Monday, February 21, 2011

பழமொழிகள்-சூ & செ

சூ
  • சூடு கண்ட பூனை அடுப்பங் கரையிற் சேராது.
செ
  • செக்களவு பொன்னிருந்தாலும் செதுக்கியுண்டால் எத்தனை நாளுக்குக் காணும்.?
  • செடியிலே வணங்காததா மரத்திலே வணங்கும்?
  • செட்டி மிடுக்கோ சரக்கு மிடுக்கோ?
  • செட்டியார் வாழ்வு செத்தால் தெரியும்.
  • செத்தவன் உடைமை இருந்தவனுக்கு அடைக்கலம்.
  • செயவன திருந்தச் செய்.
  • செருப்பின் அருமை வெயிலில் தெரியும், நெருப்பின் அருமை குளிரில் தெரியும்.
  • செருப்புக்காகக் காலைத் தறிக்கிறதா?
  • செலவில்லாச் செலவு வந்தால் களவில்லாக் களவு வரும்.
  • சென்ற இடம் எல்லாம் சிறப்பே கல்வி.

No comments: