பயணம்
தாணிப்பாறையின் அடிவாரத்தில் வனத்துறையினரின் அலுவலகம் ஒன்றும் உள்ளது. மலையேறுமுன்னே ஒரு வளைவு (Arch) நம்மை வரவேற்கிறது. இரு மருங்கிலும் மூலிகைச் செடிகளும் கொடிகளும் நெருக்கியடிக்க குறுகிய பாதையில் மலையில் பிரயாணம் துவங்குகிறது.
சுமார் 6லிருந்து 10 அடி மட்டுமே அகலம் கொண்ட சுமார் 8 கிமீ நீள கரடுமுரடான செங்குத்து மலைப்பாதையில்தான் பயணம். ஒரு பக்கம் பகலவனும் கதிர்களை உட்செலுத்த அஞ்சும் அடர்ந்த காடு. மறுபக்கம் தடுக்கி விழுந்தால் அதல பாதாளம். பாதுகாப்பிற்குக் கைப்பிடி கம்பிகள் கூடக் கிடையாது. இந்த ஆறடிப் பாதையில்தான் துணிகரப் பயணம். ஏற ஆரம்பிக்கும்போது உற்சாகத்திற்குப் பஞ்சமிருக்காது.
அடிக்கடி சென்று பழக்கப்பட்ட ஆட்கள் இரண்டு மணிநேரத்தில் கோவிலைச் சென்றடைந்துவிடுவர். முதல்முறையாகச் செல்வோருக்கு குறைந்தபட்சம் நான்கு மணிநேரம் ஆகிவிடும்!
ஏற ஆரம்பித்த அரைமணி நேரத்திலேயே நாக்குத் தள்ள ஆரம்பித்துவிடும். ‘புஸ் புஸ்’ஸென்று வெளிப்படும் மூச்சு, பேசாமல் கீழேயே இருந்திருக்கலாம் என்று சொல்லும்!. மேலே ஏற ஏற தன்னம்பிக்கை குறைவது போல இருக்கும்.
பழக்கப்பட்ட ஆட்களுடன் முதல் முறை ஏறுவது மிகவும் நல்லது. ஆனால் கஷ்டப்பட்டு மலையேறி கோவிலைச் சென்றடைந்தவுடன் மனதில் இருக்கும் பெரும் வாழ்க்கைப் பாரங்கள் குறைந்தது போலிருக்கும்.
இப்பேர்ப்பட்ட கடினமான பாதையையே கடந்து வந்துவிட்டோமே வாழ்க்கை என்னடா வாழ்க்கை.. அதிலுள்ள கஷ்டங்களெல்லாம் சும்மா தூசு.. என்ற பக்குவப்பட்ட மனநிலை வந்துவிடும். மீண்டும் மீண்டும் மலையேறத் தோன்றும். மனம் தளராமல் நடக்க வேண்டுமென்றால் ஒரே வழி மூச்சை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளுங்கள். எவ்வளவுதான் மூச்சிறைப்பது போல இருந்தாலும் கட்டுப்பாட்டில் இருந்தால் போதும் அவ்வளவுதான்.
சற்று நிதானமாக, நடக்கும் பாதையில் முழு கவனமும் வைத்து நெஞ்சில் சிவனை நிலைநிறுத்தி ஒவ்வொரு கணத்தையும் அனுபவித்து, சுற்றிலும் காணும் இயற்கையையும் ரசித்து, மூச்சிறைத்தாலும் மெதுவாக மூச்சை வெளியிட்டு, எங்கேயும் உட்காராமல் தொடர்ந்தாற் போல மேலேறிவிட்டால் இரண்டே மணிநேரம்தான்.
ஆனால் கீழே இறங்குவது சற்று எளிது. பழக்கமானவர்கள் ஒன்றரை மணிநேரத்தில் இறங்கிவிடலாம். புதியவர்களுக்கு மூன்று மணி நேரம். வீட்டுக்கு வந்தவுடன்தான் தெரியும், தொடைகளில் தசைப்பிடிப்பும், கணுக்கால் வலியும். மூன்று நாட்களில் சரியாகிவிடும்!
முடிந்தவரை அதிக பாரங்கள் கொண்டுசெல்வதைத் தவிர்த்தல் நல்லது.
சிவநாமத்தைச் சொல்லிக்கொண்டு ஏறுவது மிகுந்த மனோபலத்தைக் கொடுக்கும்.
சுந்தர மகாலிங்கத்துக்கு... அரோகரா!
சந்தன மகாலிங்கத்துக்கு... அரோகரா!
பிலாவடி கருப்பனுக்கு... அரோகரா!
ரெட்டைலிங்கத்துக்கு... அரோகரா!
வனகாளிக்கு... அரோகரா!
பதினெட்டுச் சித்தர்களுக்கு... அரோகரா!
போன்ற கோஷங்கள் பிரசித்தம்.
பரமாத்மாவின் இருப்பிடம்
மலையில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் என இரண்டு வடிவங்களில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார் லிங்க வடிவத்தில் பரமசிவன்.
ஆகாய கங்கை என அழைக்கப்படும் சிறு நீர்வீழ்ச்சி இவ்விரு கோயில்களுக்கு நடுவில் சிறு ஓடையாக ஓடுகிறது. இந்நீர் மிகவும் புனிதமாகக் கருதப்படுகிறது. மழைக்காலங்களில் நீர்வரத்து அதிகமாக இருக்கும்.
சுந்தர மகாலிங்கத்தைத்தான் முதலில் தரிசிக்கின்றனர். அதன் பின்னரே சந்தன மகாலிங்கத்துக்குச் செல்கின்றனர். அங்கு செல்ல சுமார் 15 நிமிடங்கள் நடக்க (ஏற) வேண்டும்.
சுந்தர மகாலிங்கம் கோவிலில் சுந்தரமூர்த்தி மற்றும் சுந்தரமகாலிங்கம் என்று இரண்டு லிங்கங்கள் உள்ளன.
சந்தன மகாலிங்கம் கோவிலில் சந்தனத்தால் அலங்கரிக்கப்பட்ட லிங்கம் உள்ளது. பதினெட்டுச் சித்தர்களுக்கு சிலைகள் உள்ளன. விநாயகர், முருகர், மஹாதேவி மற்றும் நவகிரகங்களுக்கும் சிலைகள் உள்ளன. சட்டநாதச் சித்தர் வாழ்ந்த குகையும் இங்குள்ளது.
இவற்றுக்கும் மேலே சென்றால் பெரிய மகாலிங்கம் என்ற கோயில் இருக்கிறது. பெரும்பாலும் பக்தர்கள் இங்கு வருவதில்லை. சித்தர்கள் மட்டும் இங்கே பூஜை செய்வதாகக் கூறப்படுகிறது. பாம்புக் கோவில் ஒன்றும் அருகில் உள்ளது.
சுந்தரமகாலிங்கம் கோயிலில் இருந்து ஒரு மணி நேரம் இன்னும் மேலே ஏறினால் தவசிக் குகை என்னும் குகைப் பகுதியை அடையலாம். இவ்விடத்திற்குச் சென்ற அனுபவஸ்தர்களுடன் மட்டுமே செல்லவேண்டும். ஏனென்றால் முதலில் இருந்தது போல் ஆறடி அகலப் பாதை கூட இங்கு கிடையாது. மிகவும் குறுகலான, ஏன் பாதையே இல்லாத வழிகளிலும் பயணிக்க வேண்டியதிருக்கும். சிறிது வழி பிசகிவிட்டாலும் சிரமம்தான்.
தவசிக் குகையில் அனைத்து சித்தர்களும் வசித்ததாகவும், இன்றும் தவம் செய்து கொண்டிருப்பதாகவும் பேச்சு நிலவுகிறது!
தாணிப்பாறையின் அடிவாரத்தில் வனத்துறையினரின் அலுவலகம் ஒன்றும் உள்ளது. மலையேறுமுன்னே ஒரு வளைவு (Arch) நம்மை வரவேற்கிறது. இரு மருங்கிலும் மூலிகைச் செடிகளும் கொடிகளும் நெருக்கியடிக்க குறுகிய பாதையில் மலையில் பிரயாணம் துவங்குகிறது.
சுமார் 6லிருந்து 10 அடி மட்டுமே அகலம் கொண்ட சுமார் 8 கிமீ நீள கரடுமுரடான செங்குத்து மலைப்பாதையில்தான் பயணம். ஒரு பக்கம் பகலவனும் கதிர்களை உட்செலுத்த அஞ்சும் அடர்ந்த காடு. மறுபக்கம் தடுக்கி விழுந்தால் அதல பாதாளம். பாதுகாப்பிற்குக் கைப்பிடி கம்பிகள் கூடக் கிடையாது. இந்த ஆறடிப் பாதையில்தான் துணிகரப் பயணம். ஏற ஆரம்பிக்கும்போது உற்சாகத்திற்குப் பஞ்சமிருக்காது.
அடிக்கடி சென்று பழக்கப்பட்ட ஆட்கள் இரண்டு மணிநேரத்தில் கோவிலைச் சென்றடைந்துவிடுவர். முதல்முறையாகச் செல்வோருக்கு குறைந்தபட்சம் நான்கு மணிநேரம் ஆகிவிடும்!
ஏற ஆரம்பித்த அரைமணி நேரத்திலேயே நாக்குத் தள்ள ஆரம்பித்துவிடும். ‘புஸ் புஸ்’ஸென்று வெளிப்படும் மூச்சு, பேசாமல் கீழேயே இருந்திருக்கலாம் என்று சொல்லும்!. மேலே ஏற ஏற தன்னம்பிக்கை குறைவது போல இருக்கும்.
பழக்கப்பட்ட ஆட்களுடன் முதல் முறை ஏறுவது மிகவும் நல்லது. ஆனால் கஷ்டப்பட்டு மலையேறி கோவிலைச் சென்றடைந்தவுடன் மனதில் இருக்கும் பெரும் வாழ்க்கைப் பாரங்கள் குறைந்தது போலிருக்கும்.
இப்பேர்ப்பட்ட கடினமான பாதையையே கடந்து வந்துவிட்டோமே வாழ்க்கை என்னடா வாழ்க்கை.. அதிலுள்ள கஷ்டங்களெல்லாம் சும்மா தூசு.. என்ற பக்குவப்பட்ட மனநிலை வந்துவிடும். மீண்டும் மீண்டும் மலையேறத் தோன்றும். மனம் தளராமல் நடக்க வேண்டுமென்றால் ஒரே வழி மூச்சை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளுங்கள். எவ்வளவுதான் மூச்சிறைப்பது போல இருந்தாலும் கட்டுப்பாட்டில் இருந்தால் போதும் அவ்வளவுதான்.
சற்று நிதானமாக, நடக்கும் பாதையில் முழு கவனமும் வைத்து நெஞ்சில் சிவனை நிலைநிறுத்தி ஒவ்வொரு கணத்தையும் அனுபவித்து, சுற்றிலும் காணும் இயற்கையையும் ரசித்து, மூச்சிறைத்தாலும் மெதுவாக மூச்சை வெளியிட்டு, எங்கேயும் உட்காராமல் தொடர்ந்தாற் போல மேலேறிவிட்டால் இரண்டே மணிநேரம்தான்.
ஆனால் கீழே இறங்குவது சற்று எளிது. பழக்கமானவர்கள் ஒன்றரை மணிநேரத்தில் இறங்கிவிடலாம். புதியவர்களுக்கு மூன்று மணி நேரம். வீட்டுக்கு வந்தவுடன்தான் தெரியும், தொடைகளில் தசைப்பிடிப்பும், கணுக்கால் வலியும். மூன்று நாட்களில் சரியாகிவிடும்!
முடிந்தவரை அதிக பாரங்கள் கொண்டுசெல்வதைத் தவிர்த்தல் நல்லது.
சிவநாமத்தைச் சொல்லிக்கொண்டு ஏறுவது மிகுந்த மனோபலத்தைக் கொடுக்கும்.
சுந்தர மகாலிங்கத்துக்கு... அரோகரா!
சந்தன மகாலிங்கத்துக்கு... அரோகரா!
பிலாவடி கருப்பனுக்கு... அரோகரா!
ரெட்டைலிங்கத்துக்கு... அரோகரா!
வனகாளிக்கு... அரோகரா!
பதினெட்டுச் சித்தர்களுக்கு... அரோகரா!
போன்ற கோஷங்கள் பிரசித்தம்.
பரமாத்மாவின் இருப்பிடம்
மலையில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் என இரண்டு வடிவங்களில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார் லிங்க வடிவத்தில் பரமசிவன்.
ஆகாய கங்கை என அழைக்கப்படும் சிறு நீர்வீழ்ச்சி இவ்விரு கோயில்களுக்கு நடுவில் சிறு ஓடையாக ஓடுகிறது. இந்நீர் மிகவும் புனிதமாகக் கருதப்படுகிறது. மழைக்காலங்களில் நீர்வரத்து அதிகமாக இருக்கும்.
சுந்தர மகாலிங்கத்தைத்தான் முதலில் தரிசிக்கின்றனர். அதன் பின்னரே சந்தன மகாலிங்கத்துக்குச் செல்கின்றனர். அங்கு செல்ல சுமார் 15 நிமிடங்கள் நடக்க (ஏற) வேண்டும்.
சுந்தர மகாலிங்கம் கோவிலில் சுந்தரமூர்த்தி மற்றும் சுந்தரமகாலிங்கம் என்று இரண்டு லிங்கங்கள் உள்ளன.
சந்தன மகாலிங்கம் கோவிலில் சந்தனத்தால் அலங்கரிக்கப்பட்ட லிங்கம் உள்ளது. பதினெட்டுச் சித்தர்களுக்கு சிலைகள் உள்ளன. விநாயகர், முருகர், மஹாதேவி மற்றும் நவகிரகங்களுக்கும் சிலைகள் உள்ளன. சட்டநாதச் சித்தர் வாழ்ந்த குகையும் இங்குள்ளது.
இவற்றுக்கும் மேலே சென்றால் பெரிய மகாலிங்கம் என்ற கோயில் இருக்கிறது. பெரும்பாலும் பக்தர்கள் இங்கு வருவதில்லை. சித்தர்கள் மட்டும் இங்கே பூஜை செய்வதாகக் கூறப்படுகிறது. பாம்புக் கோவில் ஒன்றும் அருகில் உள்ளது.
சுந்தரமகாலிங்கம் கோயிலில் இருந்து ஒரு மணி நேரம் இன்னும் மேலே ஏறினால் தவசிக் குகை என்னும் குகைப் பகுதியை அடையலாம். இவ்விடத்திற்குச் சென்ற அனுபவஸ்தர்களுடன் மட்டுமே செல்லவேண்டும். ஏனென்றால் முதலில் இருந்தது போல் ஆறடி அகலப் பாதை கூட இங்கு கிடையாது. மிகவும் குறுகலான, ஏன் பாதையே இல்லாத வழிகளிலும் பயணிக்க வேண்டியதிருக்கும். சிறிது வழி பிசகிவிட்டாலும் சிரமம்தான்.
தவசிக் குகையில் அனைத்து சித்தர்களும் வசித்ததாகவும், இன்றும் தவம் செய்து கொண்டிருப்பதாகவும் பேச்சு நிலவுகிறது!
குகை மிகவும் குறுகலாக ஒருவர் மட்டுமே தவழ்ந்து செல்லக் கூடிய வகையில் இருக்கும். அதிக பட்சம் நான்கைந்து பேர்கள் மட்டும் உள்ளே சென்று அமர முடியும். அதற்கப்பால் வெறுமனே கற்சுவர்தான். ஆனால் இந்த கற்சுவரில் இருக்கும் சிறு சிறுதுளைகள் வழியாக புத்துணர்வூட்டும் குளிர்ந்த காற்று சில்லென வருகிறது. உள்ளே ரிஷிகளும், சித்தர்களும் தவம் செய்யக்கூடும் என்பது நம்பிக்கை.
பொதுவாக மற்றொரு நம்பிக்கை என்னவென்றால் பௌர்ணமி நாட்களில் சித்தர்கள் மலையிலிருந்து இறங்கி சுந்தர மகாலிங்கத்தும் சந்தன மகாலிங்கத்துக்கும் நடுநிசியில் பூஜை செய்ய வருவர் என்பதுதான். இப்படியரு அரிய காட்சியைக் கண்டதாக மிஸ்டிக் செல்வம் என்பவர் ஜோதிடபூமி என்னும் இதழில் எழுதியிருக்கிறார்.
ஜடாமுடி தரித்த, நெடுநெடுவென வளர்ந்து சுமார் ஏழரை அடி உயரத்திற்கு ஆஜானுபாகுவாய், கண்களில் செம்மை ஒளிர அச்சுறுத்தும் தோற்றத்துடன் மூன்று சித்தர்களைக் கண்டதாக அவர் எழுதியிருக்கிறார். ஒருவேளை அது சித்தர்களின் மாயத் தோற்றமாகக் கூட இருக்கலாம்.
சித்தர்கள் யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் எந்த உருவத்தில் வேண்டுமானாலும் தரிசனம் காட்டலாம். இரவு பூஜை நேரங்களில் சில வேளைகளில் சட்டநாதர் இராஜநாகமாகவும், உடும்பாகவும் மாறி தோன்றுவதுண்டாம்.
பவுர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் இரவில் மலையில் தங்கியிருந்து பூஜைகளில் கலந்து கொள்ளும் அனுபவம் மெய்சிலிர்க்க வைக்கும். இக்காட்சி யார் கண்ணுக்குக் கிடைக்கவேண்டுமென்று இருக்கிறதோ அவர்களுக்கு மட்டுமே கிட்டும். பெரும் பாக்கியவான்கள் மட்டுமே இப்பேறு பெற்றவர்கள் என்கிறார்கள்.
(தொடரும்).....
No comments:
Post a Comment