பழமொழிகள்-எ (அகரவரிசைப்படி)
எ
- எங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருகிறாய், உங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன தருவாய் ?
- எங்கே புகையுண்டோ அங்கே நெருப்பு உண்டு.
- எச்சிற் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா?
- எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு.
- எடுத்தேன் கவிழ்த்தேன் என்று இருக்கலாகாது.
- எட்டி பழுத்தென்ன, ஈயார் வாழ்த்தென்ன?
- எண் இல்லாதவர் கண் இல்லாதவர்,
- எழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர்.
- எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்.
- எண்ணிச் செய்கிறவன் செட்டி, எண்ணாமல் செய்கிறவன் மட்டி.
- எண்ணிச்செய்வது செட்டு, எண்ணாமல் செய்வது வேளாண்மை.
- எண்ணை முந்துதோ திரி முந்துதோ?
- எதார்த்தவாதி வெகுசன விரோதி.
- எதிர்த்தவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம்.
- எதை அடக்காவிட்டாலும் நாக்கை அடக்கவேண்டும்.
- எத்தனை புடம் போட்டாலும் இரும்பு பசும்பொன் ஆகுமா?
- எத்தால் வாழலாம், ஒத்தால் வாழலாம்.
- எந்நிலத்து வித்திடுனும் காஞ்சிரங்காய் தெங்காகா
- எய்தவன் இருக்க அம்பை நோவானேன் ?
- எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.
- எரிகிற வீட்டில் பிடுங்கினது இலாபம். எருமை வாங்கும் முன்னே நெய் விலை கூறாதே.
- எருது நோய் காக்கைக்கு தெரியுமா?
- எலி அழுதால் பூனை விடுமா?
- எலி இருக்கிற இடத்தில் பாம்பு இருக்கும்.
- எலி எண்ணைக்கு அழறது எலிப்புழுக்கை எதற்கு அழறது?
- எலிக்குத் திண்டாட்டம் பூனைக்குக் கொண்டாட்டம்
- எலி வளை யானாலும் தனி வலை வேண்டும்.
- எலும்பு கடிக்கிற நாய் இரும்பைக் கடிக்குமா?
- எல்லோருக்கும் ஒவ்வொன்று எளிது
- எல்லோரும் பல்லக்கு ஏறினால் பல்லக்கைத் துக்குகிறவர் யார்?
- எழுதாக் கடனுக்கு அழுதால் தீருமா?
- எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கொடுத்தான்
- எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்.
- எழுத்தறச் சொன்னாலும் பெண் புத்தி பின் புத்தி.
- எள் என்றால் எண்ணையாய் நிற்க வேண்டும்.
- எளியவன் பெண்டாட்டி எல்லோருக்கும் மைத்துனி.
- எளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும்
- எள்ளூ என்கிறதற்கு முன்னே எண்ணெய் கொண்டு வருகிறான்.
- எள்ளுக்கு ஏழு உழவு , கொள்ளுக்கு ஓர் உழவு.
- எறும்பு ஊர கல்லுந் தேயும்.
- எறும்புந் தன் கையால் எண் சாண்
No comments:
Post a Comment