Friday, August 26, 2011

கடவுள் பாதி, மிருகம் பாதி...

படம் : ஆளவந்தான்
பாடல் : கடவுள் பாதி
இசை : ஷங்கர்-எசன்-லாய்
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : கமலஹாசன்

கடவுள் பாதி, மிருகம் பாதி,
கலந்து செய்த, கலவை நான்,

வெளியே மிருகம்,
உள்ளே கடவுள்,
விளங்க முடியா,
கவிதை நான்,

மிருகம் கொன்று,
மிருகம் கொன்று,
கடவுள் வளர்க்க,
பார்க்கின்றேன்,

ஆனால்…
கடவுள் கொன்று,
உணவாய் தின்று,
மிருகம் மட்டும்,
வளர்கிறதே,

நந்தகுமரா,
நந்தகுமரா,
நாளை மிருகம் கொல்வாயா?
மிருகம் கொன்ற,
எச்சம் கொண்டு,
மீண்டும் கடவுள் செய்வாயா?

குரங்கில் இருந்து,
மனிதன் என்றால்,
மனிதன் இரையாய் ஜனிப்பானா?
மிருக ஜாதியில்,
பிறந்த மனிதா,
தெய்வ ஜோதியில் கலப்பாயா?
ஃஅ!

நந்தகுமரா…

கடவுள் பாதி,
மிருகம் பாதி,
கலந்து செய்த,
கலவை நான்,

வெளியே மிருகம்,
உள்ளே கடவுள்,
விளங்க முடியா,
கவிதை நான்,

மிருகம் கொன்று,
மிருகம் கொன்று,
கடவுள் வளர்க்க,
பார்க்கின்றேன்,
கடவுள் கொன்று,
உணவாய் தின்று,
மிருகம் மட்டும்,
வளர்கிறதே,

நந்தா!

கடவுள் பாதி,
மிருகம் பாதி,
கலந்து செய்த,
கலவை நான்,

காற்றில் ஏறி,
மலையில் ஆடி,
கவிதை பாடும்,
பறவை நான்!

கடவுள் பாதி,
மிருகம் பாதி,
கலந்து செய்த,
கலவை நான்,

காற்றில் ஏறி,
மலையில் ஆடி,
கவிதை பாடும்,
பறவை நான்!

ஒவ்வொரு துளியும்,
ஒவ்வொரு துளியும்,
உயிரில் வேர்கள்,
குளிர்கிறதே,

எல்லாம் துளியில்,
குளுரும்போது,
இரு துளி மட்டும்,
சுடுகிறதே,

நந்தகுமாரா,
நந்தகுமாரா,
மழை நீர் சுடாது,
தெரியாதா?

கன்னம் வழிகிற,
கண்ணீர் துளிதான்,
வென்னீர் துளி என,
அறிவாயா?

சுட்ட மழையும்,
சுடாத மழையும்,
ஒன்றாய் கண்டவன்,
நீதானே,

கண்ணீர் மழையில்,
தண்ணீர் மழையில்,
குளிக்க வைத்தவன்,
நீதானே…
ஏய்!

புதிய வானம்… புதிய பூமி…


புதிய வானம்… புதிய பூமி…
புதிய வானம் புதிய பூமி
எங்கும் பனி மழை பொழிகிறது
நான் வருகையிலே என்னை வரவேற்க
வண்ண பூமழை பொழிகிறது…ஒஹோ ஹோ

உதய சூரியனின் பார்வையிலே
உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே
இமயத்தில் இருக்க்கும் குளிர் காற்று
இன்று இதயத்தை தொடுகிறது
அன்று இமயத்த்ல் சேரன் கொடி பறந்த
அந்த காலம் தெரிகின்றது …
அந்த காலம் தெரிகின்றது
ஓ..ஓ..ஓ.. லால்ல லா…லா…லா

பிள்ளைக்கூட்டங்களை பார்க்கையிலே
பிஞ்சு மொழிகளை கேட்கையிலே
நல்லவர் எல்லம் நலம் பெறுவார்
என்ற நம்பிக்கை பிறக்கின்றது
இவர் வரவேண்டும் புகழ் பெறவேண்டும்
என்று ஆசை துளிர்க்கிறது
என்று ஆசை துளிர்க்கிறது
ஓ..ஓ..ஓ.. லால்ல லா…லா…லா

எந்த நாடு என்ற கேள்வியில்லை
எந்த ஜாதி என்ற பேதமில்லை
மனிதர்கள் அன்பின் வழி தேடி
இங்கு இயற்கையை வணங்குகிறார்
மலை உயர்ந்தது போல் மனம் உயரகண்டு
இவர் வாழ்வில் விளக்குகிறார்
இவர் வாழ்வில் விளக்குகிறார்
ஓ..ஓ..ஓ.. லால்ல லா…லா…லா
ஓ..ஓ..ஓ.. லால்ல லா…லா…லா

புதிய வானம் புதிய பூமி
எங்கும் பனி மழை பொழிகிறது
நான் வருகையிலே என்னை வரவேற்க
வண்ண பூமழை பொழிகிறது…ஒஹோ ஹோ ஹோ

பச்சை மரம் ஒன்று இச்சைக் கிளி ரெண்டு..


பாடல் : பச்சை மரம் ஒன்று
திரைப் படம் : ராமு
பாடியவர்கள் : பி . சுசிலா - பி.பி. ஸ்ரீநிவாஸ்
இசை : எம் .எஸ் .வி
வரிகள் : கண்ணதாசன்
நடிப்பு : ஜெமினி , கே .ஆர் .விஜயா

பச்சை மரம் ஒன்று இ
ச்சைக் கிளி ரெண்டு
பாட்டு சொல்லித் தூங்க செய்வேன் ஆரிராரோ

பச்சை மரம் ஒன்று
ச்சைக் கிளி ரெண்டு
பாட்டு சொல்லித் தூங்க செய்வேன் ஆரிராரோ

அள்ளித் தந்த அன்னை
சொல்லித் தந்த தந்தை
உள்ளம் கொண்ட பிள்ளை
நியல்லவோ
அள்ளித் தந்த அன்னை
சொல்லித் தந்த தந்தை
உள்ளம் கொண்ட பிள்ளை
நியல்லவோ
கட்டித் தங்கம் என்று
கன்னம் தொட்டுக் கொண்டு
ஆசை முத்தம் தந்தேன் ஆரிரரோ

ஸ்ரீநிவாஸ் : ஆசைக் கிளி அங்கே
மைக் கிளி இங்கே
தந்தைக் கிளி நெஞ்சில் அமைதி எங்கே
சைக் கிளி அங்கே
மைக் கிளி இங்கே
தந்தைக் கிளி நெஞ்சில் அமைதி எங்கே
அன்னை என்ற தெய்வம் தந்து சென்ற செல்வம்
உன்னை எண்ணி வாழும் கலங்காதே
உன்னை எண்ணி வாழும் கலங்காதே

பச்சை மரம் ஒன்று
ச்சைக் கிளி ரெண்டு
பாட்டு சொல்லித் தூங்க செய்வேன் ஆரிராரோ
பாட்டு சொல்லித் தூங்க செய்வேன் ஆரிராரோ

தூங்காத கண்ணென்று ஒன்று

படம் : குங்குமம்
பாடகர்கள் : சௌந்தராஜன்
வரிகள் : கண்ணதாசன்
இசை :
Kvm
நடிப்பு : சிவாஜி , சாரதா

தூங்காத கண்ணென்று ஒன்று
துடிக்கின்ற சுகமென்று ஒன்று

தாங்காத மனமென்று ஒன்று
தந்தாயே நீ என்னைக் கண்டு

தூங்காத கண்ணென்று ஒன்று
துடிக்கின்ற சுகமென்று ஒன்று

தாங்காத மனமென்று ஒன்று
தந்தாயே நீ என்னைக் கண்டு


முற்றாத இரவொன்றில் நான் வாட
முடியாத கதை ஒன்று நீ பேச
உற்றாரும் காணாமல் உயிரொன்று சேர்ந்தாட
உண்டாகும் சுவையென்று ஒன்று

தூங்காத கண்ணென்று ஒன்று
துடிக்கின்ற சுகமென்று ஒன்று

தாங்காத மனமென்று ஒன்று
தந்தாயே நீ என்னைக் கண்டு


யார் என்ன சொன்னாலும் செல்லாது
அணை போட்டுத் தடுத்தாலும் நில்லாது
தீராத விளையாட்டுத் திரை போட்டு விளையாடி
நம் காணும் உலகென்று ஒன்று

தூங்காத கண்ணென்று ஒன்று
துடிக்கின்ற சுகமென்று ஒன்று

தாங்காத மனமென்று ஒன்று
தந்தாயே நீ என்னைக் கண்டு


வெகுதூரம் நீ சென்று நின்றாலும் - உன்
விழி மட்டும் தனியாக வந்தாலும்
வருகின்ற விழியொன்று தருகின்ற பரிசென்று
பெறுகின்ற சுகமென்று ஒன்று

தூங்காத கண்ணென்று ஒன்று
துடிக்கின்ற சுகமென்று ஒன்று

தாங்காத மனமென்று ஒன்று
தந்தாயே நீ என்னைக் கண்டு

ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்

பாடல் : ஆலயமணியின் ஓசையை
திரைப் படம் : பாலும் பழமும்
பாடியவர் : பி .சுசிலா
இசை : எம் .எஸ் .வி - தி .கே .ஆர்
வரிகள் : கண்ணதாசன்

ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்

உன் இறைவன் அவனே அவனே எனப் பாடும் மொழி கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்

இலகும் மாலைப் பொழுதினிலே என் இறைவன் வந்தான் தேரினிலே
ஏழையின் இல்லம் இதுவென்றான் இரு விழியாலே மாலையிட்டான் ...
இரு விழியாலே மாலையிட்டான்
இறைவன் அவனே அவனே எனப் பாடும் மொழி கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்

காதல் கோயில் நடுவினிலே கருணைத் தேவன் மடியினிலே
யாரும் அறியாப் பொழுதினிலே அடைக்கலம் ஆனேன் முடிவினிலே ...
அடைக்கலம் ஆனேன் முடிவினிலே
இறைவன் அவனே அவனே எனப் பாடும் மொழி கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்

இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்..


இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்
இதுதான் எங்கள் உலகம் எங்கள் உலகம்
இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்
இதுதான் எங்கள் உலகம் எங்கள் உலகம்

பிறப்புக்கும் முன்னால் இருந்தது என்ன உனக்கும் தெரியாது
இறந்த பின்னாலே நடப்பது என்ன எனக்கும் புரியாது
இருப்பது சில நாள் அனுபவிப்போமே எது தான் குறைந்து விடும்
எது தான் குறைந்து விடும்..

இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்
இதுதான் எங்கள் உலகம் எங்கள் உலகம்

பாவமென்றால் ஒரு பெண்ணையும் ஆணையும் இறைவன் படைப்பானா
பயணம் போகும் பாதையில் திராட்சை கொடியை வளர்ப்பானா
பாவமென்றால் ஒரு பெண்ணையும் ஆணையும் இறைவன் படைப்பானா
பயணம் போகும் பாதையில் திராட்சை கொடியை வளர்ப்பானா
ஆனது ஆகட்டும் போனது போகட்டும் அருகே வரலாமா
அருகே வரலாமா… ஆ..ஆ..

இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்
இதுதான் எங்கள் உலகம் எங்கள் உலகம்

கவிஞன் பாடிய காவியம் படித்தால் போதை வரவில்லையா
கல்லில் வடித்த சிலைகளை பார்த்தால் மயக்கம் தரவில்லையா
எதிலே இல்லை யாரிடம் இல்லை எவர் இதை மறந்து விட்டார்
எவர் இதை மறந்து விட்டார்..

இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்
இதுதான் எங்கள் உலகம் எங்கள் உலகம்

விழிகளில் ஒரு வானவில்..


விழிகளில் ஒரு வானவில்.. இமைகளை தொட்டு பேசுதே..
இது என்ன புது வானிலை.. மழை வெயில் தரும்..
உன்னிடம் பார்கிறேன்.. நான் பார்கிறேன்..
என் தாய்முகம் அன்பே..

உன்னிடம் தோற்கிறேன்.. நான் தோற்கிறேன்..
என்னகுமோ இங்கே..
முதன் முதலாய் மழங்குகிரேன்..
கண்ணாடி போல தோன்றினாய்
என் முன் என்னை காட்டினாய்
கனா எங்கும் வினா..

விழிகளில் ஒரு வானவில்.. இமைகளை தொட்டு பேசுதே..
இது என்ன புது வானிலை.. மழை வெயில் தரும்..

நீ வந்தாய் என் வாழ்விலே
பூ பூத்தாய் என் வேரிலே..
நாளையே நீ போகலாம்..
என் ஞாபகம் நீ ஆகலாம்..
தேர் சென்ற பின்னாலே வீதி என்னாகுமோ..
யார் இவன்.. யார் இவன்..
ஓர் மாயவன் மேயானவன் அன்பில்..
யார் இவன்.. யார் இவன்..
நான் நேசிக்கும் கண்ணீர் இவன் நெஞ்சில்
இனம் புரியா உறவிதுவூ..
என் தேதி பூத்த பூவிது
என் நெஞ்சில் வாசம் தூவுது..
மனம் எங்கும் மனம்..

விழிகளில் ஒரு வானவில்.. இமைகளை தொட்டு பேசுதே..
இது என்ன புது வானிலை.. மழை வெயில் தரும்..

நான் உனக்காக பேசினேன்..
யார் என்னக்காக பேசுவார்..
மௌனமாய் நான் பேசினேன்..
கைகளில் மை பூசினேன்..
நீ வந்த கனவேங்கே காற்றில் கை வீசினேன்..
அன்பெனும் தூண்டிலை நீ வீசினால்
மீன் ஆகிறேன் அன்பே..
உன் முன் தானடா இப்போது நான்
பென்னாகிரேன் இங்கே..
தயகன்களால் திணறுகிறேன்..
நிலென்று சொன்னபோதிலும்
நிலாமல் நெஞ்சம் ஓடுதே
இதோ உந்தன் வழி..