Tuesday, November 9, 2010

உள்ளத்தில் நல்ல உள்ளம்

படம்: கர்ணன்
இசை:
விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடியவர்:
சிர்காழி கோவிந்தராஜன்
பாடலாசிரியர்: கண்ணதாசன்
வெளியான ஆண்டு : 1964

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா .... கர்ணா
வருவதை எதிகொள்ளடா

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா .... கர்ணா
வருவதை எதிகொள்ளடா


தாய்க்கு நீ மகனில்லை தம்பிக்கு அண்ணனில்லை

ஊர்ப்பழி ஏற்றாயடா நானும் உன் பழி கொண்டேனடா
நானும் உன் பழி கொண்டேனடா

மன்னவர் பணியேற்கும் கண்ணனும் பணி செய்த
உன்னடி பணிவேனடா -கர்ணா
மன்னித்து அருள்வாயடா

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது

வல்லவன் வகுத்ததடா .... கர்ணா
வருவதை எதிகொள்ளடா

செஞ்சோற்று கடன் தீர்த்த சேராத இடம் சேர்ந்து

வஞ்சத்தில் வீழ்ந்தாயடா - கர்ணா
வஞ்சகன் கண்ணனடா

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது

வல்லவன் வகுத்ததடா .... கர்ணா
வருவதை எதிகொள்ளடா

No comments: