Friday, July 29, 2011

பழமொழிகள்-நி,நீ, நு & நூ

நி
  • நித்தம் போனால் முத்தம் சலிக்கும்.
  • நித்திய கண்டம் பூரண ஆயிசு.
  • நித்தியங் கிடைக்குமா அமாவாசை சோறு?
  • நித்திரை சுகம் அறியாது.
  • நிலத்தில் எழுந்த பூண்டு நிலத்தில் மடிய வேண்டும்.
  • நிழலின் அருமை வெயிலிற் போனால் தெரியும்.
  • நின்ற வரையில் நெடுஞ் சுவர், விழுந்த அன்று குட்டிச்சுவர்.

நீ

  • நீந்த மாட்டாதவனை ஆறு கொண்டு போம்.
  • நீர் ஆழம் கண்டாலும் நெஞ்சு ஆழம் காண முடியாது.
  • நீர் உள்ள மட்டும் மீன் குஞ்சு துள்ளும்.
  • நீர் மேல் எழுத்து போல்.
  • நீலிக்குக் கண்ணீர் இமையிலே.
  • நீள நீளத் தெரியும் மெய்யும் பொய்யும்.

நு

  • நுனிக்கொம்பில் ஏறி அடிக்கொம்பு வெட்டுவார்களா?

நூ

  • நூல் கற்றவனே மேலவன்.
  • நூலளவே யாகுமாம் நுண்ணறிவு.
  • நூலைப் போல சேலை தாயைப் போல பிள்ளை.
  • நூற்றுக் மேல் ஊற்று, ஆயிரத்துக்கு மேல் ஆற்றுப் பெருக்கு.
  • நூற்றைக் கொடுத்தது குறுணி.

No comments: