Friday, March 18, 2011

உள்ளத்தை திறந்து வை!

* எவராலும் தமது சொந்த ஆன்மாவையோ, கடவுளையோ அறிய இயலாது. ஆனால், நாம் ஆன்மாவாகவும், கடவுளாகவும் உள்ளோம்.
* பண்டைக்காலத்தில் கடவுளை மறுப்பதே நாத்திகமாகயிருந்தது. இப்போது தன்னம்பிக்கையை மறுப்பது நாத்திகமாக உள்ளது.
* நம்முடைய பிரார்த்தனைகளில் கடவுளை நம் தந்தையாக ஒப்புக் கொண்டு விட்டு, அன்றாட வாழ்க்கையில் வெளியாரை நம் சகோதரர்களாக அங்கீகரிக்காமலிருப்பதில் நியாயமில்லை.
* நாம் செலுத்தும் பணிவுக்கும், மரியாதைக்கும் பிரதிபலனாக இறைவன் ஏதேனுமொரு நலனைத் தரவேண்டுமென்று நாம் எதிர்பார்க்கும் வரை உண்மையான அன்பு உண்டாகாது.
* உலகத்தில் அனைத்தையும் துறந்து, மன உணர்ச்சிகளின் தீவிரத்தை அடக்கிக் கொண்டு அமைதியை
நாடுகிறவனே சுதந்திர புருஷனும் பெரியோனும் ஆவான்.
* நமது உள்ளங்களை நாம் எப்போதும் திறந்து வைத்திருந்தால் பிரபஞ்சத்திலுள்ள நல்ல நினைவுகள் அனைத்திற்கும் உரிமையுள்ளவர்களாகி விடுவோம்.
* நாம் அனைவரும் விளக்குகளைப் போல பிறருக்கு ஒளி கொடுத்து பயனுள்ள வாழ்க்கை வாழ்வோம்.

- விவேகானந்தர்

No comments: