Monday, December 13, 2010

அதிகாரம் - கடவுள் வாழ்த்து

குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - பாயிரம் அதிகாரம் - கடவுள் வாழ்த்து

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

( குறள் எண் : 5 )

மு.வ : கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை

சாலமன் பாப்பையா : கடவுளின் மெய்மைப் புகழையே விரும்புபவரிடம் அறியாமை இருளால் வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டும் சேருவதில்லை

No comments: