Tuesday, April 5, 2011

இரண்டுக்கும் வாழ்த்து கூறு!

*பாமரனைப் பண்புள்ளவனாகவும்,
பண்புள்ளவனைத் தெய்வமாகவும்
உயர்த்தும் கருத்தே மதம்.
* உற்சாகத்துடன் இருக்கத் துவங்குவது தான், நீ ஆன்மிக வாழ்க்கை வாழ ஆரம்பிப்
பதற்கான முதல் அறிகுறி.
*நீ செய்த தவறுகளை வாழ்த்து; அந்தத்
தவறுகள் நீ அறியாமலே உனக்கு வழிகாட்டும்
தெய்வங்களாக இருந்திருக்கின்றன. துன்பங்களாக இருந்திருக்கின்றன. துன்பங்களுக்கும் நல்
வாழ்த்துக்கள்! இன்பங்களுக்கும் நல்வாழ்த்துக்கள்.
* தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவை. இவை
அனைத்திற்கும் மேலாக அன்பு வேண்டும்.
*அடுத்தவர்களின் பாதையைப் பின்பற்றக்கூடாது.
காரணம் அது அவர்களுடைய பாதை, உன்னுடையதுஅல்ல. உன்னுடைய பாதையைக் கண்டுபிடித்து
விட்டால், அதன்பிறகு நீ செய்ய வேண்டியது எதுவும் இல்லை.
*கடவுள் விருப்பு வெறுப்பற்றவர். உலகம், உயிர்கள், அண்ட சராசரங்கள் அனைத்திடமும் அவர் அன்பு செலுத்துகிறார்.


-விவேகானந்தர்.

No comments: