Friday, July 29, 2011

அதிகாரம் - பொறையுடைமை

குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - இல்லறவியல் அதிகாரம் -


குறள் 151:

அகழ்வாரைத்
தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப்
பொறுத்தல் தலை.

கலைஞர் உரை:

தன்மீது
குழி பறிப்போரையே தாங்குகின்ற பூமியைப் போல் தம்மை இகழ்ந்து பேசுகிறவர்களின் செயலையும் பொறுத்துக் கொள்வதே தலைசிறந்த பண்பாகும்.

மு. உரை:

தன்னை
வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல், தம்மை இகழ்வாரையும் பொறுப்பதே தலையான பண்பாகும்.

சாலமன் பாப்பையா உரை:

தன்னையே
தோண்டினாலும் தோண்டுபவர் விழுந்துவிடாதபடி தாங்கும் நிலம் போலத், தன்னை வார்த்தைகளால் அவமதிப்பவரையும் மதித்துப் பொறுப்பது முதன்மை அறம்.

No comments: