Friday, April 29, 2011

6 ஆண்டு பயணத்துக்கு பிறகு புதன் கிரகத்தை அடைந்தது விண்கலம்


நாசா: அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் 2004ம் ஆண்டில் ஏவிய ‘மெசஞ்சர்’ விண்கலம் 6 ஆண்டு பயணத்துக்கு பிறகு புதன் கிரகத்தை நேற்று சென்றடைந்தது. சூரியனுக்கு மிக அருகில் உள்ள கிரகம் புதன். இது பற்றிய ஆராய்ச்சிக்காக ‘மெரைனர்10’ என்ற விண்கலத்தை நாசா 1973&ல் அனுப்பியது. அதன் பிறகு, 2004ம் ஆண்டு ஆகஸ்ட் 3&ம் தேதி ‘மெசஞ்சர்’ என்ற விண்கலத்தை புதனுக்கு நாசா அனுப்பியது. அமெரிக்காவின் புளோரிடா மாநிலம் கேப் கேனவராலில் உள்ள கென்னடி ஏவுதளத்தில் இருந்து டெல்டா2 ராக்கெட்டில் வைத்து மெசஞ்சர் விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

பூமியில் இருந்து புறப்பட்டு வெள்ளி கிரகத்தை தாண்டி வினாடிக்கு 640 கி.மீ. என்ற வேகத்தில் சென்ற ராக்கெட் 6 ஆண்டு 7 மாதத்தில் சுமார் 790 கோடி கி.மீ. தூர பயணத்துக்கு பிறகு புதன் சுற்றுவட்ட பாதையை நேற்று சென்றடைந்தது. இதுபற்றி நாசா விஞ்ஞானிகள் கூறுகையில், ‘‘நாசா விஞ்ஞானிகளின் 36 ஆண்டு கால முயற்சிக்கு பலன் கிடைத்திருக்கிறது. சூரியனுக்கு மிக அருகில் இருப்பதால் புதன் கிரகத்தில் வெப்பநிலை பூமியைவிட பல மடங்கு அதிகம். அதாவது, 600 முதல் 800 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். சூரியனின் பார்வை படாத இடங்களில் குளிரும் அதிகம் இருக்கும். இதை சமாளித்து ஆய்வு பணியில் ஈடுபடும் வகையில் மெசஞ்சர் விண்கலம் தயாரிக்கப்பட்டுள்ளது. புதன் கிரகத்தில் எடுக்கப்படும் போட்டோக்களை மெசஞ்சர் விண்கலம் அடுத்த மாதம் முதல் பூமிக்கு அனுப்பும்’’ என்றனர்.

No comments: