Monday, October 25, 2010

யார் அந்த பெண் தான்....


படம் : பாஸ் (எ) பாஸ்கரன்
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடலாசிரியர்:
நா.முத்துகுமார்
பாடியவர்கள் : ஹரிசரண்
வெளியான ஆண்டு : 2010



யார் அந்த பெண் தான் என்று கேட்டேன் முன்னாலே
இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே
என்னை பார்க்கிறாள் ஏதோ கேட்கிறாள்
எங்கும் இருக்கிறாளோ
கண்ணால் சிரிக்கிறாள் முனனால் நடக்கிறாள்
நெஞ்சை கிழிக்கிராளோ

கூட்டத்தில் இருந்தும் தனியாக தெரிந்தாள்
தோட்டத்தில் மலர்ந்த பூவாக திரிந்தால்
என்னை ஏதோ செய்தாள்


யார் அந்த பெண் தான் என்று கேட்டேன் முன்னாலே
இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே

என் வீட்டு முற்றத்தில் இவள் போடும் கோலங்கள்
எப்போதும் வேண்டும் என்று கேட்டேன்

அணில் ஆடும் கூடத்தில் இவள் பாடும் ராகத்தில்
அதிகாலை சூரியனை பார்த்தேன்

கண்ணாடி வளையலை போலே
கையேடு நானும்பிறக்கவே துடிப்பேன்
கல் தீண்டும் கொலுசில் என்னோட மனச
சேர்த்து கொர்கவே தவிப்பேன்
காதோடு தவழும் கம்மல் போல் கிடப்பேன்
கன்னத்தை உரசி என் ஜென்மம் முடிப்பேன்
என்னை ஏதோ செய்தால்

யார் இந்த பெண் தான் என்று கேட்டேன் முன்னாலே
இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே


நான் கொஞ்சம் பார்த்தாள் எங்கேயோ பார்ப்பாள்
பார்க்காத நேரம் என்னை பார்ப்பாள்

என்னை பார்த்து சிரிப்பாள் நான் பார்த்தாள் மறைப்பாள்

மெய்யாக பொய்யாக தான் நடிப்பாள்

பெண் நெஞ்சம் புதிர் அதை போல எப்போதும்
யாரும் யாரும் அறிந்ததே இல்லை
ஆண் நெஞ்சின் துடிப்பும் அன்றாட தவிப்பும்
பெண்கள் மதிப்பதே இல்லை
மனம் நொந்த பிறகே முதல் வார்த்தை சொல்வாள்
மழை நின்ற பிறகே குடை தந்து செல்வாள்
என்னை ஏதோ செய்தாள்


யார் இந்த பெண் தான் என்று கேட்டேன் முன்னாலே
இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே

No comments: