Saturday, June 25, 2011

லாலிபாப் உருவான விதம்!



பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் மிட்டாய்கள் (Candies) மிகவும் பெரியதாக இருந்தன. அதனால் அவற்றைக் குழந்தைகள் சாப்பிடும்போது ஆபத்தை விளைவித்தன.

மேலும், காகிதம் சுற்றப்படாமல் விற்கப்பட்டதால் அவை ஒழுகி, உடை, முகம், விரல்கள் எல்லாவற்றிலும் ஒட்டிக்கொண்டு அசுத்தப்படுத்தின. அதனால் பெற்றோர் தம் குழந்தைகளுக்கு அவற்றை வாங்கித் தரவில்லை.

கனெக்டிகட்டைச் சேர்ந்த ஜார்ஜ் ஸ்மித் என்பவர் புத்திசாலித்தனமாகச் செயல்பட்டு இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டார். அவர், மிட்டாயை ஒரு குச்சியில் பொருத்தினார். அக்காலத்தில் புகழ்பெற்று விளங்கிய பந்தயக் குதிரையான `லாலிபாப்’பின் பெயரை அந்த மிட்டாய்க்குச் சூட்டினார்.

No comments: