Sunday, February 28, 2010

அறிவியல் புதுமை


A�ÚTÖÚR A¿ÛY pfoÛN



A¿ÛY pfoÛN›Á R‹ÛR rÍ£RŸ GÁ¿ i\�T|Y‰�|. CYŸ ÚYR LÖX†ÛR ÚNŸ‹RYŸ. rÍ£RÛW EXL A[«¥ ÙR¡VÖ‰. R¼ÚTÖ‰ B‡ LÖX†‡ÚXÚV A¿ÛY pfoÛN C£‹‰·[‰ GÁTR¼LÖ] NÖÁ¿L· fÛP†‰·[].


«XjhL¸Á ÚRÖ¥, ÚWÖUjLÛ[ EÛPVÖL A‚‹R LÖX†‡ÚXÚV A¿ÛYpfoÛN PÖePŸLº• C£‹‰·[]Ÿ. AYŸL· BTÚWNÁ SP†‡V BTÚWNÁ ‡ÚVyPŸ “ÛR TzYUÖL SUeh fÛP†‰·[‰.

ÙR¼h TÖ¡Í SL£eh A£ÚL J£ NUÖ‡ AÛPVÖ[• LÖQ�TyP‰. A†‰PÁ J£ UWeiPÖW˜• E·[‰. C‰ AYŸL¸Á BTÚWNÁ ‡ÚVyPWÖL C£‹‡£eLXÖ•. Ajh fÛP†R ÙTÖ£yL·, G¨•“†‰�|LÛ[ ‘WÖÁÍ ÚRpV ÙRÖ¥ÙTÖ£· BWÖšop ÛUV†‡¥ ÛY†‰ Bš° ÙNšR]Ÿ.

Bš«¥
A�ÚTÖÚR A¿ÛY pfoÛNL· SP‹‡£�TR¼LÖ] NÖÁ¿L· fÛP†R]. AYŸL· Y¦ ÙR¡VÖU¥ C£�TR¼LÖL UVeL U£‹‰LÛ[�•, “�L· Aµf «|YÛR R|eh• U£‹‰LÛ[�• ETÚVÖf†‰ C£ef\ÖŸL·. ÚNR• AÛP‹R ÛL G¨•“LÛ[ CÛQ†‰ ÛR†‡£ef\ÖŸL·. C‰ A�ÚTÖÛRV A¿ÛYo pfoÛN ˜Û\ÛV SUeh EQŸ†‰f\‰.

C‹R LÖV• AYŸL· ÚTÖ¡¥ D|TyPRÖ¥ H¼TyPRÖLÚYÖ A¥X‰ ÚYyÛPVÖzVÚTÖ‰ «XjhL[Ö¥
RÖeL�Ty| A¥X‰ RY½ «µ‹RRÖÚXÖ H¼TyPRÖL C£eLXÖ•. C‰ÚTÖÁ\ ÚY¿ pX RPVjL· Ù^ŸU›¨•, ÙNehzVWr SÖyz¨• fÛP†‰·[]. CÛYÙV¥XÖ• 6 B›W†‰ 900 B�|Lºeh ˜‹ÛRVÛY.

G]ÚY f½Í‰«Á LÖX†‰eh 5 B›W• B�|Lºeh ˜ÁÚT SU‰ ˜ÁÚ]ÖŸL· A¿ÛY pfoÛNÛV TVÁT|†‡ C£ef\ÖŸL· GÁT‰ ÙR¸YÖf\‰. h½�TÖL IÚWÖ�‘Vhz›]Ÿ A¿ÛY pfoÛN›Á ˜ÁÚ]ÖzL[ÖL C£‹‰·[]Ÿ GÁf\ÖŸL· ÙRÖ¥¦V¥ Œ“QŸL·.



நன்றி - தினத்தந்தி

கண்ணில் ஒரு வலியிருந்தால்



படம்: உயிரே
குரல்: உன்னிமேனன், சுவர்ணலதா
வரிகள்: வைரமுத்து
இசை - எ ர . ரகுமான்


ஓ...கண்ணில் ஒரு வலியிருந்தால்
கனவுகள் வருவதில்லை

கண்ணில் ஒரு வலியிருந்தால்

கனவுகள் வருவதில்லை

கண்ணில் ஒரு வலியிருந்தால்

கனவுகள் வருவதில்லை


பூங்காற்றிலே உன் சுவாசத்தை

தனியாகத்தேடிப்பார்த்தேன்

கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே

அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்

உயிரின் துளி காயும் முன்னே

என் விழி உனை காணும் கண்ணே

என் ஜீவன் ஓயும் முன்னே

ஓடோடி வா


பூங்காற்றிலே...

காற்றின் அலை வரிசை கேட்கின்றதா
கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும் கண்ணீர்

வழிகின்றதா நெஞ்சு நனைகின்றதா

இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா


காற்றில் கண்ணீரை ஏற்றி

கவிதைச் செந்தேனை ஊற்றி

கண்ணே உன் வாசல் சேர்த்தேன்

ஓயும் ஜீவன் ஒடும் முன்னே

ஓடோடி வா...


பூங்காற்றிலே...


கண்ணில் ஒரு வலியிருந்தால்

கனவுகள் வருவதில்லை

கண்ணில் ஒரு வலியிருந்தால்

கனவுகள் வருவதில்லை


வானம் எங்கும் உன் விம்பம்

ஆனால் கையில் சேரவில்லை

காற்றில் எங்கும் உன் வாசம்

வெறும் வாசம் வாழ்க்கையில்லை

உயிரை வேரோடு கிள்ளி

என்னைச் செந்தீயில் தள்ளி

எங்கே சென்றாயோ கள்ளி
ஓயும் ஜீவன் ஓடும் முன்னே
ஓடோடி வா


பூங்காற்றிலே...

Thursday, February 25, 2010

சச்சின் டெண்டுல்கர் - 200



சாதனை மன்னன் சச்சின்


தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக, குவாலியரில் நேற்று நடந்த, இரண்டாவது ஒருநாள் போட்டியில், 147 பந்தில் 3 சிக்சர், 25 பவுண்டரி உட்பட 200 ரன்கள் எடுத்து, புதிய உலக சாதனை படைத்தார், இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின். இதன்மூலம் இவரது சாதனை பட்டியலில், மேலும் ஒரு புதிய மைல்கல் சேர்ந்தது.

இதன்மூலம் சச்சின்

* ஒருநாள்
அரங்கில் முதல் இரட்டை சதம் மற்றும் ஒரு போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள்
முதலிடம்.


இவ்வரிசையில் "டாப்-3' வீரர்கள்::

வீரர்

ரன்

எதிரணி

ஆண்டு

இடம்

சச்சின் (இந்தியா)

200*

தென் ஆப்ரிக்கா

2010

குவாலியர்

காவன்ட்ரி (ஜிம்பாப்வே)

194*

வங்கதேசம்

2009

புலவாயோ

அன்வர் (பாகிஸ்தான்)

194

இந்தியா

1997

சென்னை



* ஒருநாள் அரங்கில் அதிக ரன் மற்றும் அதிக சதம் கடந்த வீரர்கள் வரிசையில் சச்சின், முன்னிலை வகிக்கிறார்.

இவ்வரிசையில் "டாப்-3' வீரர்கள்:

வீரர்

போட்டி

ரன்

சதம்/அரைசதம்

சச்சின் (இந்தியா)

442

17598

46/93

ஜெயசூர்யா (இலங்கை)

444

13428

28/68

பாண்டிங் (ஆஸ்திரேலியா)

340

12731

29/76


* டெஸ்ட் அரங்கில் அதிக ரன் மற்றும் அதிக சதம் கடந்த வீரர்கள் வரிசையில் சச்சின், முதலிடம் வகிக்கிறார்.

இவ்வரிசையில் "டாப்-3' வீரர்கள்:

வீரர்

போட்டி

ரன்

சதம்/அரைசதம்

சச்சின் (இந்தியா)

166

13447

47/54

லாரா (வெ.இண்டீஸ்)

131

11953

34/48

பாண்டிங் (ஆஸ்திரேலியா)

142

11859

39/51


* நேற்றைய போட்டியில் இரட்டை சதமடித்த சச்சின், ஒரு போட்டியில் அதிக ரன் அடித்த இந்திய வீரர் என்ற தனது பழைய சாதனையை முறிடித்தார். முன்னதாக இவர் கடந்த 1999ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக, ஐதராபாத்தில் நடந்த போட்டியில் 186 ரன்கள் எடுத்திருந்தார்.

இவ்வரிசையில் "டாப்-4' இந்திய வீரர்கள்:

வீரர்

ரன்

எதிரணி

இடம்

ஆண்டு

சச்சின்

200*

தென் ஆப்ரிக்கா

குவாலியர்

2010

சச்சின்

186*

நியூசிலாந்து

ஐதராபாத்

1999

தோனி

183*

இலங்கை

ஜெய்ப்பூர்

2005

கங்குலி

183

இலங்கை

டான்டன்

1999


* ஒருநாள் அரங்கில் அதிக ரன்கள் சேர்த்த இந்திய வீரர்கள் வரிசையில் சச்சின், முதலிடத்தில் நீடிக்கிறார்.

இவ்வரிசையில் "டாப்-3' இந்திய வீரர்கள்:

வீரர்

போட்டி

ரன்

சதம்/அரைசதம்

சச்சின்

442

17598

46 / 93

கங்குலி

308

11221

22 / 71

டிராவிட்

335

10644

12 / 81


மூன்றாவது முறையாக

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, மூன்றாவது முறையாக 400 ரன்களுக்கும் மேல் கடந்துள்ளது. தவிர, தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான இந்திய அணி, 3 விக்கெட் இழப்புக்கு 401 ரன்கள் குவித்து, புதிய சாதனை படைத்தது. இதற்கு முன் கடந்த 2000த்தில் நாக்பூரில் நடந்த போட்டியில், 310 ரன்கள் எடுத்திருந்ததே அதிகமாக இருந்தது.

இந்தியா எடுத்த அதிக ரன்கள் விபரம்:

ரன்கள்

எதிரணி

இடம்/ஆண்டு

414/7

இலங்கை

ராஜ்கோட்/2009

413/5

பெர்முடா

ஆப் ஸ்பெயின்/2007

401/3

தெ.ஆப்

குவாலியர்/2010



5 ரன்கள்:

நேற்று சச்சின் 195 ரன்கள் எடுத்த நிலையில், அடுத்த 5 ரன்களை எடுக்க, 5 ஓவர்கள் காத்திருக்க வேண்டியதாயிற்று.

இதன் விபரம்:

* 45.4 வது ஓவரில் 196 ரன்கள் எடுத்தார்.
* 46.1 ஓவரில் ஸ்டைன் பந்தில், ஒருரன் எடுத்த சச்சின் 197ஐ எட்டுகிறார்.
* 46.3ல் ரன் எதுவும் இல்லை
* 46.4ல் சச்சின் ஒரு ரன் எடுக்க, 198 ஆகிறது.
* 47.3 ஓவரில் லாங்கிவெல்ட்டின் பந்தில் ரன் இல்லை
* 47.4ல் சச்சின் ஒரு ரன் எடுக்க 199ஐ எட்டுகிறார்.
* கடைசியில் 49.3 ஓவரில் லாங்வெல்ட்டின் பந்தை எதிர்கொண்டார் சச்சின். இதில் ஒரு ரன் எடுத்த சச்சின், 200 ரன்கள் கடந்து சாதித்தார்.


நன்றி - Dinamalar

Friday, February 19, 2010

யோக

யோக பயில்வதற்கு ஆசனப்பயிற்சி இன்றியமையாது.

யோகப் பயிற்சிகளில் யோகாசனம் முக்கியமானது. யோகம் ஒரு கலை. கல்வி பயில்வதற்கு எவ்வளவு இன்றியமையாததோ, அவ்வளவு இன்றியமையாதது யோகம் பயில்பவர்களுக்கு யோகாசனம் பயில்வது என்று கஊர்றினால் அது மிகையாகாது.

யோகம் என்றால் என்ன?

யோகம் என்ற சொல் யுஜ் என்ற சமஸ்கிருத மொழியில் உள்ள சொல்லின் வழியே பிறந்ததாகும். யோகம் என்ற சொல்லுக்கு "ஒருங்கிணைத்தல்" அல்லது "எல்லாவற்றையும் எந்தவிதமான வேறுபாடுமின்றி முழுமைப்படுத்துதல்" என்றும் பொருள் கூறுகின்றனர்.

யோகம் என்றால் அலையும் மனதை அலையாமல் ஒரு நேர்வழிப்படுத்தும் செயல் என்று எளிமையாகவும் உரைக்கின்றனர். யோகம் தமிழில் தவம் அல்லது ஜெபம் எனப்படும். அறிவியல் கலை யோகம் என்பது மக்கள் தம் உடலையும் உள்ளத்தையும் அடக்கியாளக் கண்ட ஓர் அறிவியல் கலையாகும். யோகப் பயிற்சியில் சித்தி பெற்ற அறிஞர்கள் இயற்கையைத் தன்வயப்படுத்தும். ஆற்றலை அடைவார்கள். யோகக் கலை சாகாக் கலை என்று பல அறிஞர்கள் கூறுவர். யோகப் பயிற்சியால் நீண்ட நாள் வாழலாம்.

யோகம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றிய கலையாகும்.சிவயோகம் இந்த யோகம் என்னும் அரும்பெரும் ஆன்மீகக்கலை நம் முன்னோர் இன்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கண்ட அரும்பெரும் கலை. இக்கலை இன்று சைவ சமய சாத்திரங்களில் அழகுற மிக நுணுக்கமாக எடுத்துக் காட்டப் பெற்றுள்ளது. யோகத்தை சிவயோகம் என்பதும், இது சிவனார் மக்களுக்கு உபதேசித்துக் கொடுத்த கலை என்பதும் தெறிந்ததே. உலகிலே முதன் முதலாக யோகக் கலையைக் கண்டவர்கள் சிவனை வழிபடும் சிவனெறியாளர்களே.

யோக முறை- யோகாசன முறைகளை முறையோடு பின்பற்ற வேண்டும். உள்ளுறுப்புகள் தான் யோகாசனத்தில் முழுக்கப் பயன்படுகின்றன. உள்ளுறுப்புகள் தூய்மை பெறவும் வலிமை பெறவும் பயிற்சி செய்யும் நேரத்தில் மிகவும் நியமத்துடன் பயபக்தியுடன் நெறி பிறழாது செய்ய வேண்டும்.

யோகப் பயிற்சியின் சிறப்புகள்

1.தேகத்திற்கு வந்த நோய்களைப் போக்கியும் இனி நோய்கள் வராமல் காத்தும்ஒருவருக்கு உகந்த உன்னத உடலை உருவாக்குகிறது.

2.உள்ளுறுப்புகளையும் வெளியுறுப்புகளையும் தூய்மைப்படுத்தி அது தன்பணிகளை அருமையாகவும் திறமையாகவும் அயராமல் செயல்படுத்தத் தூண்டுகிறது.

3.சாதாரணமாகச் செயல்படும் ஒருவனுடைய செயலாற்றலை மிகுதிப்படுத்துவதுடன் உடல் நலமும், மனவளமும் பெற்று வாழ உற்சாகப்படுத்துகிறது.

4.அன்றாடம் உடலில் உண்டாகும் கழிவுப் பொருட்களை வெகு விரைவாக வெளிப்படுத்தவும், உடலைக் கசடற்ற முறையில் வைத்துக் காக்கின்ற சக்தியினையும் உடலுக்குத் தருகின்றது. அதாவது நரம்புகள், மூளை, நுரையீரல், இதயம், ஜீரண உறுப்புகள் மற்றும் குண்டிக்காய் போன்ற அவயவங்களுக்கு திறமையுடன் வேலை செய்கின்ற ஆற்றலை அளிக்கிறது.

5.நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்வதற்குத் துணை புரிகிறது. மனதாலும், செயலாலும், உயர்ந்த வாழ்வு வாழத் தூண்டுகிறது. இவ்வாறு தேகநலனைப் பற்றியும், சிறந்த ஆரோக்கிய வாழ்வு முறையைப் பற்றியும் யோகமுறை உடற்பயிற்சி முறைகள் நிறைந்து செயல்படுகின்றன.

ஆசனம் செய்வதால் உண்டாகும் பயன்கள்:

1.ஆசனங்களை முறையோடு செய்து வந்தால் உடல்வளம் பெறுவதுடன், மிகவும் சுறுசுறுப்போடும் விரைவாகவும் அன்றாட வாழ்வில் இயங்க முடியும்.

2.முதுகெலும்பு எளிதில் வளைந்து இயங்கும் ஆற்றலைப் பெறுவதால், எதனையும் சிறப்பாகப் பணியாற்றும் வகையில் உடலில் ஒத்துழைப்பு உயர்ந்த அளவில் கிடைக்கிறது.

3.பசி நன்றாக எடுக்கிறது. உடலில் பற்றிக் கொள்கின்ற நோய்கள் தொடக்க நிலையிலேயே முறியடிக்கப்படுகின்றன.

4.மிகவும் முக்கிய உறுப்புகளான இதயம், நுரையீரல்கள் மற்றும் மூளைப்பகுதிகள் செழிப்படைந்து சிறப்புடன் பணியாற்ற முடிகிறது.

5.தங்கு தடை இல்லா இரத்த ஓட்டம் உடலெங்கும் இயல்பாக ஓடி, உடலைப் பூரணப் பொலிவு பெற வைக்கிறது.

6.உடல் அவயங்கள் எல்லாம் விறைப்பாக இருக்காமல், எளிதில் செயலுக்கு இணங்கும் தன்மையில் இருந்திட வழி அமைகிறது.

வாட்டர் தெரப்பி


உடல் இளைப்பது முதல் புற்றுநோய் பாதிப்பு குறைவது வரை செலவே இல்லாத மருந்து ஒன்று இருக்கிறது தெரியுமா? அது தான் தண்ணீர். என்ன சிரிக்கிறீங்க? உண்மை தான்.இந்த செலவே இல்லாத தண்ணீரின் மகிமை பற்றி நமக்கு தெரிந்தும் அலட்சியப்படுத்துவது
தான் வேதனையான வேடிக்கை.

செலவே இல்லாத தண்ணீரா? என்று திருப்பி கிண்டல் அடிக்காதீர்கள். சென்னையில் உள்ளவர்கள் பெரும்பாலோர், ஏதோ தனியாரிடம் வாங்கி சாப்பிடும் "கேன் வாட்டர்' தான் நல்ல பாதுகாக்கப்பட்ட குடிநீர் என்று நினைக்கின்றனர். இப்போது மெட்ரோ வாட்டர் தண்ணீர் வர ஆரம்பித்து விட்டது. அதை குடித்தாலே போதும், ஆனால்,
காய்ச்சிக் குடிக்க மறந்து விடக்கூடாது.

அதென்ன "வாட்டர் தெரபி?.'நாம் சாப்பிடும், குடிக்கும் எதுவாக இருந்தாலும், அதில் உள்ள நல்ல சத்துக்களை திரவமாகவும், திடமாகவும் பிரித்து பிரித்து வெளியேற வேண்டிய சமாச்சாரங்களை வெளியேற்றி, சத்துக்களை, திரவ வடிவில் ஏற்று உடலின் பாகங்கள் பிரித்துக் கொள்கின்றன. இப்படித் தான் கால்சியம், இரும்பு, கார்போஹைட்ரேட் என்று எல்லாம் உடலில் சேர்கிறது.

தொண்டை வரை காரமாகவோ, இனிப்பாகவோ இருக்கும் எதுவும் உடலில் சத்துக்களை சேர்ப்பதில்லை. நாம் வாய் ருசிக்காக சாப்பிடும் பல வேண்டாதகழிவுப் பொருளாக நேரடியாக சிறுநீராகவும், மலமாகவும் தான் வெளியேறுகின்றன.

நம் வீட்டில் எப்படி சமையல் அறை, படுக்கையறை,ஹால்,பாத்ரூம், டாய்லெட் உள்ளதோ அது போல நம் உடலிலும் உள்ளது.எல்லாவற்றையும் கழுவி, நல்லதை "டெட்டால்' ஊற்றி சுத்தம் செய்ய வேண்டாமா? அப்போது தானே உடல் என்ற வீடு, நாறாமல் இருக்கும்.

அதற்காக தான் அவ்வப்போது நாம் தண்ணீர், திரவ உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.முன்பு இருந்த உணவு முறையில் இப்படி ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு வகுத்து வைத்தனர். இப்போது "லைப் ஸ்டைல்' எவ்வளவோ மாறி விட்டது.

உடலை எப்படியெல்லாம் பாதிக்க வைக்க வேண்டுமோ, அதற்கு நாமே தேவையான கெட்ட சத்துக்கள் அனைத்தையும் நம் உணவுகளின் மூலம் தருகிறோம்.கொழுப்பு, ஷûகர், ஆயில் என்று எல்லாவற்றையும் சேர்த்து, கடைசியில் ரத்த அழுத்தம், சர்க்கரை, ஹார்ட் பிராப்ளம் என்று எல்லாவற்றையும் உடலில் ஏற்றி விடுகிறோம்.

இந்த புது "லைப் ஸ்டைலில்' எதையும் யாரும் கேட்பதாக இல்லை. இந்த லைப் ஸ்டைல் காரணமாக தான், இளைய வயதினர், குழந்தைகள் எல்லாரிடமும் பழங்கள் போன்ற திரவ சம்பந்தப்பட்ட உணவுகளை எடுத்துக் கொள்ளும் பழக்கமே போய்விட்டது. அதுவும், தண்ணீர் குடிப்பது என்பது அரிதாகி விட்டது. இது பெரும் தவறு.ஏதோ உணவு, சிற்றுண்டி சாப்பிடும் போது மட்டும் தண்ணீர் குடிப்பது போதாது. தண்ணீர் குடிப்பதை பழக்கப்படுத்த வேண்டும். தண்ணீர் தொடர்பான பழங்கள், காய்கறிகளை அதிகம் சேர்க்க வேண்டும்.

பல ஆயிரக்கணக்கில் பணம் கறந்து சொல்லித் தரப்படும் "வாட்டர் தெரபி' உட்பட மூலிகை தெரபிகளை நாம் ஏன் இப்போதே ஆரம்பிக்கக் கூடாது? நீங்கள் ஆரம்பியுங்கள்.உங்கள் பிள்ளைகளுக்கும் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை கற்றுக் கொடுங்கள்.

இது தான் "வாட்டர் தெரபி' பயிற்சி. இனியும் நீங்கள் தண்ணீர் குடிக்காமல் இருக்க மாட்டீர்களே? என்ன பாட்டிலை வாங்கி டேபிளில் தண்ணீருடன் வைத்திருங்கள். வீட்டிலாகட்டும், ஆபீசிலாகட்டும் மணிக்கொருதரம் தண்ணீர் குடிங்க, பாருங்க, உடல் "கும்ம்ம்'ன்னு இருக்கும்.

வெயிட் குறைய தண்ணீர் முக்கியம்: என்ன தான் உடற்பயிற்சி செய்தாலும், டானிக் சாப்பிட்டாலும், உடல் எடை குறையாது. ஆனால், தொடர்ந்து தண்ணீர் குடித்து வாருங்கள், ஒரு மாதத்திலேயே ரிசல்ட் தெரிந்து விடும். உடல் எடையை அதிகப்படுத்திக் காட்ட இளைஞர்கள், இன்டர்வியூவுக்கு செல்லுமுன் கண்டபடி தண்ணீர் குடித்துச் செல்வர். இது சரியல்ல. உண்மையில், உடல் எடையை கூட்டிக் காட்ட தண்ணீர் பயன் படாது. உண்மையில், அது உடலை பாதிக்கும். தினமும் குறிப்பிட்ட அளவு சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிப்பை கட்டுப்படுத்தும் என்பது தான் உண்மை.

உடலில் கலோரியை கட்டுப்படுத்த மருந்து தேவையல்ல, தண்ணீர் தான் முக்கிய தேவை. தண்ணீர் சாப்பிட்டால், உடலில் வயிற்றில் இருந்து ஆரம்பித்து, குடல், சிறுநீரகம் என்று எல்லா இடத்தையும் சுத்தப்படுத்தி, எலும்பு, தசைகளையும் எந்த பாதிப்பும் இல்லாமல் சீராக்கி சென்று கடைசியில் வெளியேறி விடுகிறது. இப்படி செய்வதால் தான் சிறுநீரக பிரச்னை, குடல் பிரச்னை என்று எதுவும் வராமல் இருக்கிறது சிலருக்கு.

ஒரு நாளைக்கு எட்டு முதல் பத்து டம்ளர் வரை தண்ணீர் குடிக்கலாம். ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்சு என்று பழங்களாகவும் சாப்பிடலாம். அவற்றில் 70 சதவீதம் வரை தண்ணீர் சத்து தான் உள்ளது. தினமும் ஏதாவது ஒரு சமயம், பழங்களாக சாப்பிட்டால் நல்லது. கண்ட கண்ட நொறுக்குத் தீனியை சாப்பிடுவதை விட, பழங்கள் நல்லது.

"அப்பா விடட்டும் முதலில்; நான் அப்புறம் விடறேன்!இருபது வயதில் ஆரம்பித்த உணவு, பழக்கவழக்கங்கள், நாற்பதுக்கு மேல், உடலில் தங்கள் வேலையை செய்து, எல்லா வியாதிகளையும் வரவழைத்து விடுகிறது. அப்புறம், ஐம்பதில் தான் நமக்கு "விழிப்புணர்வே' வருகிறது. நம் பிள்ளைகளுக்கு தான் "அட்வைஸ்'சொல்ல வேண்டியிருக்கிறது. ஆனால், மகனாவது கேட்கிறானா? "போப்பா, நீ தானே ஓட்டலுக்கு அப்பப்போ அழைச்சிக்கிட்டு போய் ப்ரைடு ரைஸ் சாப்பிடு, நுõடுல்ஸ்
சாப்பிடு, பனீர் பட்டர்... அது இதுன்னு சாப்பிட வச்சே...' என்று பிள்ளைகள் திருப்பி கேட்பார்கள் தானே.அதனால், இன்றைய முப்பதில் இருப்பவர்களா நீங்கள்? வேண்டாமே, இந்த உணவுப் பழக்கங்களில் தவறான சமாச்சாரங்கள். நீங்க விட்டா தான், உங்க பிள்ளைகள் விடுவார்கள்.இன்னிலேர்ந்து விட்டுவிடுங்கள், ப்ளீஸ்.

நீச்சல் பயிற்சி நல்லது: நீச்சல் சேம்பியனாக வர வேண்டும் என்றால் தான் நீச்சல் பயிற்சி செய்ய வேண்டுமா? உடல் பயிற்சியில் நீச்சல் பெரும்பங்கு வகிக்கிறது.முன்பெல்லாம் மாவட்டங்களில் இருப்பவர்களுக்கு நீச்சல் முக்கியம். கிராமங்களில் பிறந்தவர்களுக்கு இதெல்லாம் இல்லாமல் இளமை வாழ்க்கை நகராது. நகரங்களில் உள்ளவர்களை பற்றி கேட்கவே வேண்டாம். பாத்ரூம் குளியலில் கூட ஏதோ காக்காய் குளியல் தான்.

இதனால் பலருக்கு தண்ணீர் அலர்ஜி கூட வரும். பெரும்பாலோர் வெந்நீரில் குளிக்க இதுவும் காரணம். நல்ல குளிர்ந்த நீரில் குளித்துப் பாருங்கள், அதன் மணமே, தன்மையே தனி. ரிலாக்ஸ் செய்ய, மருத்துவரீதியாக தண்ணீரில் நிற்பதும் ஒன்று. அதனால், தான் பலரும் டென்ஷனாக, பிசியாக இருந்து வீடு திரும்பினால், உடனே குளிக்கின்றனர். முடிந்தவரை டென்ஷனை போக்கும் தன்மை, குளிர்ந்த நீருக்கு உண்டு.பாதிக்குபாதி தண்ணீர் வேணும்!: நாம் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?

இது தான் பலரின் கேள்வி.பொதுவாக நம் உடல் எடையில் பாதி அளவு அவுன்ஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். அதாவது உதாரணமாக 120 பவுண்டு எடை இருப்பதாக வைத்தால், பாதி அளவு, 60 அவுன்ஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.இதை ஒரு நாளைக்கு எட்டு முதல் 10 டம்ளர் என்று பிரித்துக் கொண்டு தண்ணீர் சாப்பிடலாம்.ஒரு தண்ணீர் குடித்து விட்டு, இன்னொரு பக்கம் காபி குடித்தால் பலனே இல்லை. குடித்த தண்ணீரை வற்றவைத்து விடும் காபியில் உள்ள காபின்.ஆல்கஹாலும்
அப்படித்தான். தண்ணீர் வேண்டிய அளவு குடித்து விட்டு, மதுப்பழக்கம் இன்னொரு பக்கம் இருந்தால், நாக்கு வறண்டு தான் போகும். உடலில் தண்ணீர் ஏறவே ஏறாது. தண்ணீர் சாப்பிடுகிறேன் பேர்வழி என்று ஒரே மொடக்கில் அடிக்கடி கண்டபடி குடம் குடமாக குடிப்பதும் தவறு.வெறும் தண்ணீர் குடிக்க பிடிக்காவிட்டால், அதில் தேயிலை பையை நனைத்தோ, எலுமிச்சை பிழிந்தோ சாப்பிடலாம்.

ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, பப்பாளி, மாம்பழம், சாத்துக்குடி, கேரட் ஜூஸ் போன்றவற்றையும் சாப்பிடலாம்.தொண்டை கரகரப்பு இருந்தால்... வெந்நீர், அல்லது வெந்நீரில் தேன் கலந்து சாப்பிட்டால் கரகர... போச்

நன்றி : தினகரன்

Wednesday, February 17, 2010

திருமலை நாயக்கர் மஹால்

திருமலை நாயக்கர் மஹால்

மதுரையில் உள்ள திருமலை நாயக்கர் மஹாலைப் பற்றி . மதுரை, மீனாட்சிக்கு மட்டும் பெயர் போனதல்ல! நாயக்கர் மஹாலுக்கும் பெயர் போனதுதான். 17ஆம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட நாயக்கர் மன்னரால் கி.பி.1636 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. ஒரு இத்தாலிய கட்டிடக் கலைஞரால் இஸ்லாமிய, திராவிட, ஐரோப்பிய கட்டிடக் கலைகளை பின்பற்றி கட்டப்பட்டுள்ளது.


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை அறிந்திராதவர் எவரும் இல்லை . அக்கோவிலில் இருந்து 1.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த மஹால். உள்ளே செல்லும்போது நீங்கள் 3700 சதுர கி.மீ பரப்பளவுடன் கூடிய மஹாலின் மத்தியில் அமைந்துள்ள மைதானம் போன்ற அமைப்பை காண முடியும். அதை சுற்றிலும் வட்ட வடிவில் பிரமாண்டமான தூண்கள் மஹாலை தூக்கி நிறுத்துகின்றன. தற்போது அந்த இடம் பூங்காவாக மாறியுள்ளது.


இந்த மஹால் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று சொர்க்க விலாசம் மற்றொன்று ரங்க விலாசம். இதில் சொர்க்க விலாசம் அரசவையாக பயன்படுத்தப்பட்டது. அனைத்து கட்டிடங்களும் இந்த இரண்டு பகுதிகளுக்குள் அடங்கிவிடும். மஹாலின் சிறப்பம்சமே அங்கு இருக்கும் பிரமாண்ட தூண்கள். பல தூண்களை நீங்கள் என்ன நினைத்தாலும் கட்டிப்பிடிக்க முடியாது, அவ்வளவு பெரிய தூண்கள். (என்னே நாயக்கரின் கட்டிடக்கலை). அந்த காலங்களில் வசதிகள் இல்லாத நிலையிலும் நமது மன்னர்கள் பிரமாண்டத்தையே விரும்பினர் என்பதற்கு இதுவே நல்ல எடுத்துக்காட்டாகும். ஆனால் நாமோ இன்று வசதிகள் இருந்தும் சிறிய கட்டிடங்களை எழுப்பிவருகிறோம்.


இந்த மஹால் முழுவதும் செங்கல் போன்ற கற்கலால் கட்டப்பட்டது. மொத்த மஹாலும் சுண்ணாம்பு மற்றும் முட்டையின் வெள்ளைக் கருவை கலந்து பூசப்பட்டுள்ளது. இந்த மஹாலில் மொத்தம் 248 தூண்கள் உள்ளன. ஒவ்வொன்றொன்றும் 58 அடி நீளமும் 5 அடி விட்டமும் கொண்டது. தற்போது உள்ள கட்டிடத்தை விட 4 மடங்கு பெரிதாக கட்டபட்டது இந்த மஹால் என்று ஆராய்ச்சி கூறுகிறது.


தற்போது தமிழக அரசின் தொல்பொருள் ஆராய்ச்சி துறையின் கீழ் இந்த மஹால் இயங்குகிறது. தினமும் கண்கவர் ஒளி மற்றும் ஒலிக் காட்சிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடைபெறுகிறது. முக்கியமாக சிலப்பதிகாரத்தை பற்றி இந்த காட்சிகள் நடத்தப்படுகின்றன.

நன்றி ;தமிழ்நாடு சுற்றுலா கையேடு வலைத்தளம்

Tuesday, February 16, 2010

காஞ்சிபுரம் இட்டலி


தேவையான பொருட்கள் :

புழுங்கலரிசி - 1 கப்
உளுத்தம்பருப்பு - 1 கப்
நல்லெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
சுக்குத்தூள் - (1/4) கால் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
ஆப்ப சோடா - 1 சிட்டிகை
தாளிக்க தேவையான பொருட்கள் :

கடுகு - 1/2 (அரை) டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
கடலைபருப்பு - 2 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிது
பெருங்காயம் - 1/2 (அரை) டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி - ஒரு துண்டு

செய்முறை :
  1. அரிசி, பருப்பை ஒன்றாக ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.

  2. ஒரு மணி நேரம் ஊறிய பிறகு, அரிசியை நன்கு கழுவி, சற்றே கர கரப்பாக அரைத்துகொள்ளுங்கள்.

  3. தேவையான உப்பு சேர்த்துக் கரைத்துப் புளிக்க வையுங்கள்.

  4. புளித்த மாவில், சுக்குத்தூள், ஆப்பசோடா சேர்த்துக் கலந்துக்கொள்ளுங்கள்.

  5. நல்லெண்ணையையும் காய்ச்சி அதில் சேர்க்கவும்.

  6. கடாயில் எண்ணையைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு தாளித்து பொன்னிறமானதும் மிளகு, சீரகத்தை ஒன்றிரண்டாக உடைத்துக் அதோடு சேருங்கள்.

  7. இஞ்சியையும் துருவி சேருங்கள்.

  8. அதனுடன், கறிவேப்பில்லையும் சேர்த்து, வதக்கி மாவில் சேருங்கள்.

  9. எல்லாவற்றையும் நன்றாக கலந்து, மாவை சிறிய கிண்ணங்களில் நிரப்பி, ஆவியில் வேகவையுங்கள். காஞ்சிபுரம் இட்லி ரெடி

ஹோசன்ன - விண்ணை தாண்டி வருவாயா


படம் - விண்ணை தாண்டி வருவாயா
பாடல் - Hosanna
பாடியவர்கள் - பிரகாஷ் , சுசன்னே , Blaaze
இசை - ரஹ்மான்


Ho.. Hosaanna… Hosaanna..
Ho…. Ho.. Hosaanna… Hosaanna.. Ho… Ho….

அந்த நேரம் அந்தி நேரம் கண் பார்த்து
கந்தலாகி போன நேரம் ஏதோ ஆச்சே
ஒ வானம் தீண்டி வந்தாச்சி அப்பாவின் திட்டு எல்லாம்
காற்றோடு போயே போச்சே

*Hosaanna* என் வாசல் தாண்டி போனாளே
*Hosaanna* வேறொன்றும் செய்யாமலே
நான் ஆடி போகிறேன் சுக்கு நூரகிறேன்,
அவள் போன பின்பு எந்தன் நெஞ்சை தேடி போகிறேன்

Ho… saanna…
வாழ்வுக்கும் பக்கம் வந்தேன்
Ho… saanna…
சாவுக்கும் பக்கம் நின்றேன்
Ho… saanna…
ஏனென்றால் காதல் என்றேன்
Ho… saanna…
Everybody wanna know be like be like, I really wanna be here with you..
Is that enough to say that we are made for each other is all that is *Hosaana* true
Hosaanna …. be there when you are calling i will be there..
Hosaanna….. be the life the whole life i share..
i never wanna be the same..
its time we re arrange i take a step,you take a step and me calling out to you…
Helloooo… Hellooooo… Helloooo ஓஓ

Hosaanna
Ho.. Hosaanna… Hosaanna..
Ho…. Ho.. Hosaanna… Hosaanna.. Ho… Ho….

வண்ண வண்ண பட்டு பூச்சி பூ தேடி பூ தேடி
அங்கும் இங்கும் அலைகின்றதே
ஒ சொட்டு சொட்டாய் தொட்டு போக வேகம் ஒன்று வேகம் ஒன்று
எங்கெங்கோ நகர்கின்றதே

*Hosaanna* பட்டு பூச்சி வந்தாச்சா?
*Hosaanna* வேகம் உன்னை தொட்டாச்சா?
கிளிஞ்சலாகிறேன் நான் குழந்தை ஆகிறேன்,
நான் உன்னை அள்ளி கையில் வைத்து பொத்தி கொள்ளுறேன்
Helloooo… Hellooooo… Helloooo ஓஓ

*Hosaanna* என் மீது அன்பு கொள்ள
*Hosaanna* என்னோடு சேர்ந்து செல்ல
*Hosaanna* ம்ம் என்று சொல்லு போதும்…

Ho.. Hosaanna..

ஏன்.. இதயம் உடைத்தாய் நொறுங்கவே
என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே
ஏன்.. இதயம் உடைத்தாய் நொறுங்கவே
என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே