பழமொழிகள்-ஓ (அகரவரிசைப்படி)
ஓ
- ஓசை பெறும் வெண்கலம் ஓசை பெறா மட்கலம்.
- ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி.
- ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் இராசா, அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி.
- ஓடுகிறவனைக் கண்டால் துரத்துகிறவனுக்கு இலேசு.
- ஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம்.
- ஓதிய மரம் தூணாமோ, ஒட்டாங் கிளிஞ்சல் காசாமோ?
- ஓதுவார் எல்லாம் உழுவான் தலைக்கடையிலே.
- ஓர் ஊருக்கு ஒரு வழியா? ஒன்பது வழி.
- ஓர் ஊர்ப்பேச்சு ஓர் ஊருக்கு ஏச்சு.
- ஒரு காசு பேணின் இரு காசு தேறும்
- ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி பிரை
- ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா?
- ஒரு கை (அல்லது வெறுங்கை) முழம் போடுமா?
- ஒரு நன்றி செய்தவரை உள்ள அளவும் நினை
- ஒரு நாள் கூத்துக்கு மீசையைச் சிரைக்கவா?
- ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
- ஒரு பொய்யை மறைக்க ஒன்பது சொல்லுதல்
- ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் சொல்லுதல்.
- ஒருமைப் பாடில்லாத குடி ஒருமிக்கக் கெடும்.
- ஒருவர் அறிந்தால் இரகசியம், இருவர் அறிந்தால் அம்பலம்.
- ஒருவனாய் பிறந்தால் தனிமை, இருவராய்ப் பிறந்தால் பகைமை.
- ஓய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம், உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்.
- ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று.
- ஒளிக்கப் போயும் தலையாரி வீட்டிலா!
No comments:
Post a Comment