படம்: மரகதம்
இசை: சுப்பையா நாயுடு
பாடியவர்: சந்திரபாபு, ஜமுனா ராணி


குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே

தங்கமே உன்னைக் கண்டதும் இன்பம்
பொங்குது தன்னாலே

போக்கிரி ராஜா போதுமே தாஜா

பொம்பளை கிட்டே ஜம்பமா வந்து
வம்புகள் பண்ணாதே

சந்துல தானா சிந்துகள் பாடி

தந்திரம் பண்ணாதே
நீ மந்திரத்தாலே மாங்காயைத் தானே
பறிக்க எண்ணாதே


போக்கிரி போக்கிரி போக்கிரி போக்கிரி ராஜா

போதுமே போதுமே போதுமே போதுமே தாஜா
குங்கும குங்கும குங்கும குங்குமப் பூவே
கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும் புறாவே

ஜம்பர் பட்டும் தாவணி கட்டும்

சலசலக்கையிலே
என் மனம் தொட்டு ஏக்கமும்பட்டு
என்னமோ பண்ணுதே

சித்திரப் பட்டு சேலையைக் கண்டு

உனக்கு பிரியமா
நீ பித்துப்பிடிச்சு பேசுறதெல்லாம்
எனக்குப் புரியுமா

போக்கிரி போக்கிரி போக்கிரி போக்கிரி ராஜா

போதுமே போதுமே போதுமே போதுமே தாஜா
குங்கும குங்கும குங்கும குங்குமப் பூவே
கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும் புறாவே


செண்பக மொட்டும் சந்தனப் பொட்டும்

சம்மதப்பட்டுக்கனும்
தாளமும் தட்டி மேளமும் கொட்டி
தாலியைக் கட்டிக்கனும்

குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே
தங்கமே உன்னைக் கண்டதும் இன்பம்
பொங்குது தன்னாலே