பழமொழிகள்-அ
தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்
பழமொழிகள்-அ (அகரவரிசைப்படி)அ
- அக்கம்பக்கம் பார்த்துப் பேசு.
- அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
- அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
- அகல உழுகிறதை விட ஆழ உழு.
- அகல் வட்டம் பகல் மழை.
- அகத்தி ஆயிரம் காய் காய்த்தாலும் புறத்தி புறத்திதான்.
- அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.
- அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.
- அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது
- அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?
- அடக்கமே பெண்ணுக்கு அழகு.
- அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.
- அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.
- அடாது செய்தவன் படாது படுவான்.
- அடி உதவுவதுபோல் அண்ணன் தம்பி உதவ மாட்டான்.
- அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்.
- அடியாத மாடு பணியாது.
- அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம்.
- அண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும்.
- அணில் கொம்பிலும், ஆமை கிணற்றிலும்.
- அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது.
- அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.
- அந்தி மழை அழுதாலும் விடாது.
- அப்பன் அருமை மாண்டால் தெரியும்.
- அப்பியாச வித்தைக்கு அழிவில்லை.
- அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்திடியில் பயம்.
- அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.
- அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி.
- அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்.
- அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்.
- அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்.
- அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது.
- அலை மோதும்போதே தலை முழுகு.
- அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?
- அழுகிற ஆணையும், சிரிக்கிற பெண்ணையும் நம்பக்கூடாது.
- அழுத பிள்ளை பால் குடிக்கும்.
- அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும்.
- அளக்கிற நாழி அகவிலை அறியுமா?
- அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.
- அறச் செட்டு முழு நட்டம் .
- அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.
- அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை.
- அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்.
- அறமுறுக்கினால் அற்றும் போகும்.
- அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்கவேண்டும்.
- அறிய அறியக் கெடுவார் உண்டா?
- அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம்.
- அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்.
- அறிவீன இடத்தில் புத்தி கேளாதே.
- அறிவு இல்லார் தமக்கு ஆண்மையுமில்லை.
- அறிவுடையாரை அரசனும் விரும்புவான்.
- அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும், அடியில் இறங்கி தான் தியாகம் வாங்கவேண்டும்.
- அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.
- அறுக்கத் தெரியாதவனுக்கு ஆயிரம் கதிர் அறுவாள்.
- அற்ப அறிவு அல்லற் கிடம்.
- அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்.
- அன்று எழுதிவன் அழித்து எழுதுவானா?
- அன்று குடிக்கத் தண்ணீர் இல்லை ஆனைமேல் அம்பாரி வேணுமாம்.
- அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்.
- அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா?
No comments:
Post a Comment