Sunday, July 4, 2010

பலாபழம்


பலாபழம்



முக்கனிகளில் மாவிற்கு அடுத்த இடத்தில் வைத்து போற்றப்படுவது பலா. மிகுந்த சுவை கொண்டது பலா என்பதால் அதை உண்ணாதவர்கள் யாரும் இருக்க முடியாது.


மருத்துவ பயன்கள் :

* பலாப்பழத்தை தேனில் நனைத்து உட்கொண்டுவர மூளை நரம்புகள் வலு பெறும். வாத நோய், பைத்தியம் போன்றவை நீங்கும்.

* பலாப்பழத்தில் வைட்டமின் ‘ஏ’ அதிக அளவில் உள்ளது. இது மூளைக்கும், உடலுக்கும் அதிக பலத்தை தரும். நரம்புகளை உறுதியாக்கும். ரத்தத்தை விருத்தி செய்யும். தொற்றுக் கிருமிகளை அழிக்கும்.

* பலாக்காய் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கக் கூடியது. மேலும் இது, உடல் உஷ்ணத்தை தணிக்கும். பித்த மயக்கம், கிறுகிறுப்பு, வாந்தி ஆகியவற்றையும் குணமாக்கும்.

* பலா மரத்தில் இருந்து கிடைக்கும் பாலினை எடுத்து நெறிகட்டிகள், நெடுநாள் உடையாமல் இருக்கும் கட்டிகள் மீது பூசிவர அவை பழுத்து உடையும் அல்லது அமுங்கிவிடும்.

* பலா பிஞ்சினை சமைத்து உண்ண பித்தமும், நீர்வேட்கையும் நீங்கும். ஆண்மை அதிகரிக்கும்.

* பலா இலைத்தளிரை அரைத்து சிரங்குகளுக்கு பூசிவர அவை குணமாகும்.

* பலா மரத்தின் வேலை நன்கு கழுவி உலர்த்தி துண்டு துண்டாய் வெட்டி, ஒன்றிரண்டாய் சிதைத்து நீர்விட்டு காய்ச்ச வேண்டும். அது பாதியாக வற்றியதும் வடிகட்டி குடித்துவர கழிச்சல் குணமாகும்.

* பலா மரத்தின் வேரை அரைத்து சொறி, சிரங்குகளுக்கு பூச அவை குணமாகும்.

* பலா இலைகளை ஒன்றாக கோர்த்து, அதில் உணவு உட்கொள்வது சிலரது வழக்கம். இவ்வாறு உணவு உட்கொண்டால் பித்தம் அதிகரிக்கும். அதேநேரம், குன்மம் எனப்படும் அல்சர் நோயும், பெருவயிறும் குணமாகும்.



ஒரு எச்சரிக்கை :


பலாப்பழம் மற்றும் பலா பிஞ்சினை அதிக அளவில் பயன்படுத்துவோர் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அவை :

* பலா பிஞ்சினை அதிக அளவில் உண்பதால் செரியாமை, வயிற்றுவலி போன்றவை ஏற்படும். இதை, மிகவும் அளவுக்கு அதிகமாக உண்டால் சொறி, சிரங்கு, கரப்பான், கோழைக்கட்டு, இருமல், இரைப்பு, வாத நோய்கள் ஏற்படும்.

* பலாப்பழத்தை அளவுடன் தான் உண்ண வேண்டும். இதனை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் வயிறு மந்தமாகி வயிற்றுவலியையும், வாந்தியையும் உண்டாக்கிவிடும். எனவே, பலாப்பழத்தை தேன் அல்லது நெய்யில் தொட்டே சாப்பிட வேண்டும். இவ்வாறு சாப்பிட்டாலே அதன் நற்பலன்களை பெற முடியும்.

* பலாப்பழத்தை சாப்பிட்டுவிட்டு அதன் கொட்டை ஒன்றினை பச்சையாக மென்று தின்றுவிட்டால் சாப்பிட்டது நன்கு சீரணமாகிவிடும்.

* குடல்வால் அழற்சி எனப்படும் அப்பண்டிசைட்டிஸ் உள்ளவர்கள் பலாப்பழத்தை அறவே சாப்பிடக் கூடாது.

* சிலர் பலாக்கொட்டையை சுட்டு உண்பார்கள். இது சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருந்தாலும் அள்ளுமாந்தம், மலச்சிக்கல், கள் குடிப்பவர்களுக்கு உண்டாவது போன்ற புளியேப்பம், கல் போல் வயிறு கட்டிப்படல், வயிற்றுவலி போன்றவற்றை உண்டாக்கும்.

* மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளையும் சாப்பிட்டு சீரணமாகவில்லை என்றால், மந்தம், வயிற்றுவலி, ஏப்பம் ஆகியவை ஏற்படும். இதனை போக்க துவரம்பருப்பை வேக வைத்து வடித்த நீரில் மிளகும், பூண்டும் சேர்த்து ரசம் வைத்து சாப்பிட தகுந்த நிவாரணம் பெறலாம்.

உச்சி வகுந்தெடுத்து....




திரைப்படம்
: ரோசாப்பூ ரவிக்கைக்காரி
இயற்றியவர் : புலமைப்பித்தன்
பாடியவர் : எஸ்பி பாலசுப்ரமணியம்
இசை: இளையராஜா.
வெளியான ஆண்டு : 1979


உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி,
பச்சமலை பக்கத்துல மேயுதுனு சொன்னாங்க.
மேயுதுனு சொன்னதுல நியாயம் என்ன கண்ணாத்தா

உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி,
பச்சமலை பக்கத்துல மேயுதுனு சொன்னாங்க.
மேயுதுனு சொன்னதுல நியாயம் என்ன கண்ணாத்தா

ஏ.... ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ
ஆரி ராரோ ஆரி ராரோ
ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ

பட்டியில மாடுகட்டி பால கறந்துவச்சா,
பால் திறிஞ்சி போனதுன்னு சொன்னாங்க.
சொன்னவங்க வார்த்தையில சுத்தமில்ல.
அடி சின்ன கண்ணு நானும் அத ஒத்துக்கல.

உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி,
பச்சமலை பக்கத்துல மேயுதுனு சொன்னாங்க

வட்டு கருப்பட்டிய வாசமுள்ள ரோசாவ,
கட்டெறும்பு மொச்சுதுனு சொன்னாங்க.
கட்டுக் கதை அத்தனையும் கட்டுக் கதை.
அதை சத்தியமா நம்ப மனம் ஒத்துக்கல.

உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி,
பச்சமலை பக்கத்துல மேயுதுனு சொன்னாங்க

பொங்கலுக்கு செங்கரும்பு பூவான பூங்கரும்பு,
செங்கனையா தின்னதுன்னு சொன்னாங்க.
செங்கனையா தின்னிருக்க நியாயமில்ல.
அடி சித்தகத்தி பூவிழியே நம்பவில்ல.

உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி,
பச்சமலை பக்கத்துல மேயுதுனு சொன்னாங்க.
மேயுதுனு சொன்னதுல நியாயம் என்ன கண்ணாத்தா

உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி,
பச்சமலை பக்கத்துல மேயுதுனு சொன்னாங்க.
மேயுதுனு சொன்னதுல நியாயம் என்ன கண்ணாத்தா

Saturday, July 3, 2010

இது குழந்தை பாடும் தாலாட்டு.....

திரைப்படம்: ஒரு தலை ராகம்
இசை: T ராஜேந்தர்
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
வெளியான ஆண்டு: 1980


இது குழந்தை பாடும் தாலாட்டு
இது இரவு நேர பூபாளம்
இது மேற்கில் தோன்றும் உதயம்
இது நதியில்லாத ஓடம்

(இது குழந்தை..)

நடை மறந்த கால்கள் தன்னின் தடயத்தைப் பார்க்கிறேன்
வடமிழந்த தேரது ஒன்றை நாள்தோறும் இழுக்கிறேன்
சிறகிழந்த பறவை ஒன்றை வானத்தில் பார்க்கிறேன்
சிறகிழந்த பறவை ஒன்றை வானத்தில் பார்க்கிறேன்
உறவுறாத பெண்ணை எண்ணி நாளெளல்லாம் வாழ்கிறேன்

(இது குழந்தை..)

வெறும் நாரில் கரம் கொண்டு
பூமாலை தொடுக்கிறேன்
வெறும் காற்றில் உளி கொண்டு
சிலை ஒன்றை வடிக்கிறேன்
விடிந்து விட்ட பொழுதில் கூட
விண்மீனைப் பார்க்கிறேன்
விடிந்து விட்ட பொழுதில் கூட
விண்மீனைப் பார்க்கிறேன்
விருப்பமில்லா பெண்ணை எண்ணி
உலகை நான் வெறுக்கிறேன்

(இது குழந்தை..)

உளமறிந்த பின்தானோ அவளை நான் நினைத்தது
உறவுறுவாள் என தானோ மனதை நான் கொடுத்தது
உயிரிழந்த கருவைக் கொண்டு கவிதை நான் வடிப்பது
உயிரிழந்த கருவைக் கொண்டு கவிதை நான் வடிப்பது
ஒருதலையாய் காதலிலே எத்தனை நாள் வாழ்வது

(இது குழந்தை..)

சதுரகிரி மலை....III

இதர தெய்வங்கள்

தாணிப்பாறையில் நுழைந்ததும் சற்றுத் தொலைவில் விநாயகர், ராஜகாளி அம்ம‎ன், பேச்சியம்ம‎ன் மற்றும் கருப்பசாமிக்குக் கோவில்கள் உள்ளன.

கோரக்கர் சித்தரால் வணங்கப்பட்ட இரண்டு சிவலிங்கங்கள் இரண்டு குகைகளில் உள்ளன. இவ்விடம் கோரக்கர் குண்டா எ‎ன்றழைக்கப்படுகிறது.

அத்திரி மகரிஷி தங்கியிருந்த ‏இடம் அத்தியூத்து என்று அழைக்கப்படுகிறது. ரெட்டைலிங்கம் எ‎ன்றழைக்கப்படும் இரு லிங்கங்கள் மேலே செல்லும் வழியில் உள்ளன. வன துர்கா (வன காளி)வுக்கும் ஒரு சிலை உள்ளது.

பிலாவடி கருப்பசாமி எ‎ன்னும் கோவிலும் மேலே சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் சிறிது தொலைவுக்கு மு‎ன் உள்ளது.

தாணிப்பாறைக்குச் செல்லும் மு‎ன்னே தம்பிபட்டி என்னும் ஊரி‎ன் அருகில் மாவூத்து எ‎ன்ற இடத்தில் சிவன் குடிகொண்டிருக்கிறார். சதுரகிரிக்குச் செல்லும்மு‎ன் இங்கே தான் சிவன் இருந்ததாக ஐதீகம்.


விசேஷங்கள்


சதுரகிரியில் அமாவாசை நாள்தா‎ன் மிகவும் விசேஷமானது. ஒவ்வொரு அமாவாசைய‎ன்றும் ஆயிரக்கணக்கில் பக்தர் கூட்டம் திரளும். அதிலும் ஆடி அமாவாசை மிகுந்த முக்கியத்துவம் பெற்றது.ஆடி அமாவாசைய‎ன்று ஐந்து இலட்சத்திற்கும் குறையாமல் பக்தர்கள் கூடுகிறார்கள்.

தை அமாவாசை அதற்கு அடுத்தபடியாக விசேஷமானதாகும்.

அமாவாசை தவிர, பௌர்ணமி தினத்த‎ன்றும் விசேஷ பூஜைகள் நடக்கும். தற்போது பிரதோஷம், சிவராத்திரி தினங்கள‎‎ன்றும் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இதுபோன்ற விசேஷ தினங்கள் தவிர மற்றைய நாட்களில் பக்தர்கள் வருகை அவ்வளவாக இருக்காது.

எல்லா நாட்களிலும் பூஜை நேரம் தவறாமல் நடக்கும். அதிகாலை முத்தரும்‎முத்தரும் முத்தரு
, ஆறு மணி, நண்பகல் 12 மணி, மற்றும் மாலை ஆறு மணி என நா‎ன்கு காலப் பூஜை செய்யப்படுகிறது.

அதிகாலை மூ‎ன்று மணியளவில் சிவ-பார்வதியை பள்ளியெழுப்பிவிட்டு சப்த க‎ன்னியர் வனத்திற்குள் செ‎ன்று விடுவர் எ‎ன்று ஒரு ஐதீகம். அவ்வேளையில் பூஜை நடக்கும்.


மை தூக்கிகள்

இங்கு எந்தப் பொருளானாலும் மலை மேலே கொண்டு செல்ல மனித சுமைதூக்கிகள்தா‎ன் வேண்டும். 35 கிகி எடை வரை தூக்க 150 ரூபாயும், அதற்குமேல் எடையுள்ளவற்றைத் தூக்கிச் செல்ல 200 ரூபாயும் வாங்குகி‎ன்றனர்.
நடக்க முடியாதவர்களைத் தூக்கிச் செல்லவும் கூலிகள் உண்டு. சுமார் இரண்டாயிரம் வரை வாங்குகி‎ன்றனர்.

மூலிகை வ‎னம்

இங்கே கிடைக்காத மூலிகைகள் உலகில் வேறு எங்குமே கிடைக்காதெனலாம். அந்த அளவிற்குக் கொட்டிக் கிடக்கி‎ன்றன மூலிகைச் செடிகளும், கொடிகளும், மரங்களும். சாதாரணத் தலைவலியிலிருந்து எய்ட்ஸ் வரையிலான கொடிய நோய்களுக்கும் இங்கே மருந்துண்டு. ஆனால் இந்த வளங்களை அறிந்தோர் குறைவு.

சித்தர்களும் தாங்கள் அரும்பாடுபட்டுக் கண்டுபிடித்த சித்துக்களும், மூலிகை மருந்துகளும் சுயநலப் பதர்களால் தவறாகக் கையாளப்பட்டதால், அவர்கள் தங்களைத் தாங்களே மறைத்துக் கொள்வாராயி‎னர். அவர்களது அரும்பெரும் கண்டுபிடிப்புகளும் பரிபாஷையில் பாடல்கள் வடிவில் ஓலைச்சுவடிகளிலேயே தங்கிவிட்டன.

இங்கு சிங்கத்தைத் தவிர மற்ற அனைத்து வகையான காட்டு மிருங்களும் உண்டு. ஒரே ஒரு புலி மட்டும் இருப்பதாகத் தகவல். மற்றபடி, மா‎ன், கரடி, காட்டெருமை, யானை, சிறுத்தை, முள்ளம்ப‎ன்றி போ‎ன்ற அனைத்து விலங்குகளும் உண்டு.கோவில் பகுதியில் விலங்குகள் நுழையாது.

மலைமீது சிறப்பான வகையில் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. ஒரு கிணறு வெட்டப்பட்டு கோயில்களுக்கும் சிறு குடில்களுக்கும் தண்ணீர் குழாய்கள் மூலம் வழங்கப்படுகிறது. சமீபத்தில் பக்தர்களுக்கு திறந்தவெளி ஷவர் வசதிகூட செய்யப்பட்டுள்ளது!

மலைகளி‎ன் நடுவே பெரும்பாலும் சிறிய அளவிலாவது தண்ணீர் ஓடிக் கொண்டே இருக்கும். மக்கள் மலையேறிக் களைத்தவுட‎ன் ‎நீரோடையில் குளித்துவிட்டு கோவிலுக்குச் செல்வர்.

சுனைநீர் எ‎ன்பதால் குடிநீர் தித்திப்பாகவும் குளிர்ச்சியாகவும் தெளிவாகவும் ‏ இருக்கும்.

உணவு வசதிகள்

இங்கு மூன்று, நா‎ன்கு அன்னதான மடங்கள் உள்ளன. எல்லா விசேஷ நாட்களிலும் அ‎ன்னதானம் வழங்கப்படுகிறது. சுவையான சாப்பாடாக இருக்கும்.

கவனிக்கவும்.. உப்பு, புளியிலிரு‎ந்து, காய்கறி, மசால், அரிசி எ‎ன்று அனைத்துப் பொருட்களும் கீழிருந்துதா‎ன் மேலே வரவேண்டும். மனிதர்கள் தத்தம் தலையில்தா‎ன் மூட்டைகளை சுமந்து கொண்டு வரவேண்டும். ஆதலால், சாப்பிடும்போது சிறிது குறையிருந்தாலும் பொருட்படுத்தாமலிருப்பது நலம். குறை பெரும்பாலும் ‏இருக்காது எ‎ன்பது வேறு விஷயம்.



காலையிலிருந்து மாலை வரை அ‎ன்னதானம் தொடர்ந்து நடைபெறுகிறது. வரும் ஆயிரக்க‎ணக்கான பக்தர்களுக்கும் ஆக்கி, வடித்துக் கொட்டிக் கொண்டிருக்கும் த‎ன்னார்வலர்களை எத்தனை பாராட்டினாலும் தகும்.

அங்குள்ள மடத்தில் வேலை செய்பவர்கள் தங்கள் மனமுவந்து கடவுள் சேவையாக எண்ணிச் செய்கி‎‎ன்றனர். நடு‏ இரவு ப‎னிரெண்டு மணிக்குச் செ‎ன்றால்கூட வரவேற்று, ‏இருக்கும் உணவை இன்முகத்துட‎ன் வழங்குகி‎‎ன்ற‎னர்.


சரியான பாதையில் மட்டும் ஏறவும். குறுக்கு வழியில் செல்கிறே‎ன் பேர்வழி என சென்றால் எங்காவது மாட்டிக் கொண்டு விடுவீர்கள். கவ‎னம்...


செல்லும் பாதையில் ஏதேனும் விலங்குகள் எதிர்ப்பட்டால் ச‎ற்று நிதானித்து எந்த சப்தமும் எழுப்பாமல் அவை அந்த ‏இடத்தை விட்டு நகர்ந்தவுடன் மேலே செல்லவும்.

வனத்தினுள் செல்ல வேண்டும் எ‎ன்ற ஆர்வமுடையோர் தகுந்த வழிகாட்டுபவர்களுட‎ன் செல்லவும்.

செல்லும் வழி

தாணிப்பாறைக்குச் செல்ல பி‎ன்வரும் வழிகளுண்டு.

மதுரையிலிரு‎ந்து - திருமங்கலம் - பேரையூர் - வத்றாப் - தாணிப்பாறை (80 கி.‏மீ)
திருநெல்வேலியிருந்து - இராஜபாளையம் - கிருஷ்ண‎ன்கோவில் - வத்றாப் - தாணிப்பாறை (125 கி.மீ)
ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து - கிருஷ்ண‎ன்கோவில் - வத்றாப் - தாணிப்பாறை (30 கி.மீ)
விருதுநகரிலிருந்து - எரிச்சநத்தம் - அழகாபுரி - வத்றாப் - தாணிப்பாறை (45 கி.மீ)

இது போக சாப்டூர் வழியாக செல்வதற்கு தனிப்பாதை உள்ளது. தே‎னி, வருஷநாடு, கம்பம் பகுதியிலிருந்து வருபவர்கள் இந்தப் பாதையி‎ன் வழியே வருவர். ஆனால் பெரும்பாலோனோர் வருவது தாணிப்பாறை வழியேதா‎ன்.

விசேஷ தினங்களில் சிறப்பு அரசுப் பேருந்துகள் ‏தாணிப்பாறைக்கு இயக்கப்படுகின்றன. சாதாரண நாட்களில் குறிப்பிட்ட சில நேரங்களில் மட்டுமே பேம்ந்து வசதி உண்டு. ஷேர் ஆட்டோக்களும் ‏ இயங்குகின்றன. ஆட்டோவில் பத்து கிமீ பயணத்திற்கு தலைக்கு பத்து ரூபாய் மட்டுமே!

இரவில் பெரும்பாலும் மலையில் ஏற வேண்டாம். அவ்வாறு ஏறினாலும் டார்ச் போ‎ன்ற உபகரணங்கள் வைத்துக் கொள்ளவும்.

முற்றும்

Thursday, July 1, 2010

சதுரகிரி மலை....II

பயணம்

தாணிப்பாறையி‎ன் அடிவாரத்தில் வனத்துறையினரி‎‎ன் அலுவலகம் ஒன்றும் உள்ளது. மலையேறுமு‎ன்னே ஒரு வளைவு (Arch) நம்மை வரவேற்கிறது. ‏இரு மருங்கிலும் மூலிகைச் செடிகளும் கொடிகளும் நெருக்கியடிக்க குறுகிய பாதையில் மலையில் பிரயாணம் துவங்குகிறது.


சுமார் 6லிருந்து 10 அடி மட்டுமே அகலம் கொ‎ண்ட சுமார் 8 கிமீ நீள கரடுமுரடான செங்குத்து மலைப்பாதையில்தா‎ன் பயணம். ஒரு பக்கம் பகலவனும் கதிர்களை உட்செலுத்த அஞ்சும் அட‎ர்ந்த காடு. மறுபக்கம் தடுக்கி விழுந்தால் அதல பாதாளம். பாதுகாப்பிற்குக் கைப்பிடி கம்பிகள் கூடக் கிடையாது. இந்த ஆறடிப் பாதையில்தா‎ன் துணிகரப் பயணம். ஏற ஆரம்பிக்கும்போது உற்சாகத்திற்குப் பஞ்சமிருக்காது.

அடிக்கடி செ‎ன்று பழக்கப்பட்ட ஆட்கள் இரண்டு மணிநேரத்தில் கோவிலைச் செ‎ன்றடைந்துவிடுவர். முதல்முறையாகச் செல்வோருக்கு குறைந்தபட்சம் நா‎ன்கு மணிநேரம் ஆகிவிடும்!

ஏற ஆரம்பித்த அரைமணி நேரத்திலேயே நாக்குத் தள்ள ஆரம்பித்துவிடும். ‘புஸ் புஸ்’ஸெ‎ன்று வெளிப்படும் மூச்சு, பேசாமல் கீழேயே இருந்திருக்கலாம் எ‎ன்று சொல்லும்!. மேலே ஏற ஏற த‎ன்னம்பிக்கை குறைவது போல இருக்கும்.

பழக்கப்பட்ட ஆட்களுட‎ன் முதல் முறை ஏறுவது மிகவும் நல்லது. ஆனால் கஷ்டப்பட்டு மலையேறி கோவிலைச் செ‎ன்றடைந்தவுட‎ன் மனதில் இருக்கும் பெரும் வாழ்க்கைப் பாரங்கள் குறைந்தது போலிருக்கும்.

இப்பேர்ப்பட்ட கடினமான பாதையையே கடந்து வந்துவிட்டோமே வாழ்க்கை என்னடா வாழ்க்கை.. அதிலுள்ள கஷ்டங்களெல்லாம் சும்மா தூசு.. எ‎ன்ற பக்குவப்பட்ட மனநிலை வந்துவிடும். மீண்டும் மீண்டும் மலையேறத் தோ‎‎ன்றும். மனம் தளராமல் நடக்க வேண்டுமெ‎ன்றால் ஒரே வழி மூச்சை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளுங்கள். எவ்வளவுதா‎ன் மூச்சிறைப்பது போல இருந்தாலும்
கட்டுப்பாட்டில் இருந்தால் போதும் அவ்வளவுதா‎ன்.

சற்று நிதானமாக, நடக்கும் பாதையில் முழு கவனமும் வைத்து நெஞ்சில் சிவனை நிலைநிறுத்தி ஒவ்வொரு கணத்தையும் அனுபவித்து, சுற்றிலும் காணும் இயற்கையையும் ரசித்து, மூச்சிறைத்தாலும் மெதுவாக மூச்சை வெளியிட்டு, எங்கேயும் உட்காராமல் தொடர்ந்தாற் போல மேலேறிவிட்டால் இரண்டே ம‎ணிநேரம்தா‎ன்.

ஆனால் கீழே இறங்குவது சற்று எளிது. பழக்கமானவர்கள் ஒ‎ன்றரை மணிநேரத்தில் இறங்கிவிடலாம். புதியவர்களுக்கு மூ‎ன்று மணி‎ நேரம். வீட்டுக்கு வந்தவுட‎ன்தான் தெரியும், தொடைகளில் தசைப்பிடிப்பும், கணுக்கால் வலியும். மூ‎‎ன்று நாட்களில் சரியாகிவிடும்!

முடிந்தவரை அதிக பாரங்கள் கொ‎ண்டுசெல்வதைத் தவிர்த்தல் நல்லது.


சிவநாமத்தைச் சொல்லிக்கொண்டு ஏறுவது மிகுந்த மனோபலத்தைக் கொடுக்கும்.

சுந்தர மகாலிங்கத்துக்கு... அரோகரா!
சந்தன மகாலிங்கத்துக்கு... அரோகரா!
பிலாவடி கருப்பனுக்கு... அரோகரா!
ரெட்டைலிங்கத்துக்கு... அரோகரா!
வனகாளிக்கு... அரோகரா!
பதினெட்டுச் சித்தர்களுக்கு... அரோகரா!

போ‎ன்ற கோஷங்கள் பிரசித்தம்.


பரமாத்மாவி‎ன் இருப்பிடம்


மலையில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் என இரண்டு வடிவங்களில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார் லிங்க வடிவத்தில் பரமசிவ‎ன்.

ஆகாய கங்கை என அழைக்கப்படும் சிறு நீர்வீழ்ச்சி இவ்விரு கோயில்களுக்கு நடுவில் சிறு ஓடையாக ஓடுகிறது. இந்நீர் மிகவும் புனிதமாகக் கருதப்படுகிறது. மழைக்காலங்களில் நீர்வரத்து அதிகமாக இருக்கும்.

சுந்தர மகாலிங்கத்தைத்தா‎ன் முதலில் தரிசிக்கின்றனர். அத‎ன் பின்னரே சந்தன மகாலிங்கத்துக்குச் செல்கி‎ன்றனர். அங்கு செல்ல சுமார் 15 நிமிடங்கள் நடக்க (ஏற) வேண்டும்.

சுந்தர மகாலிங்கம் கோவிலில் சுந்தரமூர்த்தி மற்றும் சுந்தரமகாலிங்கம் எ‎ன்று இரண்டு லிங்கங்கள் உள்ளன.

சந்தன மகாலிங்கம் கோவிலில் சந்தனத்தால் அலங்கரிக்கப்பட்ட லிங்கம் உள்ளது. பதினெட்டுச் சித்தர்களுக்கு சிலைகள் உள்ளன. விநாயகர், முருகர், மஹாதேவி மற்றும் நவகிரகங்களுக்கும் சிலைகள் உள்ளன. சட்டநாதச் சித்தர் வாழ்ந்த குகையும் இங்குள்ளது.

இவற்றுக்கும் மேலே செ‎ன்றால் பெரிய மகாலிங்கம் எ‎ன்ற கோயில் இருக்கிறது. பெரும்பாலும் பக்தர்கள் இங்கு வருவதில்லை. சித்தர்கள் மட்டும் இங்கே பூஜை செய்வதாகக் கூறப்படுகிறது. பாம்புக் கோவில் ஒ‎ன்றும் அருகில் உள்ளது.

சுந்தரமகாலிங்கம் கோயிலில் இருந்து ஒரு மணி நேரம் இன்னும் மேலே ஏறினால் தவசிக் குகை எ‎ன்னும் குகைப் பகுதியை அடையலாம். இவ்விடத்திற்குச் செ‎ன்ற அனுபவஸ்தர்களுட‎ன் மட்டுமே செல்லவேண்டும். ஏ‎னெ‎ன்றால் முதலில் இருந்தது போல் ஆறடி அகலப் பாதை கூட இங்கு கிடையாது. மிகவும் குறுகலான, ஏ‎ன் பாதையே இல்லாத வழிகளிலும் பயணிக்க வேண்டியதிருக்கும். சிறிது வழி பிசகிவிட்டாலும் சிரமம்தா‎ன்.

தவசிக் குகையில் அனைத்து சித்தர்களும் வசித்ததாகவும், இன்றும் தவம் செய்து கொண்டிருப்பதாகவும் பேச்சு நிலவுகிறது!

குகை மிகவும் குறுகலாக ஒருவர் மட்டுமே தவழ்ந்து செல்லக் கூடிய வகையில் இருக்கும். அதிக பட்சம் நான்கைந்து பேர்கள் மட்டும் உள்ளே செ‎ன்று அமர முடியும். அதற்கப்பால் வெறும‎னே கற்சுவர்தா‎ன். ஆனால் இந்த கற்சுவரில் இருக்கும் சிறு சிறுதுளைகள் வழியாக புத்துணர்வூட்டும் குளிர்ந்த காற்று சில்லென வருகி‎றது. உள்ளே ரிஷிகளும், சித்தர்களும் தவம் செய்யக்கூடும் என்பது நம்பிக்கை.

பொதுவாக மற்றொரு நம்பிக்கை எ‎ன்னவென்றால் பௌர்ணமி நாட்களில் சித்தர்கள் மலையிலிருந்து இறங்கி சுந்தர மகாலிங்கத்தும் சந்தன மகாலிங்கத்துக்கும் நடுநிசியில் பூஜை செய்ய வருவர் எ‎ன்பதுதான். இப்படியரு அரிய காட்சியைக் கண்டதாக மிஸ்டிக் செல்வம் எ‎ன்பவர் ஜோதிடபூமி என்னும் இதழில் எழுதியிருக்கிறார்.

ஜடாமுடி தரித்த, நெடுநெடுவென வளர்ந்து சுமார் ஏழரை அடி உயரத்திற்கு ஆஜானுபாகுவாய், கண்களில் செம்மை ஒளிர அச்சுறுத்தும் தோற்றத்துட‎ன் மூ‎ன்று சித்தர்களைக் கண்டதாக அவர் எழுதியிருக்கிறார். ஒருவேளை அது சித்தர்களி‎ன் மாயத் தோற்றமாகக் கூட ‏ ‏ இருக்கலாம்.

சித்தர்கள் யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் எந்த உருவத்தில் வேண்டுமானாலும் தரிசனம் காட்டலாம். இரவு பூஜை நேரங்களில் சில வேளைகளில் சட்டநாதர் இராஜநாகமாகவும், உடும்பாகவும் மாறி தோ‎‎‎ன்றுவதுண்டாம்.

பவுர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில்‏ இரவில் மலையில் தங்கியிருந்து பூஜைகளில் கலந்து கொள்ளும் அனுபவம் மெய்சிலிர்க்க வைக்கும். இக்காட்சி யார் கண்ணுக்குக் கிடைக்கவேண்டுமெ‎ன்று இருக்கிறதோ அவர்களுக்கு மட்டுமே கிட்டும். பெரும் பாக்கியவா‎ன்கள் மட்டுமே ‏இப்பேறு பெற்றவர்கள் என்கிறார்கள்.

(தொடரும்)
.....

அட பொன்னான மனசே....

திரைப்படம் : மைதிலி என்னை காதலி
இசை : டி. ராஜேந்தர்

பாடியவர் : டி. ராஜேந்தர்

வெளியான ஆண்டு: 1986


காதல் பட்ட பாவத்தால்
காயம் பட்ட இதயங்களே
கண்ணீரை மருந்து ஆக்குங்களேன்

அட பொன்னான மனசே பூவான மனசே
வைக்காத பொண்ணு மேல ஆசை
நீ வைக்காத பொண்ணு மேல ஆசை

அட பொன்னான மனசே பூவான மனசே
வைக்காத பொண்ணு மேல ஆசை
நீ வைக்காத பொண்ணு மேல ஆசை


ஆசை வச்ச பச்சக்கிளியோ
வேறு ஜோடி தேடி போய் இருந்தா
பூஜை செஞ்ச வஞ்சி மலரோ
வே தென்றலோட ஆடி இருந்தா

பச்ச புள்ள போல அழுவாதா
பாவம் பூ போல சாயாதா

பல நாளா பழகி இருப்பா
தில் பலன் ஏதும் இல்லைப்பா
பூ போல பேசிச் சிரிப்பா
ந்த பேச்சில தான் அர்த்தம் இல்லப்பா

அட காதல்னு நினைக்காத
நீயும் கானல் நீர் ஆகாதே

சமைச்சு வச்ச மீன் குழம்ப
நீயும் சலிக்காம தின்ன போதே
தாலி கட்ட நினைச்சு இருப்ப
நீயும் தாரம் ஆக்க துடிச்சு இருப்ப

அன்று கைய தானே கழுவு என்றாள்
இன்று காதல் இல்லை அழுவு என்றாள்

நானும் உந்தன் உறவை........


திரைப்படம்: மைதிலி என்னை காதலி
இசை: TR ராஜேந்தர்

பாடியவர்: SP பாலசுப்ரமணியம்

வெளியான ஆண்டு: 1986

நானும் உந்தன் உறவை நாடி வந்த பறவை..
ஆ.... ஓ... ஆ....ஆ.. ஆ.. ஆ.. ஆ.. ஆ..ஆ..ஆ....

நானும் உந்தன் உறவை நாடி வந்த பறவை
நானும் உந்தன் உறவை நாடி வந்த பறவை
தேடி வந்த வேளை வேடன் செய்த லீலை
தேடி வந்த வேளை வேடன் செய்த லீலை
சிறகுகள் உடைந்ததடி குருதியில் நனந்ததடி
உயிரே உயிரே.

இதய கதவுகளை திறக்க ஓடி வந்தேன்
சிறையில் சிக்கிக் கொண்டதேனம்மா
வலையில் விழுந்த உன்னை மீட்க ஓடி வந்தேன்
வலையில் மாட்டிக் கொண்டேன் நானம்மா
காதல் நெஞசங்களை கசக்கி பிழிவதிலே
இனிமை காணுவது விதியம்மா
அன்பு உள்ளங்களை ரத்த வெள்ளத்திலே
துவைத்து சிதைப்பது சதியம்மா
உடல்களை அழித்திட ஊருக்குள் பலருண்டு பாரம்மா
உள்ளத்தை பிரிந்திட பாருக்குள் எவருண்டு சொல்லம்மா

(நானும்..)

வீணை எரிகிறது விரல்கள் வேகிறது
நாதம் மீட்டுகிறேன் வாராயோ
புயலும் வலுக்கிறது கடலும் கொதிக்கிறது
படகை செலுத்துகிறேன் வாராயோ
எண்ணெய் இழந்த பின்னும்
எரிய துடிக்க எண்ணும்
தீபம் போல மனம் அலைகிறது
என்னை இழந்த பின்னும்
உன்னை காக்க எண்ணும்
இதய அரங்கமிங்கு அழைக்கிறது
வாழ்வது ஒரு முறை
உனக்கென வாழ்வது முழுமை என்பேன்
சாவது ஒரு முறை
உனக்கென சாவதே பெருமை என்பேன்

(நானும்..)