பழமொழிகள்-நி,நீ, நு & நூ
நி - நித்தம் போனால் முத்தம் சலிக்கும்.
- நித்திய கண்டம் பூரண ஆயிசு.
- நித்தியங் கிடைக்குமா அமாவாசை சோறு?
- நித்திரை சுகம் அறியாது.
- நிலத்தில் எழுந்த பூண்டு நிலத்தில் மடிய வேண்டும்.
- நிழலின் அருமை வெயிலிற் போனால் தெரியும்.
- நின்ற வரையில் நெடுஞ் சுவர், விழுந்த அன்று குட்டிச்சுவர்.
நீ
- நீந்த மாட்டாதவனை ஆறு கொண்டு போம்.
- நீர் ஆழம் கண்டாலும் நெஞ்சு ஆழம் காண முடியாது.
- நீர் உள்ள மட்டும் மீன் குஞ்சு துள்ளும்.
- நீர் மேல் எழுத்து போல்.
- நீலிக்குக் கண்ணீர் இமையிலே.
- நீள நீளத் தெரியும் மெய்யும் பொய்யும்.
நு
- நுனிக்கொம்பில் ஏறி அடிக்கொம்பு வெட்டுவார்களா?
நூ
- நூல் கற்றவனே மேலவன்.
- நூலளவே யாகுமாம் நுண்ணறிவு.
- நூலைப் போல சேலை தாயைப் போல பிள்ளை.
- நூற்றுக் மேல் ஊற்று, ஆயிரத்துக்கு மேல் ஆற்றுப் பெருக்கு.
- நூற்றைக் கொடுத்தது குறுணி.
No comments:
Post a Comment