Friday, August 26, 2011

கடவுள் பாதி, மிருகம் பாதி...

படம் : ஆளவந்தான்
பாடல் : கடவுள் பாதி
இசை : ஷங்கர்-எசன்-லாய்
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : கமலஹாசன்

கடவுள் பாதி, மிருகம் பாதி,
கலந்து செய்த, கலவை நான்,

வெளியே மிருகம்,
உள்ளே கடவுள்,
விளங்க முடியா,
கவிதை நான்,

மிருகம் கொன்று,
மிருகம் கொன்று,
கடவுள் வளர்க்க,
பார்க்கின்றேன்,

ஆனால்…
கடவுள் கொன்று,
உணவாய் தின்று,
மிருகம் மட்டும்,
வளர்கிறதே,

நந்தகுமரா,
நந்தகுமரா,
நாளை மிருகம் கொல்வாயா?
மிருகம் கொன்ற,
எச்சம் கொண்டு,
மீண்டும் கடவுள் செய்வாயா?

குரங்கில் இருந்து,
மனிதன் என்றால்,
மனிதன் இரையாய் ஜனிப்பானா?
மிருக ஜாதியில்,
பிறந்த மனிதா,
தெய்வ ஜோதியில் கலப்பாயா?
ஃஅ!

நந்தகுமரா…

கடவுள் பாதி,
மிருகம் பாதி,
கலந்து செய்த,
கலவை நான்,

வெளியே மிருகம்,
உள்ளே கடவுள்,
விளங்க முடியா,
கவிதை நான்,

மிருகம் கொன்று,
மிருகம் கொன்று,
கடவுள் வளர்க்க,
பார்க்கின்றேன்,
கடவுள் கொன்று,
உணவாய் தின்று,
மிருகம் மட்டும்,
வளர்கிறதே,

நந்தா!

கடவுள் பாதி,
மிருகம் பாதி,
கலந்து செய்த,
கலவை நான்,

காற்றில் ஏறி,
மலையில் ஆடி,
கவிதை பாடும்,
பறவை நான்!

கடவுள் பாதி,
மிருகம் பாதி,
கலந்து செய்த,
கலவை நான்,

காற்றில் ஏறி,
மலையில் ஆடி,
கவிதை பாடும்,
பறவை நான்!

ஒவ்வொரு துளியும்,
ஒவ்வொரு துளியும்,
உயிரில் வேர்கள்,
குளிர்கிறதே,

எல்லாம் துளியில்,
குளுரும்போது,
இரு துளி மட்டும்,
சுடுகிறதே,

நந்தகுமாரா,
நந்தகுமாரா,
மழை நீர் சுடாது,
தெரியாதா?

கன்னம் வழிகிற,
கண்ணீர் துளிதான்,
வென்னீர் துளி என,
அறிவாயா?

சுட்ட மழையும்,
சுடாத மழையும்,
ஒன்றாய் கண்டவன்,
நீதானே,

கண்ணீர் மழையில்,
தண்ணீர் மழையில்,
குளிக்க வைத்தவன்,
நீதானே…
ஏய்!

No comments: