Monday, May 16, 2011

யாரது... யாரது... யாரது..

படம் : காவலன்
பாடல் :
யாரது... யாரது...
இசை : வித்யா சாகர்
பாடியவர்கள் :
கார்த்திக், சுசீத்ரா
பாடலாசிரியர்:
யுகபாரதி
வெளியான ஆண்டு
: 2011



யாரது... யாரது... யாரது.. யார் யாரது..
சொல்லாமல் நெஞ்சத்தை தொல்லை செய்வது
மூடாமல் கண் ரெண்டை மூடிச் செல்வது
யாரது யாரது யாரது யாரது...
நெருங்காமல் நெருங்கி வந்தது
விலகாமல் விலகி நிற்பது
விழியாக கேள்வி வந்தது
தெளிவாக குழம்ப வைப்பது

யாரது யாராது யாரது யாரது

என்னில் ஒரு சடுகுடு சடுகுடு
காலை மாலை நடக்கிறதே
கண்ணில் தினம் கதகளி கதகளி
தூங்கும் போதும் தொடர்கிறதே -2
இரவிலும் அவள் பகலிலும் அவள்
மறந்திருக்கையிலும் அது தெரிகிறதே
கனவிலும் அவள் நினைவிலும் அவள்
நிழல் என தொடர்வது புரிகிறதே
யாரும் இல்லா அவளை இதயம் தேடுதே

யாரது யாரது யாரது யார் யாரது

உச்சந்தலை நடுவினில் அவள் ஒரு
வேதாளம் போல் இறங்குகிறாள்
என்னுள் அவள் இறங்கிய பிறகு
இம்சை ராஜ்ஜியம் தொடங்குகிறாள்
அவள் இவள் என எவள் எவள் என
மறுகையில் அவள் குழப்புகிறாள்
அவளது முகம் எவளையும் விட
அழகிலும் அழகென உணர்த்துகிறாள்
இருந்தாலும் இல்லாமல்
அவள் கலகம் செய்கிறாள்

யாரது யாரது யாரது யாரது
சொல்லாமல் நெஞ்சத்தை தொல்லை செய்வது
மூடாமல் கண் ரெண்டை மூடிச் செல்வது
யாரது யாரது யாரது யாரது ...
நெருங்காமல் நெருங்கி வந்தது
விலகாமல் விலகி நிற்பது
விழியாக கேள்வி வந்தது
தெளிவாக குழம்ப வைப்பது

No comments: