Monday, July 5, 2010

சிறு பொன்மணி அசையும்.....


திரைப்படம் : கல்லுக்குள் ஈரம்
பாடியவர்கள் :
எஸ் ஜானகி இளையராஜா
இயற்றியவர் :
கங்கை அமரன்
இசை : இளையராஜா
வெளியான ஆண்டு :
1980

சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன் இமைகளில் தாள லயம்
சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன் இமைகளில் தாள லயம்
நிதமும் தொடரும் கனவும் நினைவும் இது மாறாது
ராகம் தாளம் பாவம் போல நானும் நீயும் சேர வேண்டும்
சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன்னிமைகளில் தாள லயம்

விழியில் சுகம் பொழியும் இதழ் மொழியில் சுவை வழியும்
எழுதும் வரை எழுதும் இனி புலரும் பொழுதும்
விழியில் சுகம் பொழியும் இதழ் மொழியில் சுவை வழியும்
எழுதும் வரை எழுதும் இனி புலரும் பொழுதும்
தெளியாதது எண்ணம் கலையாதது வண்ணம்
தெளியாதது எண்ணம் கலையாதது வண்ணம்
அழியாதது அடங்காதது அணை மீறிடும் உள்ளம்
வழி தேடுது விழி வாடுது கிளி பாடுது உன் நினைவினில்

சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன் இமைகளில் தாள லயம்

நதியும் முழு மதியும் இரு இதயம் தனில் பதியும்
ரதியும் அதின் பதியும் பெரும் சுகமே உதயம்
நதியும் முழு மதியும் இரு இதயம் தனில் பதியும்
ரதியும் அதின் பதியும் பெரும் சுகமே உதயம்
விதை ஊன்றிய நெஞ்சம் ? விளைவானது மஞ்சம்
விதை ஊன்றிய நெஞ்சம் ? விளைவானது மஞ்சம்
கரை பேசுது கவி பாடுது கலந்தால் சுகம் மிஞ்சும்
உயிர் உன் வசம் உடல் என் வசம் தயிரானது உன் நினைவுகள்

சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன் இமைகளில் தாள லயம்
நிதமும் தொடரும் கனவும் நினைவும் இது மாறாது
ராகம் தாளம் பாவம் போல நானும் நீயும் சேர வேண்டும்
சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன் இமைகளில் தாள லயம்

No comments: