Monday, July 19, 2010
நீல வான ஓடையில்....
படம் : வாழ்வே மாயம்
இசை : கங்கை அமரன்
பாடியவர் : எஸ்பி பாலசுப்ரமணியம்
இயற்றியவர் : வாலி
வெளியான ஆண்டு : 1982
நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா
நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா
நான் வரைந்த பாடல்கள் நீலம் பூத்த கண்ணிலா
வராமல் வந்த என் தேவி
நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா
காளிதாசன் பாடினான் மேகதூதமே
தேவிதாசன் பாடுவான் காதல் கீதமே
இதழ்களில் தேந்துளி ஏந்திடும் பைங்கிளி
இதழ்களில் தேந்துளி ஏந்திடும் பைங்கிளி
நீ இல்லையே நான் இல்லையே ஊடல் ஏன் கூடும் நேரம்
நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா
நான் வரைந்த பாடல்கள் நீலம் பூத்த கண்ணிலா
வராமல் வந்த என் தேவி
நானும் நீயும் நாளைதான் மாலை சூடலாம்
வானம் பூமி யாவுமே வாழ்த்துப் பாடலாம்
விழியிலே கோபமோ விரகமோ தாபமோ
விழியிலே கோபமோ விரகமோ தாபமோ
ஸ்ரீதேவியே என் ஆவியே எங்கே நீ அங்கே நான்தான்
நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா
நான் வரைந்த பாடல்கள் நீலம் பூத்த கண்ணிலா
வராமல் வந்த என் தேவி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment