Sunday, November 28, 2010

கண்ணிரண்டில் நான் விழுந்தேனே..

படம்: உத்தமபுத்திரன்
இசை: விஜய் அந்தோனி
பாடியவர்:
நரேஷ் ஐயர்
பாடலாசிரியர்: ஏக்நாத்
வெளியான ஆண்டு : 2010


கண்ணிரண்டில் நான் விழுந்தேனே
காரணம் இன்றியே நான் சிரித்தேனே
என் மனதும் ஏனோ என்னிடம் இல்லை
வேண்டியே உன்னிடம் நான் தொலைத்தேனே
என் உயிரின் உயிரே
என் இரவின் நிலவே
என் அருகில் வரவே
நீ தருவாய் வரமே ஒ ஒ ஒ

ஊருக்குள்ள கோடிபொண்னே யாரையும் நெனைக்கலையே
உந்தன் முகம் பார்த்த பின்னே எதுவும் பிடிக்கலையே
உன்னோடைய பார்வையில என் உடம்பு வேகுதடி
பக்கத்தில நீ இருந்தா என் வயசு நோகுதடி

கண்ணிரண்டில் நான் விழுந்தேனே
காரணம் இன்றியே நான் சிரித்தேனே
என் மனதும் ஏனோ என்னிடம் இல்லை
வேண்டியே உன்னிடம் நான் தொலைத்தேனே

ஒ ஒ ஏதோ ஒன்னு சொல்ல
என் நெஞ்சுக்குழி தள்ள
நீ பொத்தி வைச்ச ஆசையெல்லாம்
கண்முன்னே தள்ளாட
கண்ணாமுச்சி ஆட்டம்
என் கண்ணுக்குள்ள ஆட
நீ சொல்லும் சொல்லும் சொல்லை கேட்காமலே
உந்தன் உள்ளம் திண்டாட
உள்ளுக்குள்ள பட படக்க
நெஞ்சிக்குள்ள சிறகடிக்க
கண்ணுரெண்டும் ரெக்கைக்கட்டி மேலே கீழே படபடக்க
பட்டுபூச்சி பட்டாம்பூச்சி ஆனேனே

ஒம்முத்து முத்து பேச்சு
என் சங்கீதமா ஆச்சு
நின்னுபோச்சு எம்மூச்சு
பஞ்சுமெத்தை மேகம்
அது செஞ்சிவச்ச தேகம்
நீ தூரத்துல நின்னாக்கூட
பொங்கிடுதே என் மொகம்
முத்தக்கட்டு மொழி அழகில்
குத்திக்குத்தி கொன்ன வலே
எ சிக்கிக்கிட்ட என் மனசில்
ஊறவச்சி தொவைச்சவலே
ஆத்துக்குள்ள அம்மிக்கல்லா போனேனே

ஊருக்குள்ள கோடிபொண்னே யாரையும் நெனைக்கலையே
உந்தன் முகம் பார்த்த பின்னே எதுவும் பிடிக்கலையே
உன்னோடைய பார்வையில என் உடம்பு வேகுதடி
பக்கத்தில நீ இருந்தா என் வயசு நோகுதடி

கண்ணிரண்டில் நான் விழுந்தேனே
காரணம் இன்றியே நான் சிரித்தேனே
என் மனதும் ஏனோ என்னிடம் இல்லை
வேண்டியே உன்னிடம் நான் தொலைத்தேனே
என் உயிரின் உயிரே
என் இரவின் நிலவே
என் அருகில் வரவே

நீ தருவாய் வரமே ஒ ஒ ஒ

Tuesday, November 16, 2010

கிளியோபாட்ரா




வரலாற்று பேரழகிகள் பட்டியலில் இன்றும் முதலிடத்தில் இருப்பவர் கிளியோபாட்ரா. கி.மு. 69&30 காலத்தில் வாழ்ந்தவள். பாலில் குளிப்பாள்.. கண்களில் பல வண்ண மைகளால் அலங்காரம் செய்துகொள்வாள்.. உடல் மினுமினுப்புக்காக முத்துக்களை வினிகரில் கரைத்து அருந்துவாள்.. என பல கதைகள் அவளை பற்றி உலவுகின்றன. அவள் பேரழகி மட்டுமல்ல ஜூலியஸ் சீசர், மார்க் ஆன்டனி போன்ற மாவீரர்களின் காதல் மனைவியாகவும் இருந்தாள். கிரேக்கம், ரோம், எகிப்து என பல நாடுகளின் வரலாறே அவளால் மாறியது. போராட்டங்களும், மர்மங்களும் நிரம்பிய அவளது வரலாற்றை இன்றும் பல மேற்கத்திய பல்கலைக்கழகங்கள் ஆராய்ந்து கொண்டிருக்கின்றன.

எகிப்து பேரரசியாக இருந்தாலும் அவள் கிரேக்க பேரரசர் அலெக்சாண்டரின் தளபதி தாலமியின் வம்சாவளியில் வந்தவள். தாலமிகள் தங்களை கிரேக்கர்கள் எனக்கூறுவதில் பெருமை கொண்டிருந்தனர். ஆனால் 12&ம் தாலமியின் மகளாக பிறந்த கிளியோபாட்ரா தன்னை எகிப்து தேவதை இசிஸின் மறுபிறவி எனக் கூறிக்கொண்டாள். தனது முன்னோர்களை போல் அல்லாமல் மிகுந்த சிரத்தை எடுத்து எகிப்து மொழியை கற்றுக்கொண்டாள். இதனால் எகிப்து மக்கள் அவளை ஒரு தேவதையாகவே கொண்டாடினர்.வசீகரம், இளமை, புத்திக்கூர்மை, தேசப்பற்று, நினைத்தை சாதிக்கும் உறுதி இவைதான் கிளியோபாட்ராவின் வெற்றி ரகசியம். 11 மொழிகள் சரளமாக பேசுவாள். பேச்சாற்றலும் நிறைந்தவள். அவளது பேச்சுக்கு யாரும் மறு பேச்சு பேசியதில்லை.


14 வயதாகும்போதே தந்தையுடன் சேர்ந்து ஆட்சியை பகிர்ந்துகொண்டாள். தந்தை இறந்த பின் 18&வது வயதில் அரசியானாள். எகிப்து அரச வழக்கப்படி அரசி மட்டும் தனியாக ஆட்சி நடத்தமுடியாது. இதனால் அந்நாட்டு வழக்கப்படி தனது தம்பி 13&ம் தாலமியை திருமணம் செய்துகொண்டாள்.எகிப்தில் பெரும் படை கிடையாது. நைல் நதி தீரம் என்பதால் செல்வத்துக்கு பஞ்சமில்லை. இதனால் அண்டைநாடுகள் எகிப்து மேல் ஒரு கண்ணாகவே இருந்தன.
எகிப்தையும் தனது ஆட்சியையும் பாதுகாக்க கிளியோபாட்ரா எடுத்த முடிவு யாரும் எதிர்பாராதது. அப்போது வலிமையுடன் இருந்த ரோமப்பேரரசர் ஜூலியஸ் சீசரை காதலிக்க முடிவு செய்தாள். முதல் சந்திப்பிலேயே ஜூலியஸ் சீசரை தன் காதல் வலையில் வீழ்த்தினாள். அப்போது கிளியோபாட்ராவுக்கு 21 வயது, சீசருக்கு 54. விரைவில் சீசரின் மகனுக்கு கிளியோபாட்ரா தாயானாள்.

இந்நிலையில் மர்மமான முறையில் 13&ம் தாலமி கொல்லப்பட்டார். கிளியோபாட்ராதான் கொன்றதாக கூறப்படுகிறது. அதன் பின்னர், காதலி கிளியோபாட்ராவை ரோமுக்கு அழைத்து வந்தார் சீசர். இது ரோமானியர்களுக்கு பிடிக்கவில்லை. இது சீசரின் உயிருக்கே ஆபத்தானது. அதிகார போராட்டத்தில் சீசர் கொல்லப்பட்டார். ஆட்சியை பிடிப்பதில் சீசரின் வாரிசுகளுக்கும் தளபதிகளுக்கும் மோதல். இனியும் அங்கிருப்பது ஆபத்து என்பதை உணர்ந்தாள் கிளியோபாட்ரா. உடனடியாக எகிப்துக்கு தப்பினாள்.சற்றும் தாமதிக்காமல் தொடர்ந்தது அவளது அடுத்த காதல் அத்தியாயம். தனது சாகசத்தால் ரோம பேரரசின் அதிகாரத்தை கைப்பற்றிய தளபதி மார்க் ஆன்டனியை திருமணம் செய்தாள். அவர்களுக்கு 3 குழந்தைகள் பிறந்தன. இந்த காலத்தில் தனது 2 சகோதரிகள் மற்றும் சகோதரனை கிளியோபாட்ரா கொன்று எகிப்து அரசுக்கு தன்னைத் தவிர வேறு வாரிசுகள் இல்லாமல் செய்துகொண்டாள்.
இந்நிலையில் கிளியோபாட்ராவுக்கு சீசரின் வாரிசான அகஸ்டஸ் சீசரால் ஆபத்து வந்தது.

கடும் கோபத்தில் இருந்த அகஸ்டஸ் சீசர் எகிப்து மீது போர் தொடுத்தார். இதில் பரிதாபமாக தோற்ற ஆன்டனி தற்கொலை செய்து கொண்டார். கிளியோபாட்ராவும் அவளது குழந்தைகளும் சிறைபிடிக்கப்பட்டனர்.சிறை வாழ்க்கையை விரும்பாத கிளியோபாட்ரா எகிப்து பாலைவனத்தில் திரியும் கொடிய விஷம்கொண்ட நல்லபாம்பை கடிக்க வைத்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. 39 வயதில் அவளது சகாப்தம் முடிவுக்கு வந்தது.வாழ்நாள் முழுவதும் தன் அழகிய தோற்றம் மீது அக்கறை செலுத்தி வந்த கிளியோபாட்ரா பாம்பு கடித்து இறந்திருக்கமாட்டாள் என ஜெர்மன் வரலாற்று ஆராய்ச்சியாளர் கிறிஸ்டோபர் செபர் சந்தேகத்தை கிளப்பியுள்ளார். ‘‘பாம்பு கடித்தால் அடுத்த நொடி மரணம் நிகழ்வதில்லை. சற்று நேர மரண போராட்டம் உண்டு. இதனால் உடல் அலங்கோலமாகி முகம் விகாரமாகிவிடும். கிளியோபாட்ரா அதை விரும்பவில்லை. அவள் வாழ்ந்த காலத்தில் எகிப்தில் மிகவும் பயங்கரமான விஷம் ஒன்று வழக்கத்தில் இருந்தது. ஓபியம் மற்றும் விஷத்தாவரங்களின் கூட்டால் செய்யப்படும் கஷாயம் அது. கிளியோபாட்ரா அதைத்தான் அருந்தினாள்’’ என்கிறார் செபர். எகிப்து பழங்கால ஏடுகளில் இருந்து இதற்கான ஆதாரங்களையும் காட்டுகிறார் செபர். உலகப் பேரழகி கிளியோபாட்ராவின் வாழ்வு மட்டுமல்ல, மரணமும் புதிரும் மர்மமாகவே இருக்கிறது இன்று வரை.


நன்றி - தினகரன்

Tuesday, November 9, 2010

உள்ளத்தில் நல்ல உள்ளம்

படம்: கர்ணன்
இசை:
விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடியவர்:
சிர்காழி கோவிந்தராஜன்
பாடலாசிரியர்: கண்ணதாசன்
வெளியான ஆண்டு : 1964

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா .... கர்ணா
வருவதை எதிகொள்ளடா

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா .... கர்ணா
வருவதை எதிகொள்ளடா


தாய்க்கு நீ மகனில்லை தம்பிக்கு அண்ணனில்லை

ஊர்ப்பழி ஏற்றாயடா நானும் உன் பழி கொண்டேனடா
நானும் உன் பழி கொண்டேனடா

மன்னவர் பணியேற்கும் கண்ணனும் பணி செய்த
உன்னடி பணிவேனடா -கர்ணா
மன்னித்து அருள்வாயடா

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது

வல்லவன் வகுத்ததடா .... கர்ணா
வருவதை எதிகொள்ளடா

செஞ்சோற்று கடன் தீர்த்த சேராத இடம் சேர்ந்து

வஞ்சத்தில் வீழ்ந்தாயடா - கர்ணா
வஞ்சகன் கண்ணனடா

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது

வல்லவன் வகுத்ததடா .... கர்ணா
வருவதை எதிகொள்ளடா

Tuesday, November 2, 2010

கவிதை...


ஒ மனமே ஒ மனமே....





படம்: உள்ளம் கேட்குமே

இசை:
ஹரிஷ் ஜெயராஜ்
பாடியவர்:
ஹரிஹரன்
பாடலாசிரியர்: வைரமுத்து
வெளியான ஆண்டு : 2005

ஒ மனமே ஒ மனமே
உள்ளிருந்து அழுவது ஏன் ?
ஒ மனமே ஒ மனமே
சில்லு சில்லாய் உடைந்தது ஏன் ?
மழையை தானே யாசித்தோம்
கண்ணீர் துளிகளை தந்தது யார் ?
பூக்கள் தானே யாசித்தோம்
கூலான் கற்களை எரிந்தது யார் ?

ஒ மனமே ஒ மனமே
உள்ளிருந்து அழுவது ஏன் ?

ஒ மனமே ஒ மனமே
சில்லு சில்லாய் உடைந்தது ஏன் ?


மேகத்தை இழுத்து போர்வையாய் விரித்து
வானத்தில் உறங்கிட ஆசையடி
நம் ஆசை உடைத்து நார் நாராய் கிழித்து
முள்ளுக்குள் எரிந்தது காதலடி
கனவுக்குள்ளே காதலை தந்தாய்
கணுக்கால் தோரும் முத்தம்
கனவு கலைந்து எழுந்து பார்த்தல்
கைகள் முழுக்க ரத்தம்
துளைகள் இன்றி நாயனமா ?
தோல்விகள் இன்றி பூரணமா ?

ஒ மனமே ஒ மனமே
உள்ளிருந்து அழுவது ஏன் ?

ஒ மனமே ஒ மனமே
சில்லு சில்லாய் உடைந்தது ஏன் ?


இன்பத்தில் பிறந்து இன்பத்தில் வளர்ந்து
இன்பத்தில் மடிந்தவன் யாருமில்லை
துன்பத்தில் பிறந்து துன்பத்தில் வளர்ந்து
துன்பத்தில் முடிந்தவன் யாரும் இல்லை
இன்பம் பாதி துன்பம் பாதி
இரண்டும் வாழ்வின் அங்கம்
நெருப்பில் வெந்து நீரினில் குளித்தால்
நகையாய் மாறும் தங்கம்
தோல்வியும் கொஞ்சம் வேண்டுமடி
வெற்றிக்கு அதுவே ஏணியடி

ஒ மனமே ஒ மனமே
உள்ளிருந்து அழுவது ஏன் ?
ஒ மனமே ஒ மனமே
சில்லு சில்லாய் உடைந்தது ஏன் ?
மழையை தானே யாசித்தோம்
கண்ணீர் துளிகளை தந்தது யார் ?
பூக்கள் தானே யாசித்தோம்
கூலான் கற்களை எரிந்தது யார் ?


ஒ மனமே ஒ மனமே
உள்ளிருந்து அழுவது ஏன் ?

ஒ மனமே ஒ மனமே

Monday, November 1, 2010

நிலவில் நீர் சுழற்சிக்கு அதிக வாய்ப்பு: நாசா




நிலவில் நீர் ஆதாரங்கள் அதிக அளவில் இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு இந்தியாவின் சந்திராயன் விண்கலம் நிலவில் நீர் இருப்பதைக் கண்டுபிடித்தது. ஏறக்குறைய ஓராண்டு கடந்துள்ள நிலையில் நாசா விஞ்ஞானிகள், நிலவில் அதிக அளவில் நீர் ஆதாரங்கள் இருப்பதை உறுதி செய்துள்ளனர்.

ஏற்கனவே நினைத்திருந்த அளவைக் காட்டிலும் அதிகமான அளவில் நீர் வளம் அங்கு இருப்பதாக நாசா வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலவை ஆராய்வதற்காக அமெரிக்கா அனுப்பிய விண்கலம் நிலவில் நீர் இருப்பதை உறுதி செய்துள்ளது. நிலவில் நிழற்பகுதியில் நீர், மண், பிற உபயோகமான தாதுக்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

மேலும் நிலவில் ரசாயன ரீதியில் மாற்றங்கள் அதிக அளவில் நடைபெறுவதால் அங்கு நீர் சுழற்சிக்கு அதிக வாய்ப்பு உள்ளது என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. நிலவில் பெரும்பாலும் தூய்மையான ஐஸ் கட்டிகளாக சில இடங்களில் இருப்பதாகவும் நாசா வெளியிட்ட 6 பக்க அறிக்கையில் தெரியவந்துள்ளது.

இந்த விவரம் முழுவதையும் "சயின்ஸ்'' இதழ் வெளியிட்டுள்ளது. நிலவின் நிழல் பரப்பில் ஐஸ் கட்டிகளாகவும், சில இடங்களில் தண்ணீராகவும் உள்ளதையும் இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிப்பதாக நிலவு குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானக் குழுவின் தலைவர் மைக்கேல் வார்கோ தெரிவித்து‌ள்ளா‌ர்.

நிலவில் கடந்த காலங்களில் நீர் உருவாகி அது பனியாக உறைந்திருக்கலாம். அல்லது ரசாயன மாற்றங்களால் மிக அதிக அளவில் பனி உருவாகி இருக்கவும் வாய்ப்பு உள்ளது. எதிர்காலத்தில் பனிக் கட்டிகளை தண்ணீராக மாற்றி நிலவில் மனிதன் வசிக்க முடியுமா? என்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் நிலவில் மிக அதிக அளவில் கிடைக்கும் ஹைட்ரஜன், அம்மோனியா, மீத்தேன் வாயுக்களைக் எரிபொருளாக மாற்றி வாழ்வது குறித்த ஆராய்ச்சியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நிலவில் காணப்படும் வாழ்வியல் சூழல் மற்றும் அங்கு நிலவும் தட்ப வெப்பம் உள்ளிட்டவை குறித்தும் ஆராயப்படுகிறது. நிலவில் தண்ணீர் உருவானது எப்படி, அங்கு பனிக் கட்டிகள் அதிக அளவில் காணப்படுவது எதனால் என்பது தொடர்பான ஆராய்ச்சிகள் இப்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தினகரன்

கவிதை