Friday, March 18, 2011

Schindler's List


அதிஷ்ட கெட்ட சின்டலெர் எந்த வியாபாரம் தொடங்கினாலும் நஷ்டம் தான். சிமன்ட் பாக்ட்ரி தொடங்கினான். இழுத்து மூடப்பட்டது. விற்பனைக்கு வாங்கிய பொருள் விற்கமுடியவில்லை. அரசாங்க அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தும் பயனில்லை. வியாபாரத்தில் தோல்வி அடைந்த சின்டலெர் சரித்திர பக்கங்களில் மறக்க முடியாத முக்கியமான மனிதர்.இரண்டாம் உலக போர் முடிவில் நாசி கட்சியில் சேர்ந்தவர்கள் பலர் தூக்கில் தொங்கியும், துப்பாக்கியில் சுட்டும் சிவப்பு படை தண்டனை வழங்கியுள்ளது. ஆனால், நாசி கட்சியை சேர்ந்த சின்டலெரை ஒன்றும் செய்யவில்லை.



இவர் இறந்த போது யூதர்கள் அவர்கள் கௌரவப்படி மரியாதை செழுத்தினர். நாசி கட்சி சேர்ந்த ஒருவனுக்கு யூதர்கள் மரியாதை செலுத்தினார்கள் என்றால் சின்டலெருக்கு மட்டும் தான். கோடிக்கணக்கான யூதர்களை கொன்று குவித்த ஹிட்லர் பக்கம் இருந்து கொண்டு நாசி படைக்களுக்கு லஞ்சம் கொடுத்து ஆயிரம் யூதர்களுக்கு மேல் தன் சொந்த பணத்தில் காப்பாற்றியவர். இன்றும் யூதர்கள் அவர் சமாதிக்கு சென்று கௌரவித்து வருகிறார்கள். அப்படிப்பட்ட சின்டலெர் வாழ்க்கையை பற்றிய படம் தான்..... Schindler's List.

இரண்டாம் உலக யுத்தம் (1939) தொடக்கத்தில் படம் தொடங்குகிறது. போலாந்து யூதர்களை இடம் மாற்றம் செய்யப்படும் போது சின்டலெர் போர் ஆயூதங்கள் செய்வதற்காக போலாந்து யூதர்களை வேலை செய்ய வைக்க நாசிப்படையினரிடம் கேட்கிறான். நாசி படையில் தலைமை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து சம்மதம் வாங்குகிறான். கைதிகளாக வேலை செய்யும் யூதர்கள் போர் ஆயூதம் செய்ய மிகவும் உதவியாக இருப்பதுப் போல் ஆவணங்கள் தயார் செய்கிறான். இதனால், அவன் பாக்ட்ரியில் இருக்கும் யூதர்கள் மரண முகாமுக்கோ, நாசி படையினரால் கொல்லப்படாமல் பாதுகாக்கப்படுகிறார்கள்.

ஆனால், நாசிப்படையின் எஸ்.எஸ் பிரிவு தலைவனான ஆமான் கோத் சின்டலெர் தொலிற்சாலையில் வேலை செய்ய ஒத்துழைப்பு தராதவர்களை கொல்கிறான். யூதர்களை கொன்றாலும், சின்டலெர் தொலிற்சாலையில் வேலை செய்ய ஆடகள் அனுப்பிக் கொண்டு தான் இருந்தான். அதனால், சின்டலெர் ஒன்று செய்யாதவனாய் நிற்கிறான்.

தன் தொழிற்சாலைக்களில் வேலை செய்பவர்களுக்காக தனியாக முகாம் அமைக்க ஆமான் கோத்துக்கு பணம் கொடுத்து அனுமதி வாங்கிறான். ஆரம்பத்தில் லாபம் சம்பாத்திக்கும் நோக்கம் சின்டலெருக்கு இருந்தாலும் போக போக தன்னால் எத்தனை உயிரை காப்பாற்ற முடியுமோ அவ்வளவு பேரையும் காப்பாற்ற நினைக்கிறான்.

தன் மனத்துக்கு வந்த பெயரை எல்லாம் சொல்லி ஒரு பட்டியல் தயார் செய்து அவர்களை தன் மூகாம் வேலைக்காக அழைத்துச் செல்கிறான். குழந்தைகளை அழைத்து செல்லும் போது சிக்கல் ஏற்ப்பட சின்டலெர் அவர்கள் மூகாமின் ஓறத்தின் படிந்து இருக்கும் அழுக்கு தொடைக்க உதவுவார்கள் என்று சொல்லி அவர்களையும் அழைத்து செல்கிறான். யூத பெண்கள் குளிக்க அறைக்கு செல்லும் போது விஷவாய்வு வருமோ என்று அஞ்சியப்படி சென்றவர்கள், தண்ணிர் வருவதை பார்த்து அவர்களின் பயம் தெளிகிறது.

தனக்காக வேலை செய்யும் யூதர்கள் அடிக்கவோ, துன்புறுத்தவோ, கொலை செய்யவோ கூடாது என்று நாசிப்படகளுக்கு கட்டளைப் போடுகிறான். இங்கு வேலை செய்யும் ஒவ்வொரு உயிரும் தன் வேலைக்கு முக்கியம் என்று சொல்கிறான்.

1945 ல் இரண்டாம் உலக யுத்தம் முடியும் போது நாசியின் எஸ்.எஸ் படையினர் சின்டலெரிடம் யூதர்களை கொல்ல சொல்லியும் மறுக்கிறான். சிவப்பு படை நெருங்கி வருவததால், சின்டலெர் தன் குடும்பத்தோடு தப்பிக்க நினைக்கிறான். தன்னால் காப்பாற்றப்பட்டு ஒரு விருந்து கொடுக்கும் போது, யூதர்கள் "சின்டலெர் போர் குற்றவாளி இல்லை" என்று எழுதிய கடிதத்தை கொடுக்கின்றனர்.

"ஒவ்வொரு உயிரை நாம் காப்பாற்றும் போது உலகத்தை காப்பாற்றுகிறோம்" வாசகம் பொருந்திய பரிசும் கொடுக்கிறார்கள். மனைவியுடன் சின்டலெர் காரில் ஏறும் போது இன்னும் பல உயிரை காப்பாற்றியிருக்க வேண்டும் என்று சொன்னப்படி செல்கிறான்.

படம் முடியும் போது, அவனால் காப்பாற்ற சின்டலெர் யூதர்கள் உலகம் முழுக்க 6000 பேர்க்கு மேல் வசிக்கிறார்கள் என்பதை குறிப்பது போல் படம் முடிகிறது.

ஆறு கோடி மேல் இறந்த யூதர்களுக்கு இந்த படத்தை சமர்பணம் செய்துயிருக்கிறார் இயக்குனர் சிடிவன் ஸ்பீல்பெர்க். ஜாஸ், இண்டியானா ஜோன்ஸ், ஜூராஸிக் பார்க் போன்ற பொழுது போக்கு ஜனரக படங்களை இயக்கிய ஸ்பீல்பெர்க் தன்னால் நல்ல கலைப்படம் கூட எடுக்க முடியும் என்று நிருபித்திருக்கிறார்.

இரண்டாம் உலகப் போர் முடிந்து ஆஸ்கர் சின்டலர் தொடங்கிய எந்த தொழிலும் சரியாக அமையவில்லை.யூத சமூகத்தில் இருந்து வந்த நிதி உதவியில் தொடங்கிய வியாபாரமும் இழுத்து முடப்பட்டன. அவரின் வியாபார நண்பர்களும் அவருடன் நட்பை முறித்துக் கொண்டனர். 1969 முதல் கிழக்கு ஜெர்மனி அளித்த பென்ஷன் தொகையில் தன் காலத்தை கலித்தார். இதய நோய் காரணமாக 1974ல் ஆஸ்கர் சின்டலர் இறந்தார். தான் வாழ்க்கையில் தோற்றாலும் தன்னால் முடிந்த உயிரை காப்பாற்றி அவர் பெயரில் ஒரு சமூகத்தை உருவாக்கியிருக்கிறார் சின்டலெர்.

இலங்கை இராணுவ முகாமில் சின்டலெர் போன்ற மனிதன் இல்லாமல் எத்தனையோ தமிழர்கள் இறந்திருக்கிறார்கள். கோடிப் பேர்களை கொன்றவன் 'சின்டலெர்' போல் தமிழர்களை காப்பாற்றிய ரட்சகன் என்று பவனிவந்துக் கொண்டுயிருக்கிறார். இன்னும் விடியாதா என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் ஒரு சமூகம் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறது.

பெரிய பெயரில்லாமல் ஒரு சமூகத்தை காப்பாற்றி சாதாரன மனிதனாக

No comments: