Friday, March 18, 2011

The Kite Runner


வாழும் பூமி நரகமாக விட்ட பிறகு வாழ கிடைத்த பூமியில் தங்களுடன் வாழ்ந்த மனிதர்களைப் பற்றி அசைப்போட்டு பார்ப்பார்கள். அப்போது இனிமையான நினைவுகளிடையே ஏதாவது வலி கண்டிப்பாக ஒலிந்திருக்கும். இனிமையான நினைவு என்று வெளியே சொல்லிக் கொண்டாலும் வேதனை மனதை ஆட்கொண்டிருக்கும்.
அப்படி பாலியத்தில் வாழ்ந்த பூமி பிரிந்து, மீண்டும் தன் சொந்தத்தை தேடி சென்றவனின் பற்றிய கதை தான் ‘The Kite Runner’

எழுத்தாளாராகிவிட்ட சந்தோஷத்தில் அமீர் வீட்டுக்குள் நுழைய ரஹிம் கான் என்பவரிடம் இருந்து போன் வருகிறது. ரஹிம் கான் என்ற பெயரை கேட்டத்தும் அவனது நினைவலைகள் பாலியத்தை நோக்கி செல்கின்றன.

1978ல் ஆப்கானிஸ்தானில் வாழும் அமீரின் நண்பன் ஹாசன் பட்டம் விட அவனுக்கு உதவியாக அமீர் இருக்கிறான். இருவருக்கும் பெரிய பொழுதுபோக்கே பட்டம் விடுவது தான். அமீர் பணக்கார வீட்டு மகன். அவனின் தந்தை பாபா ஒரு கம்யூனிச எதிர்பாளர். அமீரின் தந்தை பாபாவிடம் வேலை செய்யும் அலியின் மகன் தான் ஹாசன். ஆசிப்பும், அவனது நண்பர்களும் அமீரிடம் வம்பு செய்யும் போது ஹாசன் அவர்களை தன் உண்டிக்கோள்ளால் அடித்துவிடுவதாக மிரட்டுகிறான். ஆசிப் அவர்கள் இருவரையும் நண்பர்களல்ல, முதலாளி, வேலைக்காரன் உறவு என்று சொல்லும் போது அமீருக்கு வேதனையாக இருக்கும். அதே சமயம், அவனின் தந்தை ஹாசனின் புத்திசாலி தனத்தை பாராட்டும் போது பொறாமையும் ஒட்டிக் கொள்ளும்.



அமீர் தனியாக இருக்கும் எழுதும் போது கதையை அவனது தந்தையின் நண்பன் ரஹிம் கான் பாராட்டுவார். அவனது முதல் வாசன் ரஹிம் கான். அதே சமயம், ஹாசன் அமீர் கதைக்கு விமர்சன முன் வைக்கும் போது அமீர் மனதில் நண்பன் ஸ்தானத்தில் ஹாசன் ஒரு படி கீழ் தள்ளப்படுகிறான். இருந்தாலும், இருவரும் தொடர்ந்து நண்பர்களாக விளையாடுகிறார்கள். ஒரு முறை பட்டம் விடும் விழா நடக்கும் போது அமீர் பன்னிரண்டு பட்டங்களுக்கு மேல் அருத்து வெற்றிப்பெறுகிறான். அமீர் அருத்த பட்டத்தை ஹாசன் எடுக்க செல்ல, அமீர் தடுக்கிறான். " உனக்காக ஆயிரம் முறை செய்வேன் " என்று சொல்லி பட்டத்தை எடுக்க செல்கிறான். ஆசிப் குழுக்கள் அவனை சுழ்ந்துக் கொள்ள அவனிடம் பட்டம் கேட்கிறார்கள். ஹாசன் அதை தர மறுக்க அவனை பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள். இதையெல்லாம் பயந்தப்படி பார்த்த அமீர் மறைந்துக் கொள்கிறான்.


தனக்கு நடந்த்து என்ன என்று சொல்ல தெரியாத ஹாசன் தன் நண்பர் அமீரிடம் பட்டத்தை தருகிறான். ஹாசன் தனக்காக ஏன் இதை செய்ய வேண்டும் ? ஒரு வேலை ஆசிப் சொல்லுவது போல் தங்களுக்குள் முதலாளி, வேலைக்காரன் உறவு இருக்குமோ என்ற சந்தேகம் வருகிறது. அவனை தன் வீட்டில் இருந்து அனுப்ப, அவன் மீது திருட்டு பழி போடுகிறான் அமீர். ஹாசனும் ஏற்றுக் கொள்கிறான். அமீர் அப்பா பாபா இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும், அலி தன் மகனை அழைத்துக் கொண்டு வெளியே செல்கிறான். அமீர் குற்றவுணர்வோடு ஹாசனை பார்க்கிறான்.


1979ல் ரஷ்யப்படைகள் ஆப்கானிஸ்தானை உடுருவல் செய்ததால், தன் சொத்துக்களை எல்லாம் ரஹிம் கானிடம் நிர்வாகம் செய்ய ஒப்படைத்து மகனை அழைத்து செல்கிறான். வழியில் சோவியத்தின் சிப்பாய் ஆப்கானின் பெண்ணை புணர்ந்து கொள்ள அழைக்க தன் உயிரை பொருட்படுத்தாமல் தைரியமாக எதிர்கிறான். அமீர் மனதில் அவன் அப்பா ஒரு பெரிய ஹீரோவாக உருவாகுகிறார்.


இருவரும், அமெரிக்காவில் தன் வாழ்நாளை கலிக்கிறார்கள். அமீர் படித்து பட்டம் பெறுகிறான். அவன் தந்தை ஹாசனைப் பற்றி நினைவு படுத்தும் போதெல்லாம் அவனின் குற்றவுணர்வு அவனை கொள்ளும். அதை வெளியே காட்டிக் கொள்ளமல் இருப்பான். பாபா தன் நண்பரின் மகள் சொரயாவை திருமணம் செய்து வைத்த சந்தோஷத்தில் இறக்கிறான்.


அமீரின் நினைவலைகள் முடிந்து நீண்ட நாட்கள் பிறகு ரஹிமிடம் பேசுகிறான். முக்கியமான விஷய்த்திற்காக அமீரை பாகிஸ்தான் வரச்சொல்லுகிறான். பாகிஸ்தான் சென்ற அமீர் தன் முதல் புத்தகம் ரஹிம் கானுக்கு சமர்பிப்பதை காட்டுகிறான். அப்போது ஹாசன் அவன் தந்தை பாபாவின் இன்னொரு மகன் என்று கூறுகிறான். மேலும், அமீரின் சொத்தை பாதுகாக்கும் முயற்சியில் ஹாசனும், அவனது மனைவியும் இறந்ததை கூறுகிறான். முதலில் கோபப்படும் அமீர் ஹாசனின் உறுக்கமான கடிதம் படித்து அவன் தன் மீது வைத்திருக்கும் அன்பை நினைத்து நெகிழ்கிறான்.


ரஹிம் ஹாசனின் மகன் சௌரப் காபூலில் இருந்து அமெரிக்காவுக்கு அலைத்து செல்ல சொல்கிறான். தாடி, டர்பன் போட்டுக் கொண்டு அமீர் காபுல்லுக்கு செல்கிறான். சோவியத் படைகளை விட தாலிபன் மிகவும் கொடுமையாக பெண்ணை அடித்து கொள்வதும், கால் இழந்த சிறுவர்கள் தன் கட்டை காலை விற்பதும், தூக்கி தொங்கிய உடல் என்று நரகமாகிவிட காபுலை பார்க்கிறான். ஹாசனின் மகன் தன் சிறுவயது எதிரியான ஆசிப் வைத்திருபதை அறிந்து தன் உயிரை பணைய வைத்து சௌரப்பை மீட்கிறான்.



சௌரபை ரஹிம் கான் வீட்டுக்கு அழைத்து வர அவர் இறந்த செய்தியை அறிகிறான். சௌரப் தன்னுடன் அமெரிக்காவுக்கு அழைத்து செல்கிறான் அமீர். அவர்களோடு நெருங்கி பழக சௌரப் தயங்கும் போது அமீர் பட்டம் வாங்கி வானத்தில் விடுகிறான். ஹாசன் தனக்கு சொல்லி தந்ததை அவன் மகன் சௌரப்புக்கு சொல்லி தருக்கிறான். சௌரப் பட்டத்தை அருக்க, அமீர் எடுத்து செல்ல ஓடும் போது ஹாசன் கூறிய " உனக்காக ஆயிரம் முறை செய்வேன்" ஆமீர் சொல்லுவது போல் படம் முடிகிறது.


கதைகளம் ஆப்கானில் நடப்பது போல் இருந்தாலும் பெரும்பகுதி சீனாவில் உள்ள கஷ்கரில் படமாக்கப்பட்டது.


பதின்ம சிறுவர்கள் ஹாசனை பாலியல் பலாத்காரம் செய்யும் காட்சி எந்த ஆபாசமும் இல்லாமல் இருந்தாலும் பெரும் சர்ச்சை கிளப்பியது.


உலக அரசியல் பார்வையில் தீவிரவாதி நாடு என்று முத்திரை குத்தப்பட்ட ஆப்கானிஸ்தான் ரஷ்ய உடுருவல், தாலிபான் ஆக்கிரமிப்பு என்று அழகாய் பார்த்த நாடு தற்காலத்தில் மயாணமாய் காட்டும் போது அமீர் கண்களுக்கு மட்டுமல்ல பார்வையாளனுக்கும் வலியை கொடுக்கிறது.

எத்தனையோ வாழ்ந்து இடிந்த வீடுகளில் பல பாலிய வயது கதைகள் ஒலிந்திருக்கிறது. அமீர் கதாப்பாத்திரம் நினைத்து பார்க்கும் நேரமில்லாமல்

No comments: