Friday, October 22, 2010

தெய்வம் இல்லையெனும்போது...


படம் : நான் மகான் அல்ல
இசை : யுவன் ஷங்கர் ராஜா

பாடலாசிரியர்:
யுகபாரதி
பாடியவர்கள் :
மது பாலகிருஷ்ணன்
வெளியான ஆண்டு : 2010


தெய்வம் இல்லையெனும்போது கோவில் எதற்கு?
இல்லை நீயும் எனும்போது வாழ்வே எதற்கு?
இதுவரையில் எதைக்கேட்டாலும்
தருவாயே மனம் கோணாமல்
துயரம் நான் இதை கேட்காமல்
கொடுத்தாயே எதற்காக

தெய்வம் இல்லையெனும்போது கோவில் எதற்கு?
இல்லை நீயும் எனும்போது வாழ்வே எதற்கு?
—-
ஒரு நாளினை பிரிந்தாலும் வாடிய முகமே
உனை இனி எங்கு பார்ப்பது ஓ….
எனதாசைகள் நிறைவேற ஏங்கிய மனமே
உனை எதை தந்து மெய்ப்பிப்பது

அழுதிடக்கூடாதென்று அறிவுரை கூறுவாய்
அழுகையை நீயே தந்து போனாயே
உறங்கிய நேரம் இன்றி உழைத்திடும் கண்களே
நிரந்தர தூக்கம் என்ன ஆண் தாயே

தெய்வம் இல்லையெனும்போது கோவில் எதற்கு?

உயிர் வாழ்வதே எனக்காக என்று நீ
தினம் பேசுவாய் அது என்ன ஆனது… ஓ….
தலை மேல் சுமை இருந்தாலும்
புன்னகை தருமே இதழ் அது எங்குப்போனது

நடந்திட பாதம் தந்து வழிகளை காட்டினாய்
நடுவினிலே முந்தி சென்றால் என் செய்வேன்
எது எது இல்லையென்று எனக்கென வாங்குவாய்
இறுதியில் நீயே இல்லை என் சொல்வேன்

தெய்வம் இல்லையெனும்போது கோவில் எதற்கு?

No comments: