Wednesday, February 9, 2011

பழமொழிகள்-கோ

கோ

  • கோட் சொல்பவைக் கொடுந்தேள் என நினை.
  • கோட் சொல்லும் வாய் காற்றுடன் நெருப்பு.
  • கோணிகோடி கொடுப்பதிலும் கோணாமற் காணி கொடுப்பது நல்லது.
  • கோத்திரமறிந்து பெண்ணைக்கொடு, பாத்திரமறிந்து பிச்சையிடு.
  • கோபம் உள்ள இடத்தில் குணம் உண்டு.
  • கோபம் சண்டாளம்.
  • கோயிற் பூனை தேவர்க்கு அஞ்சுமா?
  • கோழி மிதித்துக் குஞ்சு முடம் ஆகுமா?
  • கோளுஞ் சொல்லி கும்பிடுவானேன்?
  • கோடானுகோடி கொடுப்பினும் தன்னுடைய நாக்கு கோடாமை கோடி பெறும்
  • கோடானுகோடி கொடுத்தாலும் நாவினால் தவறு சொல்லாதது கோடி பெறும்.
  • கோடி கொடுப்பினும் குடில் பிறந்தார் தம்மோடு கூடுவதே கோடி பெறும்.

No comments: