Monday, June 27, 2011

யாரை நம்பி நான் பொறந்தேன்...

பாடல்:யாரை நம்பி நான் பொறந்தேன்
திரைப்படம்: Enga Uru Raja [எங்க ஊரு ராஜா]
வரிகள்: Kannadasan [கன்னதாசன்]
இசை: M S Visvanathan [M S விச்வநாதன்]
குரல்: T M Soundara Rajan [T M சௌந்தர ராஜன்]

யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க
என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க

யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க
என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க

குளத்திலே தண்ணியில்லே கொக்கும் இல்லே மீனும் இல்லே
குளத்திலே தண்ணியில்லே கொக்கும் இல்லே மீனும் இல்லே
பெட்டியிலே பணமில்லே பெத்தபுள்ளே சொந்தமில்லே

யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க
என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க

தென்னைய பெத்தா இளநீரு பிள்ளைய பெத்தா கண்ணீரு
தென்னைய பெத்தா இளநீரு பிள்ளைய பெத்தா கண்ணீரு
பெத்தவன் மனமே பித்தம்மா பிள்ளையின் மனமே கல்லம்மா
பானையிலே சோறிருந்தா பூனைகளும் சொந்தமடா
சோதனையை பங்கு வச்சா சொந்தமில்லே பந்தமில்லே

யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க
என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க

நெஞ்சமிருக்கு துணிவாக நேரமிருக்கு தெளிவாக
நெஞ்சமிருக்கு துணிவாக நேரமிருக்கு தெளிவாக
நினைத்தால் முடிப்பேன் சரியாக நீ யார் நான் யார் போடா போ
ஆடியிலே காத்தடிச்சா ஐப்பசியில் மழை வரும்
தேடி வரும் காலம் வந்தால் செல்வமெல்லாம் ஓடிவரும்

யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க
என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க

வாங்கடா வாங்க.. வாங்கடா வாங்...

No comments: