திரைப்படம் : சசின்
இசை : தேவி ஸ்ரீ பிரசாத்
இயற்றியவர்: ந.முத்துக்குமார்
பாடியவர் : தேவி ஸ்ரீ பிரசாத்
வெளியான ஆண்டு : 2005
கண்மூடி திறக்கும் போது கடவுள்
எதிரிலே வந்தது போல
அடடா என் கண் முன்னாடி
அவளே வந்து நின்றாளே
குடை இல்ல நேரம் பாத்து
கொட்டி போகும் மழையை போல
அழகாக என்னை நனைத்து
இது தான் காதல் என்றாலே
தெரு முனையை தாண்டும் வரையில்
வெறும் நாள் தான் என்று இருந்தேன்
தேவதையை பார்த்ததும் இன்று திருநாள் என்கின்றேன்
அழகான விபத்தில் இன்று ஹயோ நான் மடிகொண்டேன்
தபிக்க வழிகள் இருந்தும் வேண்டாம் என்கின்றேன்
ஓஹோ ஓஹோ ஓஹோ
ஓஹோ ஓஹோ ஓஹோ
உன் பெயரும் தெரியாதே
உன் ஊரும் தெரியாதே
அழகான பறவைக்கு பேர் வேண்டுமா
நீ என்னை பார்க்காமல்
நான் உன்னை பார்கின்றேன்
நதியில் விழும் பிம்பத்தை நிலா அறியுமா
உயிருக்குள் இன்னோர் உயிரை
சுமகின்றேன் காதல் இதுவா
இதயதில்வலையின் எடையை உணர்கின்றேன்
காதல் இதுவா
கண்மூடி திறக்கும் போது
கடவுள் எதிரே வந்தது போல
அடடா என் கண் முன்னாடி
அவளே வந்து நின்றாளே
வீதி உலா நீ வந்தால்
தெருவிளக்கும் கண் அடிக்கும்
வீடு செல்ல சூரியனும் அடம்புடிகுமே
நதி ஓடு நீ குழிதால் மீனுக்கும் காய்ச்சல் வரும்
உன்னை தொட்டு பார்க்க தான் மழை குதிக்குமே
பூகம்பம் வந்தால் கூட ஓஹோ
பதறாத நெஞ்சம் எனது ஓஹோ
பூ ஒன்று மோதியதாலே ஓஹோ
பட் என்று சரிந்தது இன்று ஒஹ்
கண்மூடி திறக்கும் போது
கடவுள் எதிரிலே வந்தது போல
அடடா என் கண் முனாடி
அவளே வந்து நின்றாளே
குடை இல்லா நேரம் பாத்து
கொட்டி போகும் மழையை போல
அழகாக என்னை நனைத்து
இது தான் காதல் என்றாலே
No comments:
Post a Comment