Monday, February 15, 2010

அசல்




பாவம் நம்ம அஜித்துக்கு விடிவே கிடையாது போலிருக்கிறது. இன்னமும் பில்லா
ஃபீவரிலேயே அலைகிறார். கிட்டத்தட்ட வரலாறு கெட்டப்பில் அப்பா கேரக்டர். பில்லா டைப்பில் மகன் கேரக்டர்.

சரண், அஜீத், யூகிசேது என்று மூன்று பேருடைய பெயர் டைட்டிலில்கதைஎன்றுவருகிறது. நம்ம
தலஇணை இயக்கம் வேறுசெய்திருக்கிறாராம். கதை, திரைக்கதை... பாகப்பிரிவினை காலத்திலேயேநங்கூரம் இட்டிருக்கிறதே?

படத்தில் அசலான சமாச்சாரம் அஜீத் மட்டுமே. இவ்வளவு மட்டமான படத்தில்கூட மிடுக்காக கவர்கிறார். சண்டைக்காட்சிகளில் சுறுசுறுப்பு. இருந்தாலும் யார்அடித்தாலும் தல அசராது அடித்துக் கொண்டேயிருக்கும் என்பது தெரிந்துவிடுவதால் விறுவிறுப்பு சுத்தமாக இல்லை. ஆனால் அங்கிள்தோற்றத்தில் இருக்கும் அஜித் சூப்பர், இளைய தளபதிக்கு ஆண்டுக்கு ஆண்டு வயதுகுறைந்து கொண்டே போகிறது. தலைக்கோ வருடா வருடம் நான்கைந்து வயதுகூடுகிறது.

அஜித் பஞ்ச் டயலாக் எதையும் பேசவில்லை என்பது ஆறுதல். மொட்டையடித்தசுரேஷ் ஸ்மார்ட்டாக இருக்கிறார். பிரபுவின் தமிழ் சினிமா உலக வாழ்க்கைஆராயப்பட வேண்டிய ஒன்று. சின்னத்தம்பி மாதிரி எவர்க்ரீன் ஹிட் படத்தில்நடித்தவர், இப்படியெல்லாம் கூட பரிதாபமான கேரக்டர்களில் நடிக்கிறாரே என்றுஆச்சரியம் ஏற்படுகிறது.
துஷ்யந்தா பாட்டு சூப்பர்.

பழைய எம்.ஜி.ஆர். பங்காளிக் கதை, கிளைமாக்ஸ் சங்கிலியை அறுக்கும்மனோகரா'' உதை, ""பில்லா''நடை, ""வட்டாரம்'' ஆயுத வியாபாரம் எனப் படம்முழுக்க நகல். அசலா ஒரு படம் பண்ணுங்க பாஸ்!

விகடன் மார்க் : 39/
௧00

அசல் - 60% முலாம்- 40%,
குமுதம் ரேட்டிங் : ஓகே


நன் படித்த ஒரு உண்மை ரசிகன் விமர்சனம்.

ஏகனின் ஏமாற்றத்துக்குப் பின் வரும் "தல"யின் 49 ஆவது படம். சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு. அல்டிமேட் ஸ்டார் என்ற பட்டத்தை டைட்டிலில் போடவில்லை. அசலில் முதல் முறையாக அஜித் திரைக்குப் பின்னே படத்துக்காக பங்களிப்பு செய்து இருக்கிறார். கதை, திரைக்கதை வசனத்தில் உதவி என்றும் இணை இயக்கம் என்றும் போடுகிறார்கள்.

நினைத்ததை முடிக்கும் ஒரு சூப்பர் ஹீரோவின் கதைதான். நியாயமான ஆயுதவிற்பனையாளர் அப்பா அஜித். அவருடைய மூத்த தாரத்து மகன்கள் சம்பத்மற்றும் ராஜீவ் கிருஷ்ணா. அவர்களின் மாமா பிரதீப் ராவத். இளைய தாரத்தின்மகனான இன்னொரு அஜித் மீதுதான் அப்பாவுக்கு பாசம். அப்பா இறந்த பிறகுதவறான வழியில் பணம் சேர்க்க நினைக்கும் சகோதரர்களை அஜித் காப்பாற்றமுயல, அவர்களோ அஜித்தையே கொல்ல நினைக்கிறார்கள். ஏன் அவர்கள்அப்படி செய்தார்கள், கடைசியில் என்ன ஆனது என்பதுதான் "அசல்".

திரைக்கு முன் ****************

அஜித் - தனக்கு நன்றாக வருவதை மட்டும் செய்வதை தலயிடம் ரசிக்கலாம்.. இரட்டை வேடம்.. இருந்தாலும் அப்பாவுக்கு வேற யாரையாவதுபோட்டிருக்கலாம்.. இன்னும் பில்லாவில் இருந்து வெளியே வரவில்லை... நடிக்கிறார்.. பிறகு நன்றாக நடக்கிறார்.. சுருட்டு எதுக்கு என்றுதான்தெரியவில்லை.. பஞ்ச் டயலாக் எதுவும் பேசாதது ஆறுதல்.. கெல்லி டோர்ஜி - ஸ்மார்ட்டான வில்லன்.. பாதியிலேயே அவுட்..

சம்பத் - கெரகம்.. சுத்த வேஸ்ட்..

ராஜீவ் கிருஷ்ணா - சைக்கோ மாதிரி .. இது தேவையா?

பிரதீப் ராவத் - இவர் படத்துல எதுக்கு இருக்காருன்னு அவருக்கே தெரியாதுபோல..

சுரேஷ் - வில்லன்களில் ஒரே ஆறுதல்.. கொஞ்சம் சீரியஸ்.... நிறையவேகாமெடி.. அதிலும் கடைசி சீனில் திருந்துவது மிகப்பெரிய காமெடி..

பிரபு - படத்துல இருக்காரா?

யூகி சேது - லூசு டான்... படத்தோட காமெடி பீசு..

பாவனா - கொள்ளை அழகு.. பாலிஷ் போட்ட மாதிரி சும்மா சூப்பரா இருக்கார்.. சீராக இல்லாத பல்வரிசையோடு சிரிக்கும் ஓரச் சிரிப்பில் பாண்டியன் காலி...

சமீரா - கொஞ்சம் வயசான குதிரை.. ரெண்டு பாட்டுல டான்ஸ் ஆடுறதுக்கு மட்டுமே..

திரைக்குப் பின்
*****************

பிரசாந்த் டி மிசேல் - ஒளிப்பதிவாளர் - ஜமாய்த்து இருக்கிறார்.. டைட்டில்போடும்போது வான்வழியே பாரிஸ் நகரை சுட்டிருக்கும் அழகு மனதைகொள்ளை கொள்ளுகிறது.. வெளிநாடுகளை படமாக்கி இருக்கும் விதம் அருமை.. படத்தின் ரிச் லுக்குக்கு மிக முக்கிய காரணம் இவர்தான்.. ரொம்பவே நன்றாகசெய்திருக்கிறார்..

ஆண்டனி - எடிட்டிங் - மொத்தப் படமும் ரெண்டே மணி நேரம்தான்.. முதல் பாதிகொஞ்சம் இழுவை.. இரண்டாம் பாதி ஓகே..

பரத்வாஜ் - இசை - ஐம்பதாவது படமாம்.. கிடைத்த வாய்ப்பை தவறவிட்டுருக்கிறார்.. நிறைய காப்பி.. டோட்டடாயிங் பாட்டைத் தவிர எதுவும்தேறவில்லை.. பின்னணியில் பான்ட் இசையை போட்டுக் கொலையாய்க் கொல்லுகிறார்..

கதை - யூகி சேது - வில்லனில் செதுக்கியவர் இதில் சறுக்கி இருக்கிறார்.. நிறையவே பார்த்து சலித்துப் போன கதை.. வெளிநாட்டில் நடக்கும லோக்கல்வாரிசுப் பிரச்சினை - புதிதாக ஒன்றுமே இல்லை..

சரண் - திரைக்கதை, இயக்கம் - ஏன் சரண்? டான் கதை.. அதுக்கு ஸ்டைலானமுலாம் போட்டால் போதுமா? திரைக்கதையில் வேகம் வேண்டாமா? அஜித்என்ற மாஸ் நடிகர் இருந்தால் என்ன வேண்டுமானாலும் எடுக்கலாம் என்றுஎண்ணியதன் விளைவா? சின்ன சின்ன ரசனையான விஷயங்கள் வழக்கமாகஉங்கள் படங்களில் இருக்கும்.. இதில் அப்படி எதுவுமே இல்லையே? நிறையவேஏமாற்றம்..

படத்தில் ரசித்த விஷயங்கள்
********************************


--> அஜித்தின் வெகு சாதரணமான இன்ட்ரோ.. ஸ்டைல்

--> பாவனா தன்னுடைய அப்பாவின் புத்தகத்தை அடிக்கடி திறந்து பார்க்கும் அழகு

--> அஜீத்துக்காக பாவனாவும் சமீராவும் உரசிக் கொள்ளும் காட்சி..

--> சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டு இருக்கும் விதம்..

--> உடை அலங்காரம்..

எரிச்சல்கள்
*************

--> சம்பத் மற்றும் பிரதீப் ராவத்..

--> அடிக்கடி எல்லோரும் தல தல என்றே புலம்பிக் கொண்டிருப்பது..

--> திரைக்கதை.. மெது மெதுவாக நகரும் காட்சிகள்..

நான் அஜித் ரசிகன்தான். அதற்காக என்ன மாதிரி படம் எடுத்தாலும் சூப்பர் என்றுசொல்லக் கூடியவன் கிடையாது. நல்ல படமாகத் தருவார் என்று நம்பும்என்னைப் போன்ற அஜித்தின் தீவிர ரசிகர்களுக்கு படம் கொஞ்சம் ஏமாற்றம்தான். ரொம்ப எதிர்பார்க்காமல் போனால் ஒரு சராசரி படம் பார்த்த திருப்தி கிடைக்கும்.

ரசிகன் - கார்த்திகைப் பாண்டியன்
இணையத்தளம் - ponniyinselvan-mkp.blogspot.com

No comments: