடியுமா?" என்று லட்சுமணன் கேட்டான்.

உடனே எந்தவிதத் தயக்கமுமின்றி தன் பத்து வயது மகனை மனோகர் அனுப்பி வைக்க சம்மதித்தான். அவனை அழைத்துக் கொண்டு வெளியூர் சென்ற லட்சுமணன் தன் உறவினர் வீட்டிற்குச் சென்றான். அங்கேயே அந்த சிறுவனை விட்டுவிட்டு தான் மட்டும் ஊர் திரும்பினான். உறவினர் வீட்டில் தன் வயதையொட்ட பிள்ளைகள் இருந்ததால், மனோகரின் மகன் அவர்களுடன் உற்சாகமாக விளையாடத் தொடங்கினான்.

இரண்டு, மூன்று நாள்கள் சென்றும் தம்பதி லட்சுமணன் திருப்பிஅனுப்பாததால் கவலைகொண்ட மனோகர் தம்பதி லட்சுமணன் வீட்டிற்குச் சென்றனர். இப்போதுகாமினி அவர்களைக் கண்டதும் அழத் தொடங்கினாள்.

"நடந்ததை என் வாயினால் எப்படிச் சொல்வேன்? வரும் வழியில் உங்கள் பிள்ளையை ஒரு கழுகு தூக்கிச் சென்று விட்டது. ஆகையால் நாங்கள் இதுவரை உங்களைச் சந்திக்க வரவில்லை" என்று காமினி நாடகமாடினாள்.
பயங்கரக் கோபம் கொண்ட மனோகர் தம்பதி நேராக கிராமத் தலைவரிடம் சென்று புகார் செய்தனர். கிராமத் தலைவரும் விசாரணை செய்வதற்காக அவர்களை அழைத்துக் கொண்டு லட்சுமணன் வீட்டை அடைந்தார்.
"என்னப்பா லட்சுமணா? மனோகரின் பிள்ளையை கழுகு தூக்கிச் சென்று விட்டதாகக் கூறினாயாமே!" என்று கிராமத்தலைவர் கேட்டார்.

"ஐயா! தங்க நகைகளை எலி தின்றது என்பது உண்மையானால், பத்து வயது பிள்ளையை கழுகு தூக்கிச் சென்றது என்பது மட்டும் ஏன் உண்மையாக இருக்கக்கூடாது?" என்று லட்சுமணன் எதிர்க்கேள்வி கேட்டான். "நகைகளை எலி தின்றதா? என்னப்பா சொல்கிறாய்?" என்று தலைவர் வியப்புடன் கேட்க, நடந்த விஷயத்தை லட்சுமணன் அவரிடம் விளக்கினான்.

உடனே பாய், "ஐயா! நாங்கள் சொன்னது பொய்தான்! அவர்களுடைய நகைகள் எங்களிடம் பத்திரமாக உள்ளன. அவற்றை இப்போதே திருப்பித் தந்து விடுகிறேன். தயவு செய்து என் மகனைத் திருப்பிக் கொடுக்கச் சொல்லுங்கள்" என்று கெஞ்சினாள்.

"அவர்களுடைய மகன் என் உறவினர் வீட்டில் பத்திரமாக இருக்கிறான். என்னுடைய நகைகள் கிடைத்ததும், நானும் அவனைத் திருப்பி அனுப்புகிறேன்" என்ற லட்சுமணன் மனோகரை நோக்கி "வினை விதைத்தவன் வினை அறுப்பான்" என்ற பழமொழியின் பொருளை இப்போதாவது புரிந்து கொள் நண்பா!" என்று கூறினான்.


வீடு திரும்பினோம்


ஒரு வழியாக வீட்டிற்குப் பத்திரமாகத் திரும்பினேன். என்னைப் போல் ஒரு ஆமையாக இருந்தால் தான் என் துன்பங்கள் உங்களுக்குப் புரியும்! கடலில் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தூரம் நீந்தி வந்தால் களைப்பாக இருக்காதா? அது மட்டுமல்ல! வரும் வழியில் நானும் என் நண்பர்களும் எத்தனை ஆபத்துகளை சந்திக்க வேண்டியிருந்தது தெரியுமா? பெரிய மீன் பிடிக்கும் கப்பல்கள் விரித்திருக்கும் வலையில் சிக்காமல் வருவதே பெரிய விஷயம்! தவிர, வரும் வழியில் பெரிய பெரிய திமிங்கலங்களை வேறு எதிர்கொள்ள வேண்டி இருக்கும். ஆனால் அவை பொதுவாக எங்களைத் தின்ன முயற்சிப்பதில்லை.
வீடு என்று நான் சொல்வது இந்த அழகான கடற்கரையிலுள்ள என் வீட்டைத் தான்! இந்த வீட்டை விட்டு வெளியேறி 25-30 ஆண்டுகள் ஆகியிருக்கும். என்னுடன் பத்து அல்லது பன்னிரெண்டு சகோதரர்களும், சகோதரிகளும் பிறந்தனர். பிறந்ததிலிருந்தே எங்களுக்கு சற்றுத் தொலைவில் தெரிந்த செல்ல மிகவும் ஆசையாக இருந்தது.
நானும், என் உடன் பிறந்தவர்களும் ஒரு நாள் எங்கள் வீட்டை விட்டு வெளியேறினோம். எங்கள் வீடு எப்படியிருக்கும் தெரியுமா? கடற்கரை மணலில் ஆழமாகத் தோண்டப்பட்ட குழிதான் என் வீடு! இந்தக் குழியைத் தோண்டியது என் தாய்! அதில் தன்னுடைய முட்டைகளைப் போட்டு விட்டுக் குழியை மூடி விட்டாள். நான் பிறந்தது முதல் என் தாயைப் பார்த்ததேயில்லை. எனக்கு அத்தை ஒருத்தி இருக்கிறாள். அவள் தான் எனக்கு எல்லா விஷயமும் சொன்னாள். தாய்மார்கள் முட்டைகளைக் குழி தோண்டி உள்ளே வைத்து விட்டு, மீண்டும் கடலுக்குள் சென்று விடுவார்களாம்!
என் அத்தை எனக்கு வாயிலே நுழையாத ‘உல்ரிட்' என்ற பெயரைச் சூட்டினாள். என் அத்தை எனக்குக் கூறியுள்ள பல விஷயங்களை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை.


நான் பிறந்த போது மிக மிகக் குட்டியாக இருந்தேனாம்! ஆனால் இப்போது என்னைப் பார்த்தால் அடையாளம் கண்டு கொள்ள முடியாது. மூன்றடி அளவு வளர்ந்த என்னுடைய எடை இப்போது 60 கிலோ!
எங்களைக் காப்பாற்ற முனைந்த சில நல்ல மனிதர்களைப் பற்றி நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். நான் பிறந்தது கோவா கடற்கரையில் என்று என் அத்தை சொன்னாள். நான் பிறப்பதற்குமுன், பல தீயவர்கள் எங்களைப் பிடித்துக் கொன்று இறைச்சியையும், முட்டையையும் விற்பனை செய்து வந்தார்கள். (எங்களைத் தின்றால் நன்றாகவா இருக்கும்?) ஆனால் நான் முன்னமே சொன்னது போல், மனிதர்களில் சில நல்லவர்களும் இருக்கிறார்கள்.
அவர்கள் கடற்கரை மணலில் முட்டைகள் உள்ள இடங்களைத் தேடியலைந்து கண்டு பிடித்து, அவற்றை ஜாக்கிரதையாக வெளியில் எடுத்துக் கொண்டு போய், தங்கள் வீட்டருகே மணலில் புதைத்து பாதுகாத்து வைத்துக் கொண்டனர். முட்டைகள் இருக்குமிடத்தைச் சுற்றி வேலியும் போடப்பட்டது. அப்படிப் பாதுகாத்த முட்டைகள் ஒன்றில்தான் நானும் இருந்தேன். அவ்வாறு அவர்கள் என்னைப் பத்திரப்படுத்தவில்லையெனில், இந்நேரம் ஏதாவது ஒரு உணவு விடுதியில் என் கதை முடிந்திருக்கும்.
பல ஆண்டுகள் கழித்து நான் இப்போது என் பிறந்த இடத்திற்கு வந்திருக்கிறேன். பிறந்து கடலில் இறங்கியது முதல் இந்நேரம் வரை எனக்குக் கடற்பயணம் தான்!
இங்கு வந்து பார்த்தால், எனக்கு முன்னமே பலர் இங்கு வந்திருந்தனர். அவர்கள் என்னை வரவேற்று எனக்கு பெரு மகிழ்ச்சி ஊட்டும் செய்தியையும் கூறினர். கோவா கடற்கரை முழுவதும் எங்களைப் போன்ற "ஆலிவ் ரிட்லி" ஆமைகளுக்கான பாதுகாப்பான இடமாக அரசாங்கம் அறிவித்து இருக்கிறது என்ற செய்திதான் அது! அதாவது, இனிமேல் அந்தக் கடற்கரையில் யாராவது எங்களுக்கு தீங்கிழைத்தால் அவர்கள் சட்டப் படி தண்டிக்கப்படுவார்கள். குற்றம் நடக்காமல் தடுக்க காவலும் போடப்பட்டிருக்கிறது.

அந்த செய்தியைக் கேட்டு நான் மகிழ்ச்சியுற்றாலும், பயணத்தின் போது நடந்த ஒரு துயர நிகழ்ச்சி அடிக்கடி என் மனக்கண் முன் தோன்றி என்னை வாட்டியது. பயணத்தில் என்னுடன் வந்த என் தோழி உல்வியா பாதி வழியில் ஒரு மீன் பிடிக்கும் படகு விரித்த வலையில் சிக்கிக் கொண்டாள். நாங்கள் அனைவரும் என்ன செய்வதென்று தெரியாமல் பதறினோம்! எங்களால் அவளை வலையிலிருந்து மீட்க முடியவில்லை.
அவள் பரிதாபமாக எங்கள் கண் முன்னே இறந்து போனாள். இறக்கும் முன் அவள் எங்களைப் பார்த்த பார்வை என் நேஞ்சில் இன்னும் ஈட்டியால் குத்துகிறது. "என்னால் முடியவில்லை! நீங்களாவது நலமாக இருங்கள்!" என்று எங்களுக்கு அவளுடைய கண்கள் மௌன மொழியில் கூறின.
நாங்கள் வந்த வேலையை இங்கு முடிக்க வேண்டும்! என்னுடைய வயிறு மிகவும் கனமாக இருக்கிறது. நான் கடற்கரையில் ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்து குழி தோண்ட வேண்டும் எதற்கென்று தெரியவில்லையா? நான் இடப்போகும் முட்டைகளை பத்திரமாக வைப்பதற்குத்தான்! ஏற்கெனவே இங்குள்ள நல்ல மனிதர்களுடன் சேர்ந்து நீங்களும் என் முட்டைகளை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்! -ஆஷிஷ் கோத்தாரி


கெட்டிக்கார மருமகள்


ராமநாதபுரத்தில் வசித்து வந்த ஒரு பணக்கார வியாபாரிக்கு பாக்கியநாதன் என்று ஒரு மகன் இருந்தான். சிறு வயது முதலே அவனுக்கு சாமர்த்தியம் என்பது சிறிதுமில்லை.
"இவனை நினைத்தால் எனக்குக் கவலையாக இருக்கிறது. இவன் எதிர்காலத்தில் எப்படி காலந்தள்ளுவான்?" என்று வியாபாரி தன் மனைவியிடம் குறைப்பட்டுக் கொண்டார்.
அவருடைய மனைவி, "நீங்கள் ஆரம்பத்திலிருந்தே உங்களுடைய வியாபாரத்தில் அவனை ஈடுபடுத்திஇருந்தால், இப்படி ஆகியிருக்குமா? எல்லாம் உங்கள் தவறு" என்று அவரையே குறை கூறினாள். உடனே அவரும் பாக்கியநாதனை அழைத்து, "மகனே நாளை முதல் நீ என்னுடன் கடைக்கு வந்து வியாபாரத்தை கவனி" என்று உத்தரவிட்டார்.
மறுநாள் பாக்கியா தன் தந்தையுடன் கடைக்குச் சென்றான். ஆனால் அங்கு வியாபாரத்தை கவனிக்காமல் மற்ற பணியாளர்களுடன் வீணாக அரட்டை அடிப்பதில் ஈடுபட்டான். ஒரு நாள் கடையை விட்டு வெளியே ஊர் சுற்றப் போனவன் மீண்டும் கடைக்கே வரவில்லை.
மீண்டும் கவலையில் ஆழ்ந்த வியாபாரியைப் பார்த்து, பாக்கியாவின் தாய், "பேசாமல் அவனுக்கு ஒரு கால்கட்டு போடுங்கள். பொறுப்பு தானாக வந்து விடும்" என்றாள்.
"அதுவும் நல்ல யோசனைதான்" என்ற வியாபாரி, "ஆனால் அவனுடைய திருமணத்தைப் பற்றி யோசிக்குமுன், அவனுடைய புத்திசாலித்தனத்தை இன்னொரு முறை சோதிக்க விரும்புகிறேன்" என்றார். பிறகு தன்னிடமிருந்து மூன்று ரூபாய் நாணயங்களை எடுத்து அவளிடம் கொடுத்து "இந்தா இந்த நாணயங்களை பாக்கியாவுக்குக் கொடு.


ஒரு ரூபாய்க்கு அவன் விரும்பியதை வாங்கி சாப்பிடட்டும். ஒரு ரூபாயை ஆற்று நீரில் எறியச் சொல். மீதி ஒரு ரூபாயை வைத்துக் கொண்டு அதில் தான் கொஞ்சம் சாப்பிட்டு விட்டு, கொஞ்சம் ஏதாவது குடித்து விட்டு, மிஞ்சியதை தோட்டத்தில் நட்டு வைக்கவும், பசு மாட்டுக்குக் கொடுக்கவும் சொல். அதிலிருந்து அவன் எவ்வளவு புத்திசாலி என்று தெரிந்து கொள்வோம்" என்றார்.
மறுநாள் தன் தாய் கொடுத்த மூன்று ரூபாய்களை வாங்கிக் கொண்டு பாக்கியா வீட்டை விட்டுக் கிளம்பினான். கடைக்குச் சென்று ஒரு ரூபாய்க்கு பக்கோடா வாங்கி சாப்பிட்டான். அடுத்து ஆற்றங்கரைக்குப் போனான். தன் தந்தை சொல்லியபடி ஒரு ரூபாய் நாணயத்தை ஆற்று நீரில் எறிய வேண்டும்.
ஆனால் அவ்வாறு செய்ய அவனுக்கு மனம் வரவில்லை. என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கையில் கோயில் அர்ச்சகரின் பெண்ணான பாகீரதி அருகில் வந்து "அப்படி என்ன யோசித்துக் கொண்டிருக்கிறாய்?" என்று கேட்டடாள். அதற்கு அவன் "ஒன்றுமில்லை பாகீரதி! இந்த ஒரு ரூபாய் நாணயத்தை ஆற்றில் எறியும்படியாக என் தந்தை சொல்லி இருக்கிறார். அப்படி அவர் ஏன் சொன்னார் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்" என்றான். "அட அசடே!" என்று சிரித்த பாகீரதி ஒரு ரூபாயை நீ பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே அதன் பொருள்" என்றாள்.
"சரிதான்! அப்படியோர் உள்ளர்த்தமா? மீதி ஒரு ரூபாய்க்குள் நான் நான்கு அல்லது ஐந்து பொருட்களை வாங்க வேண்டும். அது எப்படி முடியும்? அதற்கும் நீயே ஏதாவது யோசனை சொல்லேன்" என்றான். பிறகு அவன் தாய் மூலமாக தந்தையிட்ட கட்டளையை விளக்கிக் கூறினான்.
"அது ஒன்றும் சிரமமில்லையே! நீ பேசாமல் ஒரு முலாம்பழத்தை ஒரு ரூபாய் கொடுத்து வாங்கு. அதில் உனக்கு சாப்பிடவும் குடிக்க சாறும் கிடைக்கும். அதன் விதைகளை தோட்டத்தில் நட்டுவை. தோலை பசு மாட்டுக்குக் கொடுத்து விடு" என்றாள்.


"ஆகா! என்ன அற்புதமான யோசனை!" என்று மகிழ்ந்த பாக்கியா அவள் சொன்னபடியே செய்துவிட்டு, தன் தாயிடம் சென்றான். மிக சாமர்த்தியமாக ஒரு ரூபாயை திருப்பிக் கொடுத்துவிட்டு, தான் வாங்கி வந்து முலாம் பழத்தையும் காட்டியவுடன், அவனுடைய புத்திசாலித்தனத்தைக் கண்டு வியந்த அவன் தாய் பாக்கியாவின் தந்தையிடம் நடந்ததைக் கூறினாள்.
ஆனால் பாக்கியாவின் தந்தை "இது நமது பிள்ளை சுயமாக செய்ததில்லை" என்று அறிந்து அவனைக் கூப்பிட்டு "பாக்கியா! உனக்கு இந்த யோசனை யார் சொல்லிக் கொடுத்தது?" என்று கேட்டார்.
பாக்கியாவும் உண்மையை மறைக்காமல் "அர்ச்சகர் மகள் பாகீரதி" என்றான். "ஆகா! அந்த பாகீரதி மிக புத்திசாலிப் பெண் என்று தோன்றுகிறது" என்று கூறிய அவர், தன் மனைவியிடம் "நமக்குத் தகுந்த மருமகள் பாகீரதிதான்" என்றார்.
இருவரும் அர்ச்சகரைக் கலந்து ஆலோசித்து அவரின் மகளுடன் பாக்கியாவின் திருமணம் செய்வதற்கு முடிவு செய்தனர். திருமணம் முடிந்து சில நாட்கள் ஆயின. ஒருநாள் பாகீரதி தன் தாய் வீட்டுக்குச் செல்ல விரும்பியதால் பாக்கியா அவளை பிறந்த வீட்டுக்கு அழைத்துச் சென்று விட்டு விட்டு, வீடு திரும்பினான்.
மறுநாள் அவன் தந்தை, அவனையும் வேலைக்காரனையும் பக்கத்திலுள்ள நகரத்திற்கு விற்பனைப் பொருட்கள் வாங்கி வர அனுப்பினார். பொருட்கள் வாங்கத் தேவையான பணம் எடுத்துக் கொண்டு நகரத்தை அடையும் போது இரவு ஆகிவிட்டதால், பாக்கியாவும் வேலைக்காரனும் ஒரு விடுதியில் தங்கினர். அந்த விடுதியின் சொந்தக்காரியான ஓர் இளவயதுப் பெண்மணி, பாக்கியாவிடம் நிறையப் பணம் இருப்பதை அறிந்து கொண்டு, அவனை ஏமாற்றிப் பணம் பறிக்க திட்டமிட்டாள்.
இரவு உணவருந்தியபிறகு, அவள் பொழுது போக்க பாக்கியாவை சீட்டாட அழைத்தாள். அவள் சொல்லை மறுக்க முடியாத பாக்கியா சீட்டாட அமர்ந்தான். ஒரே ஒரு காடா விளக்கு மட்டுமே எரிந்து கொண்டிருந்த அறையில் இருவரும் சீட்டாட அமர்ந்தனர். "


"உங்களைப் போன்ற பணக்கார வியாபாரிகள் சும்மா சீட்டாடினால் எப்படி? பணம் வைத்து ஆடினால்தான் உங்களுக்கு கௌரவம்" என்று பணம் வைத்து சீட்டாட வற்புறுத்தினாள். பாக்கியாவும் அதற்கு சம்மதித்தான்.
தான் வெற்றி பெறுவோம் என்று பாக்கியா நினைக்கும் சமயம் பார்த்து, அவளுடைய பூனை திடீரென குறுக்கே பாய்ந்து விளக்கின் மீது விழ, எங்கும் இருள் சூழ்ந்தது. மீண்டும் விளக்கை ஏற்றியவுடன், சீட்டுகள் முழுதும் நிலை மாறியிருந்தன. அந்த இளம் பெண் வெற்றி பெற்று பாக்கியாவிடமிருந்து கணிசமான பணத்தைப் பெற்றாள். இதுபோல் பலமுறை நடக்க, தான் கொண்டு வந்த பணம் அனைத்தையும் இழந்த பாக்கியா மேலும் ஏராளமான பணம் அவளுக்குக் கொடுக்க வேண்டி வந்தது.
இவ்வாறு அவனை நாடகமாடி ஏமாற்றி விட்டாள். மறுநாள் பொழுது விடிந்ததும் அவள் பாக்கியாவிடம், "நீ பணம் தர வேண்டிஇருப்பதால், உன்னை வெளியே செல்ல விடமாட்டேன். உன் வேலைக்காரனை ஊருக்கு அனுப்பி பணம் எடுத்து வரச் சொல். அதுவரை நீ இங்கேயே இரு" என்று கூறி விட்டாள்.
பாக்கியா திரும்பி வராததால் அவன் பெற்றோர்கள் கவலை அடைந்தனர். இதற்குள் பாக்கியா தன்னை அழைக்க வராமல் போகவே, பாகீரதி தானாகவே புருஷன் வீட்டுக்கு வந்தாள். உண்மையை அறிந்து அவளும் பதற்றம் அடைந்தாள். இதற்குள் பாக்கியாவின் வேலைக்காரன் அங்கு வந்து அனைத்தையும் கூறினான். அதைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
பாகீரதி மட்டும் சமாளித்துக் கொண்டு தான் சென்று பாக்கியாவை மீட்டு வரக் கிளம்பினாள். பாக்கியா எவ்வாறு சூதாட்டத்தில் ஏமாற்றப் பட்டான் என்பதை அந்த வேலைக்காரன் மூலம் தெரிந்து கொண்டாள். பாகீரதி தன்னுடன் ஒரு சுண்டெலியையும் ரகசியமாக எடுத்துச் சென்றாள். வேலையாளை விடுதிக்கு வெளியிலே நிறுத்தி விட்டு, தானும் ஒரு ஆண் போல் வேடம் தரித்து பாகீரதி பாக்கியா தங்கியிருந்த விடுதிக்குள் நுழைந்தாள்.

பாக்கியாவிற்கு தன் மனைவியை சிறிதும் அடையாளம் தெரியவில்லை. விடுதி சொந்தக்காரியை சந்தித்து தனக்கு தங்க இடம் வேண்டும் என்று கூறி அங்கே தங்க ஏற்பாடு செய்தபிறகு, அவளிடம் தனக்கு சூதாட்டத்தில் விருப்பம் உண்டு என்பதைத் தெரிவித்தாள். அவளும் அன்றிரவு மகிழ்ச்சியுடன் சூதாட அமர்ந்து கொண்டாள்.
பாகீரதி வெற்றிபெறும் தருணத்தில், வழக்கப்படி விடுதி சொந்தக்காரி தன் பூனைக்கு சைகை செய்ய, அது விளக்கை அணைக்க ஓடி வந்தது. அதை எதிர்பார்த்திருந்த பாகீரதி தான் மறைத்து வைத்த சுண்டெலியை வெளியே விட்டாள். சுண்டெலியைத் துரத்திக் கொண்டே பூனை வெளியே ஓடி விட்டது.
மீண்டும் அது திரும்பவில்லை. தொடர்ந்து சூதாட்டத்தில் பாகீரதி வெற்றிபெற, பாக்கியா இழந்த அத்தனை பணத்தையும் அதற்கு மேல் பல மடங்குகளும் அவளுக்குக் கிடைத்தது. அடுத்த நாள் காலை பாகீரதி அந்தப் பணத்தை வெளியே இருந்த வேலைக்காரனிடம் கொடுத்து அதை சொந்தக்காரிக்கு அளித்துத் தன் கணவனை மீட்டு வரச் சொன்னாள்.
அதன்படியே பணம் கிடைத்ததும் அந்தப் பெண்மணி பாக்கியாவை விட்டுவிட்டாள். வெளியே நின்றிருந்த வண்டியில் தன் மனைவியைப் பார்த்ததும் ஆச்சரியத்தில் மூழ்கினான். பிறகு மூவரும் நகரத்துக் கடைகளில் தேவையான விற்பனைப் பொருட்களை வாங்கிக் கொண்டு தங்கள் கிராமத்திற்குத் திரும்பினர்.
நடந்த விஷயங்களை பாகீரதி விளக்கியதும் பாக்கியாவின் தந்தை தனது கருத்தை வெளியிட்டார். "பாக்கியா மாறமாட்டான். அவன் ஏமாளியாகவே இருப்பான். ஆனால் அவனை கவனித்துக் கொள்ள மகா சாமர்த்தியசாலியான நம் மருமகள் அவன் கூடவே இருக்கும் வரையில், நாம் அவனைப் பற்றி ஒருபொழுதும் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை."




அதிசயமான நோய்



சாரங்கபுரியில், அண்ணாமலையின் நகைக்கடை மிகப் பிரபலமானதாக இருந்தது. அவர் பரம்பரை வியாபாரி அல்ல! சிறு வயதிலேயே தாய் தந்தையரை இழந்த அண்ணாமலை ஒரு நகைக் கடையில் பணியாளராக வேலைக்குச் சேர்ந்தார். தனது கடின உழைப்பினாலும், ஆர்வத்தினாலும் அவர் நகை வியாபாரத்தின் சகல நுணுக்கங்களையும் கற்றுக் கொண்டார்.
சில ஆண்டுகளுக்குப் பின்னர், அவர் வேலையை விட்டுவிட்டு, சாரங்கபுரிக்கு வந்து ஒரு நகைக்கடையைத் தொடங்கினார். அந்த நகரிலிருந்த சில கை தேர்ந்த தொழிலாளிகளை வலை வீசிக் கண்டு பிடித்துத் தன்னிடம் வேலைக்கு அமர்த்திக் கொண்டார். விரைவிலேயே, அவருடைய கடை மிகவும் உகந்ததாகக் கருதப்பட வியாபாரம் பிரமாதமாக நடந்தது.
அவருடைய திறமையைக் கண்டு வியந்த நகரத்தின் செல்வர் ஒருவர் தன் புதல்வி நாகேஸ்வரியை அவருக்குத் திருமணம் செய்து வைத்தார். திருமணத்தின் மூலம் அவருக்கு ஏராளமான சீர் கிடைத்தது. ஆனால், இயல்பாகவே பொருளில் ஆசை கொண்டிருந்த நாகேஸ்வரிக்கு ஏற்கெனவே இருந்த செல்வம் போதவில்லை. அதனால், அவள் மேலும் மேலும் செல்வத்தைப் பெருக்க முயன்றாள்.
தன் கணவர் தன்னுடன் இருப்பதைவிட, முழுநேரமும் கடையிலே தங்கி வியாபாரம் செய்து வருமானத்தைப் பெருக்க வேண்டும் என்று விரும்பினாள். அவருக்கு வேண்டிய உணவு, தேநீர் ஆகிய அனைத்தையும் கடைக்கு அனுப்பி விடுவாள். தவிர, அவள் கணவர் பணியாளர்களை நம்பி வேலையை ஒப்படைப்பதை அறவே விரும்பவில்லை.


ஆகையால் அது குறித்து அடிக்கடி அறிவுரை கூறுவாள். முதலில், தன்னிடமும், வியாபாரத்தின் மீதும் உள்ள அக்கறையினால்தான் அவள் இவ்வாறு கூறுகிறாள் என்று அண்ணாமலை கருதினார். ஆனால் காலப்போக்கில் அவள் பணம், பணம் என்று பேயாய் அலைவதையும், யாரையும் நம்பாமல் தூற்றுவதையும் கண்டு அவருக்கு சலிப்பு ஏற்பட்டது. ஆனால் அவளைக் கண்டித்து பேச அவருக்கு மனம் இல்லை. நாளடைவில் அண்ணாமலைக்கு மன உளைச்சலில் உடலிலும் தளர்ச்சி ஏற்பட்டது. அதைப்பற்றி அவர் நாகேஸ்வரியிடம் குறிப்பிட்டபோது, அவள், அதைப் பொருட்படுத்தவில்லை.
இவ்வாறு அண்ணாமலை அவதிப்படும் போது, சாரங்கபுரிக்கு ஒரு யோகி விஜயம் செய்தார். அண்ணாமலை அவரை தனிமையில் சந்தித்து, "சுவாமி! என் மனத்தில் நிம்மதி இல்லை. அதனால் என் உடலும் தளர்ந்து விட்டது. நான் என் வாழ்வில் இழந்த நிம்மதியை திரும்பப் பெறுவது எவ்வாறு?" என்று வினவினார்.
"மகனே! இளவயதில் உன் மனத்தில் வியாபாரத்தைப் பெருக்க வேண்டும் என்ற லட்சியம் இருந்தது. அதை நீ எட்டிப் பிடித்து விட்டாய். அதனால், இப்போது உன்னிடம் குறிக்கோள் என்று ஒன்றும்இல்லாததால் வாழ்க்கை சூனியமாகக் காட்சிஅளிக்கிறது. இனி, மற்றவர்களுக்கு உதவி செய்து அதில் ஆனந்தம் காண முயற்சிப்பாய்!" என்றார்.
"சுவாமி! மற்றவர்களுக்கு உதவி செய்வது என்றுமே எனக்குப் பிடித்த விஷயம்! ஆனால் அதைச் செய்யவிடாமல் என் மனைவி என்னைத் தடுக்கிறாள். மேலும் மேலும் செல்வம் திரட்டச் சொல்லி அவள் நச்சரிப்பதால்தான் என் வாழ்வின் நிம்மதி பறி போய்விட்டது!" என்று அண்ணாமலை புலம்பினார்.
அதைக் கேட்ட யோகி புன்னகைத்துக் கொண்டே, "செல்வம் ஒன்றுதான் வாழ்வில் மகிழ்ச்சியைத் தரும் என்று உன் மனைவி தவறான கருத்து கொண்டிருக்கிறாள். நன்கு யோசனை செய்தால், அவள் மனத்தை மாற்ற ஏதாவது வழி பிறக்கும். அவளுடைய மனத்தை மாற்றினால், நீ இழந்த நிம்மதி உன்னை மீண்டும் தானே தேடி வரும்!" என்றார்.


"அப்படியே முயற்சிக்கிறேன்!" என்று சொல்லி அண்ணாமலை வீடு திரும்பினார். அன்றிரவு தூக்கம் பிடிக்காமல் அண்ணாமலை தீவிரமாக யோசித்துக் கொண்டேயிருந்தார். மறுநாள் அவர் படுக்கையிலிருந்து எழுந்து இருக்கவில்லை. தன் மனைவியை அழைத்து, தான் மிகவும் பலவீனமாக இருப்பதாகவும், எழுந்திருக்கவே முடியவில்லைஎன்றும் கூறினார்.
கலவரமடைந்த நாகேஸ்வரி உடனே மருத்துவரை வரவழைத்தாள். அண்ணாமலையை சோதித்த மருத்துவர் அவரை ஏதோ ஒரு நோய் பற்றிஇருக்கிறதென்றும், ஆனால் அது என்ன நோய் என்று தன்னால் கண்டு பிடிக்க முடியவில்லை என்றும் கூறினார். எந்த ஒரு மருத்துவராலும் அவரைப் பீடித்துள்ள நோய் என்னவென்றே கண்டு பிடிக்க முடியவில்லை என்று கூறினர். அண்ணாமலை கடைக்குச் செல்வதையே நிறுத்தி விட்டு, எந்தநேரமும் படுக்கையிலேயே கிடந்தார்.
சில மாதங்கள் கழித்து வீட்டிற்கு வருகை தந்த நாகேஸ்வரியின் உறவினர் ஒருவர் அவர்கள் இருவரையும் தம்பதி சமேதராக தல யாத்திரை செல்லும்படி அறிவுரை வழங்கினார். உடல் சரிஇல்லாத கணவரால் எப்படி பயணம் மேற்கொள்ள முடியும் என்று நாகேஸ்வரி கவலையில் ஆழ்ந்தாள்.
ஆனால் அண்ணாமலை அவளுக்கு தைரியம் கூறினார். ஆகையால் ஒரு வேலைக்காரனைத் துணைக்குஅழைத்துக் கொண்டு இருவரும் புனிதப் பயணம் மேற்கொண்டனர். அவ்வாறு செல்வதற்குமுன் அண்ணா மலையின் யோசனைப்படி வியாபாரப் பொறுப்பை நரசிம்மன் என்னும் பணியாளரிடம் ஒப்படைத்தாள்.

மூன்று மாதங்களாக, பல தலங்களையும் தன் கணவருடன் சேர்ந்து தரிசித்த நாகேஸ்வரியின் மனத்தில் மாற்றம் உண்டாகியது. அவள் மனத்தை முழுமையாக ஆக்கிரமத்திருந்த பண ஆசையை அகற்றி சக்தியை உண்டாக்கியது. தனது கணவரின் உடல்நிலையும் படிப்படியாகத் தேறுவதைக் கண்டு, தனது செல்வத்தால் அடைய முடியாதது இறைவன்அருளினால் கைகூடுவதைக் கண்டு செல்வத்தை விடச் சிறந்தது இறையருளே என்று உணர்ந்தாள்.
பயணம் முடிந்து வீடு திரும்பிய பின், தங்களுடைய வியாபாரம் முன்போலவே சிறப்பாக நடை பெறுவதைக் கண்டு வியந்தாள். பணியாளர்களை திருடர்கள் என்றும், அவர்களுக்கு உதவி செய்யக்கூடாது என்றும் தான் முன்பு கணவனிடம் கூறியது நினைத்து வெட்கினாள். "நான் இதுவரை செல்வம்தான் வாழ்வில் மிக முக்கியம் என்று நினைத்தது தவறு! வாழ்க்கையின் உண்மையான ஆனந்தம் இறைவன் வழிபாட்டிலும், மற்றவர்களுக்கு செய்யும் பரோபகாரத்திலும் தான் இருக்கிறது என்று உணர்ந்து கொண்டேன்!" என்று தன்னிடம் கூறிய நாகேஸ்வரியின் சொற்களைக் கேட்டு அண்ணாமலை வியப்பிலும், மகிழ்ச்சியிலும் மூழ்கினார்.
தொடர்ந்து நாகேஸ்வரி அவரிடம், "ஏதோ ஒரு அதிசய நோய் உங்களை மட்டும் பீடித்திருக்கிறது என்று நான் இன்று வரை தவறாக எண்ணிஇருந்தேன். ஆனால், உண்மையில் என்னையும் பண ஆசை என்ற நோய் இத்தனை நாள் வாட்டி வதைத்தது. தலயாத்திரை சென்று வந்த பின் என்னுடைய நோயும் அகன்று விட்டது!" என்றாள்.
மனைவியின் மன மாற்றத்தைக் கண்டு மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினார் அண்ணாமலை. தான் நோயாளி போல் நடித்ததை அவளிடம் சொல்லாமல் மறைத்து விட்டார்.




முதற் பக்கம்கதைகள்சிறுகதைகள்நாட்டுப்புறக் கதைகள்


சிறுதாவூர் என்ற கிராமத்தில் ராமன் என்ற அதி புத்திசாலி வாழ்ந்து வந்தார். வணிகம், நிதி தொடர்பான ஆலோசனைகளை வழங்குவதிலும், வழக்குகளில் சரியான தீர்ப்புகள் கூறுவதிலும் வல்லவர், கோடைக்காலத்தில் ஒருநாள், ராமனும் அவரது மனைவியும் தங்கள் வீட்டின் தோட்டத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது இரண்டு திருடர்கள் மெதுவாக தோடத்துக்குள் நுழைந்து செடிகளுக்குப் பின் மறைவதை ராமன் பார்த்து விட்டார்.

சுதாரித்துக்கொண்ட அவர் தன் மனைவியிடம் மெதுவாக, "நம் வீட்டில் திருடுவதற்காக இரண்டு திருடர்கள் வந்துள்ளனர்." என்று கூறவே, "ஐயோ திருடர்களா.. இப்போது என்ன செய்வது?" என்று அவர் மனைவி பதறினார்.
உடனே, "கத்தாதே..திருடர்களை எளிதாக பிடித்து விடலாம். நான் சொல்வதை மட்டும் செய்." என்று கூறினார்.
என்ன செய்ய வேண்டும் என்று தன் மனைவிக்கு கூறிய பின், திருடர்கள் பதுங்கியிருக்கும் இடத்துக்கு அருகில் சென்றார் ராமன்.

பின் சத்தமாக தன் மனைவியிடம், "தெரியுமா சேதி...அடுத்த தெருவில் கந்தசாமி வீட்டில் திருடு போய்விட்டதாம். நாம் கூட எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உடனே நகைகள், பொற்காசுகள் அனைத்தையும் கொண்டு வா." என உத்தரவிட்டார். இதைக் கேட்ட திருடர்கள் குழம்பினர். ராமன் என்ன செய்யப் போகிறார் என உன்னிப்பாக கவனித்தனர். ராமனும் அவரது மனைவியும் சேர்ந்து பெரிய பெட்டியைக் கொண்டு வந்தனர். அதை தங்கள் கிணற்றில் வீசினர். பின்னர், "அப்பாடா, இனி கவலையில்லை, திருடர்கள் வந்தால் வீட்டில் பொருட்களைத் தேடிப் பார்த்து விட்டு ஏமாந்து திரும்புவார்கள். நாம் நிம்மதியாக தூங்கலாம் வா!" என தன் மனைவியிடம் சத்தமாக கூறி அவரை வீட்டுக்குள் அழைத்துச் சென்றார் ராமன்.

இந்தக் காட்சியைக் கண்ட திருடர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர். அவர்களில் ஒருவன், "சத்தம் போடாமல் இங்கேயே இருப்போம். இரவு அவர்கள் தூங்கியவுடன் கிணற்றிலிருந்து தண்ணீரை வெளியேற்றி விட்டு பொருட்களை எடுத்துச் சென்று விடுவோம்," என்று மகிழ்ச்சியாக கூறினான்.

இரவு நேரமானதும், இரண்டு பேரும் கிணற்றுக்கு அருகில் சென்று ஓசைப்படாமல் குடத்தில் கயிறு கட்டி தண்ணீரை வெளியேற்றி தோட்டத்தில் ஊற்றினர், நீண்ட நேரம் தண்ணீரை வெளியேற்றிய போதும், கிணற்றில் தண்ணீரின் அளவு குறையாததால் வெறுப்படைந்தனர். ஆனாலும் தங்கள் முயற்சியை அவர்கள் கைவிடவில்லை.

பொழுதும் விடிந்து விட்டது. இரவெல்லாம் தண்ணீர் இறைத்ததால் எழுந்து நிற்கக் கூட சக்தியின்றி இருவரும் அப்படியே விழுந்து கிடந்தனர்.


அவர்களிடம் சென்ற ராமன், "நண்பர்களே, வெறும் கற்கள் நிரம்பிய பெட்டிக்காக இரவெல்லாம் கண் விழித்து என் தோட்டத்துக்கு தண்ணீர் ஊற்றியுள்ளீர்கள். உங்களுக்கு நான் எவ்வளவு கூலி தர வேண்டும்?" என சிரித்துக் கொண்டே கேட்டார்.

உடனே அவர் கால்களில் விழுந்த இருவரும், "ஐயா, தெரியாமல் உங்கள் வீட்டில் திருட வந்து விட்டோம். இரவு முழுவதும் தண்ணீர் இறைத்ததால் உழைப்பின் அருமையை இப்போது உணர்ந்தோம். இனி திருட மாட்டோம். எங்களை மன்னித்து விட்டு விடுங்கள்." என கெஞ்சினர். அவர்களுக்கு அறிவுரை வழங்கி, தண்ணீர் இறைத்ததற்காக கூலி கொடுத்து அனுப்பி வைத்தார் ராமன்


மாப்பிள்ளை கேட்ட மணப்பெண்



ஒரு கிராமத்தில் ஒரு பணக்கார ஜமீன்தார் இருந்தார். அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தவுடன் மனைவி இறந்து விட்டாள். தன்னுடைய மகளுக்கு மல்லிகா என்று பெயரிட்டு அவளைக் கண்ணும் கருத்துமாய் வளர்த்தார். சில ஆண்டுகளில் மல்லிகா பெரியவளாகி மணப் பருவம் எய்தினாள். அவளது தோழிகள் அவளுடைய அழகைப் புகழ்ந்தார்கள். இதனால் மல்லிகா தன் அழகால் கர்வம் கொண்டிருந்தாள்.

அந்தக் காலத்தில் கிராமத்து நாவிதனுக்கு கிராமத்திலுள்ள இளைஞர்களைப் பற்றி நன்கு தெரிந்திருந்தது. ஜமீன்தார் ஒரு நாள் நாவிதனை அழைத்து தன் மகளுக்குப் பொருத்தமான வரனைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தார். இருவரின் பேச்சுவார்த்தையைக் கவனித்த மல்லிகா, "அப்பா, பலசாலியான ஒருவனைத் தான் நான் மணம் புரிவேனே தவிர சாதாரண மனிதனை அல்ல" என்று பளிச் என சொன்னாள்.

அவளுடைய அதிரடி வார்த்தைகளைக் கேட்ட ஜமீன்தாருக்கும், நாவிதனுக்கும் தூக்கி வாரிப் போட்டது. தனது திருமண விஷயத்தைப் பற்றி ஒரு இளம்பெண் இவ்வளவு பகிரங்கமாகப் பேசுவாள் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. ஜமீன்தார் மல்லிகாவை நோக்கி, "மகளே, உன்னுடைய திருமணத்தைப் பற்றி நீயே பேசுவது சரியில்லை. உனக்குத் தகுந்த மாப்பிள்ளையை நான்தான் தேர்வு செய்ய வேண்டும்" என்றார். ஆனால் மல்லிகா பிடிவாதமாக, "அப்பா, நீங்கள் பார்க்கும் மாப்பிள்ளையை நான் மணம் புரிய முடியாது. என்னுடைய எதிர்பார்ப்புகளைப் பற்றி நாவிதனுக்கு என்ன தெரியும்?" என்று கூறி விம்மிக் கொண்டே சென்றாள்.

தன்னுடைய அருமை மகள் விம்முவதைக் கண்டதும் அதற்குமேல் அவளைக் கடிந்து கொள்ள மனமில்லாமல் ஜமீன்தார் மவுனமானார். ஆனால் மல்லிகாவோ தனக்கு விருப்பமான நபரை வீட்டை விட்டு வெளியேறித் தானேத் தேடிக் கொள்ள முடிவு செய்தாள்.

மறுநாள் காலை ஜமீன்தார் எழுவதற்கு முன்பே மல்லிகா வீட்டை விட்டு வெளியேறி விட்டாள். நடந்து கொண்டே சென்றவள் பிரதான சாலையில் ஓர் ஊர்வலம் செல்வதைக் கண்டு சற்றே ஒதுங்கி நின்றாள். ஊர்வலம் அருகே நேருங்கியதும் குதிரை மீது பணக்கார மனிதன் சவாரி செய்து கொண்டு செல்வதையும் குதிரைக்கு முன்னும் பின்னும் அவனுடைய ஆட்கள் அணி வகுத்து செல்வதையும் பார்த்தாள். சாலையில் கூடியிருந்த மக்கள் அவரை வாழ்த்துவதையும் கண்டாள்.

ஒருவேளை இவர்தான் இந்த நாட்டு மன்னரோ என்று மல்லிகா அதிசயித்தாள். இதற்கு முன் மன்னரை அவள் பார்த்ததேயில்லை. ஆனால் இவர் மன்னராயிருந்தால், கண்டிப்பாக பலசாலியாகத் தான் இருப்பார் என்றும் மணம் புரிந்தால் இவரையே மணம் புரிய வேண்டும் என்றும் எண்ணினாள். இந்த எண்ணத்துடன் அந்த ஊர்வலத்திற்குப் பின்னால் தானும் சென்றாள்.

ஒரு குளத்தருகே செல்லும்போது ஊர்வலம் நின்றது. அரச மரத்தடியில் அமர்ந்திருந்த ஒரு யோகியை அந்த நபர் பார்த்ததே இதற்குக் காரணம். குதிரையிலிருந்து இறங்கிய அந்த பணக்காரர் நேராக அந்த யோகியிடம் சென்று அவர் கால்களில் விழுந்து வணங்கினார். அவருடன் வந்த ஆட்கள் மலர்களையும், பழங்களையும் யோகியின் காலடியில் சமர்ப்பிக்க யோகி அனைவரையும் ஆசீர்வாதம் செய்தார்.

குதிரையில் வந்த பணக்காரர்தான் மிகுந்த பலசாலி என்று நினைத்திருந்த மல்லிகாவுக்கு அவரது இந்த செய்கை ஆச்சரியத்தை அளித்தது. அப்படிப் பட்டவர் யோகியை விழுந்து வணங்கினாரெனில் யோகிதான் அவரை விட பலசாலியா! அப்படியானால், யோகியைத் தான் மணக்க வேண்டும். ஆனால் யோகி தன்னை மணப்பாரா? இப்படிப்பட்ட சிந்தனைகள் அவளுக்குத் தோன்றின. ஊர்வலத்தை மறந்து விட்டு யோகியின் அருகில் மல்லிகா அமர்ந்தாள்.


சிறிது நேரத்தில் பழங்கள், பூக்களுடன் யோகி எங்கோ கிளம்பிச் செல்ல, அவரை மல்லிகாவும் பின் தொடர்ந்தாள். அந்த யோகி ஒரு சிறிய கோயிலுக்குள் நுழைந்து அங்கிருந்த இறைவனை வணங்கினார். அதன்பிறகு யோகி வெளியில் சென்று விட்டார். கோயிலிலுள்ள இறைவன் தான் யோகியைவிட பலசாலி என இப்போது மல்லிகா நினைத்தாள். இறைவனையே மணந்து கொண்டு அந்தக் கோயிலிலேயே தங்கிவிட மல்லிகா தீர்மானித்தாள். "இறைவா, இப்படி சிலையாக இல்லாமல் உயிருள்ள வடிவம் எடுத்துவா. உன்னை நான் திருமணம் செய்து கொள்கிறேன்" என்று கண்களை மூடி பிரார்த்தனை செய்தாள்.

அப்போது கோயிலுக்குள் ஒரு நாய் நுழைந்து விட்டது. இறைவனுக்குப் படைக்கப்பட்ட பிரசாதத்தை, அந்த நாய் உண்ணத் தொடங்கியது. திடீரெனக் கண் விழித்துப் பார்த்த மல்லிகா, அந்த நாயைக் கண்டதும் இறைவனே தன் பிரார்த்தனைக்கிணங்கி நாய் உருவத்தில் வந்து விட்டார் என நினைத்தாள், இதற்குள் அந்த நாய் கோயிலை விட்டு வெளியே ஓடியதும், மல்லிகா நாயைப் பின் தொடர்ந்தாள்.

நாய் நேராக ஒரு வீட்டினுள் நுழைந்து அங்கிருந்த ஒரு மனிதனிடம் கொஞ்சி விளையாடி அவன் முன் படுத்துக் கொண்டு குழைந்தது. நாயின் எசமான் அவன் என்று தெரிந்து கொண்ட மல்லிகா, நாய் வடிவத்திலிருந்த கடவுளை விட அவன் பலசாலி என்று எண்ணினாள். அந்த ஆள் ஒரு விவசாயி. அவன் சற்று நேரத்திற்குப் பின் தனது ஏரை எடுத்துக் கொண்டு தன் வயலில் இறங்கி உழ ஆரம்பித்தான்.

இறுகிய நிலத்தையே ஆழமாக உழுபவன்தான் மிகுந்த பலசாலி என்று மல்லிகா இப்போது உறுதியாக நம்பினாள். அடுத்த கணம் அவன் கால்களில் வீழ்ந்து வணங்கி, "இந்த ஊரில் நீங்கள்தான் மிகுந்த பலசாலி என்று தெரிந்து கொண்டேன். என்னை உங்கள் மனைவியாக ஏற்றுக் கொள்ளுங்கள்" என்று கெஞ்சினாள். அவளது கதையை முதலிலிருந்து கேட்டுவிட்டு அவளது அழகிய முகத்தைப் பார்த்து, "மல்லிகா, உன்னைத் திருமணம் செய்ய சம்மதிக்கிறேன்" என்றான்.


Friday, August 19, 2011

அதிகாரம் - அழுக்காறாமை

குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - இல்லறவியல் அதிகாரம் -

குறள் 170:
அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.
கலைஞர் உரை:
பொறாமை கொண்டதால் புகழ் பெற்று உயர்ந்தோரும் இல்லை; பொறாமை இல்லாத காரணத்தால் புகழ் மங்கி வீழ்ந்தோரும் இல்லை.
மு.வ உரை:
பொறாமைப்பட்டுப் பெருமையுற்றவரும் உலகத்தில் இல்லை; பொறாமை இல்லாதவராய் மேம்பாட்டிலிருந்து நீங்கியவரும் இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
பொறாமை கொண்டு உயர்ந்தவரும் இல்லை. அது இல்லாதபோது தாழ்ந்தவரும் இல்லை.

அதிகாரம் - அழுக்காறாமை

குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - இல்லறவியல் அதிகாரம் -

குறள் 169:
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.
கலைஞர் உரை:
பொறாமைக் குணம் கொண்டவனின் வாழ்க்கை வளமாக இருப்பதும், பொறாமைக் குணம் இல்லாதவனின் வாழ்க்கை வேதனையாக இருப்பதும் வியப்புக்குரிய செய்தியாகும்.
மு.வ உரை:
பொறாமை பொருந்திய நெஞ்சத்தானுடைய ஆக்கமும், பொறாமை இல்லாத நல்லவனுடைய கேடும் ஆராயத் தக்கவை.
சாலமன் பாப்பையா உரை:
பொறாமை கொண்ட மனத்தவனின் உயர்வும், அது இல்லாத நல்லவனின் தாழ்வும் பற்றி ஆராய்க.

அதிகாரம் - அழுக்காறாமை

குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - இல்லறவியல் அதிகாரம் -

குறள் 168:
அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்.
கலைஞர் உரை:
பொறாமை எனும் தீமை ஒருவனுடைய செல்வத்தையும் சிதைத்துத் தீய வழியிலும் அவனை விட்டுவிடும்.
மு.வ உரை:
பொறாமை என்று கூறப்படும் ஒப்பற்ற பாவி, ஒருவனுடைய செல்வத்தைக் கெடுத்துத் தீய வழியில் அவனைச் செலுத்தி விடும்.
சாலமன் பாப்பையா உரை:
பொறாமை எனப்படும் ஒப்பில்லாத பாவி எவனிடம் இருக்கிறதோ, அவனது செல்வத்தை அழிப்பதோடு, அவனை நரகத்திலும் அது சேர்க்கும்.

அதிகாரம் - அழுக்காறாமை

குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - இல்லறவியல் அதிகாரம் -

குறள் 167:
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்.
கலைஞர் உரை:
செல்வத்தை இலக்குமி என்றும், வறுமையை அவளது அக்காள் மூதேவி என்றும் வர்ணிப்பதுண்டு. பொறாமைக் குணம் கொண்டவனை அக்காளுக்கு அடையாளம் காட்டிவிட்டுத் தங்கை இலக்குமி அவனைவிட்டு அகன்று விடுவாள்.
மு.வ உரை:
பொறாமை உடையவனைத் திருமகள் கண்டு பொறாமைப்பட்டுத் தன் தமக்கைக்கு அவனைக் காட்டி நீங்கி விடுவாள்.
சாலமன் பாப்பையா உரை:
பிறர் உயர்வு கண்டு பொறாமைப்படுபவனைப் பார்க்கும் திருமகள் வெறுப்புக் கொண்டு தன் அக்காள் மூதேவிக்கு அவனை அடையாளம் காட்டிவிட்டு விலகிப் போய்விடுவாள்.

அதிகாரம் - அழுக்காறாமை

குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - இல்லறவியல் அதிகாரம் -

குறள் 166:
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்.
கலைஞர் உரை:
உதவியாக ஒருவருக்குக் கொடுக்கப்படுவதைப் பார்த்துப் பொறாமை கொண்டால் அந்தத் தீய குணம், அவனை மட்டுமின்றி அவனைச் சார்ந்திருப்போரையும் உணவுக்கும், உடைக்கும்கூட வழியில்லாமல் ஆக்கிவிடும்.
மு.வ உரை:
பிறர்க்கு உதவியாகக் கொடுக்கப்படும் பொருளைக் கண்டு பொறாமைப்படுகின்றவனுடைய சுற்றம், உடையும் உணவும் இல்லாமல் கெடும்.
சாலமன் பாப்பையா உரை:
பிறர்க்குக் கொடுப்பதைக் கண்டு பொறாமைப் படுகிறவனின் குடும்பம், உடுக்கவும், உண்ணவும் இல்லாமல் அலையும்.

அதிகாரம் - அழுக்காறாமை

குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - இல்லறவியல் அதிகாரம் -

குறள் 165:
அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்காயும் கேடீன் பது.
கலைஞர் உரை:
பொறாமைக் குணம் கொண்டவர்களுக்கு அவர்களை வீழ்த்த வேறு பகையே வேண்டா. அந்தக் குணமே அவர்களை வீழ்த்தி விடும்.
மு.வ உரை:
பொறாமை உடை‌யவர்க்கு வேறு பகை வேண்டா. அஃது ஒன்றே போதும், பகைவர் தீங்கு செய்யத் தவறினாலும் தவறாது கேட்டைத் தருவது அது.
சாலமன் பாப்பையா உரை:
பொறாமை உடையவர்க்குத் தீமை தரப் பகைவர் வேண்டியதில்லை; பொறாமையே போதும்.

அதிகாரம் - அழுக்காறாமை

குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - இல்லறவியல் அதிகாரம் -
குறள் 164:
அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து.
கலைஞர் உரை:
தீய வழியில் சென்றால் துன்பம் ஏற்படுமென்பதை அறிந்தவர்கள் பொறாமையினால் தீச்செயல்களில் ஈ.டுபடமாட்டார்கள்.
மு.வ உரை:
பொறாமைப்படுதலாகிய தவறான நெறியில் துன்பம் ஏற்படுத‌ை அறிந்து, பொறாமை காரணமாக அறமல்லாதவைகளைச் செய்யார் அறிவுடையோர்.
சாலமன் பாப்பையா உரை:
பொறாமை கொண்டால் துன்பம் வரும் என்பதை அறிந்து அறிவுடையோர் பொறாமை காரணமாகத் தீமைகளைச் செய்யமாட்டார்.

அதிகாரம் - அழுக்காறாமை

குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - இல்லறவியல் அதிகாரம் -

குறள் 163:
அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான்.
கலைஞர் உரை:
அறநெறியையும், ஆக்கத்தையும் விரும்பிப் போற்றாதவன்தான், பிறர் பெருமையைப் போற்றாமல் பொறாமைக் களஞ்சியமாக விளங்குவான்.
மு.வ உரை:
தனக்கு அறமும் ஆக்கமும் விரும்பாதவன் என்று கருதத் தக்கவனே, பிறனுடைய ஆக்கத்தைக் கண்டு மகிழாமல் அதற்காகப் பொறாமைப்படுவான்.
சாலமன் பாப்பையா உரை:
பிறர் உயர்வு கண்டு மகிழாமல் பொறாமைப்படுபவன், அறத்தால் வரும் புண்ணியத்தை வேண்டா என மறுப்பவன் ஆவான்.

அதிகாரம் - அழுக்காறாமை

குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - இல்லறவியல் அதிகாரம் -

குறள் 162:
விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்.
கலைஞர் உரை:
யாரிடமும் பொறாமை கொள்ளாத பண்பு ஒருவர்க்கு வாய்க்கப் பெறுமேயானால் அதற்கு மேலான பேறு அவருக்கு வேறு எதுவுமில்லை.
மு.வ உரை:
யாரிடத்திலும் பொறாமை இல்லாதிருக்கப் பெற்றால், ஒருவன் பெறத்தக்க மேம்பாடான பேறுகளில் அதற்கு ஒப்பானது வேறொன்றும் இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
எவர் இடத்தும் பொறாமை கொள்ளாதிருப்பதை ஒருவன் பெற்றால் சீரிய சிறப்புகளுள் அது போன்றது வேறு இல்லை.

அதிகாரம் - அழுக்காறாமை

குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - இல்லறவியல் அதிகாரம் -

குறள் 161:
ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு.
கலைஞர் உரை:
மனத்தில் பொறாமையில்லாமல் வாழும் இயல்பை ஒழுக்கத்திற்குரிய நெறியாகப் பெற்று விளங்கிட வேண்டும்.
மு.வ உரை:
ஒருவன் தன் நெஞ்சில் பொறாமை இல்லாமல் வாழும் இயல்பைத் தனக்கு உரிய ஒழுக்க நெறியாகக் கொண்டு போற்ற வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
உள்ளத்துள் பொறாமை இல்லாமல் வாழும் குணத்தை, ஒருவன் தனக்கு உரிய ஒழுக்கமாகக் கொள்க.

Friday, August 5, 2011

ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்


திரைப்படம்- பாலும் பழமும்
இசை - விஸ்வநாதன்- ராமமூர்த்தி
வரிகள்: கண்ணதாசன்
பாடியவர் - பி. சுசீலா

ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்
என் இறைவன் அவனே அவனே என பாடும் குரல் கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்

ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்


நிலவும் மாலை பொழுதினிலேஎன் இறைவன் வந்தான் தேரினிலே
நிலவும் மாலை பொழுதினிலே என் இறைவன் வந்தான் தேரினிலே
ஏழையின் இல்லம் இதுவென்றான் இரு விழியாலே மாலையிட்டான்
இரு விழியாலே மாலையிட்டான்

என் இறைவன் அவனே அவனே என பாடும் குரல் கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்

காதல் கோயில் நடுவினிலே கருணை தேவன் மடியினிலே
காதல் கோயில் நடுவினிலே கருணை தேவன் மடியினிலே
யாரும் அறியா பொழுதினிலே அடைக்கலம் ஆனேன் முடிவினிலே
அடைக்கலம் ஆனேன் முடிவினிலே

என் இறைவன் அவனே அவனே என பாடும் குரல் கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
அருள்மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்

அவள் பறந்து போனாளே...


திரைப்படம் - பார் மகளே பார்
இசை - விஸ்வநாதன் - ராமமூர்த்தி
வரிகள்: கண்ணதாசன்
பாடியவர்கள் - டி.எம். சௌந்தரராஜன் - பி.பி. ஸ்ரீநிவாஸ்

அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்களiரெண்டைக் கவர்ந்து போனாளே

அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்களiரெண்டைக் கவர்ந்து போனாளே

என் காதுக்கு மொழியில்லை
என் நாவுக்கு சுவையில்லை
என் நெஞ்சுக்கு நினைவில்லை
என் நிழலுக்கு உறக்கமில்லை
என் நிழலுக்கு உறக்கமில்லை

இந்த வீட்டுக்கு விளக்கில்லை
சொந்தக் கூட்டுக்கு குயிலில்லை
என் அன்புக்கு மகளiல்லை
ஒரு ஆறுதல் மொழியில்லை
ஒரு ஆறுதல் மொழியில்லை

அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்களiரெண்டைக் கவர்ந்து போனாளே

என் இதயத்தில் பூட்டிவைத்தேன்
அதில் என்னையே காவல் வைத்தேன்
அவள் கதவை உடைத்தாளே
தன் சிறகை விரித்தாளே

அவள் எனக்கா மகளானாள்
நான் அவளுக்கு மகனானேன்
என் உரிமைத் தாயல்லவா
என் உயிரை எடுத்துச் சென்றாள்
என் உயிரை எடுத்துச் சென்றாள்

அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்களiரெண்டைக் கவர்ந்து போனாளே
திரைப்படம்: நெஞ்சில் ஓர் ஆலயம்
பாடியவர்: ஏ.எல்.ராகவன்
வரிகள்: கண்ணதாசன்
இசை: விஸ்வநாதன்-ராமமூர்த்தி


எங்கிருந்தாலும் வாழ்க
உன் இதயம் அமைதியில் வாழ்க
மஞ்சள் வளத்துடன் வாழ்க
உன் மங்கலக் குங்குமம் வாழ்க
வாழ்க…வாழ்க…

எங்கிருந்தாலும் வாழ்க
உன் இதயம் அமைதியில் வாழ்க
மஞ்சள் வளத்துடன் வாழ்க
உன் மங்கலக் குங்குமம் வாழ்க
வாழ்க…வாழ்க…


இங்கே ஒருவன் காத்திருந்தாலும்
இளமை அழகைப் பார்த்திருந்தாலும்
சென்ற நாளை நினத்திருந்தாலும்
திருமகளே நீ வாழ்க
வாழ்க…வாழ்க…

எங்கிருந்தாலும் வாழ்க
உன் இதயம் அமைதியில் வாழ்க
மஞ்சள் வளத்துடன் வாழ்க
உன் மங்கலக் குங்குமம் வாழ்க
வாழ்க…வாழ்க…


வருவாய் என நான் தனிமையில் நின்றேன்
வந்தது வந்தாய் துணையுடன் வந்தாய்
துணைவரைக் காக்கும் கடமையும் தந்தாய்
தூயவளே நீ வாழ்க
வாழ்க…வாழ்க…

எங்கிருந்தாலும் வாழ்க
உன் இதயம் அமைதியில் வாழ்க
மஞ்சள் வளத்துடன் வாழ்க
உன் மங்கலக் குங்குமம் வாழ்க
வாழ்க…வாழ்க…


ஏற்றிய தீபம் நிலை பெற வேண்டும்
இருண்ட வீட்டில் ஒளி தர வேண்டும்
போற்றும் கணவன் உயிர் பெற வேண்டும்
பொன்மகளே நீ வாழ்க
வாழ்க…வாழ்க

அமைதியான நதியினிலே ஓடும்..


திரைப் படம்
- ஆண்டவன் கட்டளை
இசை - விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர்கள் - டி.எம். சௌந்தரராஜன் - பி. சுசீலா


அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
காற்றினிலும் மழையினிலும் கலங்கவைக்கும் இடியினிலும்
காற்றினிலும் மழையினிலும் கலங்கவைக்கும் இடியினிலும்
கரையினிலே ஒதுங்கி நின்றால் ஆடும், ஓய் ஓய்
அமைதியான நதியினிலே ஓடும், ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்


தென்fனம் இளங்கீற்றினிலே ஏ..ஏ..ஏ
தென்னம் இளங்கீற்றினிலே தாலாட்டும் தென்றலது
தென்னம் இளங்கீற்றினிலே தாலாட்டும் தென்றலது
தென்னைதனைச் சாய்த்துவிடும் புயலாக வரும்பொழுது
தென்னைதனைச் சாய்த்துவிடும் புயலாக வரும்பொழுது
அமைதியான நதியினிலே ஓடும், ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்


ஓ ஓ ஓ
ஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணலது
ஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணலது
காற்றடித்தால் சாய்வதில்லை கனிந்தமரம் வீழ்வதில்லை
காற்றடித்தால் சாய்வதில்லை கனிந்தமரம் வீழ்வதில்லை
அமைதியான நதியினிலே ஓடும், ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்


நாணலிலே காலெடுத்து நடந்து வந்த பெண்மை இது
நாணலிலே காலெடுத்து நடந்து வந்த பெண்மை இது
நாணம் என்னும் தென்றலிலிலே தொட்டில் கட்டும் மென்மை இது
நாணம் என்னும் தென்றலிலிலே தொட்டில் கட்டும் மென்மை இது
அமைதியான நதியினிலே ஓடும், ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்


அந்தியில் மயங்கி நின்றால் காலையில் தௌiந்துவிடும்
அந்தியில் மயங்கி நின்றால் காலையில் தௌiந்துவிடும்
அன்பு மொழி கேட்டுவிட்டால் துன்பநிலை மாறிவிடும்
அன்பு மொழி கேட்டுவிட்டால் துன்பநிலை மாறிவிடும்

அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
காற்றினிலும் மழையினிலும் கலங்கவைக்கும் இடியினிலும்
காற்றினிலும் மழையினிலும் கலங்கவைக்கும் இடியினிலும்
கரையினிலே ஒதுங்கி நின்றால் ஆடும், ஓய் ஓய்
அமைதியான நதியினிலே ஓடும், ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

சொன்னது நீதானா சொல் சொல் சொல்..

திரைப்படம்: நெஞ்சில் ஓர் ஆலயம்
குரல்: சுசீலா
வரிகள்: கண்ணதாசன்
இசை: விஸ்வநாதன்-ராமமூர்த்தி


சொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே
சம்மதம் தானா ஏன் ஏன் ஏன் என்னுயிரே
ஏன் ஏன் ஏன் என்னுயிரே

சொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே
சம்மதம் தானா ஏன் ஏன் ஏன் என்னுயிரே
ஏன் ஏன் ஏன் என்னுயிரே


இன்னொரு கைகளிலே யார் யார் நானா
எனை மறந்தாயா ஏன் ஏன் ஏன் என் உயிரே

சொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே
சம்மதம் தானா ஏன் ஏன் ஏன் என்னுயிரே
ஏன் ஏன் ஏன் என்னுயிரே


மங்கல மாலை குங்குமம் யாவும் தந்ததெல்லாம் நீதானே
மணமகளைத் திருமகளாய் நினைத்ததெல்லாம் நீதானே
என் மனதில் உன் மனதை இணைத்ததும் நீதானே
இறுதிவரைத் துணையிருப்பேன் என்றதும் நீதானே
இன்று

சொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே
சம்மதம் தானா ஏன் ஏன் ஏன் என்னுயிரே
ஏன் ஏன் ஏன் என்னுயிரே


தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை தெருவினிலே விழலாமா
தெருவினிலே விழுந்தாலும் வேறோர் கை தொடலாமா
ஒரு கொடியில் ஒரு முறைதான் மலரும் மலரல்லவா
ஒரு மனதில் ஒரு முறைதான் வளரும் உறவல்லவா

சொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே
சம்மதம் தானா ஏன் ஏன் ஏன் என்னுயிரே
ஏன் ஏன் ஏன் என்னுயிரே

பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை


படம்: படித்தால் மட்டும் போதுமா
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடியவர்கள்: Pb ஸ்ரீநிவாஸ், tm சௌந்தர்ராஜன்
வரிகள்: கண்ணதாசன்

பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா
என்னென்று நான் சொல்லவேண்டுமா

பூ ஒன்று கண்டேன் முகம் காணவில்லை
ஏன் என்று நான் சொல்லலாகுமா
ஏன் என்று நான் சொல்லவேண்டுமா

நடமாடும் மேகம் நவநாகரீகம்
அலங்கார கின்னம் அலை போல மின்னும்
நடமாடும் செல்வம் பணிவான தெய்வம்
பழங்கால சின்னம் உயிராக மின்னும்
துள்ளி வரும் வெள்ளி நிலா
துள்ளி வரும் வெள்ளி நிலா
துவண்டு விழும் கொடியிடையாள்
துவண்டு விழும் கொடியிடையாள்
விண்ணோடு விளையாடும்
பெண் அந்த பெண்ணல்லவோ
சென்றேன் அங்கே
கண்டேன் இங்கே
வந்தேன்

பெண் ஒன்று கண்டேன் பொன் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா
என்னென்று நான் சொல்லவேண்டுமா

நான் பார்த்த பெண்ணை நீ பார்க்க வில்லை
நீ பார்த்த பெண்ணை நான் பார்க்க வில்லை
நீ பார்த்த பெண்ணை நான் பார்க்க வில்லை

உன் பார்வை போலே என் பார்வை இல்லை
நான் கண்ட காட்சி நீ காணவில்லை
நான் கண்ட காட்சி நீ காணவில்லை

என் விழியில் நீ இருந்தாய்
என் விழியில் நீ இருந்தாய்
உன் வடிவில் நான் இருந்தேன்
உன் வடிவில் நான் இருந்தேன்

நீ இன்றி நானில்லை
நான் இன்றி நீயில்லையே
சென்றேன் ம்ஹிம்
கண்டேன் ம்ஹிம்
வந்தேன்

பொன் ஒன்று கண்டேன்
பெண் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா
என்னென்று நான் சொல்லவேண்டுமா

பூ ஒன்று கண்டேன்
முகம் காணவில்லை
ஏன் என்று நான் சொல்லலாகுமா
ஏன் என்று நான் சொல்லவேண்டுமா

அன்றொரு நாள் இதே நிலவில்..


திரைப்படம்: நாடோடி
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா


அன்றொரு நாள் இதே நிலவில்
அவர் இருந்தார் அவர் இருந்தார்
என் அருகே
அன்றொரு நாள் இதே நிலவில்
அவர் இருந்தார் என் அருகே
அன்றொரு நாள் இதே நிலவில்
அவர் இருந்தார் என் அருகே
நான் அடைக்கலம் தந்தேன் என் அழகை
நீ அறிவாயே வெண்ணிலவே

அந்த ஒரு நாள் ஆனந்தத் திருனாள்
இன்று நினைத்தால் என்னென்ன சுகமோ?
பாதி விழிகள் மூடிக் கிடந்தேன்
பாதி விழிகள் மூடிக் கிடந்தேன்
பாவை மேனியிலே
நீ பார்த்தாயே வென்ணிலவே

அன்றொரு நாள் இதே நிலவில்
அவள் இருந்தாள் என் அருகே நான்
அடைக்கலம் கொண்டேன் அவள் அழகை
நீ அறிவாயே வென்ணிலவே

வானும் நதியும் மாறாமல் இருந்தால்
நானும் அவளும் நீங்க்காமல் இருப்போம்
சேர்ந்து சிரிப்போம் சேர்ந்து நடப்போம்
சேர்ந்து சிரிப்போம் சேர்ந்து நடப்போம்
காதல் மேடையிலே நீ
சாட்சியடி வென்ணிலவே

அன்றொரு நாள் இதே நிலவில்
அவர் இருந்தார் என் அருகே நான்
அடைக்கலம் கொண்டேன் அவள் அழகை
நீ அறிவாயே வென்ணிலவே

ஆடும் கனியை ஆடாமல் ஏடுத்தான்
வாடும் மலரை வாடாமல் தொடுத்தான்
ஆடும் கனியை ஆடாமல் ஏடுத்தான்
வாடும் மலரை வாடாமல் தொடுத்தான்
சூடிக் கொடுத்தான் பாடி முடித்தான்
பாவை மேனியிலே நீ
பார்த்தாயே வென்ணிலவே
ஆஆஆஆஆஆ

அன்றொரு நாள் இதே நிலவில்
அவர் இருந்தார் என் அருகே
நான் அடைக்கலம் கொண்டேன் அவள் அழகை
நீ அறிவாயே வென்ணிலவே