பத்தொன்பதாம் நூற்றாண்டில் நடக்கிறது கதை. ரோடு மற்றும் மின்சாரம் இல்லாத கிராமம் அது. கரும்பை விளைவித்து அதிலிருந்து வெள்ளம் தயாரிக்கும் குடும்பத்துக்கும் இன்னொரு குடும்பத்துக்கும் உள்ள நில தகராறு தான் கதையின் மய்யப் பிரச்சினை. பக்கு என்ற சிறுவன் தான் படத்தின் மய்யப் புள்ளி.
பரம்பரை நில தகராறில் இரு குடும்பங்களுக்கும் பெரும் இழப்புகள். தன் அண்ணனை கொல்கையில் அவரது சட்டையில் இருக்கும் ரத்தக்கறை, சூரிய சூட்டில் மஞ்சள் ஆகும்வரை காத்திருந்து, பழி வாங்க புறப்படுகிறான் டோனியோ. தனக்கு வன்முறையில் விருப்பம் இல்லை என்றாலும் குடும்ப பாரம்பரிய கவுரவத்தை காக்க அவன் அந்த எதிரி குடும்பத்தின் மூத்த மகனை கொன்றே ஆகவேண்டும். அதன்படியே செய்துவிட்டு அந்த குடும்பத்தின் மூத்தவரான கண் தெரியாதவரின் அருகே தன் தந்தையுடன் சென்று ஆறுதல் சொல்லி, இத்துடன் முடித்து கொள்ளுமாறு மன்றாடுகிறான். அவரோ அவனது கையில் மரணக் கயிற்றை கட்டி, தன் மகனின் ரத்தம் சூட்டில் மஞ்சளாகும்வரை மட்டுமே அவனுக்கு நேரமிருக்கிறது என்றும், அடுத்த பௌர்நமியில் அவனது உயிர் அவனது உடலில் இருக்காது என்றும் கூறி அவனை அனுப்பி விடுகிறார்.( கொல்வதில் கூட ஒரு ஞாயம்.). அண்ணனின் வருகைக்காக காத்திருக்கிறான் சிறுவன் பக்கு. அண்ணன் வந்ததும் அவனுக்கு அளவில்லாத சந்தோசம். அவனது அன்னைக்கும் தான். எனினும் அவனது தந்தை டோனயோ அடுத்த பௌர்நமியில் பழி வாங்கப் படுவான் என சொன்னதும், அவர்கள் மகிழ்ச்சி வடிகிறது. வழக்கம் போல அடங்கிப் போகும் அம்மா.
அவர்கள் ஊருக்கு வித்தை காட்ட வரும் கிளாரா மற்றும் சலுச்டிநோவால் அவர்கள் வாழ்கை புரட்டிப் போட படுகிறது. கிளாரா பக்குவிர்க்கு ஒரு புத்தகம் பரிசளிக்க, படிக்க தெரியாத பக்கு அந்த புத்தகத்தில் உள்ள படங்களை பார்த்தே கதையை புனைந்து தனக்கு தானே கதை சொல்லிகொள்கிறான். அந்த புத்தகத்தில் இருக்கும் கடல் தேவதையாக கிளாரவை உருவகப்படுத்திக் கொள்கிறான். வெல்லம் விற்க நகரத்திற்கு செல்லும் டோனயோ கிளாரவை கண்டு காதல் கொள்ள, அவர்களது வித்தையை பார்க்க ஆவலாய் உள்ள சிறுவன் பக்குவை இரவு அப்பாவிற்கு தெரியாமல் கூட்டி சென்று காட்டி பக்குவை மகிழ்விக்கிறான். இதன் மூலம் தனது தந்தையின் கௌரவ பறம்பார்யாத்தை எதிர்க்க ஆரம்பிக்கிறான். அதற்க்கு பக்கு உடந்தையாய் இருக்கிறான். பக்குவிற்கு தனது சகோதரன் டோனயோ மேல் உயிர்.
புத்தகத்தின் படி கடல் தேவதையும் கதாநாயகனும் கடலில் சென்று மகிழ்வாய் வாழ்வதாய் கதை முடிகிறது. பக்கு அந்த கதாநாயகனாய் டோநியோவையும் கடல் தேவதையாய் கிளாராவையும் உருவாக படுத்தி பார்க்கிறான். எனினும் வழமை போல டோனயோ மறு பௌர்ணமிக்குள் கொல்லப்பட்டால் கதை முட்ட்ருபெறாது என உணர்ந்து அடுத்த பௌர்ணமையில் கிளாராவும் டோநியோவும் தனிமையில் லயித்து இருக்க, மழை பொழிய டோநியோவின் உடைகளையும் தொப்பியும் போட்டுக் கொண்டு டோநியோவை கொல்ல வரும் எதிரி குடும்பத்தின் வாரிசுக்குத் தானே டோனியோ என காட்டி கொல்லப்பட்டு இறந்து போகிறான். பக்குவின் தாய் தந்தையர் கதறி அழ,பக்குவின் ஆசைப்படி டோனயோ தன் குடும்பத்தை விட்டு பாரம்பரிய பழிவாங்கலை விட்டுவிட்டு கடற்கரை சென்று கிளாராவிற்காக காத்திருப்பதாக படம் முடிகிறது.
படத்தின் குறிப்பிடத்தக்க விஷயம் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் கண்ணில் ஒத்திக் கொள்ளலாம் போல படம் பிடித்திருக்கும் வால்டேர் கார்வலோ வின் ஒளிப்பதிவு. ஒவ்வொரு காட்சியும் அள்ளிக் கொண்டு போகிறது. பதின் வயது சிறுவனாக நடித்திருக்கும் பக்குவின் நடிப்பும் அபாரம்.
ஆறே ஆறு கதாபாத்திரங்களை வைத்து வன்முறைக்கெதிராக இப்படத்தை செதுக்கி இருக்கிறார் வால்டேர் செலஸ்.
2001 இல் வெளியான இப்படம் கோல்டன் க்ளோப் பரிந்துரை உட்பட பல விருதுகளை வென்றிருக்கிறது.
No comments:
Post a Comment