Wednesday, February 2, 2011

விடியலைக் காண்போம்



* உங்களை ஆறுதல் அடையச் செய்வதில் எனக்கு விருப்பம் இல்லை. நீங்கள் நிம்மதியாக உறங்குவது முக்கியம் அல்ல. உறக்கத்திலிருந்து எழுந்து விடியலில் வெளிச்சத்தைக் காண்பது தான் முக்கியம்.

* வழிபடுதல் என்பது ஒரு செயல் அல்ல. அது ஓர் இயல்பான பண்பு. நீங்கள் சுவாசிக்கும் காற்று, அருந்தும் தண்ணீர், நடக்கும் பூமி, காணும் தாவரம், ரசிக்கும் பறவை, உண்ணும் உணவு< என்று அனைத்தையும் ஆத்மார்த்தமாக வழிபாட்டு உணர்வோடு அணுகினால் உங்கள் வாழ்வு அர்த்தமுள்ளதாகும்.

* நீங்கள் இயல்பான சுபாவத்துடன் நடைபோட முடியாது. ஏனெனில், இந்த சமூகத்தின் ஆதிக்கம் உங்களிடம் அதிகமாக இருக்கிறது. அதனால், பல மூடத்தனமான செயல்களை மனிதர்கள் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

* உணவு என்பது உடல் தொடர்பான விஷயம். எந்த உணவு உடலுக்குத் தேவைப்படுகிறதோ, சுகம் தருகிறதோ அதையே நீங்கள் உண்ண வேண்டும். ஆனால், உங்கள் உணவை மனம் முடிவு செய்யும்படி விட்டுவிட்டீர்கள். உடலுக்குத் தகுந்த உணவையே தேர்ந்தெடுங்கள்.

* உங்களால் இயலாத ஒன்றைச் செய்ய முடியவில்லை எனில், அதனால் எந்த பிரச்னையும் இல்லை. உங்களால் முடியக்கூடிய ஒன்றைச் செய்யாமல் விடுவது தான் துயரமான ஒன்று. அதனால், இயன்ற செயல்களை செய்வதில் ஆர்வம் காட்டுங்கள்.

No comments: