Friday, August 26, 2011
புதிய வானம்… புதிய பூமி…
புதிய வானம்… புதிய பூமி…
புதிய வானம் புதிய பூமி
எங்கும் பனி மழை பொழிகிறது
நான் வருகையிலே என்னை வரவேற்க
வண்ண பூமழை பொழிகிறது…ஒஹோ ஹோ
உதய சூரியனின் பார்வையிலே
உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே
இமயத்தில் இருக்க்கும் குளிர் காற்று
இன்று இதயத்தை தொடுகிறது
அன்று இமயத்த்ல் சேரன் கொடி பறந்த
அந்த காலம் தெரிகின்றது …
அந்த காலம் தெரிகின்றது
ஓ..ஓ..ஓ.. லால்ல லா…லா…லா
பிள்ளைக்கூட்டங்களை பார்க்கையிலே
பிஞ்சு மொழிகளை கேட்கையிலே
நல்லவர் எல்லம் நலம் பெறுவார்
என்ற நம்பிக்கை பிறக்கின்றது
இவர் வரவேண்டும் புகழ் பெறவேண்டும்
என்று ஆசை துளிர்க்கிறது
என்று ஆசை துளிர்க்கிறது
ஓ..ஓ..ஓ.. லால்ல லா…லா…லா
எந்த நாடு என்ற கேள்வியில்லை
எந்த ஜாதி என்ற பேதமில்லை
மனிதர்கள் அன்பின் வழி தேடி
இங்கு இயற்கையை வணங்குகிறார்
மலை உயர்ந்தது போல் மனம் உயரகண்டு
இவர் வாழ்வில் விளக்குகிறார்
இவர் வாழ்வில் விளக்குகிறார்
ஓ..ஓ..ஓ.. லால்ல லா…லா…லா
ஓ..ஓ..ஓ.. லால்ல லா…லா…லா
புதிய வானம் புதிய பூமி
எங்கும் பனி மழை பொழிகிறது
நான் வருகையிலே என்னை வரவேற்க
வண்ண பூமழை பொழிகிறது…ஒஹோ ஹோ ஹோ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment