Thursday, March 3, 2011

உண்மையான மகிழ்ச்சி



* உங்கள் தவறுகளைப் பெரும்பேறாக
நினையுங்கள். அவை நம்மை அறியாமலே நமக்கு வழிகாட்டும் தெய்வங்கள் என்றால் மிகையில்லை.
* அழுகை பலவீனத்தின் அறிகுறி. அடிமைத்தனத்தின் அறிகுறி. தோல்விகள் இல்லாத வாழ்க்கையால் பயனேதும் இல்லை. போராட்டம் இல்லாத வாழ்க்கை சுவையாக இருக்காது.
* தன்னலத்தை ஒழிப்பதில் தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது. உன்னைத் தவிர யாராலும் உன்னை
மகிழ்விக்க முடியாது.
* கோபப்படும் மனிதனால் அதிக அளவோ அல்லது
செய்யும் பணியைச் சிறப்பாகவோ செய்ய முடியாமல் போய் விடும். ஆனால், அமைதியானவனோ சிறப்பாகப் பணியாற்றுவான்.
* மன்னிக்கக் கூடியதும், சமநோக்குடையதும், நிலை
தடுமாறாததுமான மனதை எவன் பெற்றிருக்கிறானோ அவனே ஆழ்ந்த அமைதியில் திளைத்திருப்பான்.
* கருணை என்பது சொர்க்கத்தைப் போன்றது. நாம்
அனைவரும் கருணையுள்ளவர்களாக மாறி
சொர்க்கத்தில் மகிழ்ந்திருப்போம்.


விவேகானந்தர்

No comments: