Thursday, October 6, 2011

யம்மா யம்மா காதல் பொன்னம்மா..

படம் : 7அம் அறிவு
பாடல் : யம்மா யம்மா காதல் பொன்னம்மா
பாடியவர் : SPB

யம்மா யம்மா காதல் பொன்னம்மா
நீ என்ன விட்டு போனதென்னம்மா
நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா
என் பட்டாம் பூச்சி சாயம் போச்சம்மா
அடி ஆணோட காதல் கை ரேக போல
பெண்ணோட காதல் கை குட்ட போல..
கனவுக்குள்ள அவல வெச்சேனே
என் கண்ண ரெண்ட திருடி போனாலே..
புல்லாங்குழல கையில் தந்தாலே..
என் மூச்சுக்காத்த வாங்கி போனாலே..

பொம்பளைய நம்பி.. கெட்டுபோனவங்க ரொம்ப
அந்த வரிசையில் நானும்..
இப்ப கடைசியில் நின்னேன்..
முத்தெடுக்க போனால்..
உன் மூச்சடங்கும் தன்னால்..
காதல் முத்தெடுத்த பின்னல்
மனம் பித்தமாகும் பெண்ணால்..
அவ கையவிட்டுதான் போயாச்சு..
கண்ணு ரெண்டுமே பொய்யாச்சு..
காதல் என்பது வீண் பேச்சு..
மனம் உன்னாலே புண்ணாய் போச்சு..
காதல் பாதை கல்லு முல்லுடா..
அதை கடந்துபோன ஆளே இல்லடா..
காதல் ஒரு போதை மாதிரி
அதை போட்டுகிட்டா மூங்கில் யாத்திரை..

யம்மா யம்மா காதல் பொன்னம்மா
நீ என்ன விட்டு போனதென்னம்மா
நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா
என் பட்டாம் பூச்சி சாயம் போச்சம்மா

ஓட்ட போட்ட மூங்கில், அது பாட்டு பாட கூடும்..
நெஞ்சில் ஓட்ட போட்ட பின்னும், மனம் உன்ன பத்தி பாடும்.
வந்து போனதாறு? ஒரு நந்தவன தேறு..
நம்பி நொந்து போனேன் பாரு. அவ பூ இல்ல நாரு.
என்ன திட்டம் போட்டு நீ திருடாதே..
எட்ட நின்னு நீ வருடாதே,
கட்டெறும்பு போல் நெருடாதே..
மனம் தாங்காதே தாங்காதே…
வானவில்லின் கோலம் நீயம்மா,
என் வானம் தாண்டி போனதெங்கம்மா..
காதல் இல்லா ஊரு எங்கடா
என்ன கண்ண கட்டி கூட்டி போங்கடா..

யம்மா யம்மா காதல் பொன்னம்மா
நீ என்ன விட்டு போனதென்னம்மா
நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா
என் பட்டாம் பூச்சி சாயம் போச்சம்மா
அடி ஆணோட காதல் கை ரேக போல
பெண்ணோட காதல் கை குட்ட போல..
கனவுக்குள்ள அவல வெச்சேனே
என் கண்ண ரெண்ட திருடி போனாலே..
புல்லாங்குழல கையில் தந்தாலே..

என் மூச்சுக்காத்த வாங்கி போனாலே..

No comments: