* நீங்கள் செய்யும் ஒரு செயல் ஒருவருக்கு நல்லதாகவும், இன்னொருவருக்கு கெட்டதாகவும் தெரியும். நீங்கள் யாருடன் பழகுகிறீர்களோ, அதை வைத்துத் தான் அந்தச் செயலின் நன்மை தீமை தீர்மானிக்கப்படுகிறது. ஆனால், இயற்கை ஒரு போதும் எந்த மனிதனிடமும் பாரபட்சம் காட்டுவதில்லை.
* மனிதர்கள் கனவு காண்பது சுலபம். கனவு காண்பதற்குப் போராட்டம் தேவையில்லை. வலியோ வேதனையோ இல்லை. ஆனால், கனவை நிஜமாக்கிப் பார்க்க எதையும் இழக்கத் தயாராக இருக்க வேண்டும்.
* பணிவு என்பது தலைகுனிவு அல்ல. பணிவினை பலவீனத்தின் அடையாளமாக நீங்கள் கருதலாம். உண்மையில் பணிவு மேன்மையான கவுரவத்தைத் தரும். அதுதான் உங்களின் அசைக்க முடியாத பலமாக மாறிவிடும். நாளடைவில் முன் எப்போதும் இல்லாததை விட சக்தி மிகுந்தவனாக நீங்கள் உணர்வீர்கள்.
* ஒரு கருவி ஒழுங்காக இருந்தால் தான் அதை முழுமையாகப் பயன்படுத்த முடியும். உங்கள் மனமும் ஒரு கருவி தான். அது அமைதியாகவும், ஆனந்தமாகவும் இருந்தால் தான் உங்களால் மற்றவர்களுக்கு சேவை செய்ய முடியும். உள்ளத்தில் மகிழ்ச்சியை முழுமையாக உணர்பவர்கள், சுற்றியுள்ள மனிதர்களுக்கு அவரவர்களின் திறமைக்கேற்றபடி முடிந்த உதவிகளைச் செய்து கொண்டிருப்பார்கள்.
* வாழ்க்கையின் அழகு நீங்கள் என்ன செயலைச் செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்து அமைவதில்லை. செய்யும் செயலில் உங்களை எந்த அளவுக்கு இதயப்பூர்வமாக அர்ப்பணித்துக் கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்து தான் அமைகிறது.


தேவையான பொருட்கள்:
வெள்ளைக் காகிதத்தில், சிறிய அளவில் (உங்கள் கட்டை விரல் அளவு முதல், உள்ளங்கை அளவு வரை) முயல், யானை, பூனை, நாய், பட்டாம்பூச்சி என உங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு உருவத்தை வரைந்து கொண்டு, அதை படத்தில் காட்டியபடி சரியாக கத்தரித்துக் கொள்ளுங்கள்.
அந்த உருவத்தில் உங்களுக்குப் பிடித்த வண்ணங்களைத் தீட்டுங்கள். கனமான அட்டைத் துண்டை எடுத்துக் கொண்டு, அதன் இரு முனைகளிலும் பசை தடவுங்கள். இப்போது வரைந்து வைத்த உருவத்தை பென்சிலின் அடிப்புறத்தில் வைத்து, பசை தடவிய அட்டைத் துண்டைக் கொண்டு படத்தில் உள்ளவாறு ஒட்டுங்கள். அப்படியே சில நிமிடங்கள் உலர விடுங்கள்.
தேவையான பொருட்கள்:
சிறிய அட்டைப் பெட்டியை எடுத்துக் கொண்டு (சதுரம், செவ்வகம் என எந்த வடிவமானாலும்), அதில் முழுவதும் வண்ணக் காகிதத்தை ஒட்டுங்கள். நான்கு காகிதக் கோப்பைகளை எடுத்துக் கொண்டு, அவற்றன் மீதும் அதே வண்ணக் காகித்தை ஒட்டுங்கள், அல்லது அதே வண்ணத்தைத் தீட்டுங்கள். படத்தில் காட்டியபடி, அட்டை மீது கோப்பைகளை கவிழ்த்து பசை கொண்டு ஒட்டுங்கள்.
இப்போது காகித் தட்டில் வேறொரு வண்ணம் தீட்டி, அதை உலரச் செய்யுங்கள். பின்னர் படத்தில் உள்ளவாறு அட்டைப் பெட்டியின் பக்கவாட்டில் அதை ஒட்டுங்கள். நான்கு கால்களுடன் பன்றியின் உடலும் தலையும் கிடைத்திருக்கும். பிறகு ஒட்டிய தட்டில் பன்றிக்கு கண்கள் வரையுங்கள். மீண்டும் ஒரு கோப்பையை எடுத்துக் கொண்டு, அதை கவிழ்த்தபடி பன்றியின் வாய் பகுதியில் ஒட்டுங்கள், அதன் மீது படத்தில் காட்டியபடி இரண்டு புள்ளிகளை வைத்து விடுங்கள்.
தடிமனான வெள்ளைக் காகிதம், பொட்டு
தடிமனான வெள்ளைக் காகிதத்தை மடித்து, அரைவட்டம் வரையுங்கள். அதை கத்தரிக்கோலினால் கத்தரித்து எடுத்துக் கொள்ளுங்கள். அதே போல சிறிய அரை வட்டம் ஒன்றைத் தயார் செய்யுங்கள். பிறகு படத்தில் காட்டியபடி அவ்விரண்டையும் கொண்டு கூம்பு வடிவத்தில் புனல்கள் செய்து, விளிம்புகளைப் பசையால் ஒட்டுங்கள் அதை சற்று நேரம் உலர விடுங்கள்.
இப்போது படத்தில் உள்ளது போல பிளாஸ்டிக் பந்தை கூம்பின் வாய்ப்புறத்தில் வைத்து ஒட்டுங்கள். செய்து வைத்திருக்கும் சிறிய புனலை எடுத்து பந்தின் மீது ஒட்டுங்கள். இது தான் பறவையின் அலகு. இதே போல கறுப்பு ஸ்டிக்கர் பொட்டுக்களை எடுத்து கண்கள் போல தோற்றமளிக்கும் படி ஒட்டுங்கள்.
எஞ்சியுள்ள காகிதத்தில் இரண்டு சிறகுகளை படத்தில் காட்டியுள்ளபடி வரைந்து அவற்றை அளவாக வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் மூன்று நீளமான காகிதத் துண்டுகளை படத்தில் காட்டியபடி சுருட்டிக் கொள்ளுங்கள். அவற்றை பறவையின் வால் போல தோற்றமளிக்கும் படி ஒட்டிக் கொள்ளுங்கள். சிறகுகளையும் இருபுறமும் ஒட்டிக் கொள்ளுங்கள்.
மூங்கில் குச்சியை அரை வட்டமாக வளைத்து, மற்றொரு மூங்கில் குச்சியுடன் நூலைக் கொண்டு படத்தில் உள்ளது போல இணைத்து விடுங்கள் (குச்சியை வளைத்து கட்டுவது சிரமமாக இருந்தால் விட்டு விடுங்கள். அடிப்பாகத்துக்கு மட்டும் ஒரு குச்சியை பயன்படுத்தலாம்). அதன் மீது வெள்ளைக் காகிதத்தை பசை தடவி ஒட்டுங்கள். பின்னர் அந்தக் குச்சியின் மீது குருவியை பசை தடவி ஒட்டி விடுங்கள். குச்சியின் மேல் பகுதியில் நூல் கட்டி தொங்க விடுங்கள்.